என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பக்தர்கள் காயம்"
கடலூர்:
வேளாங்கண்ணி ஆலய திருவிழாவில் கலந்து கொள்ள சென்னையை சேர்ந்த வினோத்குமார் (வயது 32), ஜானகிராமன் (38), மஞ்சு (20) உள்பட 30 பேர் ஒரு ஆம்னி பஸ்சில் சென்னையில் இருந்து வேளாங்கண்ணிக்கு சென்றனர்.
திருவிழா முடிந்து நள்ளிரவில் அவர்கள் அதே ஆம்னி பஸ்சில் சென்னைக்கு புறப்பட்டனர். அந்த பஸ் இன்று அதிகாலை கடலூர் ரெட்டிச்சாவடி போலீஸ் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது.
அப்போது அந்த வழியாக எதிரே சென்னையில் இருந்து வேளாங்கண்ணி நோக்கி ஒரு வேன் வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் திடீரென ஆம்னிபஸ்சும், வேனும் பயங்கர சத்தத்துடன் நேருக்குநேர் மோதிக் கொண்டன. இதில் நிலை தடுமாறிய ஆம்னிபஸ் ரெட்டிச்சாவடி போலீஸ் நிலையம் முன்பு நிறுத்தப் பட்டிருந்த மினிலாரி மீது மோதியது. இதில் ஆம்னிபஸ், வேன் மற்றும் மினிலாரி ஆகியவை பலத்த சேதம் அடைந்தன.
இந்த விபத்தில் ஆம்னி பஸ்சில் இருந்த வினோத்குமார், ஜானகிராமன், மஞ்சு உள்பட 9 பக்தர்கள் பலத்த காயம் அடைந்தனர். அவர்களை ரெட்டிச்சாவடி போலீசார் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்