search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாகை கொள்ளை"

    சீர்காழி அருகே ஊர்காவல் படை கமாண்டர் வீட்டின் கதவை உடைத்து 40 பவுன் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த கதிராமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் மணிமாறன் (வயது 48). இவர் ஊர்காவல்படை கமாண்டராக வேலை பார்த்து வருகிறார்.

    இந்நிலையில் மணிமாறன், தனது குடும்பத்தினருடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றார். பின்னர் நேற்று நள்ளிரவில் அவர் வீடு திரும்பினார்.

    அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 40 பவுன் நகை திருட்டு போய் இருந்ததை கண்டு அவர் திடுக்கிட்டார். இதன் மதிப்பு ரூ.7 லட்சம் அகும்.

    இதுபற்றி வைத்தீஸ்வரன் கோவிலில் போலீசில் அவர் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து கொள்ளை கும்பலை போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

    ஊர்காவல்படை கமாண்டர் வீட்டில் 40 பவுன் நகை கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    ×