search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீனவர்கள் போராட்டம்"

    • போராட்டக்காரர்களுக்கும், எம்.எல்.ஏ.வுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
    • போராட்டக்காரர்கள் கலெக்டர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனக்கூறி போராட்டத்தை தொடர்ந்தனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே கீழமூவக்கரை எனும் மீனவர் கிராமம் உள்ளது. இங்கு சுமார் 800-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்களுள் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர்.

    இந்நிலையில் இந்த கிராமத்தில் ரேஷன் கடை, சமுதாய கூடம், மீன் ஏலக்கூடம், மீன் வலை பின்னும் கூடம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர வில்லை எனவும், கடலில் தூண்டில் வளைவு அமைத்து தர வலியுறுத்தியும் பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    மேலும், தேர்தலின் போது பல்வேறு கட்சி வேட்பாளர்கள் தங்களது கிராமத்திற்கு வாக்கு சேகரிக்க மட்டும் வருவதாகவும், வெற்றிக்கு பின் கிராமத்தை திரும்பி கூட பார்ப்பதில்லை எனவும் அவர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். தங்கள் கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படாததை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.

    இந்நிலையில், இன்று காலை 500-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் திடீரென கையில் கருப்பு கொடியுடன் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். எங்களது நீண்ட நாள் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என கடலில் இறங்கி கோஷங்கள் எழுப்பினர். கடலில் எழுந்துள்ள ராட்சத அலைகளையும் பொருட்படுத்தாது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என முழக்கமிட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி தாசில்தார் இளங்கோவன், மீன்வளத்துறை உதவி இயக்குனர் மோகன் குமார், கடலோர காவல் குழும இன்ஸ்பெக்டர் புயல் பாலசந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பரசு ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

    கடலில் இறங்கிய போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முயன்றனர். ஆனால் போராட்டக்காரர்கள் கலெக்டர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனக்கூறி போராட்டத்தை தொடர்ந்தனர்.

    இதனைத் தொடர்ந்து, சீர்காழி எம்.எல்.ஏ. பன்னீர் செல்வம் சம்பவ இடத்திற்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது போராட்டக்காரர்களுக்கும், எம்.எல்.ஏ.வுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

    உடன்பாடு எட்டப்படும் வரை போராட்டம் தொடரும் எனக்கூறி மீண்டும் கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.

    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நிரவி திருப்பட்டினம், பட்டினச்சேரி மீனவர்கள் கடந்த 25-ந் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 30-ந்தேதி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்டம் நிரவி திருப்பட்டினம், பட்டினச்சேரி பகுதியில் 600 குடும்பங்களை சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றனர்.

    பட்டினச்சேரியில் 200-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளும் 30-க்கும் மேற்பட்ட விசை படகுகளும் மீன்பிடித் தொழிலுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் திருமலை ராஜன் ஆற்றின் முகத்துவாரம் அடிக்கடி தூர்ந்துவிடுவதால் கடற்கரை ஓரங்களில் கருங்கற்களைக் கொட்டி முகத்துவாரம் தூர்ந்து போகாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    2009-ம் ஆண்டு தொண்டு நிறுவனங்களால் கட்டித் தரப்பட்ட ஐஸ் பிளான்ட் இதுவரை செயல்பாட்டுக்கு கொண்டு வராமல் எந்திரங்கள் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதை சீர் செய்து தர வேண்டும்.

    தொடர்ந்து கிராமத்தில் தண்ணீர் பிரச்சனை நீடித்து வருவதால் குடிநீருக்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டித்தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நிரவி திருப்பட்டினம், பட்டினச்சேரி மீனவர்கள் கடந்த 25-ந் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று பட்டினச்சேரி கிராமத்தில் உள்ள சிங்காரவேலர் சிலையிலிருந்து கருப்பு கொடி ஏந்தி மீனவர்கள் ஊர்வலமாக வந்தனர். பின்னர் மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    மேலும், கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 30-ந்தேதி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.

    • சென்னையிலிருந்த வந்த ஒரு தம்பதி முகத்துவாரத்தில் விழுந்து காயமடைந்தது.
    • புதுவையில் புத்தாண்டு கொண்டாட சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கில் குவிந்துள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகள் கடல், ஆற்றின் முகத்துவாரத்தில் படகு பயணம் செய்வதை விரும்புகின்றனர்.

    இதையடுத்து புதுவை அரசின் சுற்றுலாத்துறை மூலம் ஆற்றுப்பகுதியில் படகுகளை இயக்க சில நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் புற்றீசல்போல 100-க்கும் மேற்பட்ட படகுகள் சுற்றுலா பயணிகளுக்காக பாதுகாப்பின்றி இயக்கப்பட்டன. சென்னையிலிருந்த வந்த ஒரு தம்பதி முகத்துவாரத்தில் விழுந்து காயமடைந்தது.

    இதையடுத்து பாதுகாப்பு கருதி சுற்றுலா படகுகள் இயக்குவதை அரசு தடை செய்தது. முறையாக அனுமதி பெற்று, பாதுகாப்புடன் படகுகளை இயக்கும் நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    இதன்படி புதுவையில் 300-க்கும் மேற்பட்டோர் சுற்றுலா படகு இயக்க அனுமதி கோரினர். அனுபவம் கொண்ட 8 நிறுவனங்களுக்கு அரசு அனுமதியளித்துள்ளது.

    இந்தநிலையில் புதுவையில் புத்தாண்டு கொண்டாட சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கில் குவிந்துள்ளனர். சுற்றுலா பயணிகள் பலர் கடலில் படகு சவாரி செய்து மகிழ்கின்றனர்.

    இந்த படகுகளை துறைமுக பகுதியிலிருந்து இயக்குகின்றனர்.

    மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளதால் மீன்பிடி தொழில் பாதிக்கப்படுவதாகவும், சுற்றுலா படகுகள் இயக்கப்படுவதை கண்டித்தும் புதுவை மீனவர்கள் இன்று திடீர் போராட்டத்தில் இறங்கினர். துறைமுகத்தை நோக்கி வரும் பெரியாறு பகுதியில் கட்டுமரங்களை கடலில் குறுக்கே நிறுத்தி வலை வீசி போராட்டம் நடத்தினர்.

    இதுகுறித்து மீனவர்கள் கூறும்போது, சுண்ணாம்பாறு படகு குழாம் முழுமையாக சுற்றுலாவுக்கு ஒதுக்கப்பட்டது.

    தற்போது பெரியாறு பகுதியில் படகுகள் இயக்கப்படுவதால் மீன்வளம் பாதிக்கப்படும்.

    இறால் முட்டைகள், மீன் குஞ்சுகள் அழிந்து வருகிறது. இதனால் கடல் வளமும், ஆற்று வளமும் பாதிக்கப்படுகிறது. இதனால் மீன்பிடி தொழில் பாதிக்கப்படுகிறது. அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் அனைத்து விசைப்படகு மீனவர்களுடன் ஒருங்கிணைந்து போராட்டம் நடத்துவோம் என அவர்கள் தெரிவித்தனர்.

    • விசைப்படகு மீனவர்கள் சங்கம் கூட்டமைப்பு சார்பில் நடந்த போராட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் திரளாக பங்கேற்றனர்.
    • உண்ணாவிரதம் நடைபெறும் பகுதியில் திரளான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து கடந்த மாதம் மீன்பிடிக்க சென்ற போது 10 விசைப்படகுகள் 64 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்தனர். படகுகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் 64 மீனவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இதனை கண்டித்தும், மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரி வலியுறுத்தியும் ராமேசுவரம் மீனவர்கள் கடந்த ஒரு வார காலமாக வேலை நிறுத்த போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் பின்னர் ரெயில் மறியல் போராட்டம் அறிவித்த நிலையில் கலெக்டர் மற்றும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகள் மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ஏற்பட்ட உடன்படிக்கையின்படி வேலை நிறுத்தம் மற்றும் ரெயில் மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதையடுத்து கடந்த 4-ந்தேதி முதல் மீனவர்கள் வழக்கம்போல் கடலுக்கு சென்று வருகின்றனர்.

    இந்த நிலையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்கள், படகுகளை விடுவிக்ககோரி இன்று தங்கச்சிமடத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று காலை தங்கச்சிமடம் வலசைதெரு பகுதியில் பந்தல் அமைக்கப்பட்டு உண்ணாவிரத போராட்டம் இன்று காலை 9 மணிக்கு தொடங்கியது. மீனவர் சங்கத்தலைவர் ஜேசுராஜா தலைமை தாங்கினார். தலைவர்கள் சகாயம், எமரிட், ஆல்வின் சைமன் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் மோட்சம், மெல்டன், பீட்டர், சாம்சன், தங்கச்சிமடம் வர்த்தக சங்க நிர்வாகிகள் சம்சுதீன், வல்லப கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    விசைப்படகு மீனவர்கள் சங்கம் கூட்டமைப்பு சார்பில் நடந்த இந்த போராட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் திரளாக பங்கேற்றனர். அப்போது அவர்கள் இலங்கை அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். இன்று தொடங்கியுள்ள உண்ணாவிரத போராட்டம் நாளையும் நடைபெறுகிறது. இதையொட்டி உண்ணாவிரதம் நடைபெறும் பகுதியில் திரளான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • போலீசார் நடத்திய சமரச பேச்சுவார்த்தையில் இதுவரை சமரசம் ஏற்பட வில்லை.
    • பெட்ரோல் பங்க் கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்த கோரி மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரிஅருகே உள்ள சின்னமுட்டம் துறைமுக வளாகத்தில் பெட்ரோல்பங்கு அமைக்கு ம்பணிதொடங்கியது. இதற்கு சின்னமுட்டம் பகுதி மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    அவர்கள் கடந்த 9-ந்தேதி முதல் சின்னமுட்டம் புனிததோமையார் ஆலயம் முன்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுஉள்ளனர்.

    போலீசார் நடத்திய சமரச பேச்சுவார்த்தையில் இதுவரை சமரசம் ஏற்பட வில்லை. இதைத் தொடர்ந்து இன்று 11- வது நாளாக பெட்ரோல் பங்க் கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்த கோரி மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தெருக்களில் இன்றும் 3-வது நாளாக கருப்புக் கொடி கட்டப்பட்டு உள்ளது.இதனால்அங்கு பெரும்பரபரப்பும் பதட்ட மும்நிலவுகிறது. இதைத் தொடர்ந்து அங்கு இன்றும் ஏராள மான போலீசார் குவிக்கப்பட்டுஉள்ளனர்.

    போராட்டத்தில ஈடு பட்டுள்ள மீனவர்க ளுடன் போலீசார் மற்றும் அதிகாரிகள் தொடர்ந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    • மெரினா நொச்சிக்குப்பம் மீனவர்கள் கடந்த 4 நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
    • போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களை போலீசார் இன்று கைது செய்தனர்.

    சென்னை:

    மெரினா நொச்சிக்குப்பம் மீனவர்கள் கடந்த 4 நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். புதிதாக கட்டப்பட்டுள்ள 324 வீடுகளை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்று வந்தது.

    அவர்களிடம் போலீசார் சமரச பேச்சு நடத்தி வந்தனர். இருப்பினும் மீனவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை, இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களை போலீசார் இன்று கைது செய்தனர்.

    • தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் மீன்பிடி தொழில் நடைபெற்று வருகிறது.
    • மீனவர்களுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சியினரும் போராட்டத்தில் குதித்தனர்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் மீன்பிடி தொழில் நடைபெற்று வருகிறது. இந்த அணையில் மீன்பிடி உரிமை அரசே ஏற்று நடத்தி வந்த நிலையில் திடீரென தனியாருக்கு வழங்கப்பட்டது. இதனை கண்டித்தும் அணையில் மீண்டும் பழைய முறைப்படி மீன்பிடிக்க அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி மீனவர்கள் வைகை அணை நீர்தேக்கத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மீனவர்களுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சியினரும் போராட்டத்தில் குதித்தனர். இந்நிலையில் ஆண்டிபட்டி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் திருமுருகன், டி.எஸ்.பி ராமலிங்கம், இன்ஸ்பெக்டர் சிவக்குமார், மீன்வள உதவி இயக்குனர் பஞ்சராஜா முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது மீனவர்களுக்கு சரிபங்கு அடிப்படையில் மீன்கள் வழங்கவேண்டும் என கோரிக்கை வைத்தனர். ஆனால் தனியார் மீன்பிடி உரிமம் பெற்றவர்கள் இதற்கு சம்மதிக்கவில்லை. அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியும் இருதரப்பும் ஏற்றுக்கொள்ளாததால் கூட்டம் தோல்வியில் முடிந்தது. இதனைதொடர்ந்து வருகிற 25-ந்தேதி அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் இரவு நேரத்தில் மீனவர்கள் யாரும் வைகை அணை நீர்தேக்கத்தில் மீன்பிடிக்க கூடாது என்பதற்காக போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 4-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தனியாருக்கு உரிமம் வழங்கப்பட்டதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு அரசு சுமூகதீர்வு காணவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்த நிலையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக 16 பேர் மீது வைகை அணை சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • துறைமுக கடலோர பகுதிகளில் இருந்து அந்த படகுகளை அப்புறப்படுத்தவும் உத்தரவிட்டனர்.
    • போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களிடம் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    ராமேசுவரம்:

    ராமேசுவரம் துறைமுக பகுதியில் கடந்த சில வாரங்களாக விதிகளுக்கு முரணாக அதிக நீளமும், அகலமும் கொண்ட 24 பைபர் படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டன. இதற்கு அந்தப்பகுதியை சேர்ந்த மற்ற மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக மீன்வளத்துறை அதிகாரிகளிடமும் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் சம்பந்தந்பட்ட 24 பைபர் படகுகளின் உரிமையாளர்களை அழைத்து இந்தப்பகுதியில் மீன்பிடிக்க அனுமதியில்லை. உடனே படகுகளை எடுத்துச்செல்லுமாறு எச்சரித்தனர். ஆனால் அவர்கள் படகுகளை எடுத்துச்செல்லாமல் மீன் பிடித்ததாக கூறப்படுகிறது.

    இதையடுத்து 24 படகுகளுக்கும் அதிகாரிகள் தலா ரூ.45 ஆயிரம் அபராதம் விதித்ததோடு, துறைமுக கடலோர பகுதிகளில் இருந்து அந்த படகுகளை அப்புறப்படுத்தவும் உத்தரவிட்டனர்.

    இதனை கண்டித்தும், அபராதத்தை ரத்து செய்து மீன்பிடிக்க அனுமதி வழங்க கோரியும் 24 படகு உரிமையாளர்களும், அதில் மீன்பிடிக்கும் 50-க்கும் மேற்பட்ட மீனவர்களும் ராமேசுவரம் துறைமுக அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களிடம் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    • கடந்த 1-ந் தேதி இடிந்த கரையை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும்.
    • பஞ்சள், தோமையார்புரம் உள்ளிட்ட 10 கிராம மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்டத்தில் உள்ள 10 மீனவ கிராமங்களில் உள்ள மீனவர்கள் பாரம்பரிய முறையில் மீன்பிடித்து வருகின்றனர்.

    இந்த சூழ்நிலையில் அருகில் உள்ள கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் பகுதி விசைப்படகு மீனவர்கள் நெல்லை மாவட்ட கடல் பகுதியில் மீன்பிடித்து செல்வதாகவும், அப்போது நாட்டுப்படகு மீனவர்களின் மீன்பிடி வலைகளும், மீன்பிடி உபகரணங்கள், படகுகள் சேதம் அடைவதாக புகார் எழுந்து வந்தது.

    கடந்த 1-ந் தேதி இடிந்த கரையை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது குமரி மாவட்ட விசைப்படகு மீனவர்கள் இடிந்தகரை நாட்டுப் படகு மீது மோதியதில் 2 மீனவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    இந்நிலையில் நாட்டுப் படகு மீது மோதிய விசைப்படகு மீனவர்களை கைது செய்ய வேண்டும், விசைப்படகின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மீனவர்களின் வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3-ந்தேதி நெல்லை மாவட்டத்தில் உள்ள 10 மீனவ கிராமங்களை சேர்ந்த சுமார் 10 ஆயிரம் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில் கூடுதாழை, கூட்டப்பனை, உவரி, இடிந்தகரை, கூட்டப்புளி, பெருமணல், கூத்தன்குழி, பஞ்சள், தோமையார்புரம் உள்ளிட்ட 10 கிராம மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதற்கிடையே மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களிடையே மீன்வளத்துறை அதிகாரிகள் முன்னிலையில் வள்ளியூரில் இன்று பேச்சவார்த்தை நடைபெறுகிறது.

    • நெல்லை மாவட்ட கடலோர மீனவ கிராமங்களின் கடற்கரையையொட்டி 5 நாட்டிக்கல் மைல் தொலைவில் தான் குமரி மாவட்ட விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க வேண்டும்.
    • மீனவர்களின் மீன்பிடி உபகரணங்கள், மீன்பிடி படகுகளை சேதப்படுத்துவதை தடுக்க உயர்மட்ட அதிகாரிகளின் குழு அமைத்து தீர்வு காண வேண்டும்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கடலோர மீனவ கிராமங்களின் கடற்கரையையொட்டி 5 நாட்டிக்கல் மைல் தொலைவில் தான் குமரி மாவட்ட விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க வேண்டும், சின்ன முட்டம், தூத்துக்குடி மீன்பிடி துறைமுகங்களில் மீன் பிடிக்கும் விசைப்படகுகள் காலை 5 மணி முதல் இரவு 10 மணிக்குள் மீன்பிடித்து விட்டு கரைக்கு திரும்பி விட வேண்டும், நாட்டு படகு மீனவர்களின் மீன்பிடி உபகரணங்கள், மீன்பிடி படகுகளை சேதப்படுத்துவதை தடுக்க உயர்மட்ட அதிகாரிகளின் குழு அமைத்து தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வருகிறது.

    கூடங்குளம் அருகே இடிந்தகரை, கூட்டப்பனை, கூடுதாழை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் இணைந்து நடத்தும் இந்த போராட்டம் தொடர்பாக நேற்று சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து மீனவர்கள் முறையிட்டு மனு அளித்தனர். தொடர்ந்து இன்று 2-வது நாளாக நெல்லை மாவட்ட 10 மீனவ கிராமங்களை சேர்ந்த சுமார் 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    • நாட்டுப் படகு மீது மோதிய விசைப்படகு மீனவர்களை கைது செய்ய வேண்டும், விசைப்படகின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.
    • பாதிக்கப்பட்ட மீனவர்களின் வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று இடிந்தகரையை சேர்ந்த 3 ஆயிரம் மீனவர்கள் போராட்டம் நடத்தினர்.

    நெல்லை:

    தமிழகத்திலேயே பாரம்பரிய நாட்டுப்படகு மூலம் மீன் பிடிக்கக்கூடிய மாவட்டம் நெல்லை மாவட்டம் தான்.

    இங்கு மீன்பிடி தங்குதளமோ, மீன்பிடித் துறைமுகமோ இல்லாததினால் நெல்லை மாவட்டத்தில் உள்ள 10 மீனவ கிராமங்களில் உள்ள மீனவர்கள் பாரம்பரிய முறையில் தான் மீன்பிடித்து வருகின்றனர்.

    இந்த சூழ்நிலையில் அருகில் உள்ள கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் பகுதி விசைப்படகு மீனவர்கள் நெல்லை மாவட்ட கடல் பகுதியில் மீன்பிடித்து செல்வதாகவும், அப்போது நாட்டுப்படகு மீனவர்களின் மீன்பிடி வலைகளும், மீன்பிடி உபகரணங்கள், படகுகள் சேதம் அடைவதாக புகார் எழுந்தது வந்தது.

    நேற்று முன்தினம் இடிந்த கரையை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது குமரி மாவட்ட விசைப்படகு மீனவர்கள் இடிந்தகரை நாட்டுப் படகு மீது மோதியதில் படகில் இருந்த 13-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலில் தத்தளித்துள்ளனர்.

    இதில் வினோத் மற்றும் அண்டன் ஆகிய 2 மீனவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டு நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில் நாட்டுப் படகு மீது மோதிய விசைப்படகு மீனவர்களை கைது செய்ய வேண்டும், விசைப்படகின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மீனவர்களின் வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று இடிந்தகரையை சேர்ந்த 3 ஆயிரம் மீனவர்கள் போராட்டம் நடத்தினர்.

    இதற்கிடையே மீனவர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் நெல்லை மாவட்ட கடலோர மீனவ கிராமங்களின் கடற்கரை ஒட்டி 2 நாட்டிக்கல் மைல் தொலைவில் குமரி மாவட்ட விசைப்படகு மீனவர்கள் அத்துமீறி நுழைந்து நாட்டுப் படகு மீனவர்களின் மீன்பிடி வலைகள், மீன்பிடி உபகரணங்கள், மீன்பிடி படகுகளை சேதப்படுத்துவதை தடுக்க கோரி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி இன்று நெல்லை மாவட்டத்தில் உள்ள கூடுதாழை, கூட்டப்பனை, உவரி, இடிந்தகரை, கூட்டப்புளி, பெருமணல், கூத்தன்குழி, பஞ்சள், தோமையார்புரம் உள்ளிட்ட 10 மீனவ கிராமங்களை சேர்ந்த சுமார் 10 ஆயிரம் நாட்டுப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    • வைகை அணையில் மீன் பிடிக்கும் குத்தகையை தனியாருக்கு விட அரசு முடிவு செய்துள்ளது.
    • அரசின் முடிவை கைவிட வலியுறுத்தியும் மீனவர்கள் வைகை அணை மீன்வள த்துறை அலுவலகம் முன் போராட்டம் செய்தனர்.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டி அருகே வைகை அணை நீர் தேக்கத்தில் ஒவ்வொரு ஆண்டும் மீன்வளத்துறை மூலம் மீன் குஞ்சுகள் லட்ச க்கணக்கில் விடப்படுகிறது.

    மீன் குஞ்சுகள் வளர்ந்த பின் பதிவு பெற்ற மீனவ சங்க உறுப்பினர்கள் மீன்கள் பிடிக்கின்றனர். அைவ மீன்வளத்துறை மூலம் விற்பனை செய்யப்படுகிறது. பதிவு பெற்ற 115 பரிசல்கள் மூலம் 230 மீனவர்கள் மீன் பிடிக்கின்றனர். இதன்மூலம் மட்டுமே அவர்கள் வருவாய் ஈட்டி வந்தனர்.

    இந்நிலையில் வைகை அணையில் மீன் பிடிக்கும் குத்தகையை தனியா ருக்கு விட அரசு முடிவு செய்துள்ளது.

    மீன்பிடி குத்தகையை தனியாருக்கு விடுவதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கும். மேலும் மீன் பிடி குத்தகையை தனியாருக்கு விடும் பட்சத்தில் வைகை அணை நீர் தேக்கத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்றும் அரசின் முடிவை கைவிட வலியுறுத்தியும் மீனவர்கள் வைகை அணை மீன்வள த்துறை அலுவலகம் முன் போராட்டம் செய்தனர். பின்னர் மீன்வளத்துறை சார்பு ஆய்வாளர் கலையரசி யிடம் மீனவர்கள் மனு கொடுத்தனர்.

    ×