search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fishermens Protest"

    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நிரவி திருப்பட்டினம், பட்டினச்சேரி மீனவர்கள் கடந்த 25-ந் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 30-ந்தேதி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்டம் நிரவி திருப்பட்டினம், பட்டினச்சேரி பகுதியில் 600 குடும்பங்களை சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றனர்.

    பட்டினச்சேரியில் 200-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளும் 30-க்கும் மேற்பட்ட விசை படகுகளும் மீன்பிடித் தொழிலுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் திருமலை ராஜன் ஆற்றின் முகத்துவாரம் அடிக்கடி தூர்ந்துவிடுவதால் கடற்கரை ஓரங்களில் கருங்கற்களைக் கொட்டி முகத்துவாரம் தூர்ந்து போகாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    2009-ம் ஆண்டு தொண்டு நிறுவனங்களால் கட்டித் தரப்பட்ட ஐஸ் பிளான்ட் இதுவரை செயல்பாட்டுக்கு கொண்டு வராமல் எந்திரங்கள் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதை சீர் செய்து தர வேண்டும்.

    தொடர்ந்து கிராமத்தில் தண்ணீர் பிரச்சனை நீடித்து வருவதால் குடிநீருக்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டித்தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நிரவி திருப்பட்டினம், பட்டினச்சேரி மீனவர்கள் கடந்த 25-ந் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று பட்டினச்சேரி கிராமத்தில் உள்ள சிங்காரவேலர் சிலையிலிருந்து கருப்பு கொடி ஏந்தி மீனவர்கள் ஊர்வலமாக வந்தனர். பின்னர் மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    மேலும், கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 30-ந்தேதி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.

    • கடலூர் அருகே சாமியார்பேட்டை பகுதியில் 30 கிராம மீனவர்கள் சுருக்குமடி வலை பயன்படுத்துவதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
    • இதனை கண்டித்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று மீனவ கிராமத்தினர் அறிவித்து இருந்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் தாழங்குடா, தேவனாம்பட்டினம், தைக்கால்தோணி துறை, சாமியார்பேட்டை உள்ளிட்ட 49 மீனவ கிராமங்கள் உள்ளது.

    இங்குள்ள மீனவர்கள் விசைப்படகு, கட்டுமரம் மற்றும் பைபர் படகுகளில் மீன் பிடித்து வருகிறார்கள்.

    இதற்கிடையில் கடலில் சுருக்குமடி வலையை பயன்படுத்துவதால் மீன்வளம் குறைகிறது என்று கூறி மாவட்ட நிர்வாகம் சுருக்குமடி வலைக்கு தடை விதித்துள்ளது. ஆனாலும் ஒரு சில மீனவ கிராம மக்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்துகின்றனர்.

    இவர்களை கண்காணித்த மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்களின் படகு மற்றும் மீன்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

    இதனிடையே கடலூர் அருகே சாமியார்பேட்டை பகுதியில் 30 கிராம மீனவர்கள் சுருக்குமடி வலை பயன்படுத்துவதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    இதனை கண்டித்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று மீனவ கிராமத்தினர் அறிவித்து இருந்தனர்.

    அதன்படி இன்று மீனவர்கள் சாமியார்பேட்டை கடற்கரையில் கருப்பு கொடியுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் இதில் 30-க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர். அவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. இதனால் மீன்பிடி தளம் வெறிச்சோடியது.

    ×