என் மலர்
நாகப்பட்டினம்
தமிழக அரசின் வழிகாட்டுதலின் பேரில், கொரோனா நோய் தொற்று 3-ம் அலை பரவுவதை தடுக்கும் பொருட்டு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி நாகை மாவட்டத்தில் சில வழிபாட்டு தலங்களுக்கும் மற்றும் கடற்கரை பகுதிகளுக்கும் பொதுமக்கள் செல்வதற்கு ஏற்கனவே அனுமதி இல்லை என்று ஆணை வெளியிடப்பட்டது.
தற்போது நிலவிவரும் கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் தொடர்ச்சியாக மாவட்டத்தில் உள்ள அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வருகிற 31-ந் தேதி வரை பொதுமக்களுக்கான தரிசனம் மற்றும் அனைத்து மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கும் முற்றிலுமாக ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய திருவிழாவையொட்டி வருகிற 29-ந் தேதி முதல் அடுத்த மாதம்(செப்டம்பர்) 8-ந் தேதி வரை நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் பொதுமக்களுக்கு அனுமதியில்லை.
பேராலயத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளையும் காணொலிக்காட்சி வாயிலாக ஒளிபரப்பலாம். மேலும் வேளாங்கண்ணி பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து தங்கும் விடுதிகளும் இந்த நாட்களில் திறக்கப்படாது. திருவிழாவை முன்னிட்டு தற்காலிக கடைகள் அமைப்பதற்கும், பிற கடைகள் மற்றும் உணவகங்கள் திறப்பதற்கும் அனுமதியில்லை.
எனவே நாகை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் எடுத்து வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஆவணி மூல திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சிகளான சிவபெருமானின் திருவிளையாடல் லீலைகள் நேற்று முன்தினம் தொடங்கி நடந்து வருகின்றன.
நேற்று காலையில் ‘நாரைக்கு முக்தி கொடுத்த லீலை’ நடந்தது. அப்போது சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் நாரைக்கு முக்தி அளித்த சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தனர். இரவு 7 மணிக்கு சுவாமி பூதவாகனத்திலும், அம்மன் அன்னவாகனத்திலும் எழுந்தருளி ஆடி வீதிகளில் வலம் வந்தனர்.
நாரைக்கு முக்தி கொடுத்தல் லீலை குறித்த புராண வரலாறு வருமாறு:-
மதுரைக்கு தெற்கே ஒரு குளத்தில் நாரை ஒன்று வாழ்ந்து வந்தது. அந்த குளத்தில் நீர் வற்றியதால் மற்றொரு குளத்திற்கு சென்றது. அப்போது அந்த குளத்தில் முனிவர்கள் நீராடிக்கொண்டிருந்தனர். மேலும் அந்த குளத்தில் இருந்த மீன்கள் முனிவர்கள் மீது புரண்டு விளயாடியது. அதை கண்ட நாரை அந்த மீன்களை உண்ணக்கூடாது என்று நினைத்து சாப்பிடாமல் இருந்தது.
அப்போது அங்கிருந்த முனிவர்கள் பேசும் போது, மதுரையை பற்றியும் அங்கிருந்த பொற்றாமரை குளத்தின் சிறப்பை பற்றியும் தெரிவித்தனர். உடனே நாரை மதுரைக்கு வந்து பொற்றாமரைக்குளத்தில் நீராடி இறைவனை வணங்கி முக்தி பேறு பெற்றது.
அப்போது நாரை இறைவனிடம், “பொற்றாமரைக்குளத்திலே நீர்வாழ் உயிர்கள் எதுவும் இருக்கக்கூடாது. அவ்வாறு இருந்தால் மற்ற பறவைகள் அதனை உண்ணக்கூடும். அதனால் பாவம் வந்து சேரும். எனவே நீர்வாழ் உயிரினங்கள் எதுவும் பொற்றாமரைக்குளத்தில் இருக்கக்கூடாது” என்று கேட்டு இறைவனிடம் வரம் வாங்கியது.
நாரைக்கு இறைவன் அருளிய வரத்தின்படி இன்று வரை பொற்றாமரைக்குளத்தில் நீர்வாழ் உயிரினங்கள் எதுவும் இல்லை என்று புராணம் கூறுகிறது. இந்த திருவிளையாடலை குறிக்கும் வகையில்தான், நாரைக்கு முக்தி கொடுத்த லீலை அலங்காரத்தில் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் எழுந்தருளியது குறிப்பிடத்தக்கது.
அதன்படி நாகை மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி மாதா பேராலயம் மற்றும் நாகூர் தர்கா, சிக்கல் சிங்காரவேலர் கோவில், நாகை நீலாயதாட்சி அம்மன் கோவில், வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்கள் வாரத்தின் கடைசி நாட்களான கடந்த 6,7 மற்றும் 8-ந்தேதி ஆகிய 3 நாட்கள் மூடப்பட்டு பக்தர்களுக்கு தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது. அப்போது பக்தர்கள் வாசலில் நின்று தரிசனம் செய்தனர்.
இந்த நிலையில் 3 நாட்களுக்கு பிறகு நேற்று நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து மத வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
அதன்படி வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயம் திறக்கப்பட்டது. இதனால் திரளானோர் பேராலயத்திற்குள் சென்று பிரார்த்தனை செய்தனர். வருகிற 12-ந்தேதி(வியாழக்கிழமை)வரை பக்தர்கள் பிரார்த்தனை செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.
இதை முன்னிட்டு காவல்துறையினர் சாலைகளில் தடுப்புகளை ஏற்படுத்தி சோதனைச்சாவடி அமைத்தும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒரு சில பக்தர்கள் இன்று காரில் வந்து ஏமாற்றத்துடன் குளிக்க முடியாமல் திரும்பி சென்றனர். வேதாரண்யம் ஒன்றிய எல்லையான தாணி கொட்டகம், தாமரைபுலம், சங்கத்தலை பாலம் ஆகிய இடங்களில் தடைகள் வைக்கப்பட்டு பக்தர்கள் குளிக்க வரவேண்டாம் என விளம்பரப் பலகை வைக்கப்பட்டுள்ளது.

இதனால் பலர் தங்களது வீட்டின் மாடியிலேயே முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
இதையும் படியுங்கள்...பள்ளத்தாக்கில் பாய்ந்த பஸ்- பயணிகளை மயிரிழையில் காப்பாற்றிய டிரைவர்
தற்போது நிலவிவரும் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் தொடர்ச்சியாக, மாவட்டத்திலுள்ள அனைத்து மத வழிப்பாட்டு தலங்களிலும் வாரத்தின் கடைசி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் வருகிற 31-ந் தேதி வரை பொதுமக்களுக்கு தரிசனம் செய்யவும், அனைத்து மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கும் முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் பக்தர்களுக்கு தரிசனம் மற்றும் அந்தந்த மத ஆகம விதிகளின்படி நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளும் கோவில் பணியாளர்கள் மூலம் நடைபெறுவதற்கு தடை ஏதுமில்லை என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி பிரசித்தி பெற்ற நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோவில், சவுந்தரராஜ பெருமாள் கோவில், சிக்கல் சிங்காரவேலர் கோவில், வேதாரண்யம் வேதாரண்யயேஸ்வரர் கோவில், வேளாங்கண்ணி மாதா பேராலயம், நாகூர் தர்கா, நாகூர் நாகநாதர் கோவில், நாகூர் பாத்திமா அன்னை ஆலயம் உள்ளிட்ட அனைத்து மத வழிபாட்டு தலங்களும் நேற்று மூடப்பட்டன. இதனால் ஒரு சில பக்தர்கள் வெளியில் நின்று தரிசனம் செய்தனர்.
நாகூர் தர்கா மூடப்பட்டதால் வெளியூர், மற்றும் உள்ளூர் பக்தர்கள் ஆண்டவர் தர்கா அலங்கர வாசல், கால்மாட்டு வாசல், கீழக்கு வாசல் பகுதிகளில் வெளியில் நின்று பிரார்த்தனை செய்தனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறையில் இருந்து புதுவை மாநில அரசு பஸ் இன்று காலை 30 பயணிகளுடன் காரைக்காலுக்கு புறப்பட்டது. பஸ்சை டிரைவர் செந்தில் (வயது 40) ஓட்டினார். கண்டக்டராக பரசுராமன் (46) பணியாற்றினார். அந்த பஸ் பொறையாறு பஸ் நிலையத்துக்குள் வந்து பயணிகளை ஏற்றி கொண்டு மீண்டும் காரைக்காலுக்கு புறப்பட்டது. அப்போது பொறையாறு ராஜீவ்புரம் பகுதியில் சென்றபோது எஞ்சின் மின்இணைப்பில் திடீரென கோளாறு ஏற்பட்டு பஸ் தீப்பற்றி எரிய தொடங்கியது. இதனால் உடனடியாக பஸ்சை டிரைவர் செந்தில் நிறுத்தினார். பயணிகள் அலறியடித்து கொண்டு வேகமாக சிதறி நாலாப்புறமும் ஓடினர். சிறிது நேரத்தில் பஸ் முழுவதும் பற்றி எரிந்து கொண்டிருந்தது. அந்த பகுதியே தீப்பிளம்பாக காட்சியளித்தது.
இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் விரைந்து வந்து தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் பஸ் முற்றிலும் எரிந்து சேதமானது. பயணிகள் உடனடியாக இறங்கியதால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. இது பற்றி பொறையார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் நகராட்சிக்கு உட்பட்ட புஷ்கரணி கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது 90). இவர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு இருந்ததால் தொடர்ந்து மருந்து மாத்திரை சாப்பிட்டு வந்தாராம். சம்பவத்தன்று இரவு சாப்பாட்டிற்கு பிறகு சாப்பிட வேண்டிய மருந்து மாத்திரைகளை சாப்பிடாமல் தூங்கி விட்டதாக தெரிகிறது.
காலையில் பார்த்த பொழுது சண்முகம் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். உடனடியாக அவரை உறவினர்கள் மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் கொண்டுவந்து சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.ஆனால் சிகிச்சை பலனின்றி சண்முகம் பரிதாபமாக இறந்துவிட்டார்.
இதுகுறித்து புகாரின் பேரில் வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திட்டச்சேரி அடுத்த இடையாத்தாங்குடி கன்னிகோவில் தெருவை சேர்ந்தவர் புருஷோத்தமன் (வயது 55). விவசாய கூலி தொழிலாளி. இவரும் அதே பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் வயது (29) என்பவரும் இடையாத்தாங்குடி சிவன் கோவிலுக்கு சொந்தமான இடத்தை அனுபவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜெயக்குமார் வீட்டிற்கு அருகில் உள்ள இடத்தை புருசோத்தமன் அனுபவத்தில் வைத்துள்ளார். அங்குள்ள கருவேல மரங்களை வெட்டும் பொழுது ஜெயக்குமார் ஏன் என் இடத்தில் உள்ள மரங்களை வெட்டுகிறாய் என்று கேட்க இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஜெயக்குமார் ஆத்திரம் அடைந்து புருஷோத்தமனை கட்டையால் தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த புருஷோத்தமனை அக்கம் பக்கத்தினர் மீட்டு கணபதிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு போய் சேர்த்தனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் புருஷோத்தமன் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.
இது குறித்த புகாரின் பேரில் திட்டச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயக்குமாரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.






