search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிராம நிர்வாக அலுவலகம்"

    • மண்மலை கிராமத்தில் மிகவும் பழமையான கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் உள்ளது.
    • குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் இங்கு வந்து விளையாடி சென்று கொண்டிருக்கின்றனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே மண்மலை கிராமத்தில் மிகவும் பழமையான கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் உள்ளது. இந்த அலுவலகம் மண்மலை கிராமத்தில் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. தற்போது இந்த கட்டிடம் பூட்டு போடப்பட்டு கேப்பாரற்று கிடக்கிறது.

    மேலும் கட்டிடத்தின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டும், கட்டிடத்தின் மேற் கூரையின் உள்பகுதியில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து கீழே விழுகிறது. இதனால் இந்த கட்டிடம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த கட்டிடத்திற்கு எதிரே மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு அடிக்கடி பள்ளி மாணவர்கள் வந்து விளையாடி செல்வதும், சுற்றுப்புறத்தில் உள்ள குடியிருப்புகளை சேர்ந்த குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் இங்கு வந்து விளையாடி சென்று கொண்டிருக்கின்றனர். எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் கட்டிடத் தால் உயிர்பலி ஏற்படுமோ? என்ற அச்சத்துடன் அப்பகுதி மக்கள் உள்ளனர்.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடியிருப்பு மக்கள் மற்றும் பள்ளி மாணவர்களின் நலன் கருதி இடிந்து விழும் நிலையில் உள்ள கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு, அதே இடத்தில் புதிய கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கோவிலுக்கு பாத்தியப்பட்ட நில பட்டாவுடன், தனிநபர்கள் பெயர்களை சேர்த்து பட்டா வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
    • துணை தாசில்தார் காதர்மைதீன், போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூர் ஊராட்சிக்குட்பட்ட சிவசுப்பிரமணியபுரம் கிராமத்தில் ராமசாமி கோவில் உள்ளது.

    இந்த கோவிலுக்கு பாத்தியப்பட்ட நில பட்டாவுடன், தனிநபர்கள் பெயர்களை சேர்த்து பட்டா வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் பள்ளி செல்லும் குழந்தைகளுடன் கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்த மண்டல துணை தாசில்தார் காதர்மைதீன் மற்றும் பாவூர்சத்திரம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் ஆவுடையனூர் ஊராட்சி மன்ற தலைவர் குத்தாலிங்கராஜன் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தினர். ஒரு வார காலத்திற்குள் உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதியளித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.

    பாவூர்சத்திரம் அருகே சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக கிராம நிர்வாக அலுவலகத்தை பள்ளி குழந்தைகளுடன் பொதுமக்கள் முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. இதில் தமிழன் மக்கள் நல சங்க நிர்வாகிகள் 10-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • கிராம நிர்வாக அதிகாரியை சந்தித்து தங்களுக்கான கோரிக்கைகளை கூறி அதன் மூலம் பயன் அடைந்து வந்தனர்.
    • வயது முதிர்ந்த முதியவர்கள் கூட ஒரு ஆட்டோ பிடித்து நேரடியாக வந்து கிராம நிர்வாக அதிகாரியை எளிதில் சந்தித்து செல்வர்

    குனியமுத்தூர்,

    கோவை போத்தனூர் சாரதா மில் ரோட்டில் ஆட்டுத்தொட்டி பஸ் ஸ்டாப் அருகே கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது.

    இந்த அலுவலகம் இங்கு பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. ஒரு நாளைக்கு 200-க்கும் மேற்பட்ட பெண்கள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பலர் இங்கு வந்து கிராம நிர்வாக அதிகாரியை சந்தித்து தங்களுக்கான கோரிக்கைகளை கூறி அதன் மூலம் பயன் அடைந்து வந்தனர். இந்நிலையில் அந்த அலுவலகம் இருக்கும் இடத்தல் சாலை விரிவாக்க பணி நடந்து வருகிறது. இதன் காரணமாக கிராம நிர்வாகம் அலுவலகம் அந்த இடத்தில் இருந்து மாற்றம் செய்யப்பட்டு சுந்தராபுரம்-மதுக்கரை ரோட்டில் உள்ள தனியார் பள்ளி பின்புறம் அமைந்துள்ள கட்டிடத்தில் செயல்பட்டு வந்ததாக தற்போது அறிவிப்பு வெளி வந்துள்ளது. இது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது, போத்தனூர் ஆட்டுத்தொட்டி என்பது இப்பகுதியின் மையப்பகுதியாகும். அனைத்து பொதுமக்களும் எளிமையாக வந்து செல்லக்கூடிய இடம் ஆகும்.

    வயது முதிர்ந்த முதியவர்கள் கூட ஒரு ஆட்டோ பிடித்து நேரடியாக வந்து கிராம நிர்வாக அதிகாரியை எளிதில் சந்தித்து செல்வர்.

    ஆனால் தற்போது மாற்றப்பட்டுள்ள இடம் சம்பந்தப்பட்ட இடத்தில் இருந்தது வெகு தூரமாகும். ஒவ்வொருவரும் முயற்சி எடுத்து 6 முதல் 7 கிலோ மீட்டர் தூரம் பயணித்து கிராம நிர்வாக அலுவலரை சந்திக்க வேண்டிய சூழல் உள்ளது. பொதுவாக கிராம நிர்வாக அலுவலகம் அந்தந்த பகுதியில் அமைய வேண்டும். ஆனால் நடைமுறைக்கு மாறாக ஏதோ ஒரு இடத்தில் உருவாக்கினால் பொதுமக்கள் எப்படி செல்வது. இதனை வன்மையா க கண்டிக்கிறோம். எனவே மாவட்ட நிர்வாகம் உடனே தலையிட்டு இதே பகுதியில் கிராம நிர்வாக அலுவலகத்தை உருவாக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதுகுறித்து அதிகாரி கூறும்போது, இதுகாலம் வரையில் போத்தனூர் சாரதா மில் ரோடு ஆட்டு தொட்டியில் செயல்பட்டு வந்தோம். எங்களைத் தேடி வந்தவர்களுக்கு மக்கள் பணி ஆற்றினோம். ஆனால் தற்போது மாவட்ட நிர்வாகம் அலுவலகத்தை இடம் மாற்றக் கோரி இருக்கிறது. ஒருவேளை மாவட்ட நிர்வாகம் அதே பகுதியில் இடம் அமைத்துக் கொடுத்தால் நாங்கள் செயல்பட தயார். வழக்கம்போல் மக்கள் பணி ஆற்றுவோம். இதில் எந்த வித சந்தேகமும் இல்லை என்றார்.

    இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், மாவட்ட நிர்வாகம் பொது மக்களை பந்தாட வேண்டாம். மாவட்ட நிர்வாகம் பொதுமக்களுக்கு பணியாற்றுவதற்கு தான் உள்ளது.

    அதைவிடுத்து அவர்க ளை அலைக்கழிக்க தேவையில்லை. இதனை மாவட்ட நிர்வாகம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். மாவட்ட நிர்வாகம் பொதுமக்களை அலைக்கழிக்கும் செயலில் ஈடுபட்டால் அதனை வன்மையாக கண்டிப்போம் என்றனர். 

    • சேந்தமங்கலம் கிராம நிர்வாக அலுவலகம் தினந்தோறும் அலுவலகம் திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது.
    • கிராம நிர்வாக அலுவலகத்துக்கு சென்று வரும் பொது மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி வருகிறார்கள்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் சேந்தமங்கலம் கிராம நிர்வாக அலுவலகம் தினந்தோறும் அலுவலகம் திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதுகுறித்து அந்த பகுதியில் உள்ளவர்கள் பலமுறை தாலுகா அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தும் தாசில்தார் கண்டுகொள்ளவில்லை.

    என்றாலும் கிராம நிர்வாக அலுவலகத்துக்கு சென்று வரும் பொது மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி வருகிறார்கள். எனவே இதுபற்றி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • தங்களுக்கு தேவையான சான்றுகள் பெற பொதுமக்கள் தினசரி இந்த கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வந்து செல்கிறார்கள்.
    • திருப்பூர் தெற்கு வட்டத்திற்கு உட்பட்ட மங்கலம் கிராமத்தில் சுமார் 50ஆயிரம் மக்கள் வசிக்கிறார்கள்.

    திருப்பூர்:

    மங்கலம் கிராம நீரினை பயன்படுத்தும் பாசன விவசாயிகள் நலச்சங்க தலைவர் பொன்னுசாமி திருப்பூர் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் தெற்கு வட்டத்திற்கு உட்பட்ட மங்கலம் கிராமத்தில் சுமார் 50ஆயிரம் மக்கள் வசிக்கிறார்கள். சுல்தான்பேட்டை, எம்.செட்டிப்பாளையம், அக்ரஹாரபுத்தூர், வேட்டுவபாளையம், மங்கலம் போன்ற பகுதிகளுக்கு மங்கலத்தில் ஒரு கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது. தங்களுக்கு தேவையான சான்றுகள் பெற பொதுமக்கள் தினசரி இந்த கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வந்து செல்கிறார்கள்.

    இந்த அலுவலக கட்டிடம் மிகவும் பழுதடைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் மழைக்காலங்களில் நீர்க்கசிவு ஏற்படும் நிலை உள்ளது. கட்டிட தூண்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் இங்கு வரும் மக்கள் மிகவும் அச்சப்படுகிறார்கள். எனவே இது சம்பந்தமாக உயர்அதிகாரிகள் பார்வையிட்டு சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • திருமங்கலம் அருகே கிராம நிர்வாக அலுவலகம் ரூ.15 லட்சம் செலவில் கட்டப்பட்டது.
    • இந்த அலுவலகத்தை முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி. உதயகுமார் திறந்து வைத்தார்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழ உரப்பனூர் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவல கட்டிடம் மிகவும் சேதமடைந்து இருந்தது.

    எனவே புதிய கிராம நிர்வாக அலுவலகம் கட்டித் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்று புதிதாக ரூ.15 லட்சம் செலவில் கிராம நிர்வாக அலுவலகம் கட்டப்பட்டு திறப்பு விழா நடந்தது.

    இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான

    ஆர்.பி. உதயகுமார் திறந்து வைத்தார்.

    முன்னதாக அவருக்கு கட்சி நிர்வாகி மாலையணிவிக்க வந்தனர். அந்த மாலையை வாங்கி அவர் அந்த பகுதியில் வசிக்கும் மூதாட்டி ஒருவருக்கு அணிவித்தார். இதற்கிடையே திருமங்கலம் தொகுதி கீழவரப்பனூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்ப்ள்ளி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    இந்த பள்ளிக்கட்டிடமும் தற்போது இடிக்கப்பட்டு அப்புறப்படு த்தப்பட்டுள்ளது. கடந்த 8 மாதங்களாக மாணவர்கள் பள்ளிக்கட்டிடம் இல்லாததால் மாணவர்கள் கல்வி கற்பதற்கு மிகவும் சிரமப்பட்டு வருவதாக பள்ளி ஆசிரியர்கள் முன்னாள் அமைச்சர்

    ஆர்.பி. உதயகுமாரிடம் மனு அளித்தனர்.

    இதனைத் தொடர்ந்து புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தர கிராம மக்கள் கோரிக்கை விடுத்தது தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்து சிறப்பு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்து பள்ளி கட்டிடம் கட்டித் தரப்படும் என்று உறுதியளித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் அன்பழகன், பேரவை மாவட்ட செயலாளர் தமிழழகன், மாநில நிர்வாகிகள் வெற்றிவேல், சிவசுப்பிரமணியன், மீனவரணி மாவட்ட செயலாளர் சரவண பாண்டி, பொதுக்குழு உறுப்பினர் சுமதி, சாமிநாதன், பேரவை நகர செயலாளர் பாண்டி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ×