என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருமருகல் அருகே கட்டையால் தாக்கி விவசாயி கொலை- வாலிபர் கைது
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திட்டச்சேரி அடுத்த இடையாத்தாங்குடி கன்னிகோவில் தெருவை சேர்ந்தவர் புருஷோத்தமன் (வயது 55). விவசாய கூலி தொழிலாளி. இவரும் அதே பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் வயது (29) என்பவரும் இடையாத்தாங்குடி சிவன் கோவிலுக்கு சொந்தமான இடத்தை அனுபவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜெயக்குமார் வீட்டிற்கு அருகில் உள்ள இடத்தை புருசோத்தமன் அனுபவத்தில் வைத்துள்ளார். அங்குள்ள கருவேல மரங்களை வெட்டும் பொழுது ஜெயக்குமார் ஏன் என் இடத்தில் உள்ள மரங்களை வெட்டுகிறாய் என்று கேட்க இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஜெயக்குமார் ஆத்திரம் அடைந்து புருஷோத்தமனை கட்டையால் தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த புருஷோத்தமனை அக்கம் பக்கத்தினர் மீட்டு கணபதிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு போய் சேர்த்தனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் புருஷோத்தமன் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.
இது குறித்த புகாரின் பேரில் திட்டச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயக்குமாரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்