என் மலர்
நாகப்பட்டினம்
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் -கச்சனம் பிரதான சாலையில் கொளப்பாடு பெட்ரோல் பங்க் அருகே கச்சனம் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த சேகர் தனது மோட்டர் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.அப்போது எதிர் திசையில் வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த இளவரசன்நல்லூர் வடக்குத்தெற்கு பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் மோதியதில் சேகர் பலத்த காயமடைந்தார்.
மீட்கப்பட்ட அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் பாலாஜி அளித்த புகாரின் பேரில் வலிவலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- வாக்குவாதம் ஏற்பட்டதில் அருகில் இருந்தவர்கள் மணிவண்ணனை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
- மணிவண்ணன் இரும்பு பைப்பால் அடித்து விட்டு தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா வாய்மேடு தெற்குபகுதியை சேர்ந்த சேகர் என்பவரது புதுமனை புகுவிழா நிகழ்ச்சி நடைபெற்றது அப்போது இரவு 11 மணி அளவில் வாய்மேடு மேற்கை சேர்ந்த செல்வகுமார்( வயது 46) மற்றும் வாய்மேடு தெற்குபகுதியை சேர்ந்தமணிவண்ணன் (28) ஆகிய இருவரும் மது போதையில் இருந்துள்ளனர்
அப்போது அவர்களு க்குள் வாக்குவாதம் ஏற்பட்டதில் அருகில் இருந்த வர்கள் மணிவண்ணனை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர் பிறகு இரவு11 .30 மணி அளவில்செல்வகுமார் சைக்கிளில் தனது வீட்டி ற்கு செல்லும்போது மன்னாடி நகர் செல்லும் தெற்கு ஓடை அருகில் செல்வக்குமார் சத்தம் போட்டதாகவும் அப்போது மணிவண்ணன் இரும்பு பைப்பால் அடித்து விட்டு தப்பி ஓடி விட்டதாகவும் கூறப்படுகிறது.
அருகில் இருந்தவர்கள் செல்வகுமாரை மீட்டு திருத்துறைப்பூண்டி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர் மருத்துவர்கள் பரிசோ தனை செய்துவிட்டு வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து வாய்மேடு போலீசார் வழக்கு பதிவு செய்து மணிவண்ணனை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.
- பாலம் கட்டுமான பணி மெதுவாக நடைபெற்று வருவதால் பொதுமக்கள் போக்குவரத்திற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
- இதனால் வளப்பாற்றில் பாசனம் பெறும் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களுக்கு காவிரி நீர் கிடைக்குமா என்ற வேதனையில் விவசாயிகள் குறுவை சாகுபடியை இன்னும் தொடங்கவில்லை.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்பய த்தங்குடி வளப்பாற்றில் நெடுஞ்சாலை துறை மூலம் ரூ.1 கோடியே 55 லட்சம் மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டும் பணி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த பாலம் வழியாக திருப்பயத்தங்குடி, பில்லாளி, திருச்செங்காட்டங்குடி, தென்னமரக்குடி, கீழப்பூ தனூர், நத்தம், வீரபெரு மாநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், தஞ்சாவூர் சென்று வர முக்கிய வழியாக உள்ளது.மேலும் மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகள் சென்று வரவும் இந்த வழியை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பாலம் அமைக்கும் பணி மெதுவாக நடைபெற்று வருவதால் மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் போக்குவரத்திற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் பாலம் கட்டும் பணியால் காவிரி நீர் கடைமடை பகுதியான திருமருகல் பகுதிகளுக்கு வந்து சேருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் வளப்பாற்றில் பாசனம் பெறும் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களுக்கு காவிரி நீர் கிடைக்குமா என்ற வேதனையில் விவசாயிகள் குறுவை சாகுபடியை இன்னும் தொடங்கவில்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை என தெரிவிக்கின்றனர். எனவே பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஆசிரியர்கள் தம்பதி தாங்கள் பணியாற்றும் பள்ளி எப்போதும் தூய்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.
- பல நேரங்களில் பள்ளிகளில் தூய்மை பணி செய்துள்ளனர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்காடு கிராமத்தில் அரசு உதவிபெறும் தொடக்க பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 137மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக நீலமேகம் பணிபுரிந்து வருகிறார். இதே பள்ளியில் அவரது மனைவி கவிதாவும் ஆசிரியையாக பணியாற்றுகிறார். தம்பதி தாங்கள் பணியாற்றும் பள்ளியை எப்போதும் தூய்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். இதற்காக பல நேரங்களில் பள்ளிகளில் தூய்மை பணி செய்துள்ளனர்.
தற்போது 1 மாதத்துக்கு பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது. இதற்காக கடந்த சில நாட்களாக நீலமேகம், கவிதா பள்ளியை சுத்தப்படுத்தி வந்தனர். பள்ளி வளாகத்தில் உள்ள குப்பைகளை தூய்மை செய்தல், வகுப்பறைகளை தண்ணீர் மற்றும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தல், கரும்பலகைகளை சரி செய்தல், பள்ளியில் உள்ள கழிவறைகளை சுத்தம் செய்தல், தீயணைப்பான் கருவிகளை புதுப்பித்தல், வகுப்பறையில் உள்ள லைட் மற்றும் குடிநீர் குழாய்களை சரி செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை இணைந்து செய்தனர். இது குறித்து அவர்கள் கூறும்போது:-
இந்த பள்ளி கூடத்தை எங்கள் வீடு போல் நினைத்து நாங்களே சுத்தம் செய்து வருகிறோம். இதனால் எங்களுக்கு மன திருப்தி கிடைக்கிறது. பள்ளிக்கு வரும் குழந்தைகளை எங்கள் குழந்தைகளாக நினைத்து அவர்களது நலன் கருதி தொடர்ந்து இப்பணிகளை நாங்கள் பணியாற்றும் வரை மேற்கொள்வோம் என்றனர்.ஆசிரியர் தம்பதியினரின் இந்த செயல் அனைவரையும் கவர்ந்தது. மேலும் அவர்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. மேலும் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக விளங்கு வதாக பொதுமக்கள் பாராட்டினர்.
நாகப்பட்டினம்:
நாகை நகராட்சிக்கு சொந்தமான நாகூர் நுண்ணுயிர் உர கிடங்கில் சிட்டுக்குருவி களுக்கான 25 கூண்டுகள் பொருத்தப்பட்டன. இந்த கூண்டுகள் பொருத்தும் நிகழ்ச்சியை நாகை நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை நாகூர் நகர்மன்ற உறுப்பினர் தியாகு செய்திருந்தார்.
இந்நிகழ்வில் தேசிய பசுமைப் படையின் மாவட்ட தலைவர் முத்தமிழ் ஆனந்தன், நாகூர் சித்திக் , ஸ்ரீ அறுபடை பசுமை சிறகுகள் அமைப்பைச் சார்ந்த ராஜசரவணன், பண்டரிநாதன், அழகேசன், சிவா ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் கீழ்வேளூர் பகுதிகளில் பல்வேறு வீடுகளில் சமீபத்தில் கொள்ளை சம்பவங்கள் அரங்கேறின இச்சம்பவம் குறித்து தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டு கொள்ளையர்களை பிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர்.
அதனடிப்படையில் கீழ்வேளூர் அருகே கூட்டுக்கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட திருக்கண்ணங்குடியைச் சேர்ந்த தமிழ்மாறன், தனராஜ், ஹரிஹரன், குருபாலன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து தொடர் கொள்ளை மற்றும் குற்றச் செயலில் ஈடுபட்ட நால்வரையும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவகர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்படி குற்றவாளிகளை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
- ஒரே நேரத்தில் 300-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ -மாணவியர்கள் சிலம்பம் சுற்றி கின்னஸ் உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்
- அரசின் கேலோ இந்தியா திட்டத்தின்கீழ் சிலம்பம் கலையை இணைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது.
நாகப்பட்டினம்:
முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு நாகை அவுரி திடலில் கின்னஸ் உலக சாதனை முயற்சி நிகழ்ச்சி நடைபெற்றது. அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஒரே நேரத்தில் 300-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ -மாணவியர்கள் சிலம்பம் சுற்றி கின்னஸ் உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்.
அப்போது விறுவிறுப்பான சினிமா பாடல்களுக்கு ஏற்ப உச்சி வெயிலையும் பொருட்படுத்தாமல், பள்ளி குழந்தைகள் ஆர்வத்துடன் சிலம்பு சுற்றியது அனைவரது மத்தியிலும் வரவேற்பை பெற்றது. நிகழ்ச்சி முடிவில் அமைச்சர் ெமய்யநாதன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
சிலம்பம் கலையை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் முயற்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈடுபட்டு வருகிறார்.ஒன்றிய அரசின் கேலோ இந்தியா திட்டத்தின்கீழ் சிலம்பம் கலையை இணைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது.
விளையாட்டுத் துறையில் உள்ள இட ஒதுக்கீட்டில் சிலம்பம் பயிற்றுநர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் .சிலம்ப கலையை ஊக்குவிக்கும் 100 ஆசாங்களுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.1 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும்இவ்வாறு அவர் கூறினார்.
- இப்பள்ளியில் எல்.கே.ஜி முதல் 12-ம் வகுப்பு வரை சுமார் 1240 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
- கடந்த 3 ஆண்டுகளாக 11 வகுப்பறைகள் தகர கொட்டகையில்செயல்படு கின்றன. இதற்கான செலவினங்களை பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சுல்தானூல் ஆரிபின் ஈடு செய்து வருகிறார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி பொதுத்தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சியுடன் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது. இங்கு போதுமான வகுப்பறைகள் இல்லாததால் தகரக் கொட்டகையில் இயங்கி வருவது பெற்றோர்களிடம் வேதனையை ஏற்படுத்தி யுள்ளது.
இப்பள்ளியில் எல்.கே.ஜி முதல் 12-ம் வகுப்பு வரை சுமார் 1240 மாணவர்கள் பயின்று வருகின்றனர். கடந்த ஆண்டில் இப்பள்ளியில் படித்த 12ஆம் வகுப்பு மாணவி மு.அபிநயா நீட் தேர்வில் வெற்றி பெற்று அரசின் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பு பயிலும் வாய்ப்பை பெற்று மருத்துவம் பயின்று வருகிறார்.
இப்படி பல சிறப்புகளை பெற்ற இந்த பள்ளியில் மாணவா்கள் பயில போதுமான கட்டிடவசதிகள் இல்லாததால் அவதிக்கு ள்ளா கின்றன றனர்.
நிரந்தர வகுப்பறை கட்டிடங்கள் இல்லாததால் 11 வகுப்புகள் தகரக் கொட்டகையில் நடைபெறு கின்றன. அரசிடமிருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்காததால் இந்த ஆண்டு மாணவர்கள் சோ்க்கையை மேற்கொள்ள ஆசிரியர்கள் தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.
இப்பள்ளியில் கடந்த 2011-12 ஆம் ஆண்டில் தன்னிறைவு திட்டத்தின் கீழ் பொதுமக்களின் பங்களிப்பு தொகையாக சமூக ஆர்வலர் சுல்தானூல் ஆரிபின் வழங்கிய நன்கொடை ரூ.15 லட்சம் உள்பட ரூ.30 லட்சத்தில் கட்டப்பட்ட 6 வகுப்பறைகள் மட்டுமே நல்ல நிலையில் உள்ளன. மொத்தம் உள்ள 15 வகுப்பறைகளும் அதிநவீன இணைய சேவை வசதி மற்றும் தொடு திரையுடன் கூடிய டிஜிட்டல் வகுப்பறையாக உள்ளன.
இருப்பினும் கடந்த 3 ஆண்டுகளாக 11 வகுப்பறைகள்தகர கொட்டகையில்செயல்படு கின்றன. இதற்கான செலவினங்களை பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சுல்தானூல் ஆரிபின் ஈடு செய்து வருகிறார்.
கூடுதலாக 28 வகுப்புகளு க்கு அதிகாரிகள் பரிந்துரை செய்து 3 ஆண்டுகள் ஆகியும் எந்த நடவடிக்கையும் இல்லை.இப்பள்ளியில் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடப்பிரிவுகள் இருந்தாலும் ஆய்வகம் மற்றும் முறையான நூலக வசதி இல்லை. விளையாட்டு அரங்கம், கழிப்பறை வசதியும் குறைவானஅளவில் உள்ளன.
கல்வியை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் இப்பள்ளியையும் அரசு அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தேவையான அடிப்படை வசதிகளை உடன் செய்து கொடுக்க வேண்டும் என்பது இப்பகுதி பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
- இடைநிலை ஆசிரிய–ர்களுக்கான “எண்ணும் எழுத்தும்” திட்ட பயிற்சி நடைபெற்றது.
- இப்பயிற்சியில் ஆர்வத்துடன் கீழையூர் ஒன்றிய பகுதிகளில் உள்ள ஆசிரியர்கள் பங்கேற்று பள்ளி மாணவர்கள் விரும்பி கல்வி கற்க ஏதுவான துணை உபகரண பொருட்களை உருவாக்கினர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியம், பிரதாபராமபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரிய–ர்களுக்கான "எண்ணும் எழுத்தும்" திட்ட பயிற்சி நடைபெற்றது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதிவாணன் பங்கேற்று பயிற்சியை துவங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து குருக்கத்தி ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் காமராஜ் பார்வையிட்டார். பள்ளி கோடை விடுமுறை நாட்களிலும் 5 நாட்கள் நடைபெறும் இப்பயிற்சியில் ஆர்வத்துடன் கீழையூர் ஒன்றிய பகுதிகளில் உள்ள ஆசிரியர்கள் பங்கேற்று பள்ளி மாணவர்கள் விரும்பி கல்வி கற்க ஏதுவான துணை உபகரண பொருட்களை உருவாக்கினர்.
மாணவர்களுக்குகல்வி மீதான ஆர்வத்தை அதிகப்படுத்தும் வகையில் பாடல், கதை, படைப்பாற்றல், கைவண்ணம், பொம்ம–லாட்டம் உள்ளிட்ட செயல்பாடுகள் மூலம் எவ்வாறு எளிமையாக கல்வியை மாணவர்கள் மத்தியில் எடுத்துச் செல்வது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இப்பயிற்சிக்கு கீழையூர் வட்டார கல்வி அலுவலர்கள் லீனஸ், ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இப்பயிற்சிக்கு கருத்தா ளர்களாக ஆசிரியர் பயிற்றுநர்கள் மாட்டின் பாக்யராஜ், மகிமை ரூபஸ் ஆகியோர் பல்வேறு செயல்பாடுகள் குறித்து விளக்கினர். இதில் பள்ளி இடைநிலை ஆசிரியர்களான ராபர்ட் கென்னடி, மாட்டின் சகாயராஜ், அன்பழகன், கலைச் செல்வம், செந்தில் வேல், தமிழ் ராணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- தற்சமயம் ஒரு டன் உப்பு தரத்திற்கேற்ப ரூ.2500 வரை விற்பனையாகிறது. கடந்த மாதங்களில் மழை அடிக்கடி பெய்ததால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது.
- தமிழகத்தில் தூத்துக்குடிக்கு அடுத்தப்படியாக 2-வது இடமாக வேதாரண்யம் பகுதியில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய கிராமங்களில் சுமார் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்தில் தூத்துக்குடிக்கு அடுத்தப்படியாக 2-வது இடமாக வேதாரண்யம் பகுதியில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.
தற்சமயம் ஒரு டன் உப்பு தரத்திற்கேற்ப ரூ.2500 வரை விற்பனையாகிறது. கடந்த மாதங்களில் மழை அடிக்கடி பெய்ததால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது. தற்சமயம் உப்பு உற்பத்திக்கு சூழ்நிலை சாதகமாக உள்ளதால் உப்பு உற்பத்தி அதிகரித்து வருகிறது.
- விழாவையொட்டி, வருகிற 13-ம் தேதி திருக்கல்யாண உற்சவமும், 14-ம் தேரோட்டமும் நடைபெறுகிறது.
- தங்க கருட சேவையும், சவுரிராஜ பெருமாள் ஓலை சப்பரத்தில் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரம் சவுரிராஜபெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 6-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தங்க கருட சேவையும், சவுரிராஜ பெருமாள் ஓலை சப்பரத்தில் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி, வருகிற 13-ம் தேதி திருக்கல்யாண உற்சவமும், 14-ம் தேரோட்டமும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் சீனிவாசன், செயல் அலுவலர் மாதவன், கணக்கர் உமா மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
- சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது.இந்த நிலையில் சுமார் 2 ஆண்டுகளாக சுகாதார வளாகம் எந்தவித பராமரிப்பும் இல்லாமல் உள்ளது.
- போர்வெலில் உள்ள மோட்டாரை மர்ம நபர்கள் அடிக்கடி திருடி செல்வதால் தண்ணீர் இல்லாமல் போய் விடு கிறது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருச்செங்காட்டங்குடி ஊராட்சி வடக்கு ஆதிதிராவிடர் தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் மக்கள் மற்றும் உள்ளூர், வெளியூர் பொதுமக்கள் நலன் கருதி மகளிர் மற்றும் குழந்தைகள் சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது.
இந்த கட்டிடம் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது.இந்த நிலையில் சுமார் 2 ஆண்டுகளாக சுகாதார வளாகம் எந்தவித பராமரிப்பும் இல்லாமல் உள்ளது.
மேலும் சுகாதார வளாகத்தின் பின்புறம் போர்வெல் அமைக்க ப்பட்டுள்ளது.இந்த போர்வெலில் உள்ள மோட்டாரை மர்ம நபர்கள் அடிக்கடி திருடி செல்வதால் தண்ணீர் இல்லாமல் போய் விடு கிறது.
மேலும் சுகாதார வளாகத்தை சுற்றி கருவேல மரங்கள் முள்புதர்கள் காடு போல மண்டி கிடக்கி றது.இதனால் சுகாதார வளாகத்தின் உள்ளே செல்ல முடியாத நிலை உள்ளது.
இதுகுறித்து சம்ம ந்தப்பட்ட துறை அதிகாரி களிடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மகளிர்மற்றும் குழந்தைகள் சுகாதார வளாகத்தை புதுப்பித்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.






