என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "முழக்கம்"
- கொரோனா காரணமாக பள்ளிகள் நடைபெறவில்லை இதனையடுத்து மாணவர்கள் கல்வி அறிவு பெற வேண்டும்.
- அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி முக்கூட்டு சாலை, புதுத்தெரு, கொள்ளை தெரு மெயின் ரோடு வழியாக திரும்ப பள்ளிக்கு வந்தடைந்தது.
மதுக்கூர்:
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுக்கா மதுக்கூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு நடைபெறுவதை முன்னிட்டு மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
கடந்த சில ஆண்டுகளாக கொரோனா காரணமாக பள்ளிகளில் பள்ளிகள் நடைபெறவில்லை இதனை யடுத்து மாணவர்கள் கல்வி அறிவு பெற வேண்டும் என்பதற்காக ஆங்காங்கே மாணவர் சேர்க்கை விழிப்புணர்வுப் பேரணி என பல வகைகளில் நடைபெற்று வருகின்றது
இதன் ஒரு பகுதியாக மதுக்கூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. இந்த பேரணியை பள்ளியின் தலைமை ஆசிரியர் பிரகாஷ் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்தப் பேரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆரம்பித்து முக்கூட்டு சாலை, புதுத்தெரு, கொள்ளை தெரு மெயின் ரோடு வழியாக திரும்ப அரசு ஆண்கள் பள்ளியில் முடிவடைந்தது
இதில் சென்ற பள்ளி மாணவர்கள் சேர்ப்போம் சேர்ப்போம் பள்ளியில் சேர்ப்போம், கல்வி என்பது அடிப்படை உரிமை அதை யாரும் மறுத்தாள் அடைப்போம் சிறையில் அடைப்போம் என்று முழக்கங்களை எழுப்பியவாறு சென்றனர்.இதில் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் கோவிந்தராஜ், ஆசிரியர்கள் மணிகண்டன், ஸ்ரீராம், சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் மாணவர்களை வழி நடத்தினர் மேலும் பல ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
நாகப்பட்டினம்:
உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு நாகையில் ரத்ததானம் குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார். ஆண்டுதோறும் ஜூன் 14ம் தேதி உலகம் முழுவதும் உலக ரத்ததான தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நாகையில் ரத்ததானம் குறித்த விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. பேரணியில், ரத்ததானம் வழங்குவதன் நன்மைகள் குறித்த பதாகைகளை கையில் ஏந்தியபடி, விழிப்புணர்வு முழக்கங்களை மாணவ மாணவிகள் எழுப்பினர். முக்கிய சாலைகள் வழியாக சென்ற விழிப்புணர்வு பேரணியில் மருத்துவர்கள், செவிலியர்கள், செவிலியர் பயிற்சி மாணவிகள் என 500 க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்