search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fertilizer warehouse"

    • நகராட்சிக்கு சொந்தமான உர கிடங்கில் செயலாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
    • இதுவரை 300 டன் பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் நகராட்சி பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்ட செயல்பாடு குறித்து நகர் மன்ற தலைவர் கனியரசி முத்துக்குமார் சொரியங்கிணத்துபாளையத்தில் உள்ள உரக்கிடங்கு மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். இது குறித்து நகர் மன்ற தலைவர் கனியரசிமுத்துகுமார் கூறியதாவது:-

    நகராட்சி அனைத்து வார்டுகளில் உள்ள குடியிருப்புகளில் தினசரி தூய்மை பணியாளர்களைக் கொண்டு மக்கும் குப்பை,மக்காத குப்பை என தரம் பிரிக்கப்பட்டு குப்பைகள் சேகரிக்கப்படுகிறது.அதனை நகராட்சிக்கு சொந்தமான உர கிடங்கில் செயலாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதில் மக்கும் கழிவுகளை அரைத்து உரம் தயார் செய்து அதனை விவசாய பணிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் மக்காத கழிவிலிருந்து மறுசுழற்சிக்கு பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் கழிவுகளை அரியலூர் அல்ட்ரா டெக் சிமெண்ட் பேக்டரிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    இதுவரை 300 டன் பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.மேலும் நகரை தூய்மையாக வைக்கும் வகையில், ஓட்டல், பேக்கரி, டீ கடை,இரவு நேர தள்ளுவண்டி கடைகளில் இரவு நேரத்தில் கழிவுகள் சேகரிக்கும் பணி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் குப்பைகள் ஆங்காங்கே தெருவில் கிடப்பதை தடுப்பதுடன் சுற்றுப்புற சுகாதாரம் பாதுகாக்கப்படுகிறது.இதற்கு வணிக நிறுவனத்தினரும், பொது மக்களும் முழு ஒத்துழைப்பு வழங்கி நகரை தூய்மையாக வைத்திருக்க உதவ வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.

    கூண்டுகள் பொருத்தும் நிகழ்ச்சியை நாகை நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி தொடங்கி வைத்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகை நகராட்சிக்கு சொந்தமான நாகூர் நுண்ணுயிர் உர கிடங்கில் சிட்டுக்குருவி களுக்கான 25 கூண்டுகள் பொருத்தப்பட்டன. இந்த கூண்டுகள் பொருத்தும் நிகழ்ச்சியை நாகை நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை நாகூர் நகர்மன்ற உறுப்பினர் தியாகு செய்திருந்தார்.

    இந்நிகழ்வில் தேசிய பசுமைப் படையின் மாவட்ட தலைவர் முத்தமிழ் ஆனந்தன், நாகூர் சித்திக் , ஸ்ரீ அறுபடை பசுமை சிறகுகள் அமைப்பைச் சார்ந்த ராஜசரவணன், பண்டரிநாதன், அழகேசன், சிவா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×