என் மலர்
நாகப்பட்டினம்
- சம்பவத்தன்று பூசாரி சாரதா தேவி வழக்கம்போல் பூஜையை முடித்துவிட்டு கோவிலை பூட்டி விட்டு சென்றார்.
- மர்ம நபர்கள் கோவிலின் மேல்கூரை வழியாக புகுந்து இந்த துணிகர செயலை செய்துள்ளனர்.
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த இடும்பாவனம் மேலவாடியக்காடு கிராமத்தில் பிரசித்திபெற்ற ஸ்ரீஅமிர்த வள்ளியம்மன் கோவில் உள்ளது.
சம்பவத்தன்று பூசாரி சாரதா தேவி வழக்கம்போல் பூஜையை முடித்துவிட்டு கோவிலை பூட்டி விட்டு சென்றார்.
இந்நிலையில் மீண்டும் கோவிலை திறக்க வந்தவர் அங்கு கருவறை கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அங்கு அம்மன் கழுத்தில் இருந்த 1½ பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
மேலும் மர்ம நபர்கள் கோவிலின் மேல்கூரை வழியாக புகுந்து இந்த துணிகர செயலை செய்துள்ளனர்.இது குறித்து கோவில் நிர்வாகி குணசேகரன் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தம், சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வராஜ், பசீர், தலைமை காவலர் ராமலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- மணமகனும் தாலியை பெற்றுக் கொண்டு மணமகள் கழுத்தில் கட்ட தயாரானார்.
- சைல்டு லைன் அதிகாரிகளுக்கு குறைந்த வயதான எனக்கு தனது பெற்றோர் கட்டாய திருமணம் செய்து வைப்பதாக தகவல் தெரிவித்தார்.
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த பாண்டி கிராமத்தை சேர்ந்த 30 இளைஞர் ஒருவருக்கும் அருகில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த அவரது உறவினர் மகள் 17 வயது சிறுமி ஒருவருக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்ய நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இந்த நிலையில் பெரியார்களால் முடிவு செய்யப்பட்ட நாளான நேற்று பாண்டி கடை தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள் திருமணம் நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது.
அதன்படி காலை 6.30 மணிக்கு மணமேடைக்கு மணமக்கள் இருவரும் வந்திருந்தனர். புரோகிதர் மந்திரங்கள் ஓதி தாலியை மணமகனிடம் எடுத்துக் கொடுத்தார்.
மணமகனும் தாலியை பெற்றுக் கொண்டு மணமகள் கழுத்தில் கட்ட தயாரானார்.
அப்பொழுது மணப்பெண் தாலி கட்டுவதை தடுத்து நிறுத்தினார். இதனால் அதிர்ச்சி அடைந்த மணமகன் அப்படியே திகைத்து நின்றார். இதனால் மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
அப்பொழுது மணமகள் தான் வைத்திருந்த செல்போன் மூலம் சைல்டு லைன் அதிகாரிகளுக்கு குறைந்த வயதான எனக்கு தனது பெற்றோர் கட்டாய திருமணம் செய்து வைப்பதாக தகவல் தெரிவித்தார்.
இதன் அடிப்படையில் சைல்டு லைன் அதிகாரிகள் முத்துப்பேட்டை மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதனைடுத்து அங்கு வந்த காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் வரலட்சுமி திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.
அதன் பிறகு அங்கு வந்த சைல்டு லைன் அதிகாரிகள் சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்து இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
- கட்சி அலுவலகத்தை மாநில ஒருங்கி ணைப்பாளர் ஹீமாயுன் கபீர் திறந்து வைத்தார்.
- நகர செயலாளர் ஹாஜா உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டையில் நாம் தமிழர் கட்சி அலுவலகம் திறப்பு மற்றும் கூட்டம் நடைபெற்றது.
கட்சி அலுவலகத்தை மாநில ஒருங்கி ணைப்பாளர் ஹீமாயுன் கபீர் திறந்து வைத்து பேசினார்.
இதில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் டாக்டர் முகமது சர்வத்கான், கிருஷ்ணகுமார், மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்தி, மாநில ஊழல் ஒழிப்பு பாசறை ஒருங்கிணைப்பாளர் அரவி ந்தன், மாநில வழக்கறிஞர் பிரிவு துணைச்செயலாளர் உமர் முகமத், நாகை பாராளுமன்ற பொறுப்பாளர் அப்பு அகஸ்டீன் அற்புதராஜ், மாவட்ட தலைவர் செல்வம், மாவட்ட பொருளாளர் அலாவூதீன், தொகுதி தலைவர் பிஸ்மி கார்த்திக், செயலாளர் சரவணன், ஒன்றிய செயலாளர்கள் சுந்தர், கமலகண்ணன், ஒன்றிய தலைவர்கள் சந்திரமோகன், மதன் குமார், பொருளாளர் ராஜா, நகர தலைவர் மகேஷ்குமார், நகர செயலாளர் ஹாஜா உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.
- வேதாரண்யம் கிழக்கு ஒன்றிய செயலாளர்சதாசிவம் தலைமையில் இல்லம் தேடி உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.
- நிகழ்ச்சியில் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ஜோதி.செல்லபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தி.மு.க. கிழக்கு ஒன்றியத்தின் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், நாகை மாவட்ட செயலாளர்கவுதமன் ஆகியோர் அறிவுறுத்தலின்படி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மலர்வண்ண ன்வழிகாட்டுதல்படி, வேதாரண்யம் கிழக்கு ஒன்றிய செயலாளர்சதாசிவம் தலைமையில் இல்லம் தேடி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது .
நிகழ்ச்சியில் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ஜோதி.செல்லபாண்டியன், மாவட்ட கவுன்சிலர் சோழன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் சத்தியமூர்த்தி , மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் தாமோதரன் , மாணவரணி துணை அமைப்பாளர் செந்தாமரைச்செல்வன், அயலக அணி துணை அமைப்பாளர் சம்பத், மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் மோகனா தசமணி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கலைக்கோவன், ஒன்றிய கழக அவைத் தலைவர் ஏகாம்பரம் , மாவட்ட பிரதிநிதிசெல்வம், ஒன்றிய துணைச் செயலாளர் சேதுராஜன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் கவியரசன், ரெத்தினசாமி மற்றும் கத்தரிப்புலம், கிளை செயலாளர்கள் கலந்துகொண்டனர்.
- போக்சோ சட்டம், இணையதளத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்வது உள்ளிட்ட விழிப்புணா்வு குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கினாா்.
- இந்நிகழ்ச்சிக்கு திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் சுரேஷ் தலைமை தாங்கினர்.
நாகப்பட்டினம்:
திட்டச்சேரி காவல் நிலையம் சாா்பில் உலக குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு தினத்தை முன்னிட்டு குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பது மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி திட்டச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்காக திட்டச்சேரி காவல் நிலையத்தில் நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிரு ஷ்ணன் சுரேஷ் தலைமை தாங்கி குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமை மற்றும் அதிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுதல், போக்சோ சட்டம், இணையதளத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்வது உள்ளிட்ட விழிப்புணா்வு குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கினாா்.
இதில் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் டென்னிசன், பள்ளியின் ஓவிய ஆசிரியர் குமரவேல் மற்றும் பள்ளி மாணவ மாணவியர்கள் போலீசார், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- நாகை திருமருகல் ஒன்றியம் மேலசகடமங்கலம் மேலத்தெருவை சேர்ந்தவர் கலியமூர்த்தி.
- வயிற்று வலி தாங்க முடியாமல் வயலுக்கு தெளிக்க வைத்திருந்த களைக்கொல்லி மருந்தை(விஷம்) குடித்து வயலில் மயங்கி விழுந்தாா்
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் மேலசகடமங்கலம் மேலத்தெருவை சேர்ந்தவர் கலியமூர்த்தி (வயது45) விவசாயி.
இவர் கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி கலியமூர்த்தி தனக்கு சொந்தமான வயலில் களைக்கொல்லி மருந்து தெளிப்பதற்காக சென்றுள்ளார்.
அப்போது அவர் வயிற்று வலி தாங்க முடியாமல் வயலுக்கு தெளிக்க வைத்திருந்த களைக்கொல்லி மருந்தை(விஷம்) குடித்து வயலில் மயங்கி விழுந்தாா்.
அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நன்னிலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு கலியமூர்த்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து திருக்கண்ணபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- வடிகால் வசதி ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டும்பணி மற்றும் பல்வேறு வளர்ச்சி பணிகளை நாகை மாவட்டதுணை ஆட்சியர் பிரிதிவிராஜ் ஆய்வு செய்தார்.
- பணிகளை தரமாகவும் விரைவாகவும் முடிக்க அறிவுறுத்தினார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த கோடியக்காடு ஊராட்சியில் சாலை பணிகள் வடிகால் வசதி ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டும்பணி மற்றும் பல்வேறு வளர்ச்சி பணிகளை நாகை மாவட்டதுணை ஆட்சியர் பிரிதிவிராஜ் ஆய்வு செய்தார். பணிகளை தரமாகவும் விரைவாகவும் முடிக்க அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது ஊராட்சி ஒன்றிய ஆணையர் (ஊராட்சி) பாஸ்கர், ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்மணி, வார்டு உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.
- ரூ.28 லட்சத்து 94 ஆயிரம் மதிப்பீட்டில் நெல் கொள்முதல் நிலையம் கட்டுமான பணி.
- ரூ.4 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பீட்டில் சத்திரகுளம் தூர்வாரப்பட்டு படித்துறைகள் அமைக்கும் பணி.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் உத்தமசோழபுரம், போலகம், புத்தகரம் ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மற்றும் 15-ஆவது நிதி குழு மானியத்தில் ரூ.11 லட்சத்து 46 ஆயிரம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டிட கட்டுமான பணிகளையும், கீழப்பூதனூர், பில்லாளி ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.28 லட்சத்து 94 ஆயிரம் மதிப்பீட்டில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் கட்டிட கட்டுமான பணிகளையும், நரிமணம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டிட கட்டுமான பணிகளையும், அம்பல் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பீட்டில் சத்திரகுளம் தூர்வாரப்பட்டு படித்துறைகள் அமைக்கும் பணிகளையும் மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி திட்டம்) பிருத்திவிராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் பசுபதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி இயக்குனர் கலைச்செல்வி, திருமருகல் ஊராட்சி ஒன்றிய ஆணையர் பாலமுருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) பாத்திமா ஆரோக்கியமேரி, ஒன்றிய பொறியாளர் செந்தில் மற்றும் அரசு அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் உடன் இருந்தனர்.
- போதிய வகுப்பறை வசதிகளின்றி மாணவர்கள் மிகவும் சிரமம்.
- விரைவில் புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்படும்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சகடமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மேலப்போலகம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, சேஷமூலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கொட்டாரக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளை நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது,
பழுதடைந்த பள்ளிக் கட்டடங்கள் அரசாணையின் அடிப்படையில் இடிக்கப்ப ட்டுவிட்ட நிலையில், போதிய வகுப்பறை வசதி இன்றி மாணவர்கள் மிகுந்த சிரமங்களுடன் படித்து வருகின்றனர்.
தற்காலிக கூடாரங்களிலும் தனியார் கட்டடங்களிலும் தற்போது பல பள்ளிகள் இயங்கி வருகின்றன.
எனவே, விரைவில் இந்தப் பள்ளிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் மற்றும் பள்ளிக் கட்டடங்கள் கட்டுவதற்கு அரசு ஒதுக்கியுள்ள சிறப்பு நிதியின் மூலம் விரைவில் புதிய வகுப்பறை கட்டடங்கள் கட்டப்படும் என்று உறுதியளித்தார்.
ஆய்வின் போது, தி.மு.க. ஒன்றிய செயலாளர் செல்வ.செங்கு ட்டுவன், வி.சி.க. ஒன்றிய செயலாளர் கு.சக்திவேல் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், உறுப்பினர்கள் உடனிருந்தனர்.
- சோதனையில் அவர் மது பாட்டில்கள் கடத்தி செல்வது தெரியவந்தது.
- இருசக்கர வாகனத்தில் இருந்த 100 மதுபாட்டில்கள் பறிமுதல்.
நாகப்பட்டினம்:
நாகையில் இரு சக்கர வாகனத்தில் பாண்டி சாராய பாட்டில்களை கடத்தி வந்த நபரை போலீசார் கைது செய்தனர் நாகை மாவட்டத்தில் சாராய கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் உத்தரவின் பேரில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நேற்று காலை தனிப்படை உதவி ஆய்வாளர் இரணியன் தலைமையிலான போலீசார் கூக்ஸ் ரோடு பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் இரு சக்கர வாகனத்தில் வந்த ஒரு நபரை பிடித்து சோதனை செய்தனர் சோதனையில் அவர் மது பாட்டில்கள் கடத்தி செல்வது தெரிய வந்தது.
மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் மதுபானம் கடத்தி வந்தவர் செல்லூர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த ரவிக்குமார் (வயது 34) என்பது தெரிய வந்தது.
ரவிக்குமாரை கைது செய்த போலீசார் அவரிடம் இந்த 100 மதுபாட்டில்கள் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் இது தொடர்பாக வெளிப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
- ஆஸ்பத்திரியில் தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வினர் குவிந்ததால் அப்பகுதி முழுவதும் பதட்டமான சூழல் நிலவியது.
- நாகை டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டை டாடா நகர் பகுதியை சேர்ந்தவர் விஜயேந்திரன். தி.மு.க. மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளராக இருந்தார். பின்னர், அவர் கடந்த மாதம் தி.மு.க.வில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தார். இந்நிலையில் விஜயேந்திரனுக்கு பா.ஜ.க. மாவட்ட செயலாளராக பதவி வழங்கப்பட்டுள்ளது.
அதை கொண்டாடும் விதமாக அந்த பகுதியில் விஜயேந்திரன் ஆதரவாளர்கள் மற்றும் பா.ஜ.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடி உள்ளனர். அப்போது அருகில் இருந்த தி.மு.க. நகர்மன்ற உறுப்பினர் ஞானமணி என்பவருக்கு சொந்தமான மளிகை கடையில் பட்டாசு விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதில் நகர்மன்ற உறுப்பினர் ஞானமணிக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் பா.ஜ.க.வை சேர்ந்த 5 பேருக்கும், தி.மு.க. வை சேர்ந்த நகர்மன்ற உறுப்பினர் உள்பட 2 பேருக்கும் காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் நாகை அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் அக்கரைப்பேட்டை, டாடா நகர் மற்றும் ஆஸ்பத்திரி வளாகத்தில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் ஆஸ்பத்திரியில் தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வினர் குவிந்ததால் அப்பகுதி முழுவதும் பதட்டமான சூழல் நிலவியது. இது குறித்து நாகை டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு கல்வி அவசியம் என்பது குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு.
- பேரணியின் போது மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி, துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.
நாகப்பட்டினம்:
நாகூர் அரசு உயர்நிலைப்பள்ளி சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு கல்வி அவசியம் என்பது குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு மற்றும் விழிப்புணர்வு பேரணி நாகூரில் நடத்தப்பட்டது.
பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்படும் இந்த நிகழ்வில் தலைமை ஆசிரியர் சாந்தி நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். பயிற்றுநர்கள் சிவா சுகந்தி மற்றும் விஜயலட்சுமி முன்னிலை வகித்தனர்.
பள்ளி மேலாண்மை குழு தலைவர் கற்பகம் துணைத் தலைவர் மேதின ராணி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
முன்னதாக தேசிய பசுமைப்படை ஆசிரியை பிரியா வரவேற்புரை நிகழ்த்தினார்.
ஆசிரியர் மாதவன் நன்றியுரை ஆற்றினார். பின்னர் விழிப்புணர்வு பேரணியை தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன் கொடியசைத்து துவக்கி வைத்தார். ஊர்க்காவல் படை போக்குவரத்து கமாண்டர் ஓய்வு பெற்ற ஆசிரியர் மணி வழிநடத்த பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்றது. மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வியின் அவசியம் குறித்து மாணவர்கள் விழிப்புணர்வு பேரணியின் போது பதாகைகளை ஏந்தி, துண்டு பிரசுரங்களை வழங்கினர்.






