என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • நாள் ஒன்றுக்கு 1 டன் முதல் 2 டன் வரை மட்டுமே பூ கிடைத்து வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
    • சீசன் காலத்தில் கிலோ ரூ.50 முதல் 70 வரை கொள்முதல் செய்யப்–படுகிறது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கருப்பம்புலம், ஆயக்காரன்புலம், மருதூர், நெய்விளக்கு, பஞ்சநதிகுளம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் முல்லைப்பூ சாகுபடி நடைபெறுகிறது.

    ஆண்டுதோறும் மார்ச் மாதம் தொடங்கி அக்டோபர் வரை இந்த முல்லைப்பூ சீசன் காலமாகும். இந்த சீசன் காலத்தில் நாள் ஒன்றுக்கு 15 முதல் 20 டன் முல்லைப்பூ விளைவிக்கப்படுகிறது .

    தற்போது வேதாரண்யம் பகுதியில் கடும் பனிப்–பொழிவால் பூச்செடிகள் இலைகள் உதிர்ந்து பூ விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 1 டன் முதல் 2 டன் வரை மட்டுமே பூ கிடைத்து வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    சீசன் காலத்தில் கிலோ ரூ.50 முதல் 70 வரை கொள்முதல் செய்யப்படுகிறது. சீசன் இல்லாத நவம்பர் முதல் பிப்ரவரி வரை கிலோ ரூ.600 முதல் 1000 வரை விற்பனை ஆகிறது.

    பனிப்பொழிவால் முல்லைப்பூ அதிகம் விளையாததால் விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளது.

    விலை ஏற்றம் இருந்தாலும் விளைச்சல் குறைவால் விவசாயிகள் அவதியடைந்து உள்ளனர்.எனவே முல்லைப்பூ விவசாயிகளுக்கு வங்கிகள் மூலம் கடன் உதவியும், நிவாரணம் வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
    • கீழ பட்டினச்சேரிக்கும் தடுப்புச்சுவர் அமைக்க ரூ.7 கோடி திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    நாகப்பட்டினம்:

    மாண்டஸ் புயலின் தாக்கத்தால் நாகப்பட்டினம், நாகூர், பட்டினச்சேரியில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு, கடல் நீர் ஊருக்குள் புகுந்ததால் குடியிருப்புகள் பாதிக்கப்பட்டன. தென்னை மரங்கள் விழுந்தன. ஆடுகள் பலியாயின.

    இதையடுத்து அங்குள்ள மக்கள் புயல் பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

    கடல் அரிப்பினால் ஏற்பட்ட பாதிப்புகளை நாகை எம்.எல்.ஏ ஷா நவாஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் கூறியதாவது,

    பட்டினச்சேரியில் கடல் அரிப்பு தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் வேண்டும் என்று சட்டப்பேரவையில் பேசினேன்.

    அப்போது பதிலளித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நாகப்பட்டினத்தில் கடல் அரிப்பால் ஏற்படும் பிரச்சனைகளின் தீவிரத்தை அரசு உணர்ந்துள்ளதாகவும் எனவே விரைவில் கடல் அரிப்பு தடுப்புச் சுவர் அமைக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

    அதன்படி விரைந்து அதை நிறைவேற்ற வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

    ஏற்கெனவே நம்பியார் நகர் பகுதியில் கடல் அரிப்பு தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் என்று முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்தேன்.

    அதன் அடிப்படையில் ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

    அதுபோல் கீழப் பட்டினச்சேரிக்கும் தடுப்புச் சுவர் அமைக்க ரூ.7 கோடி திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    இந்தக் கோரிக்கையும் விரைவில் நிறைவேறும். இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது, நாகை நகர்மன்ற துணைத் தலைவர் செந்தில்குமார், நகர்மன்ற உறுப்பினர் அஞ்சலைதேவி, விடுதலை சிறுத்தை கட்சி மாவட்டப் பொறுப்பாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • புத்தாடை அணிவித்து சக மனிதனாக மாற்றி காப்பகத்தில் சேர்த்து வருகின்றனர்.
    • 70 வயது முதியவரான கண்ணன் என்பவருக்கு உணவு வழங்கினர்.

    நாகப்பட்டினம்:

    சமூகசேவகர் பாரதிமோகன் அறக்கட்டளை சார்பில் சுமார் 11 வருடங்களாக சாலையோரம் ஆதரவின்றி வாழும் ஆதரவற்ற முதியவர்களுக்கு தினந்தோறும் 250-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு உணவு வழங்கி மனநலம் பாதிக்கப்பட்ட மனிதர்களை முடி திருத்தம் செய்து குளிக்க வைத்து புத்தாடை அணிவித்து சக மனிதனாக மாற்றி காப்பகத்தில் சேர்த்து வருகின்றனர்.

    அதன்படி நாகப்பட்டினம் நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் அருகே 70 வயது முதியவரான கண்ணன் என்பவருக்கு உணவு வழங்கினர்.

    அவருக்கு மூன்று சக்கர வாகனத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர், வழங்கினார்.

    இதில் பாரதிமோகன் அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • மாண்டஸ் புயல் எதிரொலியாக தமிழகம் முழுவதும் பரவலான மழை பெய்து வருகிறது.
    • சிர்காழி, கொள்ளிடத்தில் 10 அடி உயரத்திற்கு எழுந்த ராட்சத அலைகளால் கிராமங்களுக்குள் கடல்நீர் புகுந்து குடியிருப்புகளை சூழ்ந்தது.

    சீர்காழி:

    'மாண்டஸ்' புயல் எதிரொலியாக தமிழகம் முழுவதும் பரவலான மழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவிற்கு உட்பட்ட சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவில், கொள்ளிடம், திருவெண்காடு, பூம்புகார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் காற்றுடன் பரவலாக மழை பெய்து வருகிறது.

    பழையார், மடவாமேடு, ஓலக்கொட்டாயமேடு, கூழையார், தொடுவாய், திருமுல்லைவாசல், கீழமூவர்க்கரை, பூம்புகார், வானகிரி, சாவடி குப்பம், நாயக்கர் குப்பம் உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றமாக காணப்பட்டது.

    கடல் அலைகள் 10 அடி உயரத்திற்கு மேல் எழுந்தது. கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள கருங்கல் தடுப்புச்சுவரை ராட்சத அலைகள் எழுந்து கிராமங்களுக்கு தண்ணீர் புகுந்தது.

    தொடுவாய், மடவாமேடு ஆகிய கிராமங்களுக்குள் கடல் நீர் புகுந்து 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை சூழ்ந்தது. இதனைத்தொடர்ந்து அந்த பகுதி மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு புயல் பாதுகாப்பு மையம் மற்றும் பள்ளி கட்டிடம் உள்ளிட்ட இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மீனவர்கள் தங்களுடைய விசைப்படகு, பைபர் படகு, கட்டுமரம் ஆகியவற்றை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.

    இதேபோல் கொள்ளிடம் அருகே மடவாமேடு கிராமத்தில் கடல் சீற்றத்தின் காரணமாக 10 அடி உயரத்திற்கு ராட்சத அலைகள் எழுந்தது. இதன் காரணமாக மடவாமேடு கிராமத்திற்குள் கடல்நீர் புகுந்து குடியிருப்புகளை சூழ்ந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயப்பிரகாஷ், ஊராட்சி மன்ற தலைவர் மூர்த்தி, புதுப்பட்டினம் கிராம நிர்வாக அலுவலர் பவளச்சந்திரன் ஆகியோர் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக சென்றனர்.

    அவர்கள் கடற்கரையில் நின்று பார்வையிட்டபோது ராட்சத அலையில் அடித்து வரப்பட்ட மரக்கட்டைகள் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் மீது தாக்கியது. இதில் காயம் அடைந்த அவர்கள் புதுப்பட்டினம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

    புயலின் காரணமாக மீனவர்கள் நேற்று 4-வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

    புயல் காரணமாக சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், கொள்ளிடம் உள்ளிட்ட நகர் பகுதியில் உள்ள பெரும்பாலான கடைகள் நேற்று அடைக்கப்பட்டு இருந்தன. குறைந்த அளவிலான பஸ்கள் இயக்கப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடி கிடந்தன.

    கொண்டல், ஆதமங்கலம், பெருமங்கலம், வள்ளுவக்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் முன்னதாக நடவு செய்யப்பட்டு தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த சம்பா நெற்பயிர்கள் மழையால் சாய்ந்துள்ளன. தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் வாழ்வாதாரம் மீண்டும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது என கவலை அடைந்துள்ளனர். இந்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    • பவுர்ணமி தினத்தன்று சிறப்பாக வேள்வியும், அபிஷேகமும் நடைபெற்றது.
    • மார்கழி மாதம் முழுவதும் பிரம்ம மூர்த்தத்தில் சிறப்பு பூஜைகள்.

    நாகப்பட்டினம்:

    நாகூர் குயவர் மேட்டு தெருவில் உள்ள காங்கேய சித்தர் ஜீவப்பீடத்தில் மாதம் தோறும் பௌர்ணமி யாகமானது தமிழ் முறைப்படி சித்தர் பீடத்தை நிர்வகித்து வரும் நாகூர் ஸ்ரீ காங்கேய சித்தர் அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர்.

    இந்த பௌர்ணமி தினத்தன்று மிகச் சிறப்பாக வேள்வியும், அபிஷேக ஆராதனை களும் நடைபெற்றது.நாகூர், காரைக்கால் திருத்துறைப்பூண்டியை சார்ந்த பக்தர்கள் இந்த வேள்வியில் கலந்து கொண்டார்கள் அதனை தொடர்ந்து அபிஷேக ஆராதனைகளும் அன்னதான பிரசாதமும் வழங்கப்பட்டது

    இந்த வேள்வியினை ஸ்ரீ காங்கேய சித்தர் அறக்கட்டளையைச் சேர்ந்த ராஜசரவணன், கோகுல கிருஷ்ணன், டாக்டர் அனிதா, குமார், பழனிவேல் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்

    இந்த பூஜையினை கும்பகோணத்தைச் சேர்ந்த சிவாச்சாரியார்கள் மற்றும் காங்கேய சித்தர் பீடத்தின் அர்ச்சகர் வெங்கட்ராமன் ஆகியோர் பூஜையை செய்தார்கள். வருகின்ற மார்கழி மாதம் முழுவதும் காங்கேய சித்தர் ஜீவபீடத்தில் அதிகாலையில் பிரம்ம மூர்த்தத்தில் சிறப்பு பூஜைகளும் நடைபெற இருக்கின்றது.

    • சாலைகள் போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாற்றம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
    • பஸ் நிலையம் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

    வேதாரண்யம்:

    வங்க கடலில் நிலை கொண்டுள்ள தீவிர மாண்டஸ் புயல் காரணமாக வேதாரணத்தில் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. கடலில் அலைகள் 5 அடி உயரம் எழுந்து கடல் சீற்றமாக காணப்படுகிறது.

    கடல் சீற்றம் காரணமாக ஆற்காடுதுறை, புஷ்பவனம், வெள்ளபள்ளம், மணியன்தீவு, கோடியக்கரை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் மீன்பிடி படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளை கரையிலிருந்து சற்று தொலைவாக பாதுகாப்பாக வைத்துள்ளனர்.

    வேதாரண்யம் பகுதியில் இரவில் இருந்து கடும் குளிர் காற்று வீசி வருகிறது.

    இதனால் பொதுமக்கள் வீடுகளிலே முடங்கி உள்ளனர்.

    இதனால் சாலைகள் வாகன போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாற்றம்யின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

    வேதாரண்யம் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் இயக்கப்பட்ட போதும் பேருந்து நிலையம் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

    புயலால் பாதிப்பு ஏற்பட்டால் அதை சமாளிக்க தயார் நிலையில் காவல் துறை சார்பில் மீட்பு படையினர் வேதா ரண்யத்தில் முகாமிட்டு ள்ளனர்.

    • ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு, போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம் ஏனங்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அறுவுறுத்தல்படி ஒருங்கிணைந்த கல்வி துறை, சமூக நலத்துறை, மாவட்ட குழந்தைகள் அலுவலகம், சுகாதாரத்துறை, காவல்துறை உள்ளிட்ட துறைகள் ஒருங்கிணைந்து போதை பொருள் தடுப்பு மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம், குழந்தை திருமணம் தடை சட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு, போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் அம்சேந்திரன், திருக்கண்ணபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி, சமூக நல விரிவாக்க அலுவலர் தையல் நாயகி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக புறதொடர்பு பணியாளர் பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    • 2022-2023 ஆண்டு நிதியிலிருந்து வழங்கப்பட வேண்டிய திட்டபணிகள் குறித்து நடைப்பெற்றது.
    • தொகுதி மேம்பாட்டு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளிடம் வலியுறுத்தல்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 2021-2022 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட திட்டப் பணிகளின் நிலை குறித்தும், 2022-2023 ஆம் ஆண்டு நிதியிலிருந்து வழங்கப்பட வேண்டிய திட்டப்பணிகள் குறித்தும், ஆய்வு செய்வதற்கான கலந்தாய்வுக் கூட்டம் நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில், நாகை எம்.எல்.ஏ. முகம்மது ஷா நவாஸ் முன்னிலையில் நடைபெற்றது.

    இதில் கூடுதல் ஆட்சியர், நாகை மற்றும் திருமருகல் ஒன்றியங்களின் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகராட்சி செயற்பொறியாளர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு திட்டப்பணிகளை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று கூட்டத்தில் அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டது.

    • ஐயப்பனுக்கு சிறப்பு ஹோமங்கள் மற்றும் அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
    • மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சுவாமி வீதி உலா செண்டை மேளங்கள் முழங்க நடைபெற்றது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த தெற்கு பொய்கை நல்லூரில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ சொர்ணபுரீஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள ஐயப்பனுக்கு 10-ம்ஆண்டு உற்சவ விழாவை முன்னிட்டு ஐயப்பனுக்கு சிறப்பு ஹோமங்கள் மற்றும் அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து மின்விளக்குகளால் அலங்க ரிக்கப்பட்ட தேரில் ஐயப்பன், பிள்ளையார் ஆகிய சுவாமிகளுக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஆலயத்தின் முக்கிய வீதிகள் வழியாக சுவாமி வீதி உலா காட்சி செண்டை மேளங்கள் முழங்க நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து பச்சைகாளி, சிவன், காத்தவராயன் உள்ளிட்ட வேடங்கள் அணிந்த நடனம் நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • சுமார் 5 ஆயிரம் பைபர் படகுகள் மீன்பிடிக்க செல்லமால் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கபட்டுள்ளது.
    • 30-க்கும் மேற்பட்ட விசைபடகுகள் கரைக்கு திரும்பாத நிலையில் வாக்கி டாக்கி மூலம் எச்சரிக்கை.

    வேதாரண்யம்:

    வங்க கடலில்குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ள காரணத்தினால் மீனவர்கள் மீன்பிடிக்கச் கடலுக்குசெல்ல வேண்டாம் என 4-ம் தேதி மீன்வளத்துறை மூலம் அறிவிக்கப்பட்டது.

    இதனால் நாகை மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரம் பைபர் படகுகள் மீன்பிடிக்க செல்லமால் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கபட்டுள்ளது.

    கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட விசைபடகு மீனவர்கள் அவசர அவசரமாக கரைக்கு திரும்பி விட்டனர்.

    கடலில் தங்கி மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற நாகை மாவட்டத்தை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட விசைபடகுகள் கரைக்கு திரும்பாத நிலையில் கோடி யக்கரை மீன்வளத்துறை கட்டுப்பாட்டு அறையில் இருந்து வாக்கி டாக்கி மூலம் மீனவர்களுக்கு புயல் உருவாகி இருப்பதால் கடலில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது.

    ஆகையால் உடனடியாக கரை திரும்ப வேண்டும் என தொடர்ந்துஎச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

    • நடுநிலைப் பள்ளியில் வகுப்பறை கட்டடம் பழுதடைந்த காரணத்தால் முழுவதுமாக இடிக்கப்பட்டுவிட்டது.
    • நடவடிக்கை எடுக்கப்பட்டு இரண்டு வகுப்பறை கட்டடம் கட்டப்படும் என்று உறுதியளித்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம், திருமருகல் ஒன்றியம், திருப்புகலூர் ஊராட்சியிலுள்ள, வவ்வாலடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வகுப்பறை கட்டடம் பழுதடைந்த காரணத்தால் முழுவதுமாக இடிக்கப்பட்டுவிட்டது.

    போதிய வகுப்பறை கட்டடம் இன்றி மாணவர்களும் ஆசிரியர்களும் மிகுந்த இன்னலை சந்திப்பதாக முகம்மது ஷா நவாஸ் எம்.எல்.ஏவிடம் மக்கள் முறையிட்டனர். உடனடியாக புதிய கட்டடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.

    அங்கு சென்று ஆய்வு செய்த எம்.எல்.ஏ. மக்களின் கோரிக்கையை ஏற்று, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், விரைவில் இரண்டு வகுப்பறை கட்டடம் கட்டப்படும் என்று உறுதியளித்தார்.

    • தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் காரணமாக நாகை மீனவர்கள் இன்று 3-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
    • புயல் காரணமாக நாகை மாவட்டத்தில் 700 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 3000 க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் பாதுகாப்பாக கடற்கரையோரங்களில் நிறுத்தப்பட்டுள்ளது.

    நாகப்பட்டினம்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி அவ்வப்பொழுது வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வரும் சூழ்நிலையில் தற்போது மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி புயலாக உருமாறி உள்ளது இந்த புயலுக்கு மாண்டஸ் என பெயரிடப்பட்டுள்ளது.

    புயல் சின்னம் உருவானதை தொடர்ந்து நாகை துறைமுகத்தில் 2ம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் மீன்வளத் துறை மூலம் கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லும்போது வழங்கப்படும் டோக்கன் நிறுத்தப்பட்டுள்ளது.

    தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டோஸ் புயல் காரணமாக நாகை மீனவர்கள் இன்று 3-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

    இதனால் நாகை அக்கரைப்பேட்டை, செருதூர் வேளாங்கண்ணி, நாகூர், உள்ளிட்ட மாவட்டம் முழுவதுமுள்ள 25 மீனவ கிராமத்தை சேர்ந்த சுமார் 70 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. சுமை தூக்குவோர், ஐஸ் உடைப்போர், சிறு குறு மீன் விற்பனையாளர்கள் என மீன்பிடி தொழிசார்ந்த ஆயிரக்கணக்கானோர் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    புயல் காரணமாக நாகை மாவட்டத்தில் 700 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 3000 க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் பாதுகாப்பாக கடற்கரையோரங்களில் நிறுத்தப்பட்டுள்ளது. புயல் அறிவிப்பு காரணமாக கடந்த மூன்று நாட்களாக மீன்பிடி தொழில் முடங்கி கிடப்பது மட்டுமில்லாமல் உள்நாட்டு மறறும் வெளிநாட்டு மீன் ஏற்றுமதியும் நடைபெறாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    சீர்காழி தாலுகாவை சேர்ந்த பழையார், தொடுவாய், திருமுல்லைவாசல், பூம்புகார், வானகிரி வரையிலான 16 மீனவ கிராமம் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் தங்களுக்கு சொந்தமான 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 2500க்கும் மேற்பட்ட பைபர் படகுகள், நாட்டுப் படகுகளை கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.

    ×