என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    • மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 10- க்கும் மேற்பட்ட கல்லூரிகள் பங்கேற்க உள்ளன.
    • தங்களது திறனையும், சிந்தனையையும் வெளிப்படுத்துவதோடு கேள்விகளையும் எழுப்பி விருதுகளை பெற வேண்டும்.

    சீர்காழி:

    தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க கல்லூரி அளவில் தமிழ்க் கனவு நிகழ்ச்சி மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகிற 10-ம் தேதி நடக்கிறது.

    இது தொடர்பாக துறை சார்ந்த அலுவலர்களுடனான முன்னேற்பாடு ஆய்வுக் கூட்டம் மயிலாடுதுறையில் கலெக்டர் மகாபாரதி தலைமையில் நடைபெற்றது.

    அப்போது அவர் பேசியதாவது :-

    மாபெரும் தமிழ்க் கனவு எனும் பண்பாட்டு பரப்புரை வருகிற 10ஆம் தேதி செம்பனார்கோவில் கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடக்க இருக்கிறது.

    இதில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 10- க்கும் மேற்பட்ட கல்லூரிகள் பங்கேற்க உள்ளன.

    புத்தக கண்காட்சி, நான் முதல்வன் திட்டம், வேலைவாய்ப்பு, உயர் கல்வி வழிகாட்டுதல், வங்கி கடன் பெறுதல், மாவட்ட தொழில் மையம் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் உள்ளிட்ட துறை சார்ந்த அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.

    கல்லூரி மாணவ–மாணவிகளின் சிந்தனை மற்றும் திறனை நிரூபிக்கும் வகையில் அவர்களுக்கு பெருமித செல்வன் மற்றும் பெருமித செல்வி ஆகிய 2 வகையான விருதுகள் வழங்கப்பட உள்ளன.

    சொற்பொழிவிற்கு பின் கேள்வி எழுப்பும் கல்லூரி மாணவ – மாணவிகளுக்கு கேள்வியின் நாயகன் மற்றும் கேள்வியின் நாயகி ஆகிய 2 விருதுகளும் வழங்கப்பட உள்ளன.

    இந்நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ – மாணவியர் அனைவரும் கலந்து கொண்டு தங்களது திறனையும், சிந்தனையையும் வெளிப்படுத்துவதோடு கேள்விகளையும் எழுப்பி விருதுகளை பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்முருகதாஸ், ஊரக வளர்ச்சி துறை இணை இயக்குநர் ஸ்ரீலேகா தமிழ்செல்வன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) நரேந்திரன், வருவாய் கோட்டாட்சியர்கள்யுரேகா (மயிலாடுதுறை) , அர்ச்சனா (சீர்காழி) மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • தொடர்ந்து கோபூஜை, கஜ பூஜை, அஸ்வதை பூஜை செய்து வழிபட்டார்.
    • விநாயகர், அமிர்தகடேஸ்வரர், அபிராமி, முருகன் உள்ளிட்ட சன்னதிகளுக்கு சென்று சாமி தரிசனம்.

    தரங்கம்பாடி:

    தரங்கம்பாடி தாலுக்கா, திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் ஆயுஷ் ஹோமம், மணிவிழா, யாக பூஜைகள் நடைபெறுகின்றன.

    இக்கோவிலில் முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்தார்.

    அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து கோபூஜை, கஜ பூஜை, அஸ்வதை பூஜை செய்து வழிபட்டார்.

    பின்னர் விநாயகர், அமிர்தக டேஸ்வரர், அபிராமி, முருகன் உள்ளிட்ட சன்னதிகளுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

    இதில் செம்பனார்கோவில் மத்திய ஒன்றிய செயலாளர் அமிர்த.

    விஜயகுமார், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலதி சிவராஜ், வார்டு உறுப்பினர் செந்தில் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    • பொதுமக்களை மிரட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • பட்டாகத்தியை பறிமுதல் செய்ததுடன் மற்றொரு நபரை தேடி வருகின்றனர்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே கடவாசல் டாஸ்மாக் கடை அருகே சிலர் நின்றுக்கொண்டு அப்பகுதி வழியாக செல்வோரை கத்தியை காட்டி மிரட்டு வதாக புதுப்ப ட்டினம் போலீசாருக்கு தகவல் வந்தது.

    இதனையடுத்து போலீசார் விரைந்து சென்று பொதுமக்களை மிரட்டிய கடவாசல் சிலம்பரசன் (வயது 21), திருக்கருக்காவூர் வசந்த் (20) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    அவர்களி டமிருந்து பட்டாகத்தியை பறிமுதல் செய்து இதில் தொடர்புடைய மற்றொரு நபரை தேடி வருகின்றனர்.

    • புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம்.
    • தொழிலாளர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் சுமார் 700 பேர் வந்து தங்கியிருந்து பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    இவர்களில், மேற்கு வங்காளம், பீகார், உத்தர–காண்ட் மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 200 பேர் மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஊராட்சி பால்பண்ணை பகுதியில் கட்டப்பட்டுவரும் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் சில இடங்களில் துன்புறுத்தப்படுவதாக எழுந்த வதந்தியைத் தொடர்ந்து, அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், கட்டுமானப் பணி நடைபெறும் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டடத்துக்கு மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் ஏ.பி.மகாபாரதி, போலீஸ் சூப்பிரண்டு என்.எஸ்.நிஷா மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு நடத்தியதுடன், புலம்பெயர் தொழிலாளர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தனர்.

    அப்போது கலெக்டர் பேசுகையில், இங்கு வந்து தங்கி பணியாற்றும் தொழிலாளர்கள் புலம்பெயர் தொழிலா–ளர்கள் குறித்து பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம்.

    புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

    எனவே, எந்த பயமும் இன்றி சுதந்திரமாக பணியாற்றலாம். மேலும், இங்கு ஏதேனும் குறைகள் இருந்தால் தெரிவிக்கலாம் என்றார். கலெக்டர் பேசியதை யுவா ஜெயின் சங்கத்தைச் சேர்ந்த பிரியதர்ஷினி புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இந்தியில் மொழி பெயர்த்தார்.

    அப்போது புலம்பெயர் தொழிலாளர்கள் அனைவரும் இங்கு பாது–காப்பாக இருப்பதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து ஹோலி பண்டிகையை முன்னிட்டு அனைவருக்கும் மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு அவர்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.

    இதில், மாவட்ட வருவாய் அலுவலர் சோ.முருகதாஸ், கோட்டாட்சியர் வ.யுரேகா, டிஎஸ்பி சஞ்சீவ்குமார், துணை இயக்குநர் (தொழிலக பாதுகாப்பு) ராஜேஷ், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அல்மாஸ்பேகம் தாசில்தார் மகேந்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • வள்ளாலகரம் ஊராட்சியில் 5 பஸ் நிறுத்தங்களில் நின்று பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும்.
    • கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (7-ந்தேதி) உண்ணாவிரதம் இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அருகே வள்ளாலகரம் ஊராட்சி குடியிருப்போர் நல சங்கத்தின் சார்பில், மயிலாடுதுறை - சீர்காழி மார்க்கத்தில் நகர பேருந்து வசதி வேண்டும்.

    மயிலாடுதுறை சீர்காழி சாலையில் செல்லும் அனைத்து பேருந்துகளும் வள்ளாலகரம் ஊராட்சியில் 5 பஸ் நிறுத்தங்களில் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்ல வேண்டும்.

    வள்ளாலகரம் ஊராட்சியில் இருக்கக்கூடிய அங்காடியை இரண்டாக பிரித்து நாகங்குடி சாலையில் ஒரு புதிய அங்காடியை தொடங்கிட வேண்டும் என 3 கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (7-ந்தேதி) செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதம் இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

    இத்தகவலை அறிந்த அரசு துறை சார்ந்த அதிகாரிகள் கூட்டமைப்பினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியதின் பேரில் அவர்களுடைய மூன்று கோரிக்கைகளையும் நிறைவேற்றி தருவதாக வாக்குறுதி அளித்ததனர்.

    நடைபெற இருந்த உண்ணாவிரதத்தை வாபஸ் வாங்கிகொள்வதாக கூட்டமைப்பினர் அறிவித்தனர்.

    இதன் ஒரு பகுதியாக கூட்டமைப்பின் முதல் கோரிக்கையான மயிலாடுதுறை-சீர்காழி மார்க்கத்தில் நகர பேருந்து வேண்டும் என்ற கோரிக்கை நேற்று நிறைவேற்றப்பட்டது.

    சிவப்ரியா நகர் பஸ் நிறுத்தத்தில் புதிய பஸ் இயக்க தொடக்க விழாவிற்கு கூட்டமைப்பின் தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார்.

    ஊராட்சி மன்ற தலைவர் ஜெயசுதா ராபர்ட் ஜெயின், ஒன்றிய குழு உறுப்பினர் மோகன், கூட்டமைப்பின் பொருளாளர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சமூக ஆர்வலர் அப்பர் சுந்தரம் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர் சாமி செல்வம், கூட்டமைப்பு தகவல் நெறியாளர் கார்த்திகேயன், கூட்டமைப்பு நிர்வாகிகள் துரை.குணசேகரன், கோபு, பொன்.நக்கீரன், உதயகுமார், இளங்கோவன் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
    • ஜாக்டோ-ஜியோ வின் கோரிக்கைகள் வரும் நிதிநிலை அறிக்கையில் நிறைவேற்ற வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஒருங்கிணைப்பாளர்கள் இளவரசன், சண்முகசுந்தரம் ஆகியோர் தலைமை தாங்கினர். செல்வம், அசோக் குமார், முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட பொருளாளர் அன்பரசன் வரவேற்றார். நடைபெற்ற போராட்டத்தில் பழைய பென்ஷன் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும், முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவைத் தொகை காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண்டர் ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினர்.

    இதில் உரையாற்றிய தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவனரும், மாநில ஒருங்கிணைப்பாளருமான மாயவன் பேசுகையில்:-

    ஜாக்டோ-ஜியோ வின் கோரிக்கைகள் வரும் நிதிநிலை அறிக்கையில் நிறைவேற்ற வேண்டும்.

    கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் மார்ச் 20 ஆம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய உள்ள நாளன்று ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பு கூட்டத்தை கூட்டி மிகப்பெரிய போராட்டம் அறிவிக்கப்படும் என்றார்.

    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம், தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அரசு ஊழியர் சங்கங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    • சரிவர தரமான உணவுகள் வழங்கப்படவில்லை என்றும், சுத்தமான குடிநீர் வழங்கப்படவில்லை என்றும் கலெக்டரிடம் மாணவர்கள் புகார் அளித்தனர்.
    • கலெக்டர்உணவின் தரத்தை ஆய்வு செய்தார். அப்போது மாணவர்களுக்கு சரிவர தரமான உணவு வழங்கப்படாததும், விடுதியை சரிவர பராமரிப்பு இல்லாததும் தெரியவந்தது.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறையில் ஆதி திராவிடர் அரசு கல்லூரி மாணவர் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகிறார்கள்.

    இந்நிலையில் இன்று காலை மாவட்ட கலெக்டர் ஏ.பி.மகாபாரதி ஆதிதிராவிடர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது சரிவர தரமான உணவுகள் வழங்கப்படவில்லை என்றும், சுத்தமான குடிநீர் வழங்கப்படவில்லை என்றும் கலெக்டரிடம் மாணவர்கள் புகார் அளித்தனர்.

    இதைத் தொடர்ந்து கலெக்டர்உணவின் தரத்தை ஆய்வு செய்தார். அப்போது மாணவர்களுக்கு சரிவர தரமான உணவு வழங்கப்படாததும், விடுதியை சரிவர பராமரிப்பு இல்லாததும் தெரியவந்தது.

    இதைத் தொடர்ந்து கலெக்டர் மகாபாரதி ஆதி திராவிடர் அரசு கல்லூரி விடுதி காப்பாளர் மோகன் மற்றும் சமையலர்கள் சித்தார்த்தன், ஜெயபிரகாஷ் ஆகியோரை பணி இடமாற்றம் செய்து அதிரடி உத்தரவிட்டார்.

    உடனடியாக மாணவர்களுக்கு தரமான குடிநீர் வழங்க ஏற்பாடு செய்தார். மேலும் விடுதியின் வளாகத்தை சுத்தம் செய்ய நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டார்.

    • தினமும் அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும், வீதியுலாவும் நடைபெற்றது.
    • பக்தர்கள் அலகு காவடி எடுத்தும், 16 அடிநீள அலகை வாயில் குத்தியும் கோவிலை வந்தடைந்தனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூர் கீழவீதியில் புகழ்பெற்ற மகாமுத்து மாரியம்மன் கோவில் உள்ளது.

    கோவில் தீமிதி திருவிழாவை முன்னிட்டு கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி கோவிலில் கொடியேற்றம் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து தினமும் அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும் அம்மன் வீதியுலாவும் நடைபெற்றது.

    நேற்று மாலை தீமிதி திருவிழாவை முன்னிட்டு ஆனைக்கோவில் குளத்திலிருந்து கரகம் புறப்பாடு நடைபெற்றது.

    காப்பு கட்டி விரதமிருந்து பக்தர்கள் அலகு காவடி எடுத்தும் 16 அடிநீள அலகை வாயில் குத்தியும், மஞ்சள் உடை உடுத்தி ஆயிரக்கணக்கான பக்தர்கள் மேளதாள வாத்தியங்கள் முழங்க கோவிலை வந்தடைந்தனர்.

    கோவிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குழியில் தீமிதித்து நேர்த்திகடன் செலுத்தினர்.

    இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

    பின்னர் இந்நிகழ்சியில் மாவட்ட கவுன்சிலர் துளசிரேகா ரமேஷ், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலதி சிவராஜ் உள்ளிட்ட ஏராளமான வர்கள் கலந்துகொன்டனர்.

    தீமிதி விழா ஏற்பாடுகளை கிராமமக்கள் செய்து இருந்தனர்.

    • மலேசிய தமிழர்களை பற்றி யாரும் கவலைப்பட வேண்டிய நிலை இல்லை.
    • கடந்த 2004-ம் ஆண்டு முதல் கலாச்சார பயணம் மேற்கொண்டு வருகிறோம்.

    சீர்காழி:

    மலேசிய தமிழ்ச் சங்கத்தினர் மற்றும் மலேசியா எழுத்தாளர் சங்கத்தினர் சார்பாக மலேசிய வாழ் தமிழர்கள் 50 க்கும் மேற்பட்டோர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பாரம்பரிய மிக்க கலாச்சார சின்னங்களை பார்வையிடுவதற்காக வந்திருந்தனர்.

    அவர்களை சீர்காழி தமிழ்ச் சங்கத்தின் சார்பாக அதன் தலைவர் மார்கோனி தலைமையிலான நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து மரியாதை செய்து வரவேற்றனர்.

    அப்போது பேசிய மலேசிய தமிழ்ச்சங்க நிர்வாகிகள் சீர்காழி தமிழிசை மூவர் மணிமண்டபம், சட்டநாதர் கோவில் மற்றும் தமிழரின் வாழ்வியல் கலாச்சாரத்தை போற்றும் பூம்புகார் கலைக்கூடம் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டு தமிழர்களின் தொன்மையான வாழ்வியல் கலாச்சாரத்தை அறிந்து கொள்வதற்காக தாங்கள் வந்துள்ளதாக தெரிவித்தனர்.

    மேலும் இலங்கையில் ஏற்பட்டது போல் மலேசிய தமிழர்களுக்கும் நெருக்கடி ஏற்படலாம் என்ற தகவல் பரவி வருவதை மறுத்த தமிழ் சங்கத்தினர் எக்காலத்திலும் மலேசியத் தமிழர்களுக்கு அந்த நிலை ஏற்படாது எனவும் தெரிவித்தனர்.

    மற்ற நாடுகளில் உள்ள தமிழர்கள் தங்கள் அடையாளத்தை இழந்து தமிழர் என்ற பெயரை மட்டுமே கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.

    ஆனால் மலேசிய தமிழர்கள் மட்டுமே தமிழர்களின், பாரம்பரியம் இசை, கல்வி கலாச்சாரம் பண்பாடு, உணவு என அனைத்தையும் இன்றளவும் பாதுகாத்து வருகின்றோம்.

    இன்னும் நூறு ஆண்டுகள் கடந்தாலும் தமிழ் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் நாங்கள் கடைபிடிப்போம் என்ற நிலையை எங்கள் முன்னோர்கள் உருவாக்கி வைத்துள்ளனர்.ஆகவே மலேசிய தமிழர்களைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டிய நிலை இல்லை.

    அதே நேரம் உலகத் தமிழர்கள் அனைவரும் மலேசிய தமிழர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    இதனை முன்னெடுக்கும் விதமாகத்தான் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் இந்த கலாச்சார பயணத்தை மேற்கொண்டு வருகிறோம் இதன் மூலம் மலேசிய தமிழ் சொந்தங்கள் தமிழ கலாச்சாரம் மற்றும் பண்பாடு ஆகியவற்றை முழுமையாக தெரிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படுகிறது.

    எங்களை தங்களது தொப்புள் கொடி உறவாக நினைத்து வரவேற்று மரியாதை செய்த சீர்காழி தமிழ்ச் சங்கத்தினருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்தனர்.

    அப்போது சீர்காழி தமிழ் சங்கத்தை சேர்ந்த கோவி.நடராஜன, சுப்பு. சொர்ணபால் உடனிருந்தனர்.

    • விதை நேர்த்தி செய்தல், உரமிடுதல், ஜிப்சம் மற்றும் மணிலா பூஸ்டர் பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது.
    • எலி கட்டுப்பாட்டிற்கு தேவையான தொழில்நுட்பங்கள் பற்றி கூறினர்.

    சீர்காழி:

    வேளாண்மை உழவர் நலத்துறை அட்மா திட்டம் மூலம் பண்ணை பள்ளி பயிற்சி வகுப்புகள் நிலக்கடலை மற்றும் எள்ளில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை என்னும் தலைப்பில் திருவெண்காடு கிராமத்தில் நடைபெற்றது.

    வேளாண்மை இணை இயக்குனர் சேகர் தலைமை வகித்தார். வேளாண்மை உதவி இயக்குனர் ராஜராஜன் முன்னிலை வகித்தார்.

    வட்டார தொழில்நுட்ப மேலாளர் கோ. பார்கவி வரவேற்றார். முதல் விதை வரையிலான தொழில்நுட்பங்களை அளிக்க இருப்பதாக கூறினார்கள். முதல் நாள் பயிற்சி வகுப்பில் வேளாண்மை இணை இயக்குனர் நிலக்கடலை பற்றியும், வேளாண் திட்டங்களை பற்றியும் வேளாண் அடுக்கு பற்றியும் விரிவாக எடுத்து கூறினர்.

    சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் வேளாண் புல பேராசிரியர் பாபு தரமான விதைகளை எவ்வாறு தேர்வு செய்தல், நம் பகுதிக்கு ஏற்ற பட்டம் மற்றும் இடைவெளி, விதை நேர்த்தி செய்தல், உரமிடுதல், ஜிப்சம் மற்றும் மணிலா பூஸ்டர் பற்றி தெளிவாக பயிற்சி அளித்தார்.

    எலி கட்டுப்பாட்டிற்கு தேவையான தொழில்நுட்பங்களை பற்றியும் கூறினார்கள். அதற்குப் பின் வயல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 25 விவசாயிகள் கலந்து கொண்டனர். முடிவில் உதவி வேளாண்மை அலுவலர் அலெக்சாண்டர் நன்றி கூறினார்.

    பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ராஜசேகரன், சௌந்தர்ராஜன் செய்திருந்தனர்.

    • 136 மூலிகை பொருள்களை கொண்டு சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டது.
    • புனிதநீர் கொண்டு மேதா தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    தரங்கம்பாடி:

    சைவ சமயம், தமிழ்மொழி, கலாச்சாரம் மற்றும் சித்தர்கள் குறித்து ஆராய்ச்சி செய்து, 5 சிவன் ஆலயமும், ஆறுபடை வீடுகளான 6 முருகன் கோவில்களும் ஜப்பான் நாட்டில் கட்ட திட்டமிட்டுள்ளனர்.

    அதன் பயணமாக ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோ உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களைச் சேர்ந்த 19 பெண்கள், 21ஆண்கள் என 41 பேர் ஜப்பான் சிவஆதீனம் பாலகும்ப குருமுனி என்கிற தகாயுகி ஹோஷி தலைமையில் தமிழ்நாட்டுக்கு வந்துள்ளனர்.

    இவர்கள் தமிழ்நாட்டில் உள்ள பிரசித்திபெற்ற பல்வேறு சைவ கோவில்களில் யாகம் செய்து சிவவழிபாடும், ஆறுபடை வீடுகளான 6 முருகன் கோவில்களில் யாகம் செய்து வழிபட்டு 9 கிரக கோயில்களில் வழிப்பாடு மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில் மயிலாடுதுறை சேந்தங்குடியில் உள்ள தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான பிரசித்திபெற்ற வள்ளலார் கோயில் என்று அழைக்கப்படும் வதான்யேஸ்வரர் ஆலயத்தில் தரிசனம் மேற்கொண்டனர்.

    ஆலயத்தில் உள்ள குருபகவான் மேதா தட்சிணாமூர்த்திக்கு மூலமந்திர ஹோமம், ருத்திர ஜபம் பூஜை செய்து வழிபாடு மேற்கொண்டனர். இதையொட்டி, கோயில் பிரகாரத்தில், புனித நீர் அடங்கிய கடம் பிரதிஷ்டை செய்து, 136 மூலிகைப் பொருள்களை கொண்டு சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டது.

    பின்னர் பூர்ணாகுதி மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, புனிதநீர் கொண்டு மேதா தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.

    முன்னதாக ஜப்பானிய ஆன்மீகக் குழுவினர் மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனத்தில் உள்ள கோயில்கள் மற்றும் முந்தைய ஆதீனகர்த்தர்கள் சித்தியடைந்துள்ள ஆனந்தபரவசர பூங்காவில் உள்ள சமாதிகளில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

    ஜப்பான் தொழிலதிபர் சுப்பிரமணியம், வைத்தீஸ்வரன் கோயில் செந்தில்குமார், தருமபுரம் கல்லூரி செயலர் செல்வநாயகம், ஏ.வி.சி. செந்தில்வேலன், கோயில் கண்காணிப்பாளர் அகோரம், யுவா ஜெயின் சங்க தலைவர் மகாவீர் ஜெயின் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • ஒரு பெண்ணால் பல பெண்கள் பொதுவாழ்க்கைக்கு வருவதற்கான வாய்ப்புகள் கிடைத்துள்ளது.
    • மக்கள் பணியாற்றும் பெண்கள் தன்னிச்சையாக செயல்பட வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் உலக மகளிர் தின விழா மற்றும் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் மேல் வீதியில் உள்ள ஆர்.ஓ.ஏ. சங்க கட்டடத்தில் நடைபெற்றது.

    மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார் ரசர்வதேச கலாம் அறக்கட்டளை மாவட்ட தலைவர் ராகவேந்திரன், வணிகர் சங்க தலைவர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க உறுப்பினர் தமிழரசன் வரவேற்றார்.

    ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் மகாலிங்கம், பிரதேச காங்கிரஸ் கமிட்டி மற்றும் அறம்செய் அறக்கட்டளை செயலாளர் மரகதவல்லி செந்தில் ஆகியோர் பேசினர். முன்னாள் மத்திய மந்திரி மணிசங்கர்அய்யர் கலந்துகொண்டு சாதனை படைத்த மகளிருக்கு பரிசுகளை வழங்கி பாராட்டி பேசுகையில்

    இந்தியாவில் அரசியில் மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் மகளிருக்கு தனி இடஒதுக்கீடு வழங்கப்பட்ட பிறகு தான் பெண்கள் வெளிஉலகத்திற்கு வரத்தொடங்கினர்.

    குறிப்பாக அரசியலில் பெண்களுக்கு ஒதுக்கீடு வழங்கி ஒரு தேர்தலில் பெண் நிற்கும்போது அவரை எதிர்த்து ஒருசில பெண்கள் போட்டியிட வேண்டிய சூழல் ஏற்பட்டு ஒரு பெண்ணால் பல பெண்கள் பொதுவாழ்க்கைக்கு வருவதற்கான வாய்ப்புகள் கிடைத்துள்ளது.

    பொதுவாழ்க்கைக்கு வந்து மக்கள் பணியாற்றும் பெண்கள் தன்னிச்சையாக செயல்பட வேண்டும். உள்ளாட்சிகளில் மக்கள் பிரதிநிதியாக இருக்கும் பெண்கள் அவர்கள் பணியை அவர்களது கணவர்கள் மேற்கொள்வதை அனுமதிக்கக்கூடாது பெண்கள் தன்னிச்சையாக செயல்பட்டு மக்கள் பணியாற்ற வேண்டும் என்றார்.

    இதில் அஞ்சல் ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் சாமிகணேசன், கவிஞர் ராதாகிருஷ்ணன், கனகசபை, தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் முத்துக்குமார், அறம்செய் அமைப்பு சிவக்குமார், யுவா ஜெயின் சங்க தலைவர் மகாவீர்ஜெயின் மற்றும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க பொறுப்பாளர்கள், மகளிர் திரளாக கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

    ×