என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    • 14 மாடு, கன்றுகள் பிடிக்கப்பட்டு அவை நகராட்சி வளாகத்தில் அடைக்கப்பட்டிருந்தது.
    • கால்நடை உரிமையாளர்கள் மாட்டிற்கு ரூ.2ஆயிரம், கன்றுக்கு ரூ.1000 அபராதம் செலுத்தி மீட்டு செல்கின்றனர்.

    சீர்காழி:

    சீர்காழி பிரதான வீதிகளில் மாடுகள் அதிகளவு சுற்றிதிரிந்ததால் போக்கு வரத்து பாதிப்பும், விபத்தும் ஏற்பட்டுவந்தது.

    சாலைகளில் சுற்றிதிரியும் மாடுகளை கட்டுப்படுத்திட பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை அடுத்து நகர்மன்ற தலைவர் துர்காராஜசேகரன், நகராட்சி ஆணையர் ஹேமலதா ஆகியோர் அறிவுறுத்தலி ன்படி சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளை பிடிக்கும் பணி நடைபெற்று வந்தது.

    அதன்படி சுமார் 14 மாடு,கன்றுகள் பிடிக்கப்பட்டு அவை நகராட்சி வளாகத்தில் அடைக்கப்பட்டிருந்தது. கால்நடை உரிமையாளர்கள் மாட்டிற்கு 2ஆயிரமும், கன்றுக்கு ரூ.ஆயிரம் என தங்களது மாடுகளை அபராதம் செலுத்தி மீட்டு செல்கின்றனர்.

    இந்நிலையில் கால்நடை உரிமையாளர்கள் இதுவரை வந்து உரிமைக்கோரி மீட்கப்படாத 1காளை கன்றுக்குட்டி உள்ளிட்ட 4 கன்றுகளை நேற்று மாலை நகராட்சி நிர்வாகம் தனி வாகனத்தில் ஏற்றி பாதுகாப்புடன் மயிலாடுதுறை கோசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

    • மோட்டார் சைக்கிள் திடீரென அங்கு உள்ள ஒரு வாய்க்கால் மதகில் மோதியது.
    • இதில் ஆகாஷ் (வயது 23) என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    மயிலாடுதுறை:

    திருக்கடையூர் அருகே ஆக்கூர் பஞ்சாகை கிராமத்தை சேர்ந்த பக்கிரிசாமி மகன் ஆகாஷ் (வயது 23).

    டிரைவர்இவர் மோட்டார் சைக்கிளில் ஆக்கூர், மடப்புரம், வவ்வால் தோப்பை சேர்ந்த தனது நண்பர் விஷ்வாவுடன் காரைக்காலில் இருந்து தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

    மோட்டார் சைக்கிளை ஆகாஷ் ஓட்டினார்.

    இந்நிலையில் திருக்கடையூர் அருகே அன்னப்பன்பேட்டை வளைவு பகுதியில் திரும்பும் பொழுது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் திடீரென அங்கு உள்ள ஒரு வாய்க்கால் மதகில் மோதியது.

    இதில் மோட்டார் சைக்கிள் ஓட்டி சென்ற ஆகாஷ் கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    மேலும் இந்த விபத்தில் படுகாயம் அடைந்த விஷ்வாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

    விபத்தில் இறந்தஆகாஷ் உடல் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

    இந்த சம்பவம் குறித்து பொறையாறு இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காவிரி பிரச்சனையை தமிழக அரசு சட்ட ரீதியாகவும், நட்பு ரீதியாகவும் கையாள வேண்டும்.
    • தீபாவளி போன்ற பண்டிகைகளுக்கு தமிழக முதல்-அமைச்சர் வாழ்த்து தெரிவிப்பதில்லை.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அருகே சோழம்பேட்டை ஊராட்சி கோழிகுத்தி கிராமத்தில் பிரசித்தி பெற்ற வானமுட்டி பெருமாள் கோயில் எனப்படும் ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் உள்ளது.

    இக்கோயிலில் ஒரே அத்தி மரத்தில் 14 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் வானமுட்டி பெருமாள் அருள்பாலி க்கிறார்.

    இக்கோவிலில் தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் சுவாமி தரிசனம் மேற்கொண்டார்.

    முன்னதாக ஆலய நிர்வாகம் சார்பில் ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளித்தார்.

    தொடர்ந்து செய்தியாளர்க ளிடம் பேசிய ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியபோது :-

    ஆன்மீகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

    காவிரி பிரச்சனையை தமிழக அரசு சட்டரீதியாகவும் நட்பு ரீதியாகவும் கையாள வேண்டும், தமிழக முதல மைச்சர் கொள்கை கூட்டணி என கூறுகிறார்.

    ஆனால் அனைவருக்கும் தண்ணீர் சமம் என்ற கொள்கைக்கு ஏற்றார்போல் செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.

    சென்ற காலங்களில் இருந்த முதலமைச்சர் போல் தமிழக முதல்வர் தண்ணீர் பெற்று தருவதற்கு தீவிரமான முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்றார்.

    தீபாவளி போன்ற பண்டிகைகளுக்கு தமிழக முதலமைச்சர் வாழ்த்து தெரிவிப்பதில்லை.

    இதை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

    நிகழ்ச்சியின் போது மயிலாடுதுறை பொறுப்பு ஆர்.டி.ஓ. அர்ச்சனா, தாசில்தார் மகேந்திரன், மற்றும் பிஜேபி கட்சி தலைவர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • அமிர்த ராகுபகவான் தனி சன்னதியில் காட்சி தருகிறார்.
    • ராகு பகவானுக்கு அபிஷேகம் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    சீர்காழி:

    சீர்காழியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட பொன்னாகவல்லி அம்மன் உடனாகிய நாகேஸ்வ ரமுடையார் கோவில் உள்ளது.

    இக்கோயில் ஆதி ராகு ஸ்தலமாக விளங்குகிறது.

    இங்கு அமிர்த ராகுபகவான் தனி சன்னதியில் காட்சி தருகிறார்.

    ராகு பகவான் மேஷ ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியடை ந்ததை யொட்டி அமிர்த ராகுபகவா னுக்கு சிறப்பு ஹோமம் செய்யப்பட்டு பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது.

    தொ டர்ந்து இராகுபகவானுக்கு 21-வகையான திரவியபொரு ட்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்காரம் நடைபெற்றது.

    பின்னர் பெயர்ச்சி மகாதீபா ராதனை நடந்தது. இதில்நகர வர்த்த சங்க துணைத் தலைவர் கோவி. நடராஜன் நகை வணிகர் சங்கத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

    பூஜை களை முத்துசிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சா ரியார்கள் செய்திருந்தனர்.

    ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை

    அதிகாரிகள் மற்றும் கோயில் கணக்கர் ராஜி ஆகியோர் செய்திருந்தனர்.

    • பிரதமர் மீனவர்கள் நலனை மேம்படுத்தும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
    • ரூ.38,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

    சீர்காழி:

    சீர்காழி அருகே பூம்புகார் மீன்பிடி துறைமுக வளாகத்தில் மீனவர்களின் குறைகள் கேட்டறியும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தலைமை வகித்தார்.

    மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் அகோரம்,மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா பேசுகையில், இந்திய கடலோர பாதுகாப்பின் கவசமாக மீனவர்கள் திகழ்கிறார்கள் என்றால் அது மிகையாகாது.

    எனவே மீனவர்களை கடலோர காவல் தெய்வங்கள் என்று அழைக்கலாம் பிரதமர் நரேந்திர மோடி மீனவர்கள் நலனை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    மீனவர்களுக்கென தனி அமைச்சகத்தை ஏற்படுத்திய பெருமை அவரையே சேரும்.

    பிரதமரின் திட்டத்தால் கடைகோடியில் வசிக்கும் மீனவர்களும் பயனடைகிறார்கள் என்ற செய்தி மிகவும் வரவேற்கத்தக்கது என்றார்.

    மத்திய தகவல் ஒளிபரப்பு இணை அமைச்சர் எல் .முருகன் பேசும் போது மீனவர் நலன் சார்ந்த குழுக்களில் மீனவர் பிரதிநிதி இடம்பெற வேண்டுமென பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

    2014 - க்கு பிறகு மீனவர்களு க்காக ரூ 38.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

    நமது நாடு இறால் ஏற்றுமதியிலும் முதலிடம் வகிக்கிறது கடல் சார்ந்த பொருட்கள் என்று பதில் நான்காம் இடத்தில் உள்ளோம் விரைவில் முதல் இடத்தை பிடிப்போம் என்றார்.

    நிகழ்ச்சியில் தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர் பூம்புகார் சங்கர், பாஜக வழக்கறிஞர் பிரிவு பொறுப்பாளர் ராஜேந்திரன், முன்னாள் ஒன்றிய தலைவர் முருகன் குறித்த பலர் கலந்து கொண்டனர். முடிவில் சந்திரபாபு நன்றி கூறினார்.

    தொடர்ந்து இந்தியன் ஓவர்சீஸ் முன்னோடி வங்கி மேலாளர் முத்துசாமி பூம்புகார் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் நிஷாந்த் முன்னிலையில் நிதி உதவி க்கான காசோலைகள் மத்திய அமைச்சர்கள் வழங்கினர்.

    • நாகநாதசாமி கோவிலில் கேது பெயர்ச்சி விழா.
    • கேதுபகவானை வழிபட்டால் நீதிமன்ற வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.

    திருவெண்காடு:

    பூம்புகார் அருகே கீழப்பெரும்பள்ளம் நாகநாதசாமி கோவிலில் கேது பெயர்ச்சி விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் அருகே கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் சவுந்தர நாயகி நாகநாத சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நவகிரகங்களில் ஒன்றான ஞானகாரகன் என்று அழைக்கப்படும் கேது பகவான் தனி சன்னதியில் அருள் பாலித்து வருகிறார். இதனால் இந்த கோவில் கேது பகவானின் பரிகார தலமாக விளங்குகிறது.

    கேதுபகவானை வழிபட்டால் நீதிமன்ற வழக்குகளில் சாதகமான தீர்ப்பு, நாக தோஷம் , திருமணத்தடை நீங்கி செல்வ செழிப்புடன் நல்வாழ்வு கிடைக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. நேற்று மாலை 3 .41 மணி அளவில் கேது பகவான் துலாம் ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். இதனை யொட்டி கேது பரிகார யாகம் நடந்தது. பின்னர் கேது பகவானுக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், கங்கை நீர் உள்ளிட்ட 16 வகை பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    தொடர்ந்து யாக குடங்களிலிருந்து புனித நீர் ஊற்றப்பட்டு மகாபிஷேகம் நடந்தது. இதைத் தொடர்ந்து மலர் அலங்காரம் செய்யப்பட்டு சரியாக 3.41 மணியளவில் தீபாரதனை நடந்தது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கேதுவை வழிபட்டனர்.

    கேது பெயர்ச்சி நாளிலிருந்து 18 நாட்களுக்கு தொடர்ந்து அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளன.

    • சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள், நரசிம்மர் மற்றும் ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
    • இரட்டை ஆஞ்சநேயர் கோவிலில் ஆஞ்சநேயருக்கு பால் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது.

    மயிலாடுதுறை

    புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையையொட்டி நேற்று மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பெருமாள், நரசிம்மர் மற்றும் ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

    மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற பரிமள ரங்கநாத பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.

    இதேபோல் திருவெண்காடு அருகே உள்ள மங்கைமடம் வீர நரசிம்மர் கோவில், திருக்குரவலூர் உக்கிர நரசிம்மர் கோவில், திருக்குரவலூர் உக்கிர நரசிம்மர் கோவில், திருநகரி யோக மற்றும் ஹிரண்ய நரசிம்மர், மற்றும் திருவாலி லட்சுமி நரசிம்மர் என பஞ்ச நரசிம்மர் கோவில்களில் வழிபாடுகள் நடந்தன. சீர்காழி அருகே உள்ள வடரங்கம் ரங்கநாதபெருமாள் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.

    இதனைத் தொடர்ந்து மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    தலைச்சங்காடு நான் மதிய பெருமாள் கோவில், அண்ணன் பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.

    செம்பனார்கோவில் அருகே மேலப்பாதி இரட்டை ஆஞ்சநேயர் கோவிலில் ஆஞ்சநேயருக்கு பால் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    அனைத்து கோவில்களில் நடந்த வழிபாடுகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • மின்கம்பத்தில் கொடிகள் படர்ந்து மின்கம்பிகளை முழுமையாக மூடி மறைத்துள்ளன.
    • கொடிகள் வழியே மின்சாரம் பாய்ந்து சாலையில் நடந்து செல்பவர்கள் மீது மின்சாரம் தாக்கும்.

     மயிலாடுதுறை:

    கொள்ளிடம் கடைவீதியிலிருந்து ஆச்சாள்புரம், ரெயில் நிலையத்துக்கு செல்லும் சாலையிலிருந்து கொள்ளிடம் அக்ரஹார தெருவுக்கு மின் கம்பங்கள் மூலம் மின் கம்பிகள்செல்கின்றன.

    இதில் உள்ள ஒரு மின்கம்பத்தில் கொடிகள் படர்ந்து மின்கம்பம் மற்றும் மின்கம்பிகளை முழுமையாக மூடி மறைத்துள்ளன.

    இதன் வழியே அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு மின்சாரம் சென்று கொண்டிருக்கின்றன.தாழ்வாக செல்லும் மின்கம்பியில் கொடிகள் படர்ந்துள்ளதால் மழை நேரங்களில் கம்பிகளிலிருந்து தொங்கிக் கொண்டிருக்கும் கொடிகள் வழியே மின்சாரம் பாய்ந்து சாலையில் நடந்து செல்பவர்கள் மீது மின்சாரம் தாக்கும் அபாய நிலை உள்ளது.

    இதனால் அடிக்கடி மின்தடை ஏற்படவும், தீவிபத்து ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே மின் கம்பிகளை அடர்ந்து சூழ்ந்து மூடி மறைத்துள்ள செடிகளை அகற்றநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராமமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • நாளை மாலை 3.40 மணிக்கு கேது பகவான் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கு பிரவேசிக்கிறார்.
    • கேது பகவானுக்கு சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    சீர்காழி:

    சீர்காழி அடுத்த கீழப்பெரு ம்பள்ளம் நாகநாதசுவாமி கோவிலில் கேது பகவானுக்கு தனி சன்னதி அமைந்துள்ளது.

    கேது பெயர்ச்சி நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3.40 மணிக்கு கேது பகவான் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கு பிரவேசிக்கிறார்.

    இந்நிலையில் இந்த கோவிலில் கேது பகவான் பரிகார தலத்தில் கேது பகவானுக்கு மஞ்சள், சந்தனம் ,திரவிய பொடி, விபூதி, பால்,பன்னீர் பொருட்களைக் கொண்டு மகா அபிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து கேது பகவானுக்கு சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

    திரளான பக்தர்கள் வழிபாடு செய்து வருகி ன்றனர். கேது பெயர்ச்சியை முன்னிட்டு கேது பகவான் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கு பிரவேசி க்கிறார்.

    இதனைத் தொடர்ந்து பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகளான ரிஷபம், மிதுனம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகள் பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள் ஆகும்.

    கேது பகவானுக்கு எமகண்ட நேரத்தில் பரிகாரம் செய்தால் சிறப்பு ஆகும்.

    • 3 இடங்களில் மட்டுமே எரிவாயு பங்குகள் அமைக்கப்பட்டன.
    • ஆட்டோ டிரைவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் பங்கை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    தரங்கம்பாடி:

    பெட்ரோல், டீசல் எரிபொருளால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதைத் தடுக்க அதற்கு மாற்றாக இயற்கை எரிவாயுவை உபயோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    அதன்படி, தனியார் ஆட்டோ நிறுவனங்கள் சி.என்.ஜி. எனப்படும் இயற்கை எரிவாயுவால் இயங்கும் ஆட்டோக்களை விற்பனை செய்து வருகிறது.

    மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை 400 ஆட்டோக்கள் சி.என்.ஜி எரிவாயு(அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு) மூலம் இயங்கி வருகிறது.

    மயிலாடுதுறை லட்சுமிபுரம், சேத்திரபாலபுரம் மற்றும் சீர்காழி ஆகிய 3 இடங்களில் மட்டுமே எரிவாயு பங்குகள் அமைக்கப்பட்டன.

    இங்கும் கடந்த 6 மாதங்களாக சரிவர எரிவாயு விநியோகம் செய்யப்படாததால், நகரில் கூடுதல் சி.என்.ஜி எரிவாயு பெட்ரோல் பங்குகளை அமைக்க வேண்டும் என மயிலாடுதுறை மாவட்ட சி.என்.ஜி. எரிவாயு ஆட்டோ டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

    இந்நிலையில், மயிலாடுதுறை அருகில் ஒரு பங்கில் சி.என்.ஜி. இயற்கை எரிவாயு இல்லாததைக் கண்டித்து, ஆட்டோ டிரைவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் பங்கை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர் மாவட்ட பாட்டாளி தொழிற்சங்க சிறப்புத் தலைவர் தங்க.அய்யாசாமி தலைமையில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பெரம்பூர் ராம்மோகன், மயிலாடுதுறை சின்னகடைவீதி ராஜகோபால், மணிக்கூண்டு முருகன், மார்கெட் பகுதி சாமிநாதன் உள்ளிட்ட ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம், ஆட்டோ டிரைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

    இதைத்தொடா்ந்து ஆட்டோ டிரைவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • 14 மாடுகள் பிடித்து அடைக்கப்பட்டு வைக்கோல் ஆகியவை இடப்படுகிறது.
    • மாடுகளின் உரிமையாளர் மீது காவல்துறையில் வழக்குபதிவு செய்திட அறிவுறுத்தப்படும்.

    சீர்காழி:

    சீர்காழியில் பிரதான சாலைகள் உள்ளிட்ட நகரின் அனைத்து பகுதிகளிலும் மாடுகள் சுற்றி திரிந்து வருகிறது.

    இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுதோடு சில நேரங்களில் மாடுகள் திடீரென சாலையின் குறுக்கே ஓடுவதால் விபத்துக்களும் ஏற்பட்டது.

    சாலையில் சுற்றிதிரியும் மாடுகளை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதனையடுத்து நகர்மன்ற தலைவர் துர்காராஜசேகரன், நகராட்சி ஆணையர் ஹேமலதா ஆகியோர் உத்தரவின்படி நகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் சாலைகளில் சுற்றிதிரியும் மாடுகளை பிடிக்கும் பணியில் ஈடுப்பட்டனர்.

    இதுவரை சுமார் 14 மாடுகள் பிடிக்கப்பட்டு நகராட்சி குடிநீர் மேல்நிலைநீர் தேக்கதொட்டி அமைந்துள்ள வளாகத்தில் அடைக்கப்பட்டு வைக்கோல் ஆகியவை இடப்படுகிறது.

    மாடுகளை மீட்கவரும் கால்நடை உரிமையாளர்களுக்கு ரூ .2ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டு விடுவிக்கப்படும் எனவும் அடுத்தமுறை மீண்டும் மாடுகளை சாலையில் விடும் உரிமையாளர் மீது காவல்துறையில் வழக்கு பதிவு செய்திட அறிவுறு த்தப்படும் என நகர்மன்ற தலைவர் துர்காராஜசேகரன் தெரிவித்தார்.

    • பூம்புகார், தொடுவாய் கடற்கரை பகுதியிலும், தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
    • பிளாஸ்டிக் பொருட்கள் கடலில் கலப்பதை தவிர்க்க வேண்டும்.

    சீர்காழி:

    மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதன்படி சீர்காழி அருகே காரைமேடு பகுதியில் மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில் துறையின் கீழ் இயங்கி வரும் ராஜீவ் காந்தி நீர்வாழ் உயிரின ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் டாக்டர் கந்தன் தலைமையில் 30க்கும் மேற்பட்ட அதிகாரிகள், அலுவலக ஊழியர்கள், சுற்றுலா பயணிகள் என 100,க்கும் மேற்பட்டோர் பூம்புகார் கடற்கரையில் தூய்மை பணியை தொடங்கினர்.

    பூம்புகார் பீச் மணல் பரப்பில் சிதறி கிடந்த பிளாஸ்டிக் பொருட்கள், ஐஸ்கிரீம் கப், பேப்பர், பிளாஸ்டிக் பாட்டில்கள், போன்றவற்றை ஒவ்வொ ன்றாக எடுத்து சுத்தம் செய்தனர்.

    இதுகுறித்து ராஜீவ் காந்தி நீர் வாழ் உயிரின ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் டாக்டர் கந்தன் கூறுகையில்:

    நம் பாரத பிரதமரின் முக்கிய நோக்கம் தூய்மை இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் கடல்பொருள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் இயங்கி வரும் ராஜீவ் காந்தி நீர்வாழ் உயிரின ஆராய்ச்சி மையம் மூலம் இந்தியா முழுவதிலும் உள்ள 14 மையத்தில் சேர்மன் சாமி தலைமையில் அனைத்து பகுதிகளும் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

    காரைமேடு ராஜீவ் காந்தி நீர் வாழ் உயிரின ஆராய்ச்சி மையத்திலும், அதனைத் தொடர்ந்து பூம்புகார், தொடுவாய் கடற்கரை பகுதியிலும், தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

    இம்மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடங்களிலும் அகில இந்திய அளவில் இப்பணி நடைபெற உள்ளது.

    குறிப்பாக கடற்கரை பகுதியில் வீசப்படக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் மைக்ரோ பிளாஸ்டிக்காக மாறி கடலில் கலந்து மீன்கள் உண்ணும் பொழுது அந்த மீன்களை சாப்பிடும் மனிதர்களும் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.

    முக்கியமாக பிளாஸ்டிக் பொருட்கள் கடலில் கலப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

    பீச் பகுதியில் ஐஸ்கிரீம் பிளாஸ்டிக் ஸ்டிக் போன்றவற்றை பயன்படுத்துவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றார்.

    ×