என் மலர்tooltip icon

    மதுரை

    • நத்தம் சாலையில் பறக்கும் மேம்பாலம் இன்று மாலை திறக்கப்படுவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • மேற்கண்ட தகவலை மதுரை மாநகர போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

    மதுரை

    மதுரை-நத்தம் சாலையில் பறக்கும் மேம்பாலம் இன்று மாலை திறக்கப்படுகிறது. பிரதமர் மோடி காணொலி மூலம் திறந்து வைக்கிறார். இதைத்தொடர்ந்து அந்தப் பகுதியில் போக்கு வரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    நத்தம் சாலையில் ஊமச்சிக்குளம் செல்ல கோகலே ரோடு வழியாக விஷால்மால் முன்புள்ள பாலத்தில் ஏறி செல்ல வேண்டும். அய்யர் பங்களா, திருப்பாலை, ஊமச்சிகுளம் செல்லும் வாகனங்கள், இந்த மேம்பாலம் வழியாக சென்று 2.5 கி.மீ தொலைவில் உள்ள இறங்குபாதை வழியாக பேங்க் காலனி சந்திப்பை அடையலாம்.

    நத்தம் சாலையில் ஐ.ஓ.சி சந்திப்பு, பீ.பீ.குளம், தபால் தந்தி நகர், எஸ்.பி. பங்களா சந்திப்பு, ரிசர்வ் லைன், ஆத்திகுளம், நாராயணபுரம் செல்ல வேண்டிய வாகனங்கள், பாலத்தின் மீது ஏறாமல் இடதுபுறம் உள்ள சாலை வழியாக விஷால்மால், ஐ.ஓ.சி ரவுண்டானா வழியாக பாலத்தின்கீழ் செல்லலாம்.

    அழகர்கோவில், புதூர், மாவட்ட கோர்ட்டு, கே.கே.நகர், மாட்டுத்தாவணி, வழியாக செல்லும் சிறிய வாகனங்கள் நவநீத கிருஷ்ணன் கோவில் சாலை, பழைய அக்ரகாரம் தெரு, அப்துல் கபார்கான் சாலை, லாலா லஜபதிராய் சாலைகளை பயன்படுத்தி, பி.டி.ஆர்.சிலை வழியாக பாண்டியன் ஓட்டல், அழகர்கோவில் செல்ல வேண்டும்.

    மாட்டுத்தாவணி, கே.கே.நகர், டாக்டர் தங்கராஜ் சாலை வழியாக வரும் வாகனங்கள் கக்கன் சிலை சந்திப்பில் வலதுபுறம் செல்லக்கூடாது. மதுரை மாநகராட்சி அலுவலகம் முன்பு திரும்பி செல்லும் வசதியை பயன்படுத்தி ரேஸ்கோர்ஸ் வழியாக அழகர்கோவில் சாலையை அடையலாம்.

    மேற்கண்ட தகவலை மதுரை மாநகர போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • திருமங்கலம் அருகே சங்கிலி கருப்ப சுவாமி - பராசக்தி காளியம்மன் கோவில் பங்குனி திருவிழா நடந்தது.
    • விழாவில் பால்குடம், முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வில்லூர் கிராமத்தில் சங்கிலி கருப்பசாமி - பராசக்தி காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் பங்குனி திருவிழா விமரிசை யாக நடைபெறும். இந்த ஆண்டிற்கான பங்குனி திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

    மதுரை, விருதுநகர் மற்றும் வில்லூர் சுற்று வட்டாரத்தில் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். அழகு செட்டியார் ஊரணியில் இருந்து பராசக்தி அம்மன் கோவில் வரை பக்தர்கள் பால்குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது.

    மேலும் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் அலகு குத்தியும், காவடி, பறவைக் காவடி எடுத்து வந்தும் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். சங்கிலி கருப்ப சுவாமிக்கு பாப்பா ஊரணியிலிருந்து கரகம், சந்தனகுடம் எடுத்து ஊர்வலமாக வந்து சங்கிலி கருப்பு சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தது.

    இதைத் தொடர்ந்து பக்தர்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர். பாப்பா ஊரணியிலிருந்து சப்பரம் ஊர்வலமாக கோவிலை சென்றடைந்தது.இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • திரளான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் தரிசனம் செய்தனர்.
    • மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நடை இன்று முழுவதும் சாத்தப்பட்டிருந்தது.

    முருகப்பெருமானின் முதல் படைவீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் பங்குனி பெரு விழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

    இந்த ஆண்டுக்கான விழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவினை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை தினமும் தங்கமயில் வாகனம், வெள்ளி யானை, தங்க குதிரை, பச்சைக் குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    விழாவில் 11-ம் நாள் நிகழ்ச்சியாக நேற்று இரவு சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடை பெற்றது. முக்கிய நிகழ்ச்சியான சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் இன்று நடந்தது.

    முன்னதாக உற்சவர் சன்னதியில் சுவாமி-அம்பாளுக்கு அதிகாலையில் பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சந்திப்பு மண்டபத்தில் எழுந்தருளினர்.

    அதே சமயத்தில் மதுரையிலிருந்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமண நிகழ்ச்சிக்காக புறப்பாடாகி மூலக்கரையில் உள்ள சந்திப்பு மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு முருகப்பெருமான் எதிர்கொண்டு வரவேற்றார். தொடர்ந்து சுவாமிகள் அமைக்கப்பட்டிருந்த பந்தல்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    திருக்கல்யாண வைபவத்தில் கோவிலுக்குள் உள்ள ஒடுக்க மண்டபத்தில் கன்னி ஊஞ்சல் நடை பெற்றது. அதனை தொடர்ந்து கோவில் ஆறுகால் மண்டபத்தில் சொக்கநாதருடன் பிரியாவிடை-மீனாட்சி ஆகியோர் எழுந்தருளினர்.

    அங்கு திருமண கோலத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருளினார். மேள தாளங்கள் முழங்க 12.30 மணி அளவில் சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. அப்போது முருகப் பெருமான் சார்பில் தெய்வானைக்கு மங்கள நாண் அணிவிக்கப்பட்டது.இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் சாமி கும்பிட்டனர்.

    கோவில் சஷ்டி மண்ட பம், வள்ளி தேவசேனா திருமண மண்டபத்தில் அன்னதானம் வழங்கப் பட்டது.

    இதைத் தொடர்ந்து இரவு 7 மணிக்கு சுவாமி-அம்பாள் மணக் கோலத்தில் வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்கள். பின்னர் மீனாட்சி சுந்தரேசுவரர் திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் பகுதியில் விடை பெறுதல் நிகழ்ச்சி நடை பெற்று மதுரை கோவிலுக்கு புறப்பாடவார். பங்குனி பெருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (9-ந் தேதி) காலை 6 மணிக்கு நடைபெறு கிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர் சுரேஷ் தலைமையில் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    சுந்தரேசுவரர்-மீனாட்சி திருக்கல்யாணத்தில் பங்கேற்றதை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நடை இன்று முழுவதும் சாத்தப்பட்டிருந்தது.

    • திருப்பரங்குன்றம் கோவிலில் திருக்கல்யாண விழா இன்று நடக்கிறது.
    • பக்தர்கள் ஆடி வீதிகள் மற்றும் ஆயிரங்கால் மண்டபத்தை காண அனுமதிக்கப்படுவார்கள்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் திருக்கல்யாண விழா இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. அதையொட்டி இன்று அதிகாலை 4 மணிக்கு மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் சுவாமி பஞ்ச மூர்த்திகளுடன் புறப்படாகி திருப்பரங்குன்றம் கோவிலுக்கு செல்கிறார்கள்.

    அங்கு திருக்கல்யாணம் முடிந்து இரவு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை வந்தடைவர்.எனவே அன்றைய தினம் காலை 4 மணி முதல் இரவு சுவாமி கோவிலை வந்தடையும் வரை கோவில் நடை சாத்தப்பட்டிருக்கும்.மேலும் பக்தர்கள் ஆடி வீதிகள் மற்றும் ஆயிரங்கால் மண்டபத்தை காண வழக்கம் போல் அனுமதிக்கப்படுவார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கோவில் பூட்டு உடைக்கப்பட்டு கோவில் சுத்தம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.
    • கிராமத்தில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள நேசனேரி கிராமத்தில் பழமை வாய்ந்த அங்காள ஈஸ்வரி வாலகுருநாதன் கோவில் உள்ளது. இதில் வழிபாட்டு முறையில் பிரச்சினை எழுந்ததால் இரு சமுதாயத்தினர் மோதலில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை மூலம் கடந்த 2012-ம் ஆண்டு கோவில் பூட்டப்பட்டது.

    தொடர்ந்து பலமுறை சமாதான கூட்டம் நடத்தி ஒவ்வொரு முறையும் கோவிலை திறக்க முற்படும்போது பிரச்சினை எழுந்து வந்ததால் கோவில் நிரந்தரமாக பூட்டப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

    இந்த நிலையில் அறநிலையத்துறை அதிகாரிகள் கோவிலை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து 11 ஆண்டுக்கு பிறகு கோவிலை திறப்பதற்கான ஏற்பாடுகள் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. கோவிலை திறக்கும் சூழல் ஏற்பட்டதால் கிராமத்தில் பதற்றமான சூழ்நிலை உருவானது.

    இந்நிலையில் நேற்று காலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் செல்வி தலைமையில் வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் கோவில் பூட்டு உடைக்கப்பட்டு கோவில் சுத்தம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் திருமங்கலம் கோவில் செயல் அலுவலர்கள் சங்கரேஸ்வரி, சர்க்கரை அம்மாள், அங்கயற்கண்ணி கோவில் திறக்கப்படுவதை ஒரு சமுதாயத்தினர் ஏற்றுக்கொண்ட நிலையில் மற்றொரு சமுதாயத்தினர் உடன்படாததால் கிராமத்தில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் 11 ஆண்டுகளுக்கு பிறகு கோவில் திறக்கப்பட்டு வழிபாடு நடைபெறுவது தங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி இருப்பதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

    • கோவிலின் வழிபாட்டு முறை தொடர்பாக இருசமுதாயத்தினரிடையே பிரச்சினை ஏற்பட்டது.
    • கோர்ட்டு உத்தரவின் பேரில் கோவிலை திறக்க அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள நேசனேரி கிராமத்தில் பழமை வாய்ந்த அங்காள ஈஸ்வரி வாலகுருநாதன் கோவில் இருக்கிறது. இந்த கோவிலின் வழிபாட்டு முறை தொடர்பாக இருசமுதாயத்தினரிடையே பிரச்சினை ஏற்பட்டது.

    இதனால் அந்த கோவில் கடந்த 2012-ம் ஆண்டு பூட்டப்பட்டது. பூட்டப்பட்ட அந்த கோவிலை திறக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டன. பலமுறை சமாதான கூட்டமும் நடத்தப்பட்டது. ஆனால் அதில் எந்த முடிவும் எட்டப்படாததால் கோவில் நிரந்தரமாக பூட்டப்பட்டது.

    கடந்த 11 ஆண்டுகளாக அங்காள ஈஸ்வரி வாலகுருநாதன் கோவில் பூட்டியே கிடந்தது. கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் வெளியில் நின்றே சாமியை கும்பிட்டு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில், கோவிலை திறக்க இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    கோர்ட்டு உத்தரவின் பேரில் கோவிலை திறக்க அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். 11 ஆண்டுகளாக பூட்டி கிடந்த கோவிலை திறக்க கடந்த ஒரு வார காலமாக இதற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வந்தனர்.

    இதனால் அந்த கிராமத்தில் பதற்றமான சூழல் நிலவியது. இந்த நிலையில் அங்காள ஈஸ்வரி வாலகுருநாதன் கோவில் 11 ஆண்டுகளுக்கு பிறகு இன்று திறக்கப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் செல்வி தலைமையிலான வருவாய் துறையினர் இன்று காலை கோவிலுக்கு வந்தனர். அவர்கள் கோவில் கதவில் போடப்பட்டிருந்த பூட்டை உடைத்து கோவிலை திறந்தனர். பின்பு கோவில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து சிறப்பு யாகம் நடந்தது.

    இதில் கோவில் செயல் அலுவலர்கள் சங்கரேஸ்வரி, சர்க்கரையம்மாள், அங்கயற்கண்ணி மற்றும் இந்து சமய அறநிலையத்துறை தாசில்தார் (ஆலய நிலங்கள்) முருகையன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கோவிலை திறக்க ஒரு சமுதாயத்தினர் ஏற்றுக்கொண்ட நிலையில், அவர்கள் கோவிலுக்கு வந்து சாமி கும்பிட்டனர்.

    கோவிலை திறக்க மற்றொரு சமுதாயத்தினர் ஏற்றுக்கொள்ளாததால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனால் அங்கு திருமங்கலம் துணை சூப்பிரண்டு தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    • திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமிக்கு இன்று பட்டாபிஷேகம் நடந்தது.
    • விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் பங்குனி பெருவிழா தொடங்கியது. சுப்பிரமணிய சுவாமி-தெய்வானையுடன் தினமும் காலையில் தங்க பல்லக்கு, மாலையில் தங்க மயில், தங்க குதிரை, வெள்ளி பூதம், சேஷ வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களை வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

    முக்கிய நிகழ்ச்சியாக பட்டாபிஷேகம் இன்று மாலை கோவிலில் உள்ள ஆறு கால் மண்டபத்தில் நடக்கிறது. இதையொட்டி சுப்பிரமணியர்- தெய்வானைக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

    தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணியர்- தெய்வானையுடன் ஆறு கால் மண்டபத்தில் எழுந்தருளுவார்கள். அங்கு வேத மந்திரங்கள் முழங்க சுப்ரமணிய சுவாமிக்கு செங்கோல், சேவல் கொடி சாற்றி பட்டாபிஷேகம் நடைபெறும்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை மீனாட்சி சுந்தரேசுவரர் முன்னிலையில் சுப்பிரமணியர்- தெய்வானை திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெறும்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.

    • 3 மாதங்களில் 2,450 கிலோ கஞ்சா பறிமுதல்; 494 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • தென் மண்டல ஐ.ஜி அஸ்ராகார்க் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    தென்மண்டலத்தில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனைக்கு எதிராக போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கடந்த மூன்று மாதத்தில் மட்டும் தென்மண்டலத்தில் உள்ள 10 மாவட்டங்கள் மற்றும் நெல்லை மாநகரில், 761 கஞ்சா குற்றவாளிகளிடம் நன்னடத்தை பிணைய பத்திரம் பெறப்பட்டு உள்ளது.

    இது தவிர 52 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ள னர். அடுத்தபடியாக கடந்த 3 மாத காலத்தில் 265 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

    அதன்படி மதுரை மாவட்டத்தில் 31, விருது நகர்-26, திண்டுக்கல்-30, தேனி-41, ராமநாதபுரம்-23, சிவகங்கை-10, நெல்லை-24, தென்காசி-20, தூத்துக் குடி-25, கன்னியாகுமரி-24, நெல்லை மாநகர் -11 வழக்குகள் பதிவாகி உள்ளன. இவற்றின் மூலம் சுமார் 2,450 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதில் தொடர்பு உடைய 494 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    தென்மண்டலத்தில் உள்ள பள்ளி- கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் கஞ்சா மற்றும் போதை பொருட் களுக்கு எதிராக விழிப் புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    கஞ்சாவிற்கு எதிராக போலீசாரின் நடவடிக்கை கள் தொடரும் என்று தென் மண்டல ஐ.ஜி அஸ்ராகார்க் தெரிவித்து உள்ளார். 

    • போலீஸ்காரர் சாவு சம்பவத்தில் வர்ம மருத்துவர் கைது செய்யப்பட்டார்.
    • திடீர் மாரடைப்பு ஏற்பட்டு ராஜபாண்டி இறந்ததாக கூறப்படுகிறது.

    மதுரை

    மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் ராஜபாண்டி (வயது 36). ஆயுதப்படை காவலரான இவருக்கு கண்மணி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மூட்டு வலியால் அவதிப்பட்ட காவலர் ராஜபாண்டி வில்லாபுரம் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றார். அப்போது திடீர் மாரடைப்பு ஏற்பட்டு ராஜபாண்டி இறந்ததாக கூறப்படுகிறது.

    ஆனால் அவருக்கு அளித்த வர்ம சிகிச்சையில் தவறு ஏற்பட்டு தான் இறந்ததாக காவலர் ராஜபாண்டியின் மனைவி போலீசில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து இருந்த நிலையில் இன்று காவலரின் மருத்துவ பரிசோதனை சான்றிதழ் வந்ததை அடுத்து வர்ம மருத்துவமனை மருத்துவர் சிவசுப்பிரமணியத்தை அவனியாபுரம் போலீசார் கைது செய்தனர்.

    • கூலி தொழிலாளி-முதியவர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • மேலவளவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை சொக்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் தனபாலகிருஷ்ணன் (45). கூலித் தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. அவர் எந்நேரமும் குடித்து விட்டு ஊர் சுற்றினார். இதை மனைவி தட்டி கேட்டார். இதன் காரணமாக கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. வாழ்க்கையில் விரக்தி அடைந்த தனபால கிருஷ்ணன், சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மதுரை புலிப்பட்டியை சேர்ந்தவர் பூசாரி (வயது 70). இவருக்கு நீரிழிவு நோய் இருந்து வந்தது. இதனால் அவருக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவரை உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து நோயின் பாதிப்பு அதிகரித்து வந்ததால் அவர் மனமுடைந்தார். இதைத்தொடர்ந்து பூசாரி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றிய புகாரின் பேரில் மேலவளவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தாயை அடித்து கொன்ற மகன் கைது செய்யப்பட்டார்.
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து தாயை அடித்துக்கொலை செய்த மாதவனை கைது செய்தனர்.

    மதுரை

    மதுரை மிளகரணை, நடுத்தெருவை சேர்ந்தவர் சாந்தி (வயது50). இவரது மகன் மாதவன் (25). இவர் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். அவருக்கு சற்று மனநல பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இருந்தபோதிலும் நோய் முழுமையாக குணமாக வில்லை.

    இந்தநிலையில் சாந்தி நேற்று அதிகாலை வீட்டில் இருந்தார். அப்போது மாதவன் பணம் கேட்டுள் ளார். அவருக்கு பணம் கொடுக்க சாந்தி மறுத்து விட்டார். இதில் ஆத்திர மடைந்த மாதவன் இரும்பு கம்பியை எடுத்து வந்து சாந்தியை தாக்கினார். இதில் படுகாயமடைந்த சாந்தி மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது பற்றி கூடல்புதூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தாயை அடித்துக்கொலை செய்த மாதவனை கைது செய்தனர்.

    • கூடுதலாக 1 லட்சம் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று ஆர்.பி.உதயகுமார் பேசினார்.
    • 3 தொகுதிகளிலும் தலா ஒரு லட்சம் உறுப்பினர்களை இலக்காக வைத்து சேர்க்க வேண்டும்.

    மதுரை

    அ.தி.மு.க. சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கும் நிகழ்ச்சி மதுரை புறநகர் மேற்கு மாவட்டங்களில் நடந்தது.

    வாடிப்பட்டி, சோழ வந்தான், அலங்காநல்லூர் பகுதிகளில் நீர்மோர் பந்தலை திறந்து, புதிய உறுப்பினர் படிவங்களை மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர்ஆர். பி.உதயகுமார் வழங்கி பேசியதாவது:-

    மக்கள் சேவையில் முத்திரை பதிக்கும் வகையில் ஆளுங்கட்சி என்றாலும், எதிர்க்கட்சி என்றாலும் தங்கள் பணியை

    அ.தி.மு.க. தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. ஆனால் தி.மு.க. ஆளுங் கட்சியாக வந்தபோதும் கூட மக்கள் பணி செய்யாமல் தூங்குகிறது.

    மக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் ஆணைக்கிணங்க நீர்,மோர் பந்தல் திறக்கப்பட்டு வருகிறது. அ.தி.மு.க.வின் 3-வது அத்தியாயமாக, 3-வது தலைமுறையாக எடப்பாடியார் இந்த இயக்கத்திற்கு கிடைத்து ள்ளார். அம்மாவின் மறைவிற்கு பின்பு சுனாமி பேரலையாக அ.தி.மு.க. தத்தளித்த பொழுது, கலங்கரை விளக்கமாக இந்த இயக்கத்திற்கு கிடைத்தார், எடப்பாடியார்.

    கடன் பெறமாட்டோம் என்று கூறி இரண்டே ஆண்டில் ரூ.1½ லட்சம் கடனை தமிழகத்திற்கு பெற்றுவிட்டார்கள். இந்த தி.மு.க. ஆட்சியின் அவல நிலைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லி தீவிர உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்.

    எம்.ஜி.ஆர். இருக்கும் போது 16 லட்சம் தொண்டர்கள் இருந்தனர். அதனை அம்மா 1½ லட்சம் தொண்டர்கள் கொண்ட மாபெரும் இயக்கமாக உருவாக்கினார். தற்போது எடப்பாடியார் 2 கோடி தொண்டர்கள் கொண்ட மாபெரும் இயக்கமாக உருவாக்கி புதிய சாதனை படைப்பார்.

    அதற்கு மதுரை புறநகர் மேற்கு மாவட்டத்தில் உள்ள சோழவந்தான், உசிலம்பட்டி, திருமங்கலம் ஆகிய 3 தொகுதிகளிலும் தலா ஒரு லட்சம் உறுப்பினர்களை இலக்காக வைத்து சேர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×