என் மலர்tooltip icon

    மதுரை

    • குடிப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை உத்தப்ப நாயக்கனூர் சுப்பிரமணியன் தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது 45). இவர் பாணி பூரி வியாபாரம் செய்து வந்தார். ராஜாவுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது.

    இதனால் அவர் பலரிடமும் கடன் வாங்கி செலவழித்து வந்துள்ளார். அதனை அவரது மனைவி ராணி கண்டித்தார்.

    இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த ராஜா, உத்தப்பநாயக்கனூர்- வத்தலகுண்டு ரோட்டில் உள்ள தோட்டம் ஒன்றில், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உத்தப்ப நாயக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அ.தி.மு.க.வில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கான உறுப்பினர் படிவம் வழங்கும் நிகழ்ச்சி மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது.
    • அ.தி.மு.க.வில் வாரிசு அரசியல் இல்லை. இங்கு கடைகோடி தொண்டனும் உயர்ந்த பதவிக்கு வர முடியும்.

    மதுரை:

    அ.தி.மு.க.வில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கான உறுப்பினர் படிவம் வழங்கும் நிகழ்ச்சி மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது.

    இதில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ புதிய உறுப்பினர் விண்ணப்ப படிவங்களை கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்கு உழைக்கின்ற இயக்கமாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அ.தி.மு.க. இயக்கத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, பிறகு 3-வது தலைமுறையாக பொதுச் செயலாளர் எடப்பாடியார் பொறுப்பேற்று கட்சியை வலுவோடும், பொலிவோடும் நடத்தி வருகிறார்.

    அ.தி.மு.க.வில் வாரிசு அரசியல் இல்லை. இங்கு கடைகோடி தொண்டனும் உயர்ந்த பதவிக்கு வர முடியும். உழைப்பவர்களுக்கு மரியாதை கொடுக்கும் ஒரே இயக்கம் அ.தி.மு.க.. சாதாரண தொண்டன் கூட அமைச்சராக, முதலமைச்சராக உயர முடியும் என்பதற்கு அ.தி.மு.க.வே சாட்சியாகும்.

    எனவேதான் இந்த இயக்கத்தில் இணைந்து பணியாற்ற இளைஞர்கள் அதிக ஆர்வத்துடன் வருகிறார்கள். மதுரை மாநகரில் கூடுதலாக லட்சக்கணக்கான புதிய உறுப்பினர்களை சேர்க்க முடிவு செய்துள்ளோம்.

    தி.மு.க. குடும்ப கட்சி. அங்கு உழைப்புக்கு மரியாதை இருக்காது. கருணாநிதியின் வாரிசு களுக்கு தான் பதவிகளும், பொறுப்புகளும் கிடைக்கும். எனவே இளைஞர்கள் அ.தி.மு.க. பக்கம் அணிவகுத்து வர தொடங்கி விட்டனர்.

    முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் மீது அரசியல் காழ்புணர்ச்சியின் காரணமாக தி.மு.க. அரசு மருத்துவக் கல்லூரி கட்டியதில் முறைகேடு என்று பொய்யாக ஜோடித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க அனுமதி அளித்துள்ளது.

    மேலும் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மடிக்கணினி திட்டம், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் போன்றவற்றை நிறுத்தி விட்டனர். தேர்தல் அறிக்கையில் அனைத்து மகளிருக்கும் உரிமைத்தொகை வழங்கப்படும் என தெரிவித்து விட்டு தற்போது தகுதி வாய்ந்தவர்களுக்கு மட்டும் வழங்கப்படும் என அறிவித்து பெண்களை தி.மு.க. அரசு ஏமாற்றி விட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உயர்மட்ட மேம்பால பணிகள் கடந்த 2018-ம் ஆண்டு நவம்பரில் தொடங்கி நிறைவு பெற்றது.
    • கடந்த 6-ம் தேதி பாலத்தில் வாகனங்களை இயக்கி வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது.

    மதுரை:

    மதுரை புதுநத்தம் சாலையில், பாரத் மாலா திட்டத்தின் கீழ் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. தல்லாகுளம் முதல் செட்டிகுளம் வரை 7.3 கிலோ மீட்டர் தூரத்திற்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த 2018-ம் ஆண்டு நவம்பரில் தொடங்கி நிறைவு பெற்றுள்ளது. 268 தூண்களுடன் அமைக்கப்பட்ட இந்த மேம்பாலத்தில், 3 இடங்களில் வாகனங்கள் இறங்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இறுதிக்கட்ட பணிகள் முடிந்ததையடுத்து கடந்த 6-ம் தேதி பாலத்தில் வாகனங்களை இயக்கி வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது.

    இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு உள்கட்டமைப்பு திட்டப் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். அப்போது, மதுரை மேம்பாலத்தையும் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

    • மதுரை அரசு ஆஸ்பத்திரியில் மயங்கி விழுந்து இறந்தவர் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • மகப்பேறு வார்டுக்கு எதிரே உள்ள காத்திருப்பு பகுதி அருகில் மயங்கி கிடந்தார்.

    மதுரை

    மதுரை அரசு ஆஸ்பத்திரி மகப்பேறு வார்டுக்கு எதிரே உள்ள காத்திருப்பு பகுதி அருகில் கடந்த 29-ந் தேதி காலை 50 வயது மதிக்கத்தக்க நபர் மயங்கி கிடந்தார். அவரை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். அங்கு அவர் இறந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. வெள்ளை கலர் சட்டையும், பச்சை கலர் போர்வையும் அணிந்திருந்தார். வலது மார்பின் கீழ கருப்பு மச்சமும், இடது பக்க விலாவில் காயத்தழும்பும் காணப்படுகிறது. அவரது உடல் அரசு ஆஸ்பத்திரி சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு ஆஸ்பத்திரி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மதுரையில் பி.கே.மூக்கையாத்தேவருக்கு வெண்கல சிலை-மணி மண்டபம் அமைக்க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கோரிக்கை விடுத்துள்ளார்.
    • ஜனநாயக முறைப்படியும் விரைவாக நடத்தி தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    மதுரை

    தமிழக சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது மதுரை மேற்கு சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ பேசியதாவது:-

    30 ஆண்டு காலமாக இந்த சட்டமன்றத்தில் பணியாற்றியவரும், ஒரே நேரத்தில் பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலிலும் நின்று வெற்றி பெற்ற பசும்பொன் தேவர் தந்த பி.கே.மூக்கையாதேவரின் நூற்றாண்டு விழா, தற்போது கொண்டாடப்படும் இந்த வேளையில் அவருக்கு இந்த அரசு வெண்கல சிலை அமைத்தும், மணிமண்டபம் உருவாக்கியும், அவரது பிறந்த பாப்பாபட்டி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு அவரது பெயரை சூட்டுமாறு வேண்டிக்கொள்கிறேன்.

    மதுரை மண்ணின் மைந்தன், இசை பேரரசர், பத்மஸ்ரீ. டி.எம்.சவுந்தர ராஜன் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு அவர் சென்னையில் வாழ்ந்த தெருவுக்கு அவரது பெயரை சூட்டியதற்கு, மதுரை மக்களின் சார்பாகவும், குறிப்பாக சவுராஷ்டிரா மக்களின் சார்பாகவும் தமிழக முதல்-அமைச்ச ருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    சிலை

    மேலும் அவருடைய திருவுருவச்சிலை மதுரை யில் வைப்பதற்கு இடம் தேர்வு செய்திருப்பதாக கேள்விபட்டேன். அதே இடத்தில் அவருக்கு மணிமண்டபம் அமைத்து தருமாறு கேட்டுக் கொள்கி றேன்.

    அதே போலவே மதுரை மண்ணில் பிறந்த இசைக் குயில் எம்.எஸ்.சுப்பு லட்சுமியை கவுரவிக்கும் வகையில் சென்னையிலோ, மதுரையிலோ சிலை மற்றும் நினைவு மண்டபம் அமைத்து தர வேண்டும்.

    கூட்டுறவு வரலாற்றில் இல்லாத வகையில் ஜெய லலிதா, மாற்றுத்திறனாளி களுக்கு வட்டியில்லா கடன் வழங்க ஆணையிட்டதன் பேரில், 2011 முதல் 2021 வரை, 69 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளுக்கு 292 கோடி ரூபாய் கடன் வழங்கி 2 முறை தேசிய அளவில் குடியரசு தலைவரிடம் விருதை நானே பெற்று வந்துள்ளேன்.

    கூட்டுறவு தேர்தலை ஜனநாயக முறையில் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி நடத்தினர். தற்போது கூட்டுறவு சங்கங்களுக்கு செயலாட்சி யர்கள், பணி நியமனம் செய்துள்ளதாக அறிகிறேன். அவர்கள் பாகு பாடின்றி உறுப்பினர்களை சேர்க்க அனுமதித்து, தேர்தலை எவ்வித புகார் களின்றி நேர்மையாகவும், ஜனநாயக முறைப்படியும் விரைவாக நடத்தி தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மதுரையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் வருகிற 11-ந் தேதி நடக்கிறது.
    • மேற்கண்ட தகவலை மதுரை மாநகராட்சி மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

    மதுரை

    மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு செவ்வாய்கிழமை தோறும் வார்டு மறுவரையறை செய்யப்பட்ட 5 மண்ட லங்களுக்கு அந்தந்த மண்டல அலுவலகங்களில் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது.

    அதன்படி ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள மதுரை மாநகராட்சியின் வடக்கு மண்டல அலுவலகத்தில் வருகிற 11-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் 12.30 வரை பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.

    மேயர் இந்திராணி, ஆணையாளர் சிம்ரன் ஜித்சிங் ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள். வடக்கு மண்டலத்திற்குட்பட்ட விளாங்குடி, கரிசல்குளம், ஜவகர்புரம், விசாலாட்சி நகர், அருள்தாஸ்புரம், தத்தனேரி மெயின்ரோடு, அய்யனார் கோவில், மீனாட்சிபுரம், பீ.பீ.குளம்.

    நரிமேடு, அகிம்சாபுரம், கோரிப்பாளையம், தல்லாகுளம், சின்ன சொக்கிகுளம், கே.கே.நகர், அண்ணா நகர், சாத்த மங்கலம், பாத்திமா நகர், பெத்தானியாபுரம், பி.பி.சாவடி, கோச்சடை ஆகிய வார்டுகளை சேர்ந்த பொது மக்கள் இந்த குறைதீர்க்கும் முகாமில் பங்கேற்று குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன்பெறலாம்.

    மேற்கண்ட தகவலை மதுரை மாநகராட்சி மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க.வில் 3 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    • மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

    மதுரை

    அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க புதிய உறுப்பினர் சேர்க்கைக்காண படிவங்களை மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில், ஒன்றிய கழக செயலாளர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி திருப்பரங்குன்றத்தில் நடைபெற்றது.

    மாவட்ட இளைஞர் அணி செயலாளரும், பகுதி செயலாளருமான வக்கீல் ரமேஷ் தலைமை தாங்கினார். திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் முன்னிலை வகித்தார். புதிய உறுப் பினர்கள் படிவங்களை அமைப்புச் செயலாளரும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் என்ற செல்வம், மேலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் பொன். ராஜேந்திரன், ஒன்றிய கழகச் செயலா ளர்கள் வெற்றி செழியன், கார்சேரி கணேசன், வாசு என்ற பெரியண்ணன், பகுதி செயலாளர் வண்டியூர் செந்தில்குமார், வக்கீல் ஜீவானந்தம், அவனியாபுரம் முருகேசன், சரவணன், பன்னீர்செல்வம், மாவட்ட கலை பிரிவு செயலாளர் அரசு, மேலூர் சரவணகுமார் ,மற்றும் மண்டல தகவல் தொழில் நுட்ப பிரிவு துணைத் தலைவர் கவுரி சங்கர், சேனாபதி, ஒத்தக்கடை ராஜேந்திரன், கார்த்திகேயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் வி.வி.ராஜன் செல்லப்பா கூறியதாவது:-

    இந்த இயக்கத்தின் ஆணி வேர்கள் தொண்டர்கள் தான். அம்மா இருந்தபோது ஒன்றரை கோடி தொண் டர்கள் இருந்த இந்த இயக்கத்தை, 2 கோடி தொண்டர்களாக உருவாக்கிட எடப்பாடியார் திட்டங்களை வகுத்து வருகிறார்.

    மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்தில் திருப்பரங் குன்றம், மேலூர், மதுரை கிழக்கு ஆகிய 3 தொகுதிகள் உள்ளது. இந்த தொகுதிகளில் இளைஞர்கள், பெண்கள், தொழிலாளர்கள் என அனைவரும் இந்த இயக்கத்தில் உறுப்பினராக இணைந்து கொள்ள மிகவும் ஆர்வமாக உள்ளனர். ஒவ் வொரு தொகுதிகளிலும் ஒரு லட்சம் உறுப்பினர்களை சேர்க்க நிர்ணயித்து, 3 தொகுதிகளிலும் 3 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இந்த உறுப்பினர் சேர்க்கை மூலம் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடியார் தலைமையிலான அதிமுக கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றி வாய்ப்பை உருவாக்க சிறப்பாக அமையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மதுரையில் 16 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • 122 பகுதிகளில் தீவிர காய்ச்சல் தடுப்பு முகாம்கள் நடத்தப்பட்டது.

    மதுரை

    தமிழகத்தில் கொரோனா படிப்படியாக அதிகரித்து வருகிறது. மாநிலம் முழுவதும் கடந்த வாரம் வரை பாதிப்பு எண்ணிக்கை 150-க்கும் குறைவாக இருந்தது. ஒட்டு மொத்த கொரோனா பாதிப்பு தற்போது 250-ஐ கடந்துள்ளது.

    நேற்று மட்டும் 273 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மதுரை அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு செல்லும் நோயாளிகள் மற்றும் பாதுகாவலர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

    அந்த நடைமுறை தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மதுரையில் இதுவரை 16 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் தவிர மற்றவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

    மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்காக 30 படுக்கைள் கொண்ட தனி வார்டு ஏற்படுத்தப் பட்டுள்ளது. அங்கு தற்போது வரை ஒருவர் மட்டும் சிகிச்சை பெற்று வருகிறார்.

    மதுரை அரசு மருத்துவமனையில் கேரளாவைச் சேர்ந்த பெண் டாக்டர் பணிபுரிந்து வருகிறார். அவர் சமீபத்தில் சொந்த ஊருக்கு சென்று திரும்பினார். அப்போது அவருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. அவர் அங்குள்ள ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்தார். இதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.

    இதையடுத்து மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பெண் டாக்டருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாலமேட்டைச் சேர்ந்த விசாரணை கைதிக்கு சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மதுரை மாவட்ட சுகாதாரத்துறை அலுவலகம் சார்பில் நேற்று மட்டும் 122 பகுதிகளில் தீவிர காய்ச்சல் தடுப்பு முகாம்கள் நடத்தப்பட்டது.

    அங்கு 4 ஆயிரத்து 220 பேருக்கு பரிசோதனை செய்ததில் 8 பேருக்கு தீவிர காய்ச்சல் பாதிப்பு இருந்தது தெரியவந்தது. காய்ச்சல் பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மதுரையில் கொரோனா பரவல் தொடர்பாக அரசு மருத்துவமனை டாக்டர்கள் கூறுகையில்,தினமும் 10-க்கும் மேற்பட்ட நோயாளிகள் வருகின்றனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. இதில் அவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்படும் பட்சத்தில் லேசான பாதிப்பு என்றால், வீட்டில் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்படுகிறது. பாதிப்பு அதிகம் இருந்தால் மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதித்து சிகிச்சை வழங்கி வருகிறோம் என்றனர்.

    மதுரை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி கூறுகையில், மதுரை மாவட்டத்தில் கொரோனாவை எதிர் கொள்ள தயாராக உள்ளோம். இதற்காக போதிய தடுப்பு மருந்துகள் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளன. கொரோனோ நோய் பாதிப்பு தீவிரமாக இருப்பவர்களுக்கு மட்டும் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கொரோனா பாதிப்பு குறைவாக இருப்பவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அங்கு அவர்களுக்கு டாக்டர் குழுவினர் நேரடியாக சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர் என்றார்.

    • வாடிப்பட்டி அருகே பால விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • விழா ஏற்பாடுகளை தாதம்பட்டி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி 8-வது வார்டு தாதம்பட்டி சடையாண்டி கோவில் வளாகத்தில் பால விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவை முன்னிட்டு முதல் நாள் மாலை 6 மணிக்கு கணபதி ஹோமம், முதலாம் கால யாக பூஜை, வாஸ்துசாந்தி, பூர்ணாஹூதி உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தது. 2-ம் நாள் காலை 8 மணிக்கு 2-ம் காலை யாகசாலை பூஜை, கடம் புறப்பாடாகி காசி, ராமேசுவரம், அழகர் கோவில் உள்ளிட்ட புண்ணிய திருத்தங்களில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு காலை 10 மணிக்கு கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

    மூலவர் பால விநாயகருக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். கும்பாபிஷேகத்தை பாலாஜி பட்டர் தலைமையில் சிவாச்சாரியார்கள் செய்தனர். பின்னர் அன்னதானம் நடந்தது. விழா ஏற்பாடு களை தாதம்பட்டி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • விசாலாட்சி விநாயகர் கோவிலில் நாளை சங்கடஹர சதுர்த்தி விழா நடக்கிறது.
    • இதற்கான ஏற்பாடுகளை கரு.கருப்பையா செய்துள்ளார்.

    மதுரை

    மதுரை மடப்புரம் விலக்கு விசாலாட்சி விநாயகர் கோவிலில் நாளை (9ந்தேதி) சங்கடஹர சதுர்த்தி விழா கரு.கருப்பையா தலைமையில் நடக்கிறது.

    மதுரை அருகே திருப்புவனம் வைகை ஆற்று பாலத்தை அடுத்து மடப்புரம் விலக்கு பேருந்து நிறுத்தம் ஆர்ச் எதிரில் உள்ள பிரசித்தி பெற்ற திசைமாறிய தெற்குமுக விசாலாட்சி விநாயகர் கோவிலில் மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி விழா நடைபெற்று வருகிறது.

    இந்த மாதத்துக்கான சங்கடஹர சதுர்த்தி நாளை(9-ந்தேதி) காலை 10 மணிக்கு கோவில் நிர்வாகியும், தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் இலக்கிய பேரவை தலைவருமான பிரபல ஜோதிடர் கரு.கருப்பையா தலைமையில் நடைபெறுகிறது.

    பொதுவாக விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுவார்கள். ஆனால் மடப்புரம் விலக்கில் உள்ள இந்த கோவிலில் பக்தர்கள் விநாயகருக்கு 7 தேங்காய்களை மாலையாக சாற்றி 108 முறை வலம் வந்து வழிபடுகின்றனர். இதனால் கடன் தொல்லை, முன்னோர் சாபம், திருமண தடைகள் அகலும் என்பது பக்தர்கள் நம்பிக்கை ஆகும்.

    இதற்கான ஏற்பாடுகளை கரு.கருப்பையா செய்துள்ளார்.

    • சோழவந்தானில் அ.தி.மு.க. சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது.
    • ஆர்.பி.உதயகுமார் பங்கேற்றார்.

    சோழவந்தான்

    சோழவந்தானில் அ.தி.மு.க. மேற்கு மாவட்டம் தெற்கு ஒன்றியம் சார்பில் வ.உ.சி. சிலை அருகில் அமைக்கப்பட்டிருந்த நீர்மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் திறந்து வைத்து புதிய உறுப்பினர் படிவங்களை வழங்கினார்.

    இதில் யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ்கண்ணா, ஒன்றிய செயலாளர் கொரியர்கணேசன், பேரூர் நிர்வாகிகள் முருகேசன், கவுன்சிலர்கள் ரேகா ராமசந்திரன், கணேசன், மாவட்ட கவுன்சிலர் ஜெயக்குமார், ெபாதுக்குழு நாகராஜ், மாவட்ட மகளிர் அணி லட்சுமி, கூட்டுறவு சங்க தலைவர் ராமன், மணிகண்டன், மன்னாடிமங்கலம் கிளை செயலாளர் ராஜபாண்டி, முன்னாள் சேர்மன் முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மதுரை சோழவந்தான் கோவிலில் பங்குனி பொங்கல் விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
    • மதுரை சோழவந்தான் கோவிலில் பங்குனி பொங்கல் விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

    சோழவந்தான்

    சோழவந்தானில் நாடார் உறவின் முறைக்கு பாத்தியமான பத்திர காளியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. பூசாரி சண்முகராஜா வைகை ஆற்றில் இருந்து சக்தி கரகம் எடுத்து வந்தார். பக்தர்கள் பால்குடம், அக்னி சட்டி எடுத்து வந்து நேர்த்திக் கடனை செலுத்தினர். சந்தன அபிஷேகம், அம்மன் ரிஷப வாகனத்தில் வீதி உலா, முளைப்பாரி ஊர்வலமும் நடந்தது. இன்று மஞ்சள் நீராட்டு நிகழ்வும், அன்னதானமும் நடந்தது. விழாவையொட்டி தினமும் ஆன்மீக சொற்பொழிவுகள் நடந்தன.

    இதற்கான ஏற்பாடுகளை தலைவர் கவுதமராஜா, செயலாளர் ஜெயராஜ், உதவி தலைவர் இளமாறன், துணைச் செயலாளர் அய்யப்பராஜா, பொருளாளர் செல்வகுமார் மற்றும் மகளிர், இளைஞர்கள் சங்கத்தினர் செய்திருந்தனர்.

    ×