என் மலர்
நீங்கள் தேடியது "Neemor Pandal"
- சோழவந்தானில் அ.தி.மு.க. சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது.
- ஆர்.பி.உதயகுமார் பங்கேற்றார்.
சோழவந்தான்
சோழவந்தானில் அ.தி.மு.க. மேற்கு மாவட்டம் தெற்கு ஒன்றியம் சார்பில் வ.உ.சி. சிலை அருகில் அமைக்கப்பட்டிருந்த நீர்மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் திறந்து வைத்து புதிய உறுப்பினர் படிவங்களை வழங்கினார்.
இதில் யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ்கண்ணா, ஒன்றிய செயலாளர் கொரியர்கணேசன், பேரூர் நிர்வாகிகள் முருகேசன், கவுன்சிலர்கள் ரேகா ராமசந்திரன், கணேசன், மாவட்ட கவுன்சிலர் ஜெயக்குமார், ெபாதுக்குழு நாகராஜ், மாவட்ட மகளிர் அணி லட்சுமி, கூட்டுறவு சங்க தலைவர் ராமன், மணிகண்டன், மன்னாடிமங்கலம் கிளை செயலாளர் ராஜபாண்டி, முன்னாள் சேர்மன் முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- நம்புதாளையில் நீர், மோர் பந்தல் திறக்கப்பட்டது.
- தரணி முருகேசன் தலைமை தாங்கினார்.
தொண்டி
தொண்டி அருகே உள்ள நம்புதாளையில் பாரதிய ஜனதா கட்சியின் ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவின் சார்பில் நீர், மோர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட மாவட்ட தலைவர் தரணி முருகேசன் தலைமை தாங்கினார்.
ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் குருஜி, மாவட்ட பார்வையாளாளர் முரளீதரன், ஒன்றிய தலைவர் துரை ஜெய பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச் செயலாளர் மணிமாறன் வரவேற்றார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆர்.எஸ்.மங்களம் ஒன்றிய செய லாளர் கானாட்டாங்குடி சூர்யா, ஒன்றிய இளை ஞரணி பொதுச்செயலாளர் அ.மணக்குடி சுரேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.மாவட்ட அமைப்புசாரா துணை தலைவர் ரத்னக் குமார் நன்றி கூறினார்.
பொதுமக்களுக்கு தர்பூசணி பழம், நீர், மோர் வழங்கப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.






