என் மலர்tooltip icon

    மதுரை

    • காரில் வந்த கும்பல் சத்யபிரகாஷை கத்தியால் குத்தி உருட்டுக்கட்டையால் தாக்கியது.
    • டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை மாவட்டம் பேரையூர் சமத்துவ புரத்தை சேர்ந்தவர் சங்கரன். இவரது மகன் சத்யபிரகாஷ் (வயது23). கல்லூரி மாணவரான இவர் சம்பவத்தன்று ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு கார் ஆடுகள் மீது மோதுவது போல் சென்றது. இதனை சத்யபிரகாஷ் தட்டி கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த காரில் வந்த கும்பல் சத்யபிரகாஷை கத்தியால் குத்தி உருட்டுக்க ட்டையால் தாக்கியது.

    இதுகுறித்த புகாரின் பேரில் டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த பள்ளி ஆசிரியர் பாலமுருகன், பாறைப்பட்டி முனியாண்டி உள்பட 4 பேரிடம் விசார ணை நடத்தி வருகின்றனர்.

    • சித்திரை வீதிகளில் குடிநீர் வசதி இல்லாததால் பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.
    • குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மதுரை

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ஆண்டுதோறும் பக்தர்கள் வந்து செல்வார்கள். உள்ளூர் மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் அனைத்து மாதங்களிலும் கோவிலுக்கு வந்து சாமிதரிசனம் செய்துவிட்டு செல்வார்கள்.

    கோவிலுக்கு சாமி கும்பிட வரும் பக்தர்கள் சித்திரை வீதிகளை சுற்றுவதும், பின்னர் இளைப்பாற அங்கு சிறிது நேரம் அமர்ந்து குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதும் வழக்கம். இதனால் சித்திரை வீதிகளில் தினமும் மாலை நேரங்களில் பக்தர்கள் கூட்டம் காணப்படும்.

    ஆனால் நான்கு சித்திரை வீதிகளிலும் குடிநீர் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. இதனால் குழந்தைகளுடன் வரும் தாய்மார்கள், முதியவர்கள் குடிநீரை தேடி அலைய வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்தநிலையில் இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா நாளை மறுநாள் (23-ந்தேதி) தொடங்க உள்ளது. அன்றிலிருந்து தொடர்ந்து 12 நாட்கள் திருவிழா நடப்பதால் மீனாட்சி அம்மன் கோலில் பகுதி முழுவதும் விழாக்கோ லம் பூண்டு காணப்படும்.

    விழா நடக்கும் அனைத்து நாட்களும் சுவாமி வீதி உலா உள்ளிட்டவைகளை பார்க்க உள்ளூரை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இதனால் சித்திரை வீதிகள் உள்ளிட்ட அனைத்து வீதிகளும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி காணப்படும்.

    ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடும் சித்திரை திருவிழா நடக்கும் போது, பக்தர்களுக்கு குடிதண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வழங்கவேண்டியது அவசியமானதாகும்.

    தமிழகத்தின் முக்கிய கோவிலாக விளங்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. பழனி, ஸ்ரீரங்கம் உள்ளிட்ட கோவில்களில் இருக்கும் வசதி கூட இங்கு இல்லை என்பது பக்தர்களின் புலம்பலாக இருக்கிறது.

    தற்போது சித்திரை திருவிழா தொடங்க இருப்பதால் வழக்கத்தை விட பக்தர்கள் அதிகளவில் வருவார்கள். எனவே கோவில் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் நான்கு சித்திரை வீதிகளிலும் குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சோலார் பேனல் திருடிய 3 பேரை கைது செய்தனர்.
    • பாக்கியம் மகன் பூபதி (20), தினேஷ்குமார் (26), முருகேசன் மகன் கார்த்திக் (18) என்பது தெரியவந்தது.

    மதுரை

    மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள எரவார்பட்டி பஞ்சாயத்து அலுவலகத்தில் மாடியில் சோலார் பேனல் அமைக்கப்பட்டிருந்தது. இதனை சம்பவத்தன்று மர்ம நபர்கள் திருடினர். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் திருடர்களை விரட்டி சென்று பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.விசாரணையில் அவர்கள் திண்டுக்கல் மாவட்டம், மைக்கேல் பாளையம், பாக்கியம் மகன் பூபதி (20), தினேஷ்குமார் (26), முருகேசன் மகன் கார்த்திக் (18) என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பஞ்சாயத்து அலுவலகத்தில் சோலார் பேனல் திருடியதாக, மேற்கண்ட 3 பேரையும் விக்கிரமங்கலம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதே போல் மதுரை வளையப்பட்டி யாதவர் தெருவை சேர்ந்த சேகர் என்பவரின் தோட்டத்தில் மின்மோட்டாரை திருடியதாக சத்திர வெள்ளாளபட்டியை சேர்ந்த சுமலி என்பவரை பாலமேடு போலீசார் கைது செய்தனர்.

    • கடந்த பிப்ரவரி மாதம் குணாவை, சின்னத் தம்பி தரப்பினர் வெட்டி கொலை செய்தனர்.
    • தாக்குதல் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது கூலிப்படையை சேர்ந்தவர்களும் தாக்குதலில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    மதுரை:

    திண்டுக்கல் வேடப்பட்டி அபிராமி நகரை சேர்ந்தவர்கள் குணா, சின்னதம்பி.இவர்களின் கூட்டாளிகள் யுவராஜ்குமார், விக்னேஷ் குமார். இவர்கள் 4 பேரும் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் மீது திண்டுக்கல் தாலுகா போலீசில் பல வழக்குகள் உள்ளன.

    இந்த நிலையில் குணா, சின்னதம்பி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் குணாவை, சின்னத் தம்பி தரப்பினர் வெட்டி கொலை செய்தனர்.

    இதைத்தொடர்ந்து கடந்த மார்ச் 1-ந்தேதி மதுபான பாருக்கு சென்றபோது சின்னத்தம்பிக்கும், யுவராஜ் குமாருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து சின்ன தம்பி, அவரது தம்பி பரமசிவன் என்ற குட்டி ஆகியோர் யுவராஜ்குமார், விக்னேஷ் குமார் ஆகியோரை தாக்கினர்.

    இந்த சம்பவத்துக்கு பழிக்கு பழி வாங்கும் வகையில் மார்ச் 2-ஆம் தேதி யுவராஜ்குமார், விக்னேஷ் குமார் தரப்பினர் சின்ன தம்பியை வெட்டி கொலை செய்தனர்.

    இது பற்றிய புகாரின் பேரில் திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து யுவராஜ்குமார், விக்னேஷ் குமார் ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் 2பேரும் மார்ச் 6-ஆம் தேதி விருதுநகர் மாவட்ட ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    யுவராஜ்குமாரும், விக்னேஷ்குமாரும் காயமடைந்து இருந்ததால் அவர்கள் சிகிச்சைக்காக மார்ச் 22-ந்தேதி விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் ஆஸ்பத்திரியின் 4-வது தளத்தில் உள்நோயாளிகளாக பொது வார்டியில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். கைதிகள் 2 பேருக்கும் திண்டுக்கல் ஆயுதப்படை சப்-இன்ஸ்பெக்டர் பால் செல்வம் தலைமையில் போலீசார் பாதுகாப்பு அளித்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 18-ஆம் தேதி இரவு 7 மணி அளவில் 2 சொகுசு கார்களில் 8 பேர் கும்பல் வந்தது. அவர்களில் 4 பேர் யுவராஜ் குமார், விக்னேஷ்குமார் அனுமதிக்கப்பட்டிருந்த வார்டுக்குள் புகுந்து கொலை வெறி தாக்குதல் நடத்தினர். 4 பேர் கும்பல் வார்டுக்குள் சென்றதும் யுவராஜ்குமார் தலையில் அரிவாளால் வெட்டியுள்ளது. அதனை தடுக்க முயன்ற ஆயுதப்படை போலீஸ் காரர்கள் சிலம்பரசன், அழகுராஜ் ஆகியோர் மீது மிளகாய் பொடியை தூவி தாக்கியுள்ளனர். இருந்த போதிலும் போலீசார் விக்னேஷ்குமாரை மீட்டு ஒரு அறையில் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.

    போலீஸ்காரர் சிலம்பரசன் துப்பாக்கியால் சுட்டு விடுவேன் என்று மிரட்டியதால் பயந்து போன 4 பேரும் தப்பி சென்று விட்டனர்.

    இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் திண்டுக்கல்லை சேர்ந்த போத்தி ராஜ், நட்டு ராயன், அருண், சின்ன தம்பியின் தம்பி விஜி, ஒளிகை ராமச்சந்திரன், சோனையன் உள்ளிட்ட 7பேர் என்பதும், மற்றொருவர் கார் டிரைவர் என்றும் கூறப்படுகிறது.

    தாக்குதல் நடத்திய கும்பலை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் நேற்று திண்டுக்கல்லை சேர்ந்த பாண்டியம்மாள், குமார் உள்ளிட்ட 6பேரை பிடித்து வந்து விசாரணை நடத்தினர். இதில் அவர்களுக்கு சம்பந்தமில்லை என்று தெரிய வந்ததால் அவர்களை விடுவித்து விட்டனர்.

    தாக்குதல் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது கூலிப்படையை சேர்ந்தவர்களும் தாக்குதலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் மதுரை மாவட்டம் தனக்கன்குளம் அம்பேத்கர் நகரை சேர்ந்த சரவணன் (29) தங்கமலை (27)ஆகிய 2 பேர் கூலிப்படைகளாக செயல்பட்டுள்ளனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய கார் டிரைவர் உள்பட 6பேரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

    • நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுவதால் ஆடுகளை வாங்க வியாபாரிகள் அதிகளவில் ஆர்வம் காட்டினர்.
    • ஒரு ஆட்டின் விலை ரூ.10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை விற்கப்பட்டது.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். தமிழகத்தில் பொள்ளாச்சிக்கு அடுத்த பெரிய சந்தையாக கருதப்படும் இந்த ஆட்டுசந்தையில் ஒவ்வொரு வாரமும் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரையிலான ஆடுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    தென்மாவட்டத்தில் மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, கோவில்பட்டி, நெல்லை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு வியாபாரிகள் ஆடு, கோழிகளை வாங்கி செல்வது வழக்கம். ஒவ்வொரு முறையும் அதிகாலை 4 மணிக்கு தொடங்கும் ஆட்டுச் சந்தையில் வியாபாரிகளும், ஆடு, கோழிகளை வாங்குவோர்கள் அதிகளவில் திரளுவார்கள். இதனால் கூட்டம் கட்டுக்கடங்காத அளவில் காணப்படும்.

    இந்த நிலையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு தொடங்கிய ஆட்டு சந்தையில் வழக்கத்தைவிட அதிகளவு கூட்டம் காணப்பட்டது. மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கானோர் வந்திருந்தனர். இன்று ஒரே நாளில் 10 ஆயிரம் ஆடுகள் வரை விற்கப்பட்டது.

    நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுவதால் ஆடுகளை வாங்க வியாபாரிகள் அதிகளவில் ஆர்வம் காட்டினர். இதன் காரணமாக ஆட்டின் விலை வழக்கத்தை விட பல மடங்கு அதிகரித்து காணப்பட்டது. ஒரு ஆட்டின் விலை ரூ.10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை விற்கப்பட்டது. இன்று மட்டும் திருமங்கலம் ஆட்டுச் சந்தையில் ரூ.7 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை நடந்தது.

    இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ''ரம்ஜான் பண்டிகை காரணமாக இன்று நடந்த சந்தையில் ஆடுகள், கோழிகள் அதிகளவில் விற்பனை ஆகியுள்ளது. பண்டிகை காரணமாக விலை அதிகமாகியுள்ளது. கடந்த 2 வார காலமாக இதே நிலை நீடிக்கிறது. ரம்ஜான் முடிந்த பின் விலை குறைய வாய்ப்புள்ளது.

    தற்போது ஆடுகளுக்கு அதிக தேவை இருந்தாலும் திருமங்கலம் சந்தையில் ஆடுகள் வரத்து குறைவாக உள்ளது. ஒவ்வொரு முறையும் தீபாவளி, ரம்ஜான் உள்ளிட்ட விசேஷ நாட்களில் திருமங்கலம் ஆட்டுச்சந்தையில் அதிகளவில் வியாபாரிகளும், பொதுமக்களும் கூடுகிறார்கள். தற்போதுள்ள ஆட்டுச்சந்தையில் இட நெருக்கடி அதிகமாக இருப்பதால் அதனை விரிவாக்கம் செய்ய வேண்டும் என நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளோம்'' என்றார்.

    • வியாபாரிகள் சங்க பேரவை சார்பில் பக்தர்களுக்கு நீர்-மோர் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
    • வியாபாரிகள் பேரவை தெற்கு பகுதி தலைவர் சித்திரைலிங்கம் தலைமை தாங்குகிறார்.

    மதுரை

    தமிழ்நாடு வியாபாரிகள் சங்க 40-வது வணிக தினத்தை முன்னிட்டு மதுரை தெற்கு மாவட்டம் சார்பில் சித்திரை திருவிழாவுக்கு கள்ளழகரை தரிசிக்க வருகை தரும் பத்கர்களுக்கு குளிர்பானம், நீர், மோர் வழங்கும் நிகழ்ச்சி மே 5-ந்தேதி காலை 7 மணிக்கு ஓபுளா படித்துறை அருகில் முனிச்சாலையில் நடக்கிறது.

    தமிழ்நாடு வியாபாரிகள் பேரவை தெற்கு பகுதி தலைவர் சித்திரைலிங்கம் தலைமை தாங்குகிறார். மாநில துணைத்தலைவர் சூசை அந்தோணி, மாநில செயற்குழு உறுப்பினர் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

    மதுரை சாக்கு வியாபா ரிகள் சங்கத்தலைவர் ஷிவ பாலன் கலந்து கொண்டு நீர்-மோர் வழங்குகிறார். மதுரை மண்டல செயலாளர் ஜெயக்குமார் பிரசாதம் வழங்குகிறார்.

    மதுரை மண்டலத் தலைவர் மைக்கேல்ராஜ், மாநில கொள்கை பரப்பு செயலாளர் பாண்டிய ராஜன், மாநில செயலாளர் சபரி செல்வம், மாநில துணைத் தலைவர் தங்கராஜ், மதுரை மண்டல பொரு ளாளர் தேனப்பன், தெற்கு மண்டல செயலாளர் கேசவன், தெற்கு மண்டல துணைத் தலைவர் உமர் பாரூக், தெற்கு பகுதி பொருளாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் வாழ்த்தி பேசுகிறார்கள்.

    இந்த நிகழ்ச்சியில் மதுரை சாக்கு வியாபாரிகள் சங்க துணைத்தலைவர் சுயம்புலிங்கம், செயலாளர் கதிரேசன், பொருளாளர் ஜெயபாண்டியன், விழாக்குழுவைச் சேர்ந்த முருகேசன், காளீஸ்வரன், நாகூர்கனி, வரதராஜன், பெரியசாமி, மாரிமுத்து, மருதுபாண்டியன், ராஜலிங்கம்.

    கார்த்தீசன், கிருஷ்ண குமார், செந்தில் குமார், சுயம்புலிங்கம், தருமலிங்கம், சிவகணேஷ், ஜெயபாண்டியன், குருசாமி, சூரியன், சிவன்காமராஜ், செல்வகுமார், விநாயகம், மாரிமுத்து, ஜெயக்குமார், மதுரை மண்டல நிர்வாகிகள் குட்டி என்ற அந்தோணிராஜ், பிரபா கரன், சிவா, கண்ணன், மதுரை மண்டல மகளிர் அணி நிர்வாகிகள் பாக்கிய லட்சுமி, ராஜம்மாள், கோகிலா, ரத்தினபிரியா, மதுரை தெற்கு பகுதி நிர்வாகி செல்வகணேஷ் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

    • ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர்.
    • 7 அலுவலர்கள் மீது வழங்கப்பட்ட குற்றச்சாட்டு ஆணையை திரும்ப பெற வேண்டும்.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை அலுவலகங்களில் 500- க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்ற னர். இந்த நிலையில் அவர்கள் பல்வேறு கோரிக் கைகளை நிறைவேற்ற கோரி, தமிழக அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி னார்கள். இதில் உடன்பாடு எட்டப்பட வில்லை.

    இதனைத் தொடர்ந்து ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்களின் கோரிக்கை களை நிறைவேற்ற வலி யுறுத்தி இன்று (20-ந் தேதி) ஒரு நாள் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப் பட்டது. அதன்படி இன்று காலை ஊரக வளர்ச்சி துறையின் ஒட்டுமொத்த ஊழியர்களும் ஒரு நாள் விடுப்பு எடுத்து போராட்ட த்தில் ஈடுபட்டனர்.

    இது தொடர்பாக மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறுகையில், "மேலூர் ஊராட்சி ஒன்றியம் சருகுவளை யப்பட்டி கிராம ஊராட்சியில் பிரதமருக் கான திட்டப் பணிகளை செயல்படுத்திய 7 அலு வலர்கள் மீது வழங்கப்பட்ட குற்றச்சாட்டு ஆணையை திரும்ப பெற வேண்டும்,

    மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி அளவில் பணி யிடை நீக்கம் செய்யப்பட்ட 4 ஊராட்சி செயலாளர்களுக்கு மீண்டும் பணியிடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும், பணியிட மாறுதல் கோரிய அனைத்து நிலை அலுவலர்களுக்கும் உடனடியாக வழங்க வேண்டும், மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி அளவில் இதுவரை நிலுவையில் உள்ள குற்றச்சாட்டு ஆணைகளை இறுதி செய்ய வேண்டும், விடுமுறை நாட்களில் நேரில் மற்றும் காணொளி வாயிலாக நடத்தப்படும் ஆய்வு கூட்டங்களை தவிர்க்க வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி ஒரு நாள் விடுப்பு போராட்டம் நடத்தி வருவதாக தெரிவித்து உள்ளனர்.

    • டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினர்.
    • இணைச்செயலாளர் ஓய்.ஆசை அந்தோணி ஆகியோர் கலந்து கொண்டு மலர்தூவி மரியாைத செலுத்தினார்கள்.

    மதுரை

    டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் நினைவு தினத்தையொட்டி மதுரை அலுவலகத்தில் மலர்களால் அலங்கரிக்க பட்டு இருந்த அவரது உருவப்படத்திற்கு மதுரை நாடார் உறவின்முறை பொதுச்செயலாளரும், அகில இந்திய நாடார் இளைஞர் பேரவை அவைத் தலைவருமான எஸ்.கே. மோகன் மாலை அணிவித்து மரியாைத செலுத்தினார்.

    இதில் மதுரை நாடார் உறவின்முறை பொதுச்செயலாளர் வி.பி.மணி, ம.நா.உ. ஜெயராஜ் நாடார் மேல்நிலைப்பள்ளி துணைத்தலைவர் பி.செந்தில்குமார், துணை செயலாளர் சி.பாஸ்கரன், விடுதிக்குழு செயலாளர் பா.குமார், பாரத பெருந் தலைவர் காமராஜ் அறநிலையத்தின் துணைத் தலைவர் எம்.எஸ்.சோம சுந்தரம், பொதுச்செயலாளர் கே.பி.எம்.எம்.காசமணி, ம.நா.உ. ஜெயராஜ் நாடார் அன்னபாக்கியம் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி இணைச்செயலாளர் ஓய்.ஆசை அந்தோணி ஆகியோர் கலந்து கொண்டு மலர்தூவி மரியாைத ெசலுத்தினார்கள்.

    • டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினர்.
    • இணைச்செயலாளர் ஓய்.ஆசை அந்தோணி ஆகியோர் கலந்து கொண்டு மலர்தூவி மரியாைத ெசலுத்தினார்கள்.

    மதுரை

    டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் நினைவு தினத்தை யொட்டி மதுரை அலுவலகத்தில் மலர்களால் அலங்கரிக்க பட்டு இருந்த அவரது உருவப்படத்திற்கு மதுரை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் அதன் தலைவர் கார்த்திகேயன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி கவுன்சிலர்கள் ஜெய்ஹிந்த்புரம் முருகன், தல்லாகுளம் முருகன், ராஜபிரதாபன், பொதுக்குழு உறுப்பினர் சையதுபாபு, பொருளாளர் ரவிச்சந்திரன், துணைத்தலைவர்கள் மலர் பாண்டியன், பறக்கும் படை ப ாலு, பொதுச்செயலாளர் எம்.ஏ.காம ராஜ், வக்கீல் வெங்கட்ராமன், வார்டு தலைவர் பில்லப்பன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி னார்கள்.

    • வளர்ச்சி திட்ட பணிகளை குறித்து மேயர் நேரில் ஆய்வு செய்தார்.
    • பிறந்த குழந்தைக்கு பிறப்பு சான்றிதழை மேயர் இந்திராணி வழங்கினார்.

    மதுரை

    மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டு பகுதி களில் வளர்ச்சி திட்ட பணி களான சாலை வசதிகள், மழைநீர் வடிகால்கள் தூர் வாருதல், அங்கன்வாடி மையம் கட்டுதல், பள்ளிகள் சீரமைப்பு, தெருவிளக்குகள் பராமரிப்பு, நலவாழ்வு மையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங் கள் புனரமைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

    மதுரை மாநகராட்சி மண்டலம்-3, வார்டு எண்.55 அண்ணாத்தோப்பு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய தர மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் மருத்துவ மனையில் பிரசவித்த தாய்க்கு தமிழக அரசின் தாய்சேய் நலபெட்டகம் மற்றும் பிறந்த குழந்தைக்கு பிறப்பு சான்றிதழை மேயர் இந்திராணி வழங்கினார்.

    மண்டலம்-3 வார்டு எண்.57 ஆரப்பாளையம் தண்ணீர் தொட்டி அருகில் புதியதாக அமைக்கப்பட உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு வரும் பணியினையும், வார்டு எண்.70 துரைச்சாமி நகர் பகுதியில் புதிய உப கழிவு நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு வரும் பணியையும், நேருநகர் பகுதியில் செல்லும் வாய்க்காலை தூர்வாரும் பணியையும் மேயர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் மண்டலம்-2 வார்டு எண்.34 அண்ணாநகர் மெயின் ரோட்டில் ( டுரிப் நிதி கட்டம் 1 கீழ் ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்கப் பட்டு வரும் பணியையும் மேயர் பார்ர்வையிட்டார்.

    அப்நபோது நகர பொறியாளர் அரசு, துணை ஆணையாளர் தயாநிதி. மண்டல தலைவர்கள் பாண்டிச்செல்வி, சரவணபுவனேஸ்வரி, நகர்நல அலுவலர் வினோத்குமார், உதவி ஆணையாளர்கள் மனோகரன், வரலெட்சுமி, மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உள்பட பலர் உடனிருந்தனர்.

    • ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் சென்ற போது 5 பேர் கும்பல் தாக்கியது.
    • இதுகுறித்து ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    மதுரை

    மதுரை துவரிமான் மேல தெருவை சேர்ந்தவர் கண்ணன் (56). சரக்கு வேன் டிரைவரான இவர் சம்பவத்தன்று லட்சுமிபுரம் பகுதியில் சரக்குகளை இறக்கினார். அப்போது அவருக்கும், அதே பகுதியில் இருந்த காவலாளிக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கும்பல் கண்ணனை தாக்கியது. இதுகுறித்த புகாரின் பேரில் விளக்குத்தூண் போலீசார் வழக்குப்பதிவு செய்து கருப்பட்டியை சேர்ந்த பிரபாகரன் (24) என்பவரை கைது செய்தனர்.

    மேலூர் சந்தைப்பே ட்டையை சேர்ந்தவர் அயூப்கான் (45) ஷேர் ஆட்டோ டிரைவரான இவர் சம்பவத்தன்று ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் சென்ற போது 5 பேர் கும்பல் தாக்கியது. இது தொடர்பாக ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • தல்லாகுளம் பெருமாள் கோவிலில் கொட்டகை முகூர்த்த விழா நடந்தது.
    • 9-ந்தேதி காலை 10.32 மணிக்கு கள்ளழகர் அழகர்கோவிலை சென்றடைகிறார்.



     தேனூர் மண்டபத்தில் முகூர்த்தக்கால் நடப்பட்டது.

    மதுரை

    மதுரை அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோவில் சித்திரை திருவிழா மே மாதம் 1-ந்தேதி தொடங்குகிறது. இதில் முதல் நிகழ்ச்சியாக கொட்டகை முகூர்த்த நிகழ்ச்சி, தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலில் இன்று காலை நடந்தது.

    அப்போது ஆயிரம் பொன் சப்பரத்தில் வைக்கப்படும் யாழி முகத்துக்கு நாணல் புல், மாவிலை, பூ மாலைகள், சந்தனம், தாம்பூலம், தேங்காய், பழங்கள் வைத்து, நூபுர கங்கை தீர்த்தத்தால், அபிஷேகம் செய்யப்பட்டது.

    அதன் பிறகு வேத மந்திரங்கள்-மேள தாளம் முழங்க வர்ணம் பூசப்பட்ட முகூர்த்த கால்கள், மாவிலை- மாலைகளுடன் இணைக்கப்பட்டு, கோவில் வளாகத்தில் உள்ள ராஜ கோபுரம் முன்பு முகூர்த்தக் கால் நடப்பட்டது.

    இதைத்தொடர்ந்து பந்தல் அமைக்கும் பணிகள் தொடங்கின. இதையொட்டி ஆயிரம் பொன் சப்பரத் துக்கான தலையாலங்கார பூஜை நடத்தப்பட்டது. பின்னர் வண்டியூர் தேனூர் மண்டபத்தில் முகூர்த்தக் கால் நடும் நிகழ்ச்சி நடந்தது.

    இதில் தல்லாகுளம் மண்டகப்படி சங்க தலைவர் முத்துவிநாயகம், கோவில் துணை கண்காணிப்பாளர் ராமசாமி, மீனாட்சி அம்மன் கோவில் தலைமை பட்டர் ஹாலாஸ்யநாதன், வண்டியூர் தலைமை பட்டர் சங்கரநாராயணன், தேனூர் கிராம கமிட்டி நிர்வாகிகள் சோனைமுத்து, சாமிக்காளை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மதுரை மாவட்டம் அழகர்கோவில் சித்திரை பெருவிழாவின் முன்னோட்ட நிகழ்ச்சியாக, தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவில் சன்னதி முன்பு கொட்டகை முகூர்த்தம் நடந்தது.

    இதையொட்டி சுந்தர ராஜ பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்தில் மே 3-ந் தேதி இரவு 7 மணிக்கு தங்கப்பல்லக்கில் மதுரை நோக்கி புறப்படுகிறார். மே 4-ந்தேதி காலை 6 மணிக்கு, மூன்றுமாவடியில் எதிர் சேவை நிகழ்ச்சி நடக்கிறது.

    கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி 5-ந்தேதி காலை 5.45 மணி முதல் 6.12 மணிக்குள் நடக்கிறது.

    அப்போது கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் வைகையாற்றில் எழுந்த ருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார். இதனைத் தொடர்ந்து ராமராயர் மண்டபத்தில் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் நிகழ்ச்சி நடக்கும்.

    வருகிற 6-ந்தேதி காலை 9 மணிக்கு வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவி லில் இருந்து கள்ளழகர் சேஷ வாகனத்தில் புறப்படுகிறார். மாலை 3 மணிக்கு தேனூர் மண்டபத்தில் கருட வாக னத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. அப்போது கள்ளழகர் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளிக்கிறார். அதன் பிறகு ராமராயர் மண்டபத்தில் நள்ளிரவு 12 மணி முதல் விடிய, விடிய தசாவதார நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    வருகிற 7-ந்தேதி காலை 6 மணிக்கு கள்ளழகர், மோகினி அவதாரத்தில் காட்சி அளிக்கிறார். மாலை 2 மணிக்கு கள்ளழகர் ராஜாங்க அலங்காரத்துடன் அனந்தராயர் பல்லகில் புறப்படுகிறார்.

    வருகிற 8-ந்தேதி அதிகாலை 2.30 மணிக்கு ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் இருந்து கள்ளழகர் பூப்பல் லக்கில் அழகர்கோவில் புறப்படுகிறார். 9-ந்தேதி காலை 10.32 மணிக்கு கள்ளழகர் அழகர்கோவிலை சென்றடைகிறார்.

    ×