search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Water-butter"

    • வியாபாரிகள் சங்க பேரவை சார்பில் பக்தர்களுக்கு நீர்-மோர் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
    • வியாபாரிகள் பேரவை தெற்கு பகுதி தலைவர் சித்திரைலிங்கம் தலைமை தாங்குகிறார்.

    மதுரை

    தமிழ்நாடு வியாபாரிகள் சங்க 40-வது வணிக தினத்தை முன்னிட்டு மதுரை தெற்கு மாவட்டம் சார்பில் சித்திரை திருவிழாவுக்கு கள்ளழகரை தரிசிக்க வருகை தரும் பத்கர்களுக்கு குளிர்பானம், நீர், மோர் வழங்கும் நிகழ்ச்சி மே 5-ந்தேதி காலை 7 மணிக்கு ஓபுளா படித்துறை அருகில் முனிச்சாலையில் நடக்கிறது.

    தமிழ்நாடு வியாபாரிகள் பேரவை தெற்கு பகுதி தலைவர் சித்திரைலிங்கம் தலைமை தாங்குகிறார். மாநில துணைத்தலைவர் சூசை அந்தோணி, மாநில செயற்குழு உறுப்பினர் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

    மதுரை சாக்கு வியாபா ரிகள் சங்கத்தலைவர் ஷிவ பாலன் கலந்து கொண்டு நீர்-மோர் வழங்குகிறார். மதுரை மண்டல செயலாளர் ஜெயக்குமார் பிரசாதம் வழங்குகிறார்.

    மதுரை மண்டலத் தலைவர் மைக்கேல்ராஜ், மாநில கொள்கை பரப்பு செயலாளர் பாண்டிய ராஜன், மாநில செயலாளர் சபரி செல்வம், மாநில துணைத் தலைவர் தங்கராஜ், மதுரை மண்டல பொரு ளாளர் தேனப்பன், தெற்கு மண்டல செயலாளர் கேசவன், தெற்கு மண்டல துணைத் தலைவர் உமர் பாரூக், தெற்கு பகுதி பொருளாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் வாழ்த்தி பேசுகிறார்கள்.

    இந்த நிகழ்ச்சியில் மதுரை சாக்கு வியாபாரிகள் சங்க துணைத்தலைவர் சுயம்புலிங்கம், செயலாளர் கதிரேசன், பொருளாளர் ஜெயபாண்டியன், விழாக்குழுவைச் சேர்ந்த முருகேசன், காளீஸ்வரன், நாகூர்கனி, வரதராஜன், பெரியசாமி, மாரிமுத்து, மருதுபாண்டியன், ராஜலிங்கம்.

    கார்த்தீசன், கிருஷ்ண குமார், செந்தில் குமார், சுயம்புலிங்கம், தருமலிங்கம், சிவகணேஷ், ஜெயபாண்டியன், குருசாமி, சூரியன், சிவன்காமராஜ், செல்வகுமார், விநாயகம், மாரிமுத்து, ஜெயக்குமார், மதுரை மண்டல நிர்வாகிகள் குட்டி என்ற அந்தோணிராஜ், பிரபா கரன், சிவா, கண்ணன், மதுரை மண்டல மகளிர் அணி நிர்வாகிகள் பாக்கிய லட்சுமி, ராஜம்மாள், கோகிலா, ரத்தினபிரியா, மதுரை தெற்கு பகுதி நிர்வாகி செல்வகணேஷ் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

    • அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எதிரேயும் நீர், மோர் பந்தலை தச்சை கணேசராஜா திறந்து வைத்தார்.
    • பாளை பஸ் நிலையம் அருகே உள்ள சைக்கிள் மார்ட் எதிரிலும், நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எதிரேயும் நீர், மோர் பந்தல்கள் திறக்கப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட அ.தி.மு.க. அமைப்புசாரா ஓட்டுனர் அணி சார்பில் இன்று சந்திப்பு தேவர் சிலை அருகே நீர்-மோர் பந்தல் திறக்கும் விழா நடைபெற்றது.

    விழாவிற்கு நெல்லை மாவட்ட அ.தி.மு.க. செயலா ளர் தச்சை கணேச ராஜா தலைமை தாங்கி நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். தொடர்ந்து பொது மக்களுக்கு தண்ணீர், மோர், தர்பூசணி உள்ளிட்டவற்றை வழங்கினார்.

    கலந்து கொண்டவர்கள்

    நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் பரணி சங்கரலிங்கம், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் சிவந்தி மகா ராஜேந்திரன், பகுதி செயலாளர்கள் சிந்து முருகன், காந்தி வெங்கடாசலம், முன்னாள் பகுதி செயலா ளர் தச்சை மாதவன், ஒன்றிய செயலாளர்கள் முத்துக்குட்டி பாண்டியன், மருதூர் ராமசுப்பிரமணி யன், வக்கீல் அன்பு அங்கப்பன், பாளை பகுதி மாணவர் அணி செயலாளர் புஷ்பராஜ் மற்றும் நிர்வாகி கள் கனித்துரை, பாறையடி மணி, தச்சை மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து பாளை தெற்கு பகுதி அ.தி.மு.க. செயலாளர் திருத்துச் சின்னத்துரை ஏற்பாட்டில் பாளை பஸ் நிலையம் அருகே உள்ள சைக்கிள் மார்ட் எதிரிலும், நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எதிரேயும் நீர், மோர் பந்தலை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா திறந்து வைத்து பொதுமக்களுக்கு தர்பூசணி உள்ளிட்டவற்றை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் இளம்பெண் பாசறை முத்துப்பாண்டி, மண்டல தகவல் தொழில்நுட்ப அணி விக்னேஷ், பொதுக்குழு உறுப்பினர் கங்கை வசந்தி, வட்ட செயலாளர்கள் ராமர், லட்சுமி நாராயணன், முத்துக்குமார், காதர் மஸ்தான், அருள் ஜெய்சிங், புதிய முத்து, பகுதி இணை செயலாளர் முத்துலட்சுமி, மகளிர் அணி பேச்சியம்மாள் மற்றும் நிர்வாகிகள் சண்முகநாதன், ஆனந்த் பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தேவகோட்டை பஸ் நிலையம் அருகே போலீசார், ெபாதுமக்களுக்கு நீர் மோர் வழங்கினர்.
    • நகருக்கு வரும் பொதுமக்கள் நலன் கருதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

    தேவகோட்டை

    தமிழகத்தில் கோடை வெயில் தாக்கம் அதிகரித்து வருகிறது.இதையொட்டி தேவகோட்டை நகரில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் அருகில் உள்ள கிராமங்களில் இருந்து தேவகோட்டை நகருக்கு வரும் பொதுமக்கள் நலன் கருதி தேவகோட்டை பஸ் நிலையம் அருகில் உள்ள காவல் உதவி மையத்தில் தேவகோட்டை நகர் காவல் துறையால் நீர்-மோர் வழங்கும் பந்தல் அமைத்து பொதுமக்களின் தாகம் தீர்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தேவகோட்டை உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் பார்த்திபன் நீர்-மோர் பந்தலை தொடங்கி வைத்தார். இன்ஸ்பெக்டர்கள் சரவணன், சுப்பிரமணியன், சப்-இன்ஸ்பெக்டர்கள் அன்சாரி உசேன், நமச்சிவாயம், தவமுனி, வைரம், தினகரன், கலா மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். நீர்பந்தலில் மோர், சர்பத், ரோஸ் மில்க் ஆகிய 3 வகையான குளிர்பானங்கள் வழங்கப்பட்டது.

    ஏராளமான பொதுமக்கள் ஆவலுடன் நீர்-மோர் பந்தலுக்கு சென்று குளிர்பானங்களை வாங்கி பருகி சென்றனர். மேலும் வெயிலின் தாக்கம் குறையும் வரை நீர் பந்தல் தொடர்ந்து செயல்படும் என போலீசார் தெரிவித்தனர். பொது மக்களின் தாகத்தை தீர்க்க மாவட்டத்திலேயே முதலில் தேவகோட்டை நகரில் தான் காவல்துறை சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது.

    ×