search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ெபாதுமக்களுக்கு நீர், மோர் வழங்கும் போலீசார்
    X

    ெபாதுமக்களுக்கு நீர், மோர் வழங்கும் போலீசார்

    • தேவகோட்டை பஸ் நிலையம் அருகே போலீசார், ெபாதுமக்களுக்கு நீர் மோர் வழங்கினர்.
    • நகருக்கு வரும் பொதுமக்கள் நலன் கருதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

    தேவகோட்டை

    தமிழகத்தில் கோடை வெயில் தாக்கம் அதிகரித்து வருகிறது.இதையொட்டி தேவகோட்டை நகரில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் அருகில் உள்ள கிராமங்களில் இருந்து தேவகோட்டை நகருக்கு வரும் பொதுமக்கள் நலன் கருதி தேவகோட்டை பஸ் நிலையம் அருகில் உள்ள காவல் உதவி மையத்தில் தேவகோட்டை நகர் காவல் துறையால் நீர்-மோர் வழங்கும் பந்தல் அமைத்து பொதுமக்களின் தாகம் தீர்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தேவகோட்டை உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் பார்த்திபன் நீர்-மோர் பந்தலை தொடங்கி வைத்தார். இன்ஸ்பெக்டர்கள் சரவணன், சுப்பிரமணியன், சப்-இன்ஸ்பெக்டர்கள் அன்சாரி உசேன், நமச்சிவாயம், தவமுனி, வைரம், தினகரன், கலா மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். நீர்பந்தலில் மோர், சர்பத், ரோஸ் மில்க் ஆகிய 3 வகையான குளிர்பானங்கள் வழங்கப்பட்டது.

    ஏராளமான பொதுமக்கள் ஆவலுடன் நீர்-மோர் பந்தலுக்கு சென்று குளிர்பானங்களை வாங்கி பருகி சென்றனர். மேலும் வெயிலின் தாக்கம் குறையும் வரை நீர் பந்தல் தொடர்ந்து செயல்படும் என போலீசார் தெரிவித்தனர். பொது மக்களின் தாகத்தை தீர்க்க மாவட்டத்திலேயே முதலில் தேவகோட்டை நகரில் தான் காவல்துறை சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×