என் மலர்tooltip icon

    மதுரை

    • போதிய பஸ் வசதி இல்லாததால் படிக்கட்டில் மாணவர்கள் தொங்கியபடி செல்கின்றனர்.
    • பாதுகாப்பாக சென்று வருவதை உறுதி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    மேலூர்

    மேலூர் அருகே நத்தம் ரோட்டில் உள்ளது சேக்கிபட்டி. இங்குள்ள அரசு மேல்நிலை பள்ளியில் 750-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.

    சேக்கிபட்டி, பட்டூர், ஆலம்பட்டி, சின்ன கற்பூரம்பட்டி உள்பட சுற்றி யுள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் இந்த பள்ளியில் படிக்கின்றனர். இவர்கள் பள்ளிக்கு செல்லவும், பின்னர் பள்ளிக்கூடம் முடிந்து வீடு திரும்பவும், அந்த நேரங்களில் போதிய பஸ் வசதி இல்லை.

    இதனால் அவ்வழியே வரும் வெளியூர் பஸ்களில் ஏறி படிக்கட்டு களில் தொங்கியபடி ஆபத்தான பயணம் செய்து வரு கின்றனர்.

    தனியார் பஸ்களும் லாபம் கருதி மாணவ, மாணவிகளை அளவுக்கு அதிகமாக ஏற்றி செல்கின்றனர். மேலும் பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் வந்து நிற்கும் போது மாணவ, மாணவிகள் ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டு முண்டியடித்து ஏறு கின்றனர். இதனால் மாணவ, மாணவிகள் கீழே விழுந்து காயம் ஏற்படுகிறது.

    இதை கருத்தில் கொண்டு பள்ளி நேரங்களில் கூடுதலாக டவுன் பஸ்களை இயக்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்குள் இது குறித்து நடவடிக்கை எடுத்து பள்ளி மாணவ, மாணவிகள் பாதுகாப்பாக சென்று வருவதை உறுதி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • தொழிற்பயிற்சி அலுவலர்கள் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் நடத்தினர்.
    • சி.பி.டி. தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும்

    மதுரை

    மதுரை கலெக்டர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடந்தது. சங்கத்தின் பொதுச்செயலாளர் செல்வம், மாநில செயலாளர் நவநீதன், மாவட்ட தலைவர் தெய்வராஜ், மாவட்ட செயலாளர் நீதிராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    டிப்ளமோ, பொறியியல் போன்ற உயர் கல்வியில் கூட அமுல்படுத்தாக 8-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று பயிலும் பயிற்சியாளர்க ளுக்கு அமுல்படுத்துவது என்பது திறனை பரிசோதிக்க ஏதுவாக இல்லாத நிலை உள்ளது. மேலும் பயிற்சியாளர்களின் தரம் குறைய வாய்ப்புள்ளது.

    இதனால் சி.பி.டி. தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் நடந்தது.

    • மதுரை கிழக்கு, வடக்கு தொகுதி மாநகராட்சி 24, 25-வது வார்டுக்கு உட்பட்டது.
    • கூட்டு குடிநீர் திட்டப்பணிகளுக்கு குழி ேதாண்டி 18 மாதமாகியும் மூடாத அவலத்தால் சாலை சீரழிந்து உள்ளது.

    மதுரை 

    மதுரை கிழக்கு, வடக்கு சட்டமன்ற தொகுதி, மாநகராட்சி 24, 25-வது வார்டு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் குலமங்கலம் சாலையை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். காளவாசல், அரசரடி, ஆரப்பாளையம், தத்தனேரி உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து மகாத்மா காந்திநகர், குலமங்கலம், பனங்காடி உள்பட பல பகுதிகளுக்கு செல்பவர்களின் பிரதானமாக விளங்குவது இந்த குலமங்கலம் சாலையாகும்.

    வருமான வரித்துறை அலுவலகம், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் வணிக வளாகங்கள் நிறைந்துள்ள இந்த சாலையில் வாகன போக்குவரத்து அதிகம் உள்ளது. இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் வைகை கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளுக்காக இந்த சாலை தோண்டப்பட்டு தற்போது வரை பணிகள் நடைபெற்று வருகின்றன.

    சுமார் 18 மாதங்களாக நடைபெற்று வரும் இப்பணியால் இந்த சாலை மிகவும் குண்டும் குழியுமாக மாறியுள்ளது. இதனை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கடுமையான சிரமத்திற்கு ஆளாகுகின்றனர்.

    மேலும் தோண்டப்பட்ட சாலைகளில் இருந்து பறக்கும் புழுதியும், தூசியும் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளின் கண்களில் பட்டு, வாகனங்களில் இருந்து நிலைதடுமாறி கீழே விழும் நிலையையும் ஏற்படுத்துகிறது. பகலில் இந்த நிலைமை என்றால், இரவினில் வாகனம் ஓட்டுவது மிகப்பெரிய சவாலாக உள்ளது.

    மழை காலங்களில் குண்டும் குழியுமான பள்ளங்களில் தண்ணீர் தேங்கி இருப்பதால் சேரும், சகதியுமாக மாறி பொதுமக்கள் நடந்தும், வாகனங்க ளிலும் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. முதி யோர்கள், கர்ப்பிணி பெண்கள் ஆகியோர் இருசக்கர வாக னத்தில் அமர்ந்து சென்றால் நிலைமை விபரீதமாகும் அளவிற்கு இந்த சாலைகள் படுமோசமாக உள்ளது. இது குறித்து ஆட்டோ டிரைவர் ஜெயபாண்டி கூறியதாவது:-

    நான் இந்தப்பகுதி யில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வருகிறேன். கடந்த இரண்டு வருடங்க ளாக இந்த சாலை மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. இந்தச் சாலையில் வண்டி ஓட்டுவதால் அடிக்கடி டயர் பஞ்சர் ஆகிவிடு கிறது. வாகனத்தின் எஞ்சினிலும் பழுது ஏற்படுவதால் இப்பகுதியில் ஆட்டோ ஓட்டு வதற்கு பெரும் பாலான ஆட்டோ டிரைவர்கள் அஞ்சும் நிலை உள்ளது என்றார். ஒரு சில சமயங்களில் சவாரிகளை புறக்கணிக்கும் நிலையும் ஏற்பட தவறியதில்லை என்றார்.

    இது குறித்து 24-வது வார்டு மாமன்ற உறுப்பினர் மாணிக்கம் (அ.தி.மு.க.) தெரிவித்ததாவது:-

    வைகை கூட்டுக் குடிநீர் திட்டம் அமைப்ப தற்கு முதன்முதலில் சாலைகள் தோண்டப்பட்டது. அதன் பிறகு வீடுகளுக்கு இணைப்பு குழாய் பணிகளுக்காக சாலை தோண்டப்பட்டது. தற்போது ரூ.5 கோடி மதிப்பில் செல்லூர் கண்மாய் கரையை அகலப்படுத்தி பொதுமக்கள் நடைபயிற்சி செய்ய ஏதுவாக கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் 6 மாத காலங்களில் சாலைகள் சீரமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கிறேன் என்றார்.

    இப்பகுதியில் கடை வைத்துள்ள ரஷீத் அலி, செந்தில் கூறியதாவது:-

    சாலைகளை சமப்படுத்தாமல் ஜல்லிக் கற்களை மட்டும் கொட்டி வைத்துள்ளனர். இதிலிருந்து பறக்கும் தூசிகளால் கடைகளில் வைக்கப்பட்டுள்ள பொருட்களில் தூசி படர்ந்து கரையாகி விடுகிறது. இதனால் பொருட்களை விற்கமுடியவில்லை. இதனால் மிகப்பெரிய பொருள் இழப்பு மற்றும் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

    சைக்கிளில் பள்ளிக்கு செல்லும் செல்லும் மாணவ, மாணவிகளின் சைக்கிள் சாலையில் கொட்டிக்கிடக்கும் கற்களால் டயர் பஞ்சராகி உருட்டி செல்வதை பார்க்கும் போது மிகவும் வருத்தமாக உள்ளது என்றார்.

    25-வது வார்டு மாமன்ற உறுப்பினர் முரளி கணேஷ் (தி.மு.க.) கூறியதாவது:-

    வைகை கூட்டுக்குடிநீர் பைப்லைன் அமைக்கும் பணிகள், பாதாள சாக்கடை அமைக்கும் பணிகளுக்காக சாலையின் மையப்பகு–தியில் தோண்டப்பட்டதால் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. இதுகுறித்து மேயர் இந்திராணி மற்றும் மாநகராட்சி ஆணையாளர் பிரவீன்குமாரிடம் கோரிக்கை வைத்திருக்கி றேன். அவர்களும் வந்து ஆய்வு மேற்கொண்டனர். பொதுமக்களின் நலன்கருதி மேடு பள்ளங்கள் நிறைந்த சாலையை சீரமைத்து விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தர வேண்டும் என்றும், பொதுமக்களின் வளர்ச்சிக்காக பணிகள் நடைபெறுவதால் அதனால் ஏற்படும் சிரமங்களை பொதுமக்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்றார். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், வியாபாரிகள், பொதுமக்கள் பலரும் பயன்படுத்தக்கூடிய செல்லூர் குலமங்கலம் சாலையை விரைந்து சீரமைத்து தர வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. அதிகாரிகள் நடிவடிக்கை எடுப்பார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

    • ஆடி தபசு, ஆடி பெருக்கை முன்னிட்டு வழிபாட்டு தலங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டுகின்றன.
    • தேனி மற்றும் விருதுநகர் மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு 50 பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுகின்றன.

    மதுரை

    தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக்கழக மதுரை மேலாண் இயக்குநர் ஆறுமுகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வார இறுதி விடுமுறை நாட்கள் தொடர்ந்து வருவதை முன்னிட்டு திருச்சி, சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர், திருநெல்வேலி, நாகர்கோவில் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்கு ஏதுவாகவும், அதே போல் மதுரை கோட்டத்திற்குட்பட்ட மதுரை, திண்டுக்கல். தேனி மற்றும் விருதுநகர் மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு 50 பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுகின்றன.

    மேலும் ஆடி பவுர்ணமி, ஆடிதபசு, ஆடி 18-ம் பெருக்கு திருவிழாவினை முன்னிட்டு தமிழ்நாடு அரசுப்போக்குவரத்துக் கழகம், மதுரை கோட்டம் மூலம் மதுரை, திண்டுக்கல், தேனி மற்றும் விருதுநகர் மாவட்டங்களிலிருந்து பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் வசதிக்காக வருகிற 1-ந் தேதி முதல் 3-ந் தேதி வரை பல்வேறு வழித்தடங்களில் 150 சிறப்பு பஸ்களை இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலம், திருப்பரங்குன்றம் பவுர்ணமி கிரிவலம், சதுரகிரி, இருக்கன்குடி மாரியம்மன் கோவில், சங்கரன்கோவில், மடப்புரம், அழகர் கோவில், ஆடி 18-ம் பெருக்கு திருவிழா, குச்சனூர் சனி பகவான் கோவில், சுருளி தீர்த்தம், சடையாண்டி கோவில், அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவில், பழனி ஆகிய இடங்களுக்கு செல்வதற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

    • மதுரையில் கிலோ தக்காளி 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    • வரத்து குறைவதால் மேலும் விலை உயர வாய்ப்புள்ளது.

    மதுரை

    மதுரையில் கடந்த ஒரு மாதமாக தக்காளி விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. தற்போது கிலோ 150 ரூபாய் வரை விற்கப்ப டுவதால் தக்காளியை வாங்க முடியாமல் பொது மக்கள் கடும் தவிப்பில் உள்ளனர்.

    ஏழைகளின் ஆப்பிள் என்று வர்ணிக்கப்படும் தக்காளி பயன்படுத்தப்படாத உணவு பதார்த்தங்களே இல்லை என்று சொல்லலாம். பிரியாணி முதல் சட்னி வரை தக்காளியை பயன்படுத்தினால் தான் ருசியாக சாப்பிட முடியும் என்பது தமிழர்களின் உணவு பழக்க வழக்கங்களில் முக்கியமானதாகும்.

    அந்த வகையில் தக்காளியின் மகத்துவம் அன்றாட உணவு பண்டங்களில் முழுமையாக தன்னை ஆக்கிரமிப்பதால் தக்காளியின் தேவையும் அதிகமாக உள்ளது. தற்போது மதுரை மார்க்கெட்டுகளுக்கு மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினசரி தக்காளி கொண்டு வரப்படுவது வழக்கம் .

    மேலும் அண்டை மாநிலமான ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் லாரிகளில் தக்காளி மதுரைக்கு விற்ப னைக்காக எடுத்து வரப்படும். ஆனால் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த மழை மற்றும் மகசூல் குறைவு காரணமாக தக்காளி உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.மேலும் உள்ளூர் தேவையும் இருப்பதால் மதுரை மார்க்கெட்டுக்கு கொண்டுவரப்படும் தக்காளியின் அளவும் குறைவாக உள்ளது.

    தேவை அதிகமாக இருப்பதாலும் வரத்து குறைவு காரணமாகவும் கடந்த ஒரு மாதமாக தக்காளியின் விலை ஏற்றம் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது.

    விலை ஏற்றத்தை குறைக்க மதுரை மாவட்டத்தில் உள்ள 23 நியாய விலை கடைகளில் தக்காளியை விற்க கூட்டுறவு துறை நடவடிக்கை மேற் கொண்டது. ஆனாலும் தக்காளியின் விலை ஏற்றத்தை தடுக்க முடிய வில்லை.

    அந்த வகையில் தொடர்ந்து தக்காளி விலை ஏறு முகத்தில் உள்ளது. மதுரையில் உள்ள உழவர் சந்தைகளில் தக்காளி கிலோ 110 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது வெளி மார்கெட்டுகளில் ரூ.140 முதல் 150 வரை தக்காளி விற்பனை செய்யப்பட்டது. தக்காளியின் இந்த விலை ஏற்றம் பொதுமக்களை வெகுவாக பாதித்துள்ளது. எனவே வீடுகள் மற்றும் ஓட்டல்களில் தக்காளியின் பயன்பாடு குறைக்கப் பட்டுள்ளது.

    மேலும் தக்காளியின் வரத்து தொடர்ந்து குறைந்து வருவதால் மேலும் விலை அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக வியா பாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே தக்காளி பயன் பாட்டை குறைத்துக் கொள்வதை தவிர வேறு வழியில்லை என்ற எண்ணத் தில் பொதுமக்களும் தக்காளியை பார்த்துவிட்டு வாங்கும் எண்ணத்தை குறைத்துக் கொள்வதாகவே தெரிவித்துள்ளனர்.

    தக்காளியின் வரத்து மற்றும் விலை ஏற்றத்தை கண்காணிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும். தக்காளி சேமிப்பு கிடங்குகளில் பதுக்கப்படுவதை தடுத்து நிறுத்தி பொது மக்களுக்கு நியாயமான விலையில் தக்காளியை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்களும் இல்லத்தரசிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மலைமேல் உள்ள இந்த கோவில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
    • காலை 7 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்படுவார்கள்.

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர-சந்தனமகாலிங்கம் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. மலைமேல் உள்ள இந்த கோவில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

    மாதந்தோறும் பவுர்ணமி, அமாவாசையை முன்னிட்டு தலா 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி வருகிற 1-ந்தேதி ஆடி மாத பவுர்ணமியை முன்னிட்டு நாளை (30-ந்தேதி) முதல் 2-ந்தேதி வரை பக்தர்கள் சதுரகிரிக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    காலை 7 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்படுவார்கள். 10 வயதுக்கு உட்பட்டவர்களும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் மலை ஏற அனுமதி கிடையாது. எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை. மலை பாதைகளில் உள்ள நீரோடைகளில் குளிக்கக்கூடாது.

    இரவில் மலை கோவிலில் தங்க அனுமதி இல்லை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறை அறிவித் துள்ளது. சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்ட நாட்களில் மழை பெய்தால் பக்தர்கள் மலை ஏற தடை விதிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    • திருவிளக்கு பூஜை, தங்கும் முளைப்பாரி, பொங்கலிட்டு மாவிளக்கு எடுத்தனர்.
    • முச்சந்தி மாரியம்மன் கோவில் முளைப்பாரி திருவிழா நடந்தது.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள மன்னாடிமங்கலத்தில் மகாசக்தி முச்சந்தி மாரி யம்மன் கோவில் உள்ளது. இங்கு 146-வது ஆண்டு முளைப்பாரி திருவிழா நடந்தது. இதையொட்டி முதல் நாள் அம்மனுக்கு முத்து பரப்புதல் நடந்து அபிஷேகம், ஆராதனை காப்புக்கட்டுதல் நடந்தது.

    தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் பூஜை நடைபெற்று அன்னதானம் வழங்கப்பட்டது. திரு விளக்கு பூஜை, தங்கும் முளைப்பாரி, பொங்கலிட்டு மாவிளக்கு எடுத்தனர். பூச்சொரிதல் விழா நடந்தது. காலை பால்குடம், அக்னி சட்டி, காவடி எடுத்து வந்த னர். பின்னர் அம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு வடக்குதெரு, தெற்குதெரு, மந்தை வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தார். ஒயிலாட்டம், கும்மியாட்டம், சிலம்பாட்டம், வான வேடிக்கை, மேளதாளத்துடன் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து சக்தி கரகம், விளையாட்டு கரகம் மற்றும் முளைப்பாரி ஆற்றில் கரைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    இரவில் கிராமத்தினர் சாமி வேடமிட்டு வண்டி வேஷ வலம் நிகழ்ச்சி நடந்தது. திருவிழாவில்

    எம்.வி.எம். குழுமத்தலைவர் மணிமுத்தையா, கவுன்சிலர் வள்ளிமயில், மதச்சார்பற்ற ஜனதாகட்சி மாநிலபொ துச்செயலாளர் செல்லப் பாண்டி, சமயநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் மலையாளம், விழா கமிட்டினர் ரங்கராஜன், ரவி, அய்யப்பன், ராஜேந்தி ரன், நடராஜன், மூர்த்தி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாக்கியம் செல்வம் திருமுருகன் ராஜபாண்டி உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.சோழவந்தான் இன்ஸ்பெக்டர் பால்ராஜு, காடுபட்டி சப்- இன்ஸ்பெக் டர் குபேந்திரன், போலீசார், ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் ராஜாஜி சிலை முன்பு மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மணிப்பூர் சம்பவத்தில் நடவடிக்கை எடுக்காததற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி மத்திய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை தெற்கு மாவட்ட தலைவர் அம்மாபட்டி பாண்டியன் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட தலைவர்கள் ஜெயராமன், பிரபாகரன் முன்னிலை வகித்தனர்.

    அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் இளங்கோவன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் காமாட்சி, சரவணகுமார், பழனிகுமார், ராஜ்குமார், மகேந்திரன், நகர தலைவர் கரிசல்பட்டி சவுந்தரபாண்டி, வட்டாரத் தலைவர் முருகேசன், மாவட்ட மகளிர் அணி தலைவி பிரவீனா உள்பட பலர் கலந்து கொண்டனர். உசிலம்பட்டி, எழுமலை, கல்லுப்பட்டி, பேரையூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

    • மேலூர் அருகே ஆடி களரி திருவிழா 100 ஆடுகள் பலியிட்டு அசைவ விருந்து நடந்தது.
    • மக்கள் நோய் நொடி இன்றி வாழவும், விவசாயம் செழிக்கும் என்பதும் இவர்களின் நம்பிக்கை.

    மேலூர்

    மேலூர் அருகே உள்ள சின்ன சூரக்குண்டு கிராமத்தில் அமைந்திருக்கும் பட்டசாமி கோவிலின் களரி திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழா கடந்த 8 ஆண்டுகளுக்கு பின்பு நடந்தது. இதில் சோனை கூட்ட பங்காளிகள் கடந்த ஒரு வாரமாக விரதம் இருந்து வந்தனர். கோவில் முன்பு அமைந்திருக்கும் மிக பழமையான ஆத்திமரத்தில் பொங்கல் வைத்தனர். அதனைத் தொடர்ந்து கோவிலின் சார்பிலும் மற்றும் நேர்த்திக்கடன் வேண்டியவர்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட கிடா ஆடுகளை பலியிட்டனர். சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் 3000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று அசைவ விருந்து சாப்பிட்டனர். இந்த திருவிழா நடைபெறுவதன் மூலம் மக்கள் நோய் நொடி இன்றி வாழவும், விவசாயம் செழிக்கும் என்பதும் இவர்களின் நம்பிக்கை.

    • தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள் என்ற நடைபயணத்தை ராமேசுவரத்தில் தொடங்கினார்.
    • ஐ.ஜே.கே. தலைவர் ரவி பச்சமுத்து தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    மதுரை

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள் என்ற நடைபயணத்தை ராமேசுவரத்தில் நேற்று தொடங்கினார். இதற்காக நடந்த பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திர அமித்ஷா கலந்து கொண்டு நடைபயணத்தை தொடங்கி வைத்தார்.

    தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக அண்ணாமலையின் நடைபயணத்தை ஆதரிக்கும் விதமாக இந்திய ஜனநாயகத்தின் தலைவர் டாக்டர்.ரவி பச்சமுத்து அவர்களும் கட்சியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் ஜெயசீலன், கட்சியின் முதன்மை அமைப்பு செயலாளர் வெங்கடேசன், கட்சியின் தலைமை நிலைய செயலாளர் வரதராஜன், மாநில மகளிரணி செயலாளர் அமுதா ராஜேஸ்வரன், மாநில அமைப்பு செயலாளர் அன்னை இருதயராஜ், மாநில மகளிரணி துணைச் செயலாளர் இளவரசி, மதுரை மாநகர் மாவட்ட பொருளாளர் முத்துராஜா.

    மதுரை மாநகர் மாவட்ட முதன்மை அமைப்பு செயலாளர் ஜான் பெனாண்டிக், மதுரை மாநகர் மாவட்ட அமைப்பு செயலாளர் அமிர்த கிருஷ்ணன், மதுரை மாநகர் மாவட்ட மகளிரணி செயலாளர் செல்வி, மதுரை மாநகர் மாவட்ட மகளிரணி துணைச் செயலாளர் சாந்தி, மதுரை மாநகர் மாவட்ட வேந்தர் பேரவை செய லாளர் கதிரவன் மற்றும் ஏராளமான பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    • தேரை அலங்கரிக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
    • கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

    மதுரை அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நடைபெற்று வரும் ஆடி பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியானது தேரோட்ட திருவிழா வருகிற 1-ந்தேதி நடைபெற உள்ளது.

    இதையொட்டி தேருக்கு புதிய வண்ண அலங்கார திரைச்சீலைகள் இணைத்தல், தேரின் 4 சக்கரங்கள், குதிரைகள் உள்ளிட்டவைகளுக்கு வர்ணம் தீட்டும் பணி, தேர்கட்டை முட்டு தள்ளுதலுக்கு உரிய பிரேக் ஆகியவை புதுப்பித்து சரிபார்க்கும் பணிகள் மற்றும் தடுப்பு வேலிகள், கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம் ஆலோசனையின் பேரில், கோவில் துணை ஆணையர் ராமசாமி நேரில் ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தியும், பணியாளர்களின் பணிகளையும் பார்வையிட்டார் அப்போது கோவில் அலுவலர்கள், பணியாளர்கள் உடன் இருந்தனர்.

    • காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ வேகமாக மரங்களுக்கு இடையே பரவியது.
    • சதுரகிரி கோவில் உள்ள பகுதியில் காட்டு தீயால் எந்த பாதிப்பும் ஏற்படாது.

    திருமங்கலம்:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரி பகுதியில் கடந்த மாதம் 17-ந்தேதி திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பல ஹெக்டேர் பரப்பளவில் இருந்த மரங்கள் எரிந்து நாசமாயின. வனத்துறை காவலர்கள் தீவிர நடவடிக்கை எடுத்து தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.

    இந்த நிலையில் சதுரகிரி மலையில் இருந்து சில கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சாப்டூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட ஊஞ்சக்கல் மலையில் உள்ள பாப்ப நத்தம் கோவில் பகுதியில் நேற்று திடீரென காட்டு தீ பரவியது. அப்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ வேகமாக மரங்களுக்கு இடையே பரவியது. இதனால் அந்தப்பகுதி புகை மண்டலமாக காட்சியளித்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த ரேஞ்சர் செல்லமணி, பிரபாகரன் ஆகியோர் தலைமையில் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த குழுவினர் 2 பிரிவுகளாக பிரிந்து 2-வது நாளாக இன்றும் தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

    சதுரகிரி கோவில் உள்ள பகுதியில் இந்த காட்டு தீயால் எந்த பாதிப்பும் ஏற்படாது. எனவே ஆடி பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் நாளை முதல் 4 நாட்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×