search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mullapari"

    • திருவிளக்கு பூஜை, தங்கும் முளைப்பாரி, பொங்கலிட்டு மாவிளக்கு எடுத்தனர்.
    • முச்சந்தி மாரியம்மன் கோவில் முளைப்பாரி திருவிழா நடந்தது.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள மன்னாடிமங்கலத்தில் மகாசக்தி முச்சந்தி மாரி யம்மன் கோவில் உள்ளது. இங்கு 146-வது ஆண்டு முளைப்பாரி திருவிழா நடந்தது. இதையொட்டி முதல் நாள் அம்மனுக்கு முத்து பரப்புதல் நடந்து அபிஷேகம், ஆராதனை காப்புக்கட்டுதல் நடந்தது.

    தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் பூஜை நடைபெற்று அன்னதானம் வழங்கப்பட்டது. திரு விளக்கு பூஜை, தங்கும் முளைப்பாரி, பொங்கலிட்டு மாவிளக்கு எடுத்தனர். பூச்சொரிதல் விழா நடந்தது. காலை பால்குடம், அக்னி சட்டி, காவடி எடுத்து வந்த னர். பின்னர் அம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு வடக்குதெரு, தெற்குதெரு, மந்தை வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தார். ஒயிலாட்டம், கும்மியாட்டம், சிலம்பாட்டம், வான வேடிக்கை, மேளதாளத்துடன் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து சக்தி கரகம், விளையாட்டு கரகம் மற்றும் முளைப்பாரி ஆற்றில் கரைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    இரவில் கிராமத்தினர் சாமி வேடமிட்டு வண்டி வேஷ வலம் நிகழ்ச்சி நடந்தது. திருவிழாவில்

    எம்.வி.எம். குழுமத்தலைவர் மணிமுத்தையா, கவுன்சிலர் வள்ளிமயில், மதச்சார்பற்ற ஜனதாகட்சி மாநிலபொ துச்செயலாளர் செல்லப் பாண்டி, சமயநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் மலையாளம், விழா கமிட்டினர் ரங்கராஜன், ரவி, அய்யப்பன், ராஜேந்தி ரன், நடராஜன், மூர்த்தி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாக்கியம் செல்வம் திருமுருகன் ராஜபாண்டி உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.சோழவந்தான் இன்ஸ்பெக்டர் பால்ராஜு, காடுபட்டி சப்- இன்ஸ்பெக் டர் குபேந்திரன், போலீசார், ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ×