search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆடி மாத பவுர்ணமி: சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல நாளை முதல் 4 நாட்கள் அனுமதி
    X

    ஆடி மாத பவுர்ணமி: சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல நாளை முதல் 4 நாட்கள் அனுமதி

    • மலைமேல் உள்ள இந்த கோவில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
    • காலை 7 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்படுவார்கள்.

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர-சந்தனமகாலிங்கம் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. மலைமேல் உள்ள இந்த கோவில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

    மாதந்தோறும் பவுர்ணமி, அமாவாசையை முன்னிட்டு தலா 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி வருகிற 1-ந்தேதி ஆடி மாத பவுர்ணமியை முன்னிட்டு நாளை (30-ந்தேதி) முதல் 2-ந்தேதி வரை பக்தர்கள் சதுரகிரிக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    காலை 7 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்படுவார்கள். 10 வயதுக்கு உட்பட்டவர்களும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் மலை ஏற அனுமதி கிடையாது. எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை. மலை பாதைகளில் உள்ள நீரோடைகளில் குளிக்கக்கூடாது.

    இரவில் மலை கோவிலில் தங்க அனுமதி இல்லை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறை அறிவித் துள்ளது. சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்ட நாட்களில் மழை பெய்தால் பக்தர்கள் மலை ஏற தடை விதிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×