என் மலர்
மதுரை
- அண்ணாமலையின் நடைபயணத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று பசும்பொன் பாண்டியன் கோரிக்கை விடுத்தார்.
- கலவரத்தை தூண்டும் வகையில் வெறுப்பு பேச்சுக்களை பேசி நடைப்பயணம் என்ற பெயரில் கலவரத்தை உருவாக்க சதி செய்கிறார்.
மதுரை
அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக செயலாளர் பசும்பொன் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது-
மணிப்பூர் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் எந்த உதவியும் இதுவரை செய்யவில்லை இந்நிலையில் தான் மனிதாபிமான உணர்வோடு மணிப்பூர் மக்களுக்கு 10 கோடி ரூபாய் மதிப்புடைய அத்தியாவசிய பொருட்களை கொடுக்க தமிழக அரசும், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களும் முன் வந்துள்ளதை அ.தி.ம.மு.க. வரவேற்கிறது,
இந்நிலையில் மத்தியில் மக்கள் விரோத பா.ஜனதா மோடி அரசுக்கு எதிராக அமைந்துள்ள இந்தியா கூட்டணியின் பலம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்கவே பல இடங்களில் கலவரங்களை ஏற்படுத்தி பெரு பான்மை மக்களை பா.ஜ.க. வினர் திசை திருப்ப முயல் கின்றனர்.
மணிப்பூர் தொடங்கி ஹரியானா, டில்லி போன்ற மாநிலங்களில் பா.ஜ.க.வின் வெறுப்பு பேச்சு கலவரத்தை தூண்டுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அமைதியை சீர்குலைக்கும் நோக்கத் தோடு பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை தொடங்கி உள்ளார். அவரது நடைப் பயணம் நகைப்புக்குறியதாக இருக்கிறது.
அண்ணாமலையும் அவருடன் வரும் கும்பல்களும் தமிழகத்தில் அமைதியாக வாழும் சிறுபான்மை மற்றும் பட்டியல் சாதி மக்களுக்கு எதிராக கலவரத்தை தூண்டும் வகையில் வெறுப்பு பேச்சுக்களை பேசி நடைப்பயணம் என்ற பெயரில் கலவரத்தை உருவாக்க சதி செய்கிறார்.
தமிழக அரசு உடனடியாக விழித்து கொண்டு ஹரி யானா, மணிப்பூர், டில்லி போல் அல்லாமல் கல வரத்தை தடுத்திட அண்ணா மலை கலவர நடைப்பயணத்தை தடை செய்ய வேண்டுமென வேண்டுகி றேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வைகை நதி மக்கள் இயக்கம் சார்பில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு இன்று வைகை பெருவிழா நடந்தது.
- தூய்மையை பராமரிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மதுரை
மதுரையை தலைமையிட–மாக கொண்டு வைகை நதி மக்கள் இயக்கம் இயங்கி வருகிறது. இந்த இயக்கம் கடந்த 8 ஆண்டுகளாக தூய்மையான வைகை என்ற இலக்கை நோக்கியும், நீர் நிலைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற விழிப்பு–ணர்வை ஏற்படுத்தவும், அதன் தூய்மையை பராம–ரிக்கவும் பல்வேறு பணி–களை தொடர்ந்து செயல்ப–டுத்தி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக வைகை பெருவிழா நான் காம் ஆண்டு நிகழ்ச்சி இன்று (3-ந்தேதி, வியாழக் கிழமை) நடைபெறுகிறது. ஆடிப்பெ–ருக்கை ஆற்றில் கொண்டா–டுவோம் என்ற தலைப்பில் வைகை ஆற்றில் சித்திரை திருவிழாவின் போது, கள்ளழகர் இறங்கும் ஆற்றங்கரையில் மாலை 4.30 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை நடை–பெற இருக்கிறது.
நிகழ்ச்சிக்கு வைகை நதி மக்கள் இயக்க ஒருங்கிணைப் பாளர் வைகை எம்.ராஜன் தலைமை தாங்குகிறார். மேயர் இந்திராணி குத்து–விளக்கேற்றி தொடங்கி வைக்கிறார். இதில் தமிழ் நாடு சேவாபாரதி ராதா, சின்மயா மிஷன் திலகர், புதூர் பூமிநாதன் எம்.எல்.ஏ., கிழக்கு மண்டல தலைவர் முகேஷ் சர்மா, மேற்கு மண்டல தலைவர் வாசுகி, தென்னிந்திய பார்வர்டு பிளாக் தலவர் திருமாறன் உள்ளிட்டோர் பங்கேற்கி–றார்கள். இதுபற்றி வைகை நதி மக்கள் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் வைகை எம்.ராஜன் கூறுகை–யில், ஆடிப்பட்டம் தேடி விதை என்பது பழமொழி. நமது வாழ்வாதாரமான ஆறுகளை ஆடி மாதத்தில் போற்றி வணங்கக்கூடிய மரபு பன்னெடுங்காலமாக இருந்து வருகிறது. மக்க–ளுக்கு அதனை உணர்த்தும் விதமாக வைகை ஆற்றங்க–ரையில் பாரம்பரிய விளை–யாட்டுகள் விளையாடி, வைகை ஆற்றுடன் உணர் வுப்பூர்வமாக உறவை ஏற்ப–டுத்திக்ெகாள்ள நல் வாய்ப்பை ஏற்படுத்தி தருகி–றது.நதி பாதுகாப்பின் அவசி–யம் குறித்த சொற்பொழிவு, நாட்டிய அஞ்சலி மற்றும் வைகை நதி தீபாராதனை, வைகை நதியை பாதுகாப் போம் என்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்வோடு விழா நிறைவு பெறுகிறது.
இவ்வாறு அவர் கூறி–னார்.
- மதுரையில் அண்ணாமலை 4 நாட்கள் நடைபயணம் செல்ல இருக்கிறார்.
- அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க கட்சியினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
மதுரை
தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை 'என் மண், என் மக்கள்' என்ற நடைபயணத்தை ராமேசுவரத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் மத்திய மந்திரி அமித்ஷா தொடங்கி வைத்தார். ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது அவர் நடைபயணம் செய்து வருகிறார்.
ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பா.ஜனதா நிர்வாகிகள், தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்த னர். அதே போன்று குழந்தைகளுடன் செல்பி எடுத்தும் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றும் வந்தார்.
இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் நாளை மறுதினம் (5-ந்தேதி) முதல் 4 நாட்கள் மதுரை மற்றும் மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபயணம் செல்ல உள்ளார். இந்த நிலையில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க மதுரை பா.ஜனதா கட்சியினர் தயாராகி வருகின்றனர்.
மதுரை ரிசர்வ் லைன் பகுதி ராமகிருஷ்ணா மடத்தில் இருந்து நடைபயணத்தை தொடங்கும் அண்ணாமலை பழைய நத்தம் ரோடு, போலீஸ் குடியிருப்பு, சொக்கிகுளம், கிருஷ்ணா புரம் காலனி, மாவட்ட பா,ஜனதா கட்சி அலுவல கம், உழவர் சந்தை, பி.பி. குளம் சந்திப்பு, லேடி டோக் கல்லூரி, செல்லூர் 50 அடி ரோடு வந்தடைகிறார்.
5-ந் தேதி மாலை 4 மணிக்கு பெரியார் பஸ் நிலையம் கட்டபொம்மன் சிலையில் இருந்து நேதாஜி ரோடு, கட்ராபாளையம், ஜான்சி ராணி பூங்கா, நேதாஜி சிலை, நகைக்கடை பஜார், கிழக்கு மாசி வீதி, கீழவாசல், முனிச்சாலை ரோடு, காமராஜர் சாலை, கீழச்சந்தை பேட்டை, குருவிகாரன்சாலை பகுதிகளில் நடைபயணம் மேற்கொள்கிறார்.
7-ந் தேதி மாலை 4 மணிக்கு ஆரப்பாளையம் ரவுண்டானா பகுதியில் இருந்து ஆரப்பாளையம் பஸ் நிலையம், ஏ.ஏ.ரோடு, தமிழ்நாடு வேதாகம கல்லூரி, காளவாசல், சம்மட்டிபுரம், சொக்கலிங்க நகர் வழியாக பழங்காநத்தம் வரை நடைபயணம் செல்கிறார். பழங்காநத்தம் பகுதியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
8-ந் தேதி காலை 9 மணிக்கு திருநகரில் இருந்து திருப்பரங்குன்றம் முருகன் கோவில் நுழைவாயில், ஹார்விப்பட்டி, திருப்பரங்குன்றம் பஸ் நிறுத்தம், 16 கால் மண்டபம், மற்றும் சன்னதி தெரு ஆகிய பகுதிகளில் நடைபயணம் செல்கிறார்.
இந்த நிலையில் அண்ணாமலை நடைபயணம் செல்லும் பகுதிகளில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க பா.ஜனதா கட்சியினர் விரிவான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
- பழங்காநத்தம் பகுதியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேசுகிறார்.
- அண்ணாமலை நடைபயணம் செல்லும் பகுதிகளில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க பா.ஜனதா கட்சியினர் விரிவான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
மதுரை:
தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை 'என் மண், என் மக்கள்' என்ற நடைபயணத்தை ராமேசுவரத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் மத்திய மந்திரி அமித்ஷா தொடங்கி வைத்தார். ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது அவர் நடைபயணம் செய்து வருகிறார்.
ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பா.ஜனதா நிர்வாகிகள், தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதே போன்று குழந்தைகளுடன் செல்பி எடுத்தும் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றும் வந்தார்.
இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் நாளை மறுதினம் (5-ந்தேதி) முதல் 4 நாட்கள் மதுரை மற்றும் மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபயணம் செல்ல உள்ளார். இந்த நிலையில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க மதுரை பா.ஜனதா கட்சியினர் தயாராகி வருகின்றனர்.
மதுரை ரிசர்வ் லைன் பகுதி ராமகிருஷ்ணா மடத்தில் இருந்து நடைபயணத்தை தொடங்கும் அண்ணாமலை பழைய நத்தம் ரோடு, போலீஸ் குடியிருப்பு, சொக்கிகுளம், கிருஷ்ணாபுரம் காலனி, மாவட்ட பா.ஜனதா கட்சி அலுவலகம், உழவர் சந்தை, பி.பி. குளம் சந்திப்பு, லேடி டோக் கல்லூரி, செல்லூர் 50 அடி ரோடு வந்தடைகிறார்.
5-ந்தேதி மாலை 4 மணிக்கு பெரியார் பஸ் நிலையம் கட்டபொம்மன் சிலையில் இருந்து நேதாஜி ரோடு, கட்ராபாளையம், ஜான்சி ராணி பூங்கா, நேதாஜி சிலை, நகைக்கடை பஜார், கிழக்கு மாசி வீதி, கீழவாசல், முனிச்சாலை ரோடு, காமராஜர் சாலை, கீழச்சந்தை பேட்டை, குருவிகாரன்சாலை பகுதிகளில் நடைபயணம் மேற்கொள்கிறார்.
7-ந்தேதி மாலை 4 மணிக்கு ஆரப்பாளையம் ரவுண்டானா பகுதியில் இருந்து ஆரப்பாளையம் பஸ் நிலையம், ஏ.ஏ.ரோடு, தமிழ்நாடு வேதாகம கல்லூரி, காளவாசல், சம்மட்டிபுரம், சொக்கலிங்க நகர் வழியாக பழங்காநத்தம் வரை நடைபயணம் செல்கிறார்.
பழங்காநத்தம் பகுதியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
8-ந்தேதி காலை 9 மணிக்கு திருநகரில் இருந்து திருப்பரங்குன்றம் முருகன் கோவில் நுழைவாயில், ஹார்விப்பட்டி, திருப்பரங்குன்றம் பஸ் நிறுத்தம், 16 கால் மண்டபம் மற்றும் சன்னதி தெரு ஆகிய பகுதிகளில் நடைபயணம் செல்கிறார்.
இந்த நிலையில் அண்ணாமலை நடைபயணம் செல்லும் பகுதிகளில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க பா.ஜனதா கட்சியினர் விரிவான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
- தேவகோட்டை முத்து மாரியம்மன் கோவிலில் ஆடி உற்சவ விழா நடந்தது.
- கோவில் முன்பு பூக்குழி இறங்கி பக்தர்கள் தங்கள் நேத்து கடனை செலுத்தினர்.
தேவகோட்டை
தேவகோட்டை அருணகிரிபட்டினம் பகுதியில் மிகப் பழமையான முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் ஆடி உற்சவ விழா நடைபெறுவது வழக்கம் கடந்த கொரோனா காலகட்டத்தில் திருவிழாக்கள் நடைபெற்றது அதனை தொடர்ந்து சென்ற ஆண்டு இரு பிரிவினர் இடையே கருத்து வேறுபாடுகளால் திருவிழா தடைபட்டது. இந்த ஆண்டு ஆடி உற்சவ விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. காப்பு கட்டிய நாள் முதல் ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் அபிஷேகமும் நடைபெற்றது. 31ந்தேதி சுமார் 5000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட பூச்சொரிதல் விழாவும் நேற்று இரவு சக்தி கரகம் எடுத்தல் நடைபெற்று சக்தி கரகம் வீதி உலா வந்தடைந்தது.
ஆடி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான பால்குடம், தீச்சட்டி, வேல் குத்துதல் போன்ற சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கருதாவூரணி விநாயகர் கோவிலில் இருந்து செங்கக்கோவிலார் வீதி, கண்டதேவி ரோடு போன்ற முக்கிய விதிகள் வழியாக வலம் வந்து கோவில் முன்பாக பூக்குழி இறங்கி பக்தர்கள் தங்கள் நேத்து கடனை செலுத்தினர்.
- மதுரை-மடப்புரம் விலக்கில் உள்ள விசாலாட்சி விநாயகர் கோவிலில் நாளை சங்கடஹர சதுர்த்தி விழா நடக்கிறது.
- இதில் கரு.கருப்பையா தலைமை தாங்குகிறார்.
மதுரை
மதுரை மடப்புரம் விலக்கு விசாலாட்சி விநாயகர் கோவிலில் நாளை (4-ந்தேதி) சங்கடஹர சதுர்த்தி விழா கரு.கருப்பையா தலையைில் நடக்கிறது.
மதுரை அருகே திருப்புவனம் வைகை ஆற்று பாலத்தை அடுத்த மடப்புரம் விலக்கு பஸ் நிறுத்தம் ஆர்ச் எதிரில் உள்ள பிரசித்தி பெற்ற திசைமாறிய தெற்குமுக விசாலாட்சி விநாயகர் கோவிலில் மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி விழா நடைபெற்று வருகிறது.இந்த மாதம் சங்கடஹர சதுர்த்தி நாளை (4-ந்தேதி) காலை 10 மணிக்கு கோவில் நிர்வாகியும், தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் இலக்கிய பேரவை தலைவருமான பிரபல ஜோதிடர் கரு.கருப்பையா தலைமையில் நடைபெறுகிறது.பொதுவாக விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுவார்கள். ஆனால் மடப்புரம் விலக்கில் உள்ள இந்த கோவிலில் பக்தர்கள் விநாயகருக்கு 7 தேங்காய் களை மாலையாக சாத்தி 108 முறை வலம் வந்து வழிபடுகின்றனர். இதனால் கடன் தொல்லை, முன்னோர் சாபம், திருமண தடைகள் அகலும் என்பது பக்தர்கள் நம்பிக்கை ஆகும்.
சதுர்த்தி ஏற்பாடுகளை கரு.கருப்பையா செய்துள்ளார்.
- திருமங்கலத்தை அடுத்துள்ள பி.அம்மாபட்டியில் உள்ள காளியம்மன் கோவிலில் ஆடி திருவிழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
- நள்ளிரவில் பிரியாணி தயாரான பிறகு சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்களுக்கு அசைவ விருந்து வழங்கப்பட்டது.
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் திருமங்கலம் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் சிறிய முதல் பெரிய அளவில் குலதெய்வ கோவில்கள் உள்ளன. இங்கு வருடந்தோறும் திருவிழாக்கள் நடைபெறும். அப்போது கிடாய்கள் பலியிட்டு பிரியாணி மற்றும் அசைவ விருந்து தயாரித்து பக்தர்களுக்கு பரிமாறப்படும். இதில் திரளானோர் பங்கேற்பார்கள்.
அதன்படி திருமங்கலத்தை அடுத்துள்ள பி.அம்மாபட்டியில் உள்ள காளியம்மன் கோவிலில் ஆடி திருவிழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. திரளான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் தொடங்கினர். நேற்று மாலை கோவில் முன்பு பெண்கள் பொங்கலிட்டு வழிபட்டனர்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான பிரியாணி தயாரிக்கும் நிகழ்ச்சி நேற்று இரவு நடந்தது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. அதன் பின் கோவிலுக்கு நேர்த்திக்கடனாக செலுத்தப்பட்ட கிடாய்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெட்டப்பட்டு ரத்தம் கோவில் முன்பு தெளிக்கப்பட்டது. அப்போது பலியை அம்மன் ஏற்றுக்கொள்வதாக ஐதீகம்.
அதன்பின் வெட்டப்பட்ட கிடாய்கள் மூலம் 1500 கிலோ பிரியாணி தயார் செய்யப்பட்டது. இந்த பணியில் 30-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். நள்ளிரவில் பிரியாணி தயாரான பிறகு சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்களுக்கு அசைவ விருந்து வழங்கப்பட்டது.
அம்மாபட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பல்வேறு சமுதாய மக்கள் சாதி, மத வேறுபாடின்றி கோவில் திருவிழாவை நடத்தினர். வேலைவாய்ப்பு, திருமணம், குழந்தை பேறு உள்ளிட்ட பல்வேறு வேண்டுதல்களை நிறைவேற்றி கொடுக்கும் சக்தி வாய்ந்த அம்மனாக காளியம்மன் அருள்பாலிப்பதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.
- நீதிமன்ற உத்தரவை ஏன் நிறைவேற்றவில்லை? என நீதிபதி கடும் அதிருப்தி தெரிவித்திருந்தார்.
- தண்டனை பெற்றவர்கள் 9ம் தேதி உயர் நீதிமன்ற மதுரை கிளை பதிவாளர் முன் ஆஜராகும்படி உத்தரவு பிறப்பித்தார்.
மதுரை:
திருநெல்வேலியைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் என்பவர் கல்வித்துறை தொடர்பான ஒரு வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால் இந்த உத்தரவு முறையாக செயல்படுத்தப்படவில்லை. இதையடுத்து உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என 2020ம் ஆண்டு ஞானப்பிரகாசம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அப்போதைய பள்ளிக் கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் மற்றும் அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு கடந்த மாதம் 19ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, அப்போதைய கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் மற்றும் அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். அப்போது, நீதிமன்ற உத்தரவை ஏன் நிறைவேற்றவில்லை? என அவர்களிடம் கேள்வி எழுப்பிய நீதிபதி கடும் அதிருப்தி தெரிவித்தார். நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத ஒரு அதிகாரியையாவது சிறைக்கு அனுப்ப வேண்டும். அப்போதுதான் சரியாக இருக்கும் என்று கூறினர்.
இவ்வழக்கில் இன்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அப்போது, நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத பள்ளிக் கல்வித்துறை முன்னாள் செயலாளர் பிரதீப் யாதவ் மற்றும் 2 கல்வித்துறை அதிகாரிகளுக்கு 2 வார சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார். தண்டனை விதிக்கப்பட்ட மூவரும் வரும் 9ம் தேதி உயர் நீதிமன்ற மதுரை கிளை பதிவாளர் முன் ஆஜராகும்படி உத்தரவு பிறப்பித்தார்.
- சட்டம், ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய போலீஸ்காரர் கொள்ளையர்களுடன் இணைந்து வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- வழிப்பறியில் ஈடுபட்ட முகமது இலியாஸ் ஆயுதப்படை போலீஸ்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை:
திருப்பரங்குன்றம் கீழத்தெரு பகுதியை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் அபிஷேக்(வயது25). இவர் சம்பவத்தன்று விளாச்சேரி கண்மாய்க்கரை சிவன் கோவில் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த 10 பேர் கொண்ட கும்பல் அவரை மறித்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அபிஷேக் அங்கிருந்து செல்ல முயன்றார். அப்போது அந்த கும்பல் அவரை அரிவாளால் வெட்டியது. தொடர்ந்து அபிஷேக் வைத்திருந்த 1½ பவுன் செயின், ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பினர்.
இதுகுறித்து அபிஷேக், திருநகர் போலீசில் புகார் செய்தார். புகாரில், தன்னை அரிவாளால் வெட்டி ராகவன், சீமைராஜா, விளாச்சேரி சின்னமருது, முகமது இலியாஸ் உள்பட 10 பேர் கொண்ட கும்பல் நகை, பணத்தை பறித்துச் சென்றதாக குறிப்பிட்டுள்ளார்.
இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்ன மருதுவை கைது செய்தனர். மற்ற 9 பேரை தேடி வருகின்றனர். வழிப்பறியில் ஈடுபட்ட முகமது இலியாஸ் ஆயுதப்படை போலீஸ்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரையில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய போலீஸ்காரர் கொள்ளையர்களுடன் இணைந்து வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை சோலையழகு புரம் முதல் தெருவை சேர்ந்தவர் குமரவேல். இவர் வீட்டு முன்பு பெட்டிக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று பெட்டிக்கடைக்கு வந்த வில்லாபுரம் ஹவுசிங் போர்டை சேர்ந்த அஸ்ரத் முகமது (23) என்பவர் பணம் கொடுக்காமல் சிகரெட் கேட்டுள்ளார். ஆனால் குமரவேல் தர மறுத்துவிட்டார்.
இதில் ஆத்திரமடைந்த அஸ்ரத் முகமது கத்தியால் குமரவேலை குத்திவிட்டு தப்பினார்.
இதுகுறித்த புகாரின் பேரில் ஜெய்ஹிந்துபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஸ்ரத் முகமதுவை கைது செய்தனர்.
- மதுரையில் மல்லிகை பூக்கள் ரூ.700-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- பிச்சி-முல்லை மலர்களும் விலை உயர்ந்துள்ளது.
மதுரை
ஆடி 18-ஐ யொட்டி மதுரையில் மல்லிகை பூக்கள் 700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டன பிச்சி, முல்லை மலர்களும் விலை அதிகரித்துள்ளது.
ஆடி மாதத்தின் முக்கிய தினமாக ஆடி 18-ஐ யொட்டி மதுரையில் உள்ள பூ மார்க்கெட்டுகளில் பூக்க ளின் விலை மேலும் அதிகரித்துள்ளது. மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள மலர் வணிக வளாகத்தில் மல்லிகை, பிச்சி, முல்லை உள்ளிட்ட அனைத்து மலர்க ளும் விற்பனை செய்யப் பட்டு வருகின்றன. இன்று பூக்களை வாங்க பொது மக்கள் அதிகளவில் திரண்டனர்.
மல்லிகை பூக்கள் நேற்றை விட ரூ.200 விலை உயர்ந்து இன்று கிலோ 700 ரூபாய்க்கு கொடுக்கப்பட்டது. நேற்று 400 ரூபாய் வரை விற்கப்பட்ட பிச்சி, முல்லை மலர்களும் இன்று 700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டன. இது தவிர சம்மங்கி 300 ரூபாய்க்கும், பட்டன் ரோஸ், செவ்வந்தி 250 ரூபாய்க்கும், செண்டு மல்லி 120 ரூபாய்க்கும், அரளி 250 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டன.
தற்போது ஆடி மாதம் என்பதால் ஓரளவுக்கு விலை கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் வருகிற ஆவணி மாதத்தில் விசேஷ நாட்கள் அதிகமாக இருக்கும் என்பதால் பூக்களின் தேவை யும் அதிகமாக இருக்கும். அப்போது பூக்களின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
- அழ–கர்கோவில் மலைப்பாதை–யில் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
- அப்பன்திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
புதூர்
மதுரை மாவட்டம் அழ–கர்கோவில் மலைப்பாதை–யில் கரும்பாறை கன்னிமார் கோவில் அருகே நேற்று சுமார் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்தன.
இதுகுறித்து அந்தப்பகுதி மக்கள், வலையப்பட்டி கிராம நிர்வாக அதிகாரி மதன்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் மேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆர்லி–யாஸ் ரிபோனி, அப்பன் திருப்பதி இன்ஸ் பெக்டர் சிவபாலன், சப்-இன்ஸ்பெக்டர் அபி கோவிந்தராஜ் மற்றும் போலீ–சார் சம்பவ இடத் திற்கு சென்று இறந்து கிடந்த மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத–னைக்காக அரசு மருத்துவம–னைக்கு அனுப்பி வைத்த–னர்.
சம்பவம் தொடர்பாக கிராம நிர்வாக அதிகாரி மதன்குமார் கொடுத்த புகா–ரின் பேரில் அப்பன் திருப் பதி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அந்தப் பகுதியில் கிடந்த தடயங் களை சேகரித்தனர்.
இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விபரம் தெரிய–வில்லை. மூதாட்டியை நகை, பணத்துக்காக மர்ம நபர்கள் யாராவது கொலை செய்துவிட்டு உடலை வீசி சென்றார்களா? அவரை கொலை செய்தது யார்? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் அப்பன் திருப்பதி போலீசார் விசா–ரணை நடத்தி வருகின்றனர்.
மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- வைகை நதி மக்கள் இயக்கம் சார்பில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு நாளை வைகை பெருவிழா நடக்கிறது.
- தூய்மையை பராமரிக்க விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடக்கிறது.
மதுரை
மதுரையை தலைமையிட–மாக கொண்டு வைகை நதி மக்கள் இயக்கம் இயங்கி வருகிறது. இந்த இயக்கம் கடந்த 8 ஆண்டுகளாக தூய்மையான வைகை என்ற இலக்கை நோக்கியும், நீர் நிலைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற விழிப்பு–ணர்வை ஏற்படுத்தவும், அதன் தூய்மையை பராம–ரிக்கவும் பல்வேறு பணி–களை தொடர்ந்து செயல்ப–டுத்தி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக வைகை பெருவிழா நான் காம் ஆண்டு நிகழ்ச்சி நாளை (3-ந்தேதி, வியாழக் கிழமை) நடைபெறுகிறது. ஆடிப்பெருக்கை ஆற்றில் கொண்டாடுவோம் என்ற தலைப்பில் வைகை ஆற்றில் சித்திரை திருவிழாவின் போது, கள்ளழகர் இறங்கும் ஆற்றங்கரையில் மாலை 4.30 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை நடை–பெற இருக்கிறது.
நிகழ்ச்சிக்கு வைகை நதி மக்கள் இயக்க ஒருங்கிணைப் பாளர் வைகை எம்.ராஜன் தலைமை தாங்குகிறார். மேயர் இந்திராணி குத்து–விளக்கேற்றி தொடங்கி வைக்கிறார். இதில் தமிழ் நாடு சேவாபாரதி ராதா, சின்மயா மிஷன் திலகர், புதூர் பூமிநாதன் எம்.எல்.ஏ., கிழக்கு மண்டல தலைவர் முகேஷ் சர்மா, மேற்கு மண்டல தலைவர் வாசுகி, தென்னிந்திய பார்வர்டு பிளாக் தலவர் திருமாறன் உள்ளிட்டோர் பங்கேற்கி–றார்கள்.
இதுபற்றி வைகை நதி மக்கள் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் வைகை எம்.ராஜன் கூறுகை–யில், ஆடிப்பட்டம் தேடி விதை என்பது பழமொழி. நமது வாழ்வாதாரமான ஆறுகளை ஆடி மாதத்தில் போற்றி வணங்கக்கூடிய மரபு பன்னெடுங்காலமாக இருந்து வருகிறது. மக்க–ளுக்கு அதனை உணர்த்தும் விதமாக வைகை ஆற்றங்க–ரையில் பாரம்பரிய விளை–யாட்டுகள் விளையாடி, வைகை ஆற்றுடன் உணர் வுப்பூர்வமாக உறவை ஏற்ப–டுத்திக்ெகாள்ள நல் வாய்ப்பை ஏற்படுத்தி தருகி–றது.
நதி பாதுகாப்பின் அவசி–யம் குறித்த சொற்பொழிவு, நாட்டிய அஞ்சலி மற்றும் வைகை நதி தீபாராதனை, வைகை நதியை பாதுகாப் போம் என்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்வோடு விழா நிறைவு பெறுகிறது.
இவ்வாறு அவர் கூறி–னார்.






