என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மூதாட்டி அடித்துக்கொலை
- அழ–கர்கோவில் மலைப்பாதை–யில் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
- அப்பன்திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
புதூர்
மதுரை மாவட்டம் அழ–கர்கோவில் மலைப்பாதை–யில் கரும்பாறை கன்னிமார் கோவில் அருகே நேற்று சுமார் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்தன.
இதுகுறித்து அந்தப்பகுதி மக்கள், வலையப்பட்டி கிராம நிர்வாக அதிகாரி மதன்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் மேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆர்லி–யாஸ் ரிபோனி, அப்பன் திருப்பதி இன்ஸ் பெக்டர் சிவபாலன், சப்-இன்ஸ்பெக்டர் அபி கோவிந்தராஜ் மற்றும் போலீ–சார் சம்பவ இடத் திற்கு சென்று இறந்து கிடந்த மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத–னைக்காக அரசு மருத்துவம–னைக்கு அனுப்பி வைத்த–னர்.
சம்பவம் தொடர்பாக கிராம நிர்வாக அதிகாரி மதன்குமார் கொடுத்த புகா–ரின் பேரில் அப்பன் திருப் பதி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அந்தப் பகுதியில் கிடந்த தடயங் களை சேகரித்தனர்.
இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விபரம் தெரிய–வில்லை. மூதாட்டியை நகை, பணத்துக்காக மர்ம நபர்கள் யாராவது கொலை செய்துவிட்டு உடலை வீசி சென்றார்களா? அவரை கொலை செய்தது யார்? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் அப்பன் திருப்பதி போலீசார் விசா–ரணை நடத்தி வருகின்றனர்.
மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்