search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மூதாட்டி அடித்துக்கொலை
    X

    கொலை சம்பவம் நடந்த இடத்தில் போலீசார் தடயங்களை சேகரித்த காட்சி. அடுத்த படம் கொலையுண்ட மூதாட்டி.

    மூதாட்டி அடித்துக்கொலை

    • அழ–கர்கோவில் மலைப்பாதை–யில் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
    • அப்பன்திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    புதூர்

    மதுரை மாவட்டம் அழ–கர்கோவில் மலைப்பாதை–யில் கரும்பாறை கன்னிமார் கோவில் அருகே நேற்று சுமார் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்தன.

    இதுகுறித்து அந்தப்பகுதி மக்கள், வலையப்பட்டி கிராம நிர்வாக அதிகாரி மதன்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் மேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆர்லி–யாஸ் ரிபோனி, அப்பன் திருப்பதி இன்ஸ் பெக்டர் சிவபாலன், சப்-இன்ஸ்பெக்டர் அபி கோவிந்தராஜ் மற்றும் போலீ–சார் சம்பவ இடத் திற்கு சென்று இறந்து கிடந்த மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத–னைக்காக அரசு மருத்துவம–னைக்கு அனுப்பி வைத்த–னர்.

    சம்பவம் தொடர்பாக கிராம நிர்வாக அதிகாரி மதன்குமார் கொடுத்த புகா–ரின் பேரில் அப்பன் திருப் பதி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அந்தப் பகுதியில் கிடந்த தடயங் களை சேகரித்தனர்.

    இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விபரம் தெரிய–வில்லை. மூதாட்டியை நகை, பணத்துக்காக மர்ம நபர்கள் யாராவது கொலை செய்துவிட்டு உடலை வீசி சென்றார்களா? அவரை கொலை செய்தது யார்? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் அப்பன் திருப்பதி போலீசார் விசா–ரணை நடத்தி வருகின்றனர்.

    மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×