என் மலர்
மதுரை
- சோழவந்தான் அருகே கிருஷ்ணர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
- உறியடி போட்டி மற்றும் இளவட்ட கல் தூக்கும் போட்டி நடந்தது.
சோழவந்தான்
சோழவந்தான் அருகே நாச்சிகுளம் ஊராட்சிக்குட்பட்ட மேல்நாச்சிகுளம் கிராமத்தில் கிருஷ்ணன் கோவிலில் வருடம் தோறும் கிருஷ்ணன் ஜெயந்தி விழா நடந்து வருகிறது. இதே போல் இந்த ஆண்டு 3 நாட்கள் விழா நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் நடந்து பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் முக்கிய விழாவான உறியடி போட்டி மற்றும் இளவட்ட கல் தூக்கும் போட்டி நடந்தது.
இந்தப் போட்டியில் டிரைவர் கண்ணன் (வயது41) இளவட்டக் கல்லை தூக்கி போட்டியில் வெற்றி பெற்றார். இங்கு கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சுமார் 4 அடியில் கிருஷ்ணர் சிலை நிறுவப்பட்டு கிருஷ்ணர் ஜெயந்தி விழா நிறைவு பெற்றவுடன் இந்த சிலை குலுக்கல் முறையில் கிராமத்தில் உள்ள பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதே போல் இந்த ஆண்டு நேற்று இரவு கிருஷ்ணர் ஜெயந்திக்கு வைக்கப்பட்டிருந்த கிருஷ்ணர் சிலை பூஜைகள் நிறைவு பெற்று குலுக்கல் முறையில் மேல்நாச்சிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவருக்கு வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை மேல் நாச்சிகுளம் கிராமமக்கள் செய்திருந்தனர். சோழவந்தான் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்தனர்.
- சோழவந்தானில் வ.உ.சி. பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
- அ.தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமையில் மாலை அணிவித்தனர்.
சோழவந்தான்
சோழவந்தான் மாரியம்மன் கோவில் சன்னதி தெருவில் வ.உ. சிதம்பரனார் சிலை உள்ளது. அவரது 152-வது பிறந்த தின விழாவை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சியினர் சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தினர்.
தி.மு.க. சார்பில் வெங்கடேசன் எம்.எல்.ஏ தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நகரச் செயலாளர் வக்கீல் சத்திய பிரகாஷ், பேரூராட்சி தலைவர்கள் ஜெயராமன், பால்பாண்டியன், ஒன்றிய செயலாளர் பசும் பொன்மாறன், பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், பேரூ ராட்சி துணைத்தலைவர் லதா கண்ணன், பேரூர் இணை செயலாளர் ஸ்டா லின், ஊராட்சி தலைவர் சகுபர்சாதிக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அ.தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமையில் மாலை அணிவித்தனர். முன்னாள் பேரூராட்சி தலைவர் முருகேசன், ஒன்றிய செயலாளர் காளிதாஸ், யூனியன் சேர்மன் மகா லட்சுமி ராஜேஷ் கண்ணா, மகளிரணி மாவட்ட செயலாளர் லட்சுமி, நகர செயலாளர் முருகேசன், கவுன்சிலர்கள் ரேகா ராமச்சந்திரன், டீக்கடை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- 2020-ம் ஆண்டு தமிழக அரசு வெளியிட்ட அரசாணை அடிப்படையில், திருமணமான மகள்களுக்கு அரசு வாரிசு பணி வழங்க உரிமை உள்ளது.
- குடும்ப சூழ்நிலையும், வறுமையும் கருத்தில் கொண்டு மனுதாரருக்கு கருணை அடிப்படையில் 3 மாதத்தில் பணி வழங்க வேண்டும்.
மதுரை
திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த கல்பனா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-
என் தந்தை கருப்பசாமி, கிராம நிர்வாக அலுவலக உதவியாளராக பணியில் இருக்கும் போது கடந்த 2018-ம் ஆண்டு இறந்து போனார். இந்நிலையில் வாரிசு அடிப்படையில் எனக்கு பணி வழங்க கோரி விண்ணப்பித்தேன். ஆனால் எனது விண்ணப்பம் 2020 ஆம் ஆண்டு அரசு தரப்பில் நிராகரிக்கப்பட்டது.
இதையடுத்து வாரிசு வேலை வழங்கக்கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி திருமணமாகிவிட்டதால் எனக்கு வாரிசு வேலை வழங்க உத்தரவிட முடியாதென்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார். அதை ரத்து செய்து எனக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பரத சக்கரவர்த்தி ஆகியோர் விசாரித்தனர். அப்போது மனுதாரர் வக்கீல் ஆஜராகி, 2020-ம் ஆண்டு தமிழக அரசு வெளியிட்ட அரசாணை அடிப்படையில், திருமணமான மகள்களுக்கு அரசு வாரிசு பணி வழங்க உரிமை உள்ளது. மேலும் மனுதாரரின் கணவரும் இறந்துவிட்டார். எனவே அவருக்கு வாரிசு அடிப்படையிலான பணி வழங்க வேண்டும் என வாதாடினார்.
இதனை தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
மனுதாரர் தற்போது கணவரை இழந்து தனியாக உள்ளார். மேலும் தனது தந்தை இறப்பிற்கு பிறகு தாயையும் அவர்தான் கவனித்து வருகிறார். இவரின் குடும்பம் முழுவதும் மனுதாரரை வருமானத்தையும் நம்பி உள்ளது.
எனவே, குடும்ப சூழ்நிலையும், வறுமையும் கருத்தில் கொண்டு மனுதாரருக்கு கருணை அடிப்படையில் 3 மாதத்தில் பணி வழங்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் இன்று தமிழகம் முழுவதும் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன.
- மோடி ஆட்சியில் செயல்படும் திட்டம் எல்லாமே உருப்படாத திட்டம்தான்.
சென்னை:
பாரதிய ஜனதா ஆட்சியில் விலைவாசி உயர்வை கண்டித்தும், அனைவருக்கும் வேலை வழங்க வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் இன்று தமிழகம் முழுவதும் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் கிண்டி ரயில் நிலையத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடந்தது.
கிண்டி ரெயில் நிலையத்தில் 300-க்கும் மேற்பட்டோர் ரெயில் மறியல் போராட்டத்தில் பங்கேற்றனர். அங்கு வந்த மின்சார ரெயிலை மறித்து போராட்டம் நடத்தினார்கள்.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள்.
ரெயில் மறியலையொட்டி கிண்டி ரெயில் நிலையம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
அப்போது போலீசாருக்கும் கம்யூனிஸ்டு கட்சியினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. ரெயில் மறியல். போராட்டத்தில் ஈடுபட்ட மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் உள்பட 300 பேரை போலீசார் கைது செய்தனர். கைதானவர்கள் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
விலைவாசி பிரச்சினை இந்தியா முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பல கோடி மக்கள் வேலைவாய்ப்பை இழந்து வேலையில்லாமல் இருக்கிறார்கள்.
மோடி ஆட்சியில் செயல்படும் திட்டம் எல்லாமே உருப்படாத திட்டம்தான்.
தமிழகம் முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் விலைவாசியை கட்டுப்படுத்த கோரி போராட்டம் நடத்தி வருகிறோம்.
வரும் பாராளுமன்ற தேர்தலையொட்டி எதிர் கட்சிகளை திசை திருப்பதான் இந்தியா என்ற பெயரை 'பாரத்' என்று மாற்றுகிறார்கள். அதனைத் தொடர்ந்து ஒரேநாடு ஒரே தேர்தல் நடத்த வேண்டும் என்றும் கூறுகிறார்கள்.
அனைத்து இளைஞர்களுக்கும் சரியான வேலை வாய்ப்பு கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை அண்ணா சாலையில் தபால் நிலையம் முன்பு மத்திய குழு உறுப்பி னர் சம்பத் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நிர்வாகிகள் நூற்றுக்கணக்கானோர் மறியலில் ஈடுபட்டனர். அவர்களும் கைது செய்யப் பட்டனர்.
திருவொற்றியூர் தபால் நிலையம் முன்பு மத்திய குழு உறுப்பினர் வாசுகி தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. கவுன்சிலர் லோகநாதன் மற்றும் ஜெயராமன், பாக்கியம், கதிர்வேலு உள்பட 200 பேர் கைது செய்யப்பட்டனர். இதே போன்று தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கைதாகியுள்ளனர்.
சென்னையில் மட்டும் 9 இடங்களில் நடந்த மறியல் போராட்டத்தில் 1000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ரெயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- கட்ட பொம்மன் சிலை அருகில் இருந்து பேரணியாக சென்று ெரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடந்தது.
மதுரை
மதுரை மாநகர் கம்யூனிஸ்டு சார்பில் மத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்து ரெயில் நிலையம் முற்றுகை போராட்டம் நடந்தது.
மதுரை மாவட்ட செய லாளர் கணேசன் தலைமை தாங்கினார். வெங்கடேசன் எம்.பி. போராட்டத்தை தொடங்கி வைத்தார். மாநில குழு உறுப்பினர் விஜய ராஜன் கலந்து கொண்டார். பெரியார் நிலையம் கட்ட பொம்மன் சிலை அருகில் இருந்து பேரணியாக சென்று ெரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடந்தது.
பெட்ரோல், டீசல். சமையல் எரிவாயு விலை உயர்வு, அத்தியாவசிய சமையல் பொருட்களின் விலை உயர்வு, வேலை இல்லா திண்டாட்டம், பெரு முதலாளிகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய் தள்ளுபடி ஆகியவற்றை கண்டித்து போராட்டம் நடந்தது. மேலும் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை காலம் தாழ்த்தி வருவதை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.
இதில் மாநகராட்சி துணை மேயர் நாகராஜன், கவுன்சிலர்கள் குமரவேல், ஜென்னியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து அழைத்து சென்றனர்.
பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
- அவனியாபுரத்தில் 92, 100-வது வார்டுகளில் தேங்கும் குப்பைகள்-குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
- இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.
மதுரை
மதுரை மாநகராட்சியில் இணைக்கப்பட்ட அவனியாபுரம் பகுதியில் உள்ள 92, 100 ஆகிய வார்டுகளில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.
இந்த வார்டுகளில் கடந்த 2 வாரங்களாக குடிநீர் சரியாக வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
இதேபோல் மாநகராட்சி சார்பில் தினமும் மேற்கண்ட வார்டுகளில் குப்பைகள் நவீன பேட்டரி வாகன மூலம் சேகரிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.
ஆனால் உரிய பராமரிப்பு இல்லாததால் பேட்டரி வாகனங்கள் பழுதாகி விட்டன இதனால் குப்பைகள் அப்புறப்படுத்தாமல் ஆங்காங்கே மலை போல் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்த பலனும் இல்லை.
இதை கண்டித்தும், குடிநீர் தட்டுப்பாடு, குப்பைகள் தேங்கும் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தியும் பூந்தோட்ட நகர், செம்பூரணி ரோடு பகுதியைச் சேர்ந்த பெண்கள் உட்பட ஏராளமானோர் அவனியாபுரத்தில் உள்ள மாநகராட்சி வரி வசூலிக்கும் மையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
தகவல் அறிந்த 100-வது வார்டு கவுன்சிலர் முத்துலட்சுமி அய்யனார் உதவி பொறியாளர் செல்வ விநாயகம் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பிரச்சினைகள் உடனடியாக சரி செய்யப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.
- விபத்துக்குள்ளானது ஓட்டு வீடு என்பதாலும், அந்த பகுதியில் காற்று பலமாக வீசியதாலும் தீயானது மளமளவென்று பரவியது.
- தீ விபத்து தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் திரும்பிய திசையெல்லாம் பானி பூரி உள்ளிட்ட வடமாநில உணவு வகைகள் தள்ளுவண்டிகளிலும், குடை அமைத்தும், கடைகளிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதல் பெரியோர்கள் வரை விரும்பு சாப்பிடுகிறார்கள்.
இதில் பெரும்பாலும் வடமாநிலத்தவர்களே ஈடுபட்டு வருகிறார்கள். இதற்காக அவர்கள் மதுரையின் பல்வேறு இடங்களில் வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்து அங்கேயே உணவு வகைகளை தயாரித்து காலை, மாலை நேரங்களில் பானிபூரி விற்பனை செய்கின்றனர்.
அந்த வகையில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே வடக்கு மாசி வீதி ராமாயணம் சாவடி அருகே உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நேபால் சிங் என்ப வர் தலைமையில் 20-க்கும் மேற்பட்டோர் வீடு எடுத்து தங்கி மாநகரின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பானி பூரி விற்பனை செய்து வருகின்றனர்.
இங்குள்ள முதல் மாடியில் 3 பேட்டரிகளை சார்ஜ் ஏற்றுவதற்காக மின்சாரத்துடன் இணைத்து வைத்திருந்தனர். இந்தநிலையில் இன்று காலை சுமார் 10 மணி அளவில் எதிர்பாராதவிதமாக அங்கிருந்த ஒரு பேட்டரி வெடித்துச் சிதறியது. இதனால் முதல் மாடியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
விபத்துக்குள்ளானது ஓட்டு வீடு என்பதாலும், அந்த பகுதியில் காற்று பலமாக வீசியதாலும் தீயானது மளமளவென்று பரவியது. மேலும் அந்த பகுதி முழுவதும் புகைமூட்டமாக மாறியது.
இதுபற்றி அப்பகுதியினர் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த பெரியார் நிலைய தீயணைப்பு துறையினர் மாவட்ட உதவி அலுவலர் சுரேஷ் கண்ணன் தலைமையில் சென்று சுமார் 1 மணி நேரம் போராடி தீயினை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்து தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் மேல் மாடியில் இருந்த பொருட்கள் அனைத்து எரிந்து சேதமடைந்தது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள வசந்தராயர் மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து அடுத்த டுத்து தெற்கு மாசி வீதியில் உள்ள பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து, தற்போது பானி பூரி தயாரிக்கும் வடமாநிலத்தவர் தங்கியிருந்த வீட்டில் பேட்டரி வெடித்து தீ விபத்து என நீண்டு கொண்டே செல்வது மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மத்தியிலும், அப்பகுதியைச் சேர்ந்த வணிக நிறுவனத்தினர் மற்றும் பொதுமக்கள் இடையேயும் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.
- கரட்டுப்பட்டி அருகே இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
- இதனை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.
சோழவந்தான்
கிருஷ்ணன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு சோழவந்தான் கரட்டுப் பட்டி அருகே இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.
இதனை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், தி.மு.க. மாநில பொது குழு உறுப்பினர் பூமிநாதன், வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் பால ராஜேந்திரன், வாடிப்பட்டி பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன், துணைத் தலைவர் கார்த்திக், தி.மு.க. மாவட்ட விவசாய அணி நிர்வாகி பாஸ்கரன், இரட்டை மாடு பந்தயக்குழு முன்னால் மாநில தலைவர் மோகன்சாமிகுமார், நிலக்கோட்டை தாசில்தார் தனுஷ்கோடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த பந்தயத்தில் பெரிய மாடு 7 மைல் வரை, நடுமாடு 6மைல் வரை, பூஞ்சிட்டு மாடு 5 மைல் வரை பந்தயங்கள் நடந்தது. விழாவில் ஆனையூர் பகுதி செயலாளர் மருது பாண்டியன் வாடிப்பட்டி பிரகாஷ் பிரபு மதுரை கண்ணன் இளைஞர் அணி வெற்றிச்செல்வன் பால் கண்ணன் சக்கரவர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ராமராஜபுரம் யாதவ மகாசபை மற்றும் யாதவர் இளைஞர் அணி, கிராம பொதுமக்கள் விழா ஏற்பாடுகளை செய்தி ருந்தனர்.
நிலக்கோட்டை டி.எஸ்.பி. முருகன், விளாம்பட்டி இன்ஸ்பெக்டர் சர்மிளா, அம்மையநாயக்கனூர் இன்ஸ்பெக்டர் குமரேசன், சோழவந்தான் இன்ஸ்பெக்டர் பால்ராஜு உட்பட 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- கிருஷ்ண ஜெயந்தி விழாவில் பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு நடத்தினர்.
- கட்டச் சோலைப்பட்டி கிராமத்தார்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.
மேலூர்
மேலூர் தாலுகா வெள்ளலூர் சேகரம், கட்டச்சோலை பட்டியல் அமைந்திருக்கும் ஸ்ரீ கோபாலகிருஷ்ணன் சமேத பாமா ருக்மணி கோவிலின் 16-ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. பக்தர்கள் மாலை அணிந்து 15 நாட்கள் விரதம் இருந்து வந்தனர்.
கோபாலகிருஷ்ண கோவில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால் குடம் எடுத்து ஊர்வலமாக சென்று பின்பு கோவில் வந்தடைந்தனர். பின்னர் கிருஷ்ணனுக்கு பாலா பிஷேக நடைபெற்றது. உரியடித்தல் தீப ஆராதனை நடைபெற்றது. பொதுமக்கள் சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். கோவில் அருகே உள்ள விநாயகர்கோவில் மண்டபத்தில் சிறப்பு அன்ன தானம் நடைபெற்றது.
இந்த அன்னதானத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்ட னர். கோபாலகிருஷ்ணன் சுவாமி ஊர்வலம் இடைய வலசை, இடையர்கோவில் பட்டி, இந்திராநகர், வெள்ள லூர் நகரத்தார் வீதி, வெள்ள லூர் மந்தை கருப்பன சுவாமி கோவில், ஏழை காத்த அம்மன் கோவில், அரசு மருத்துவமனை, மன்ற மலை ஒத்தப்பட்டி வழியாக சுவாமி கோவில் வந்தடைந் தது. சிறுவர்களுக்கு விளை யாட்டு போட்டு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கட்டச் சோலைப்பட்டி கிராமத்தார்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.
- மதுரையில் 9-ந்தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
- வேலையளிக்கும் தனியார் நிறுவனங்கள் https://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது சுய விவரங்களைப் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம்.
மதுரை
கருணாநிதி நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ கம் முழுவதும் 100 தனி யார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் நடத்தப்பட உள்ளது. இதன் தொடர்ச்சியாக மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையத்தின் வாயி லாக வரும் 9-ந்தேதி திருப் பாலை இ.எம்.ஜி. யாதவர் மகளிர் கல்லூரியில் சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் நிறுவனங்கள் அலுவல கத்தை தொடர்பு கொண்டு தங்களது நிறுவனத்திற்கு தேவையான காலிப்பணியிட விவரத்துடன் நேரிலோ அல்லது spljobfairmdu2023@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ தெரிவிக்கலாம்.
இம்முகாமில் 200-க்கும் மேற்பட்ட தனியார் முன் னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 10,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியி டங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்ய உள்ளனர். 8, 10, 12-ம் வகுப்பு, பட்டப் படிப்பு, முதுநிலை பட்டப்ப டிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ மற்றும் பொறியியல் பட்ட தாரிகள் அனைவரும் கலந்து கொண்டு தங்களது கல்வித் தகுதிக்கேற்ற தனி யார் துறை நிறுவனங்க ளில் பணி நியமனம் பெறலாம்.இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள வேலை தேடுவோர் தங்க ளது அனைத்து கல்விச் சான்றிதழ்களின் நகல்கள், ஆதார் அட்டை நகல் மற்றும் சுயவிவரப் படிவம் ஆகிய வற்றுடன் நேரில் வரவும்.
மேலும், இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலைநாடுநர்கள் மற்றும் வேலையளிக்கும் தனியார் நிறுவனங்கள் https://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது சுய விவரங்களைப் பதிவேற் றம் செய்து பயன் பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத் தின் தொலைபேசி எண். 0452-2566022 வாயிலாக தொடர்பு கொள்ளவும்.
இம்முகாமில் கலந்து கொண்டு இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறும், இம்முகாம் மூலம் தனியார் நிறுவனங் களில் வேலைவாய்ப்பு பெறுவதனால் வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவு எவ்விதத்திலும் பாதிக்காது எனவும் மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குநர் சண்முகசுந்தர் தெரிவித்தார்.
- உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரி கட்டிடம் சீரமைக்கப்படும் என அமைச்சர் சுப்பிரமணியன் உறுதியளித்தார்.
- ஆஸ்பத்திரி கட்டிடம், அமைச்சர், Hospital Building, Minister
உசிலம்பட்டி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துமனையில் நேற்று இரவு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவு, வெளிநோயாளிகள் பிரிவு, 24 மணிநேர பிரசவ வார்டு, பெண்கள் வார்டு, எக்ஸ்-ரே, ரத்த வங்கி உள்ளிட்ட வார்டுகளை பார்வையிட்டார். நோயாளிகளிடம் சரியான சிகிச்சை வழங்கப்படுகிறதா? என விசாரித்தார்.
பின்னர் அமைச்சர் நிருபர்களிடம் கூறிய தாவது:-
உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவ மனையில் தினசரி 1500- க்கும் மேற்பட்டவர்கள் புறநோயாளிகளாகவும், 200- க்கும் மேற்பட்டவர்கள் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த மாதத்தில் மட்டும் 260 குழந்தைகள் பிறந்துள்ளனர். கடந்த 6 மாதங்களாக குழந்தைகள் இறப்பு இல்லாமல் உள்ளது. 39 டாக்டர்கள் பணியிடங்களில் 4 பணியிடங்கள் காலியாக உள்ளது. ரூ.5.25 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடங்கள் கட்டும் பணி நடந்து வருகிறது. விரைவில் செயல்பட துவங்கும்.
கடந்த மாதம் ரூ. 1 கோடி செலவில் ஒருங்கிணைந்த ஆய்வக பணிகளும் நடந்து வருகிறது. மருத்துவமனை தேவைகள் என்னென்ன உள்ளது என்பதை கேட்ட றிந்து நிறைவேற்றப்படும். இந்த மருத்துமனையில் செயல்பட்டு வந்த பயாப்சி டெஸ்ட் வசதி சமீபகாலமாக இல்லாமல் உள்ளது என்ற கேள்விக்கு, அதற்கான வசதி உள்ள இடத்தில் செய்வதற்காக மதுரைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இங்கேயே செயல்பட ஏற்பாடு செய்யப்படும். மேலும் ஆஸ்பத்திரியில் கட்டிடத்தின் சில பகுதிகள் சேதமடைந்துள்ளதாக தெரிவித்தனர். அதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது நிலை மருத்துவர் மாதவன் அப்துல் பாரி சந்திரன், ராதாமணி மற்றும் மருத்துவர்கள் மருத்துவ பணியாளர்கள் செவிலியர்கள் இருந்தனர்.
- காதல் விவகாரம் இருவீட்டாரின் பெற்றோருக்கும் தெரிய வந்தது.
- கோவையில் பெற்றோருக்கு தெரியாமல் பதிவு திருமணம் செய்து கொண்டனர்.
திருமங்கலம்:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் மணி. இவர் தனது குடும்பத்தினருடன் மதுரை கே.கே.நகரில் வசித்து வருகிறார். இவரது மகன் பிரியவரதன் (வயது 22). இவரும், மதுரை மாவட்டம் பேரையூர் அருகேயுள்ள சாத்தங்குடியை சேர்ந்த ஜீவானந்தம் மகள் சினேகா (21) என்பவரும் சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
இவர்களது காதல் விவகாரம் இருவீட்டாரின் பெற்றோருக்கும் தெரிய வந்தது. ஆனால் அவர்கள் பிள்ளைகளின் காதலை ஏற்க மறுத்து விட்டனர். பெற்றோர் சம்மதத்துடன் தங்கள் காதல் நிறைவேறாது என்று எண்ணிய காதல் ஜோடி கடந்த 7 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறியது.
பின்னர் அவர்கள் கோவையில் பெற்றோருக்கு தெரியாமல் பதிவு திருமணம் செய்து கொண்டனர். அங்கேயே ஒரு வாடகை வீட்டில் தனிக்குடித்தனமும் வசித்து வந்தனர். சில மாதங்கள் கழித்து இரு வீட்டாருக்கும் இதுகுறித்து தெரியவந்தது. இந்த நிலையில் மகனை வீட்டிற்கு வருமாறு அவரது தந்தை மணி அழைத்தார்.
ஒரு வழியாக தங்களது திருமணத்திற்கு சம்மதம் கிடைத்து விட்டதாக நினைத்த பிரியவரதன் மகிழ்ச்சி பெருக்கோடு தனது காதல் மனைவியுடன் வீட்டிற்கு வந்தார். அங்கு அவர்கள் 3 நாட்கள் தங்கி இருந்தனர். விருந்து, உபசரிப்பு என புதுமண ஜோடி திளைத்து போனார்கள்.
அதே சமயம் அங்கு சினேகாவின் தந்தை ஜீவானந்தம், அவரது மனைவி மற்றும் உறவினர்கள் 2 பேரும் அங்கு வந்தனர். அப்போது அவர்களும் தங்கள் பங்கிற்கு மருமகனையும், மகளையும் தங்கள் ஊருக்கு விருந்துக்காக அழைத்து செல்ல விரும்புதாக மணியிடம் கூறி உள்ளனர்.
அதற்கு சம்மதித்த மணி, மகன் பிரியவரதன், மருமகள் சினேகா ஆகியோருடன் தனது மனைவி சின்னம்மாளையும் அவர்களுடன் அனுப்பி வைத்தார். அவர்கள் காரில் சினேகாவின் சொந்த ஊரான சாத்தங்குடிக்கு புறப்பட்டனர்.
மேலஉரப்பனூர் கண்மாய் அருகே சென்றபோது காரின் வேகத்தை குறைத்து, பிரியவரதன் அவரது தாய் சின்னம்மாள் ஆகிய இருவரையும், காரில் இருந்த சினேகாவின் தந்தை ஜீவானந்தம் மற்றும் அவரது உறவினர்கள், காரில் இருந்து கீழே தள்ளிவிட்டனர். இதனை சற்றும் எதிர்பாராத அவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
அவர்கள் சுதாரிப்பதற்குள் அவர்களிடமிருந்து செல்போனையும் பறித்துக்கொண்டு சினேகாவை மட்டும் காரில் அழைத்து சென்றனர். இதையடுத்து கடத்தி செல்லப்பட்ட தனது மனைவியை மீட்டு தருமாறு திருமங்கலம் தாலுகா போலீஸ் நிலையத்தில் பிரியவரதன் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






