search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இரட்டை மாட்டு வண்டி பந்தயம்
    X

    இரட்டை மாட்டு வண்டி பந்தயம்

    • கரட்டுப்பட்டி அருகே இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
    • இதனை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.

    சோழவந்தான்

    கிருஷ்ணன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு சோழவந்தான் கரட்டுப் பட்டி அருகே இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.

    இதனை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், தி.மு.க. மாநில பொது குழு உறுப்பினர் பூமிநாதன், வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் பால ராஜேந்திரன், வாடிப்பட்டி பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன், துணைத் தலைவர் கார்த்திக், தி.மு.க. மாவட்ட விவசாய அணி நிர்வாகி பாஸ்கரன், இரட்டை மாடு பந்தயக்குழு முன்னால் மாநில தலைவர் மோகன்சாமிகுமார், நிலக்கோட்டை தாசில்தார் தனுஷ்கோடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த பந்தயத்தில் பெரிய மாடு 7 மைல் வரை, நடுமாடு 6மைல் வரை, பூஞ்சிட்டு மாடு 5 மைல் வரை பந்தயங்கள் நடந்தது. விழாவில் ஆனையூர் பகுதி செயலாளர் மருது பாண்டியன் வாடிப்பட்டி பிரகாஷ் பிரபு மதுரை கண்ணன் இளைஞர் அணி வெற்றிச்செல்வன் பால் கண்ணன் சக்கரவர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ராமராஜபுரம் யாதவ மகாசபை மற்றும் யாதவர் இளைஞர் அணி, கிராம பொதுமக்கள் விழா ஏற்பாடுகளை செய்தி ருந்தனர்.

    நிலக்கோட்டை டி.எஸ்.பி. முருகன், விளாம்பட்டி இன்ஸ்பெக்டர் சர்மிளா, அம்மையநாயக்கனூர் இன்ஸ்பெக்டர் குமரேசன், சோழவந்தான் இன்ஸ்பெக்டர் பால்ராஜு உட்பட 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    Next Story
    ×