தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

மதுரையில் 9-ந்தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. வேலையளிக்கும் தனியார் நிறுவனங்கள் https://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது சுய விவரங்களைப் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம்.
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
Published on

மதுரை

கருணாநிதி நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ கம் முழுவதும் 100 தனி யார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் நடத்தப்பட உள்ளது. இதன் தொடர்ச்சியாக மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையத்தின் வாயி லாக வரும் 9-ந்தேதி திருப் பாலை இ.எம்.ஜி. யாதவர் மகளிர் கல்லூரியில் சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் நிறுவனங்கள் அலுவல கத்தை தொடர்பு கொண்டு தங்களது நிறுவனத்திற்கு தேவையான காலிப்பணியிட விவரத்துடன் நேரிலோ அல்லது spljobfairmdu2023@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ தெரிவிக்கலாம்.

இம்முகாமில் 200-க்கும் மேற்பட்ட தனியார் முன் னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 10,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியி டங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்ய உள்ளனர். 8, 10, 12-ம் வகுப்பு, பட்டப் படிப்பு, முதுநிலை பட்டப்ப டிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ மற்றும் பொறியியல் பட்ட தாரிகள் அனைவரும் கலந்து கொண்டு தங்களது கல்வித் தகுதிக்கேற்ற தனி யார் துறை நிறுவனங்க ளில் பணி நியமனம் பெறலாம்.இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள வேலை தேடுவோர் தங்க ளது அனைத்து கல்விச் சான்றிதழ்களின் நகல்கள், ஆதார் அட்டை நகல் மற்றும் சுயவிவரப் படிவம் ஆகிய வற்றுடன் நேரில் வரவும்.

மேலும், இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலைநாடுநர்கள் மற்றும் வேலையளிக்கும் தனியார் நிறுவனங்கள் https://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது சுய விவரங்களைப் பதிவேற் றம் செய்து பயன் பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத் தின் தொலைபேசி எண். 0452-2566022 வாயிலாக தொடர்பு கொள்ளவும்.

இம்முகாமில் கலந்து கொண்டு இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறும், இம்முகாம் மூலம் தனியார் நிறுவனங் களில் வேலைவாய்ப்பு பெறுவதனால் வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவு எவ்விதத்திலும் பாதிக்காது எனவும் மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குநர் சண்முகசுந்தர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com