என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    ஒசூரில் வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டபோது பெங்களூரில் இருந்து திண்டுகல்லுக்கு காரில் குட்கா கடத்திய சென்ற 2 பேரை கைது செய்தனர்.
    ஒசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஜூஜூவாடி சோதனை சாவடியில்  போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட் டிருந்தனர்.
     
    அப்போது பெங்களூரில் இருந்து வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தபோது,  சட்டவிரோதமாக குட்கா பொருட்களை திண்டுக்கல் பகுதிக்கு கடத்தி வந்தது தெரிய வந்தது. 

    இதை தொடர்ந்து குட்காவை கடத்தி வந்த திண்டுக்கல் மாவட்டம் , வத்தலகுண்டை சேர்ந்த  அபுதாஹிர் (30) மற்றும் தேனி மாவட்டம்  ஜி.கல்லுப்பட்டி பகுதியை சேர்ந்த  ஜியாவுல் ஹக் (வயது33) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள 106 கிலோ எடை கொண்ட குட்கா பொருள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.
    போச்சம்பள்ளி அருகே விபத்தில் 2 வாலிபர்கள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள வீரமலை பகுதியை சேர்ந்தவர் தேக்கன். இவரது மகன் ராஜேஷ் (வயது 20). வாய் பேசாதமுடியாத இவர் சொந்தமாக கோழி பண்ணை வைத்து தொழில் நடத்தி வருகிறார். இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் (21). இவர் சென்டிரிங் வேலை செய்து வருகிறார்.

    இந்த நிலையில் இவர்கள் இருவரும் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் வீரமலையில் இருந்து போச்சம்பள்ளிக்கு சென்று புத்தாடை வாங்கி கொண்டு ஊருக்கு திரும்பி கொண்டு இருந்தனர்.

    அப்போது மீண்டும் போச்சம்பள்ளி அருகே உள்ள அனுமகவுண்டனூர் என்னுமிடத்தில் வீரமலைக்கு செல்லும் போது காவேரிப்பட்டணத்தில் இருந்து போச்சம்பள்ளி நோக்கி வந்த செப்டிக் டேங்க் லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ராஜேஷ், விக்னேஷ் ஆகியோர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    இது குறித்து தகவலறிந்த போச்சம்பள்ளி போலீசார் விரைந்து சென்று விபத்தில் பலியான ராஜேஷ், விக்னேஷ் உடல்களை கைப்பற்றி போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    போச்சம்பள்ளி அருகே கோவிலில் பச்சிளம் பெண் குழந்தை வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள வாடமங்கலம் பகுதியில் நேற்று மாலை அப்பகுதியில் உள்ள கோவில் அருகே குழந்தை அழுகை சத்தம் நீண்ட நேரமாக கேட்டுள்ளது. இதையறிந்த பொதுமக்கள் கோவிலில் சென்று பார்த்த போது பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை இருந்தது தெரிய வந்தது.

    இது குறித்து பொதுமக்கள் பாருர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து பச்சிளம் பெண் குழந்தையை கைபற்றி போச்சம்பள்ளி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் கிருஷ்ணகிரி குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    இது குறித்து பாரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பெண் குழந்தையை வீசிசென்ற கல்மனம் படைத்த தாய் யார்? என்று போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

    கோவிலில் பச்சிளம் பெண் குழந்தை வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட பொதுமக்கள் பீர்பாட்டில்களை அள்ளிச்சென்றனர்.

    மத்தூர்:

    சென்னையில் இருந்து திருவண்ணாமலை வழியாக தருமபுரி நோக்கி டாஸ்மாக் மதுபாட்டில்களை ஏற்றிக் கொண்டு லாரி வந்து கொண்டிருந்தது. லாரியை திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை சேர்ந்தவர் தனுஷ் (வயது 42), என்பவர் ஓட்டினார். கிளீனராக இளையராஜா (38) என்பவர் இருந்தார்.

    இந்த நிலையில் நேற்று மாலை கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த மிட்டப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே லாரி வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி ரோட்டில் கவிழ்ந்தது

    இதில் லாரியில் இருந்த பீர்பாட்டில்களில் பெரும்பாலானவை உடைந்து சேதமடைந்தது. இதனால் அங்கு பீர்பாட்டில்கள் உடைந்து ஆறாக ஓடியது. மேலும் அந்த வழியாக சென்ற சிலர், லாரியில் மீதமிருந்த பீர்பாட்டில்களை வேக வேகமாக அள்ளிக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என்பதால் அங்கிருந்த குடிமகன்கள் சிலர், இதனை சாதகமாக பயன்படுத்தி பீர்பாட்டில்களை எடுத்து கொண்டு தங்களது மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். இதை பார்த்து அங்கு நின்ற சிலர் திகைத்து போய் நின்றனர்.

    இந்த விபத்து குறித்து ஊத்தங்கரை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் ஊத்தங்கரை போலீஸ் டி.எஸ்.பி. அலெக்சாண்டர், சிங்காரப்பேட்டை இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் லாரியில் இருந்த பீர்பாட்டில்களை அள்ளியவர்களை விரட்டியடித்தனர்.

    இதில் லாரியில் ரூ.15 லட்சம் மதிப்பிலான பீர்பாட்டில்கள் உடைத்து சேதமானதாக கூறப்படுகிறது. 

    கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் அருகே கள்ளத்தொடர்பை கைவிட மறுத்த விவசாயி அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுக்கா பாகலூர் பக்கமுள்ள அடவனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த லகுமய்யா என்பவரது மகன் முனிராஜ் (30).

    விவசாயியான இவரும், அதே பகுதியை சேர்ந்த கோனப்பா என்பவரது மகன் மற்றொரு முனிராஜும் உறவினர்கள் ஆவர்.

    இவரது மனைவி ஜோதிக்கும், லகுமய்யா மகன் முனிராஜிற்கும் கடந்த 5 ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வருவதாக கூறப்படுகிறது.

    இதனை பலமுறை கண்டித்தும் கைவிட மறுத்து கள்ளத்தொடர்பு தொடர்ந்ததால், ஆத்திரமடைந்த முனிராஜ், நேற்று லகுமய்யா மகன் முனிராஜை அரிவாளால் வெட்டினார்.

    இதில் அவரது தலையின் பின்புறம் வெட்டு விழுந்தது. உடனடியாக அவர் மீட்கப்பட்டு, ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக பெங்களூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இது குறித்து பாகலூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக சில ஆண்டுகளாக வறண்டு காணப்பட்ட அணைகளும் நிரம்பி வருகின்றன. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம்  சூளகிரி தாலுகா சூளகிரி அருகே வேம்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ளது சின்னாறு அணை.

    இந்த அணை 76 அடி கொள்ள அளவு கொண்ட அணையாகும். இந்த அணைக்கு ஒசூர் கெலவரபள்ளி அணையில் இருந்து வெளியாகும் உபரி நீர் கால்வாய் வழியாக காமன்தொட்டி, மருதாண்டப்பள்ளி வழியாக வந்து துரை ஏரி. நிரம்பி அதன் பின்பு போகிபுரம் வழியாக வந்து சின்னார் அணை நிரம்பும்.

    ஆனால் தண்ணீர் விடாமல் பல ஆண்டுகளாக பொதுப்பணிதுறை மற்றும் சில அரசியல் கட்சியினரும் நாடகம் ஆடி வந்தனர். இந்த நிலையில் சில மாதங்களாக மழை பெய்ததாலும் சில சமூக சேவர்கள்  பணம் செலவுகள் செய்து கால்வாய்கள் முட்கள், செடி, கொடிகளை  சில மாதங்களாக அகற்றியதாலும். சின்னாறு அணைக்கு நீர்வரத்து வர தொடங்கியது.

     இந்த நிலையில் தற்போது சின்னாறு அணை நிரம்பியதால் காமநாயக்கனபேட்டை, கிருஷ்னேப்பள்ளி, கிருஷ்ணா பாளையம், போகிபுரம், ஒன்றியூர், வேம்பள்ளி,ஒன்றிய, தாசனப்புரம், கொள்ளப்பள்ளி, சென்னப்பள்ளி, தேக்கலப்பள்ளி, சின்னார், முருக்கனப்பள்ளி மற்றும் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 200-க்கும் மேற்ப்பட்ட விவசாய நிலம் நீர்பாசனம் பெறுவதால் பொதுமக்கள் அணையின் அருகே  கிடா வெட்டி மகிழ்ந்தனர்.
    ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவில் உண்டியல் காணிக்கை பணம் எண்ணப்பட்டதில் ரூ.8.53 லட்சம் வசூலாகியிருந்தது.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீ சந்திரசூடேஸ்வரர் மலைக்கோயிலில், உண்டியல்களில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை பணத்தை எண்ணும் பணி  நடந்தது.

     கோவிலில் இருந்த 3 உண்டியல்கள் திறக்கப்பட்டு, கோவில் ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் காணிக்கை பணம் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். மாலை வரை நடந்த இந்த பணியின் முடிவில், மொத்தம் 8 லட்சத்து 53 ஆயிரத்து 602 ரூபாய் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

     உண்டியல் காணிக்கை எண்ணும் பணியையொட்டி, போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    கெலமங்கலம் அருகே ரெயிலில் அடிபட்டு வியாபாரி பலியானார்.
    ராயக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள காடு உத்தனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 60). வெங்காய வியாபாரி.  இவர் இன்று காலை 6.30  மணி அளவில் காடு உத்தன பள்ளியிலிருந்து கிராமங்களுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார் ,

    அப்போது தண்டவாளத்தை கடந்து சென்ற போது அந்த வழியாக தர்மபுரியில் இருந்து பெங்களூர் நோக்கி சென்ற பயணிகள்  ரெயில் ராதாகிருஷ்ணன் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் ஓசூர் ரயில்வே போலீசார் விரைந்து வந்து ராதாகிருஷ்ணன் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். மேலும் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தண்டவாளத்தை கடந்து சென்றபோது ரயில் மோதி வெங்காய வியாபாரி  பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    சூளகிரி அருகே 50 அடி பள்ளத்தில் 2 லாரிகள் கவிழ்ந்ததில் 3 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
    சூளகிரி:

    கர்நாடக மாநிலத்தில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி யை நோக்கி ரெண்டு தாரிகள் இன்று அதிகாலை வந்து கொண்டிருந்தது. ஒரு லாரியில் மக்காச் சோளமும் மற்றொரு லாரியில் மாட்டுத் தீவனமூம்  இருந்தது.  

    இந்த நிலையில் இன்று அதிகாலை சூளகிரி அருகே பேரிகை  அடுத்த ராமன் தொட்டி என்ற இடத்தில் உள்ள கொண்டை ஊசி வளைவில் வந்தபோது 2 லாரிகளும் அடுத்தடுத்து எதிர்பாராதவிதமாக 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 2 லாரிகளிலும் இருந்த டிரைவர்கள் ராஜ்குமார் , சிவக்குமார் மற்றும் கிளீனர் சித் தங்கப்பா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். 

    இந்த விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் சூளகிரி போலீசார் விரைந்து வந்து காயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு இதே பகுதியில் ஒரு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது. தொடர் விபத்துகள் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    சூளகிரி அருகே மின்வேலியில் சிக்கி வாலிபர் பலியானார்.
    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம்,  சூளகிரி தாலுகா உத்தனப்பள்ளி அருகே உள்ள ராம்புரம் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ் (வயது45). இவர் தனக்கு சொந்தமான தோட்டத்தில் முட்டைகோஸ் பயிர் செய்து வருகிறார். இவர் தோட்டத்தில் உள்ள பயிர்களை காட்டு பன்றிகள் சேதப்படுத்தி வருவதால் காட்டு பன்றிகள் வராமல் இருக்க மின்வேலி அமைத்து பாதுகாத்து வந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை பக்கத்து தோட்டத்தை சேர்ந்த முனிராஜ் (வயது 38) என்பவர் மின்வேலி இருப்பது தெரியாமல் மின் வேலியில் சிக்கி படுகாயம் அடைந்தார்.  இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்த முனிராஜை ஒசூர் அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்றனர்.

    வழியிலேயே  முனிராஜ் பரிதாபமாக இறந்தார்.  உத்தனப்பள்ளி போலிசார்,  சம்பவ இடத்துக்கு சென்று  முனிராஜ் உடலை ஒசூர் அரசு மருத்துவமனைக்கு  பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    காவேரிபட்டினத்தில் தி,.மு.க. பிரமுகர் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

    காவேரிப்பட்டினம்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரி பட்டினத்தைச் சேர்ந்தவர் கணேசன். தி.மு.க. பிரமுகர்.   இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த  தி.மு.க. மாணவர் அணியைச் சேர்ந்த  மோகனசுந்தரம் என்பவருக்கும் இடையே நிலத்தகராறு காரணமாக ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்தது. 

    இந்த நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் கணேசன் தனது காரில் கோட்டைமேடு என்ற இடத்தில் வந்து கொண்டி ருந்தார் .அப்போது அங்கு நின்ற சிலர் காரை வழிமறித்து கணேசனை தாக்கியதாக கூறப்படுகிறது. 

    பின்னர் நள்ளிரவில் அங்கு வந்த ஒரு மர்ம கும்பல் திடீரென கணேசன் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீசியதாக தெரிகிறது. இதில் அங்கு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் சேத மானது. 

    இதுகுறித்து காவேரிபட்டணம் போலீசார்  விசாரித்து வருகிறார்கள் .இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
    மத்தூர் அருகே மதுபாட்டில்களை பதுக்கிவைத்து விற்றதாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர்  அருகே கொடமாண் பட்டி பகுதியில் தாபா ஒட்டல் நடத்தி வருபவர் மோகன் (வயது 40). இவர் அரசு அனுமதியின்றி 50- மதுபாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்று வந்துள்ளார்.

    இந்தநிலை அப்பகுதியில் ரோந்து சென்ற மத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவிக் குமார் மதுபாட்டில்களை பறிமுதல் செய்து மோகன் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    அதேபோல் சிங்காரப் பேட்டை பகுதிகளில் அரசு அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்பதாக வந்த தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையில் போலீசார் ரோந்து சென்று சோதனை செய்தனர். இதில் மிட்டப் பள்ளி பகுதியில் தட்சிணாமூர்த்தி என்பவர் அவரது வீட்டில் 50 மது பாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்று வந்துள்ளார். 

    அதே போல் அதே பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் (42) என்பவர் வீட்டில் 50 மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளார்.இருவர் மீது போலீசார் வழக்கு பதிவுசெய்து  மதுபாட்டி ல் களை பறிமுதல் செய்தனர்.
    ×