என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    போச்சம்பள்ளி அருகே செப்டிக் டேங்க் லாரி- மோட்டார் சைக்கிள் மோதல்- 2 வாலிபர்கள் பலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    போச்சம்பள்ளி அருகே விபத்தில் 2 வாலிபர்கள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள வீரமலை பகுதியை சேர்ந்தவர் தேக்கன். இவரது மகன் ராஜேஷ் (வயது 20). வாய் பேசாதமுடியாத இவர் சொந்தமாக கோழி பண்ணை வைத்து தொழில் நடத்தி வருகிறார். இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் (21). இவர் சென்டிரிங் வேலை செய்து வருகிறார்.

    இந்த நிலையில் இவர்கள் இருவரும் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் வீரமலையில் இருந்து போச்சம்பள்ளிக்கு சென்று புத்தாடை வாங்கி கொண்டு ஊருக்கு திரும்பி கொண்டு இருந்தனர்.

    அப்போது மீண்டும் போச்சம்பள்ளி அருகே உள்ள அனுமகவுண்டனூர் என்னுமிடத்தில் வீரமலைக்கு செல்லும் போது காவேரிப்பட்டணத்தில் இருந்து போச்சம்பள்ளி நோக்கி வந்த செப்டிக் டேங்க் லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ராஜேஷ், விக்னேஷ் ஆகியோர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    இது குறித்து தகவலறிந்த போச்சம்பள்ளி போலீசார் விரைந்து சென்று விபத்தில் பலியான ராஜேஷ், விக்னேஷ் உடல்களை கைப்பற்றி போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    Next Story
    ×