என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கெலமங்கலம் அருகே ரெயிலில் அடிபட்டு வியாபாரி பலி
Byமாலை மலர்12 Jan 2022 12:04 PM GMT (Updated: 12 Jan 2022 12:04 PM GMT)
கெலமங்கலம் அருகே ரெயிலில் அடிபட்டு வியாபாரி பலியானார்.
ராயக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள காடு உத்தனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 60). வெங்காய வியாபாரி. இவர் இன்று காலை 6.30 மணி அளவில் காடு உத்தன பள்ளியிலிருந்து கிராமங்களுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார் ,
அப்போது தண்டவாளத்தை கடந்து சென்ற போது அந்த வழியாக தர்மபுரியில் இருந்து பெங்களூர் நோக்கி சென்ற பயணிகள் ரெயில் ராதாகிருஷ்ணன் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் ஓசூர் ரயில்வே போலீசார் விரைந்து வந்து ராதாகிருஷ்ணன் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். மேலும் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தண்டவாளத்தை கடந்து சென்றபோது ரயில் மோதி வெங்காய வியாபாரி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X