search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள்.
    X
    உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள்.

    ஓசூர் சந்திரசூடேஸ்வரர் மலைக்கோவிலில் ரூ.8.53 லட்சம் உண்டியல் வசூல்

    ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவில் உண்டியல் காணிக்கை பணம் எண்ணப்பட்டதில் ரூ.8.53 லட்சம் வசூலாகியிருந்தது.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீ சந்திரசூடேஸ்வரர் மலைக்கோயிலில், உண்டியல்களில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை பணத்தை எண்ணும் பணி  நடந்தது.

     கோவிலில் இருந்த 3 உண்டியல்கள் திறக்கப்பட்டு, கோவில் ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் காணிக்கை பணம் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். மாலை வரை நடந்த இந்த பணியின் முடிவில், மொத்தம் 8 லட்சத்து 53 ஆயிரத்து 602 ரூபாய் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

     உண்டியல் காணிக்கை எண்ணும் பணியையொட்டி, போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    Next Story
    ×