என் மலர்
கரூர்
- மு.க.ஸ்டாலின் உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனைக் கூட்டதை நடத்தினார்.
- ஓய்வுபெற்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.
கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகக் கட்சியின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விவகாரம் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் நேற்று இரவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனைக் கூட்டதை நடத்தினார்.
அப்போது, கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசலில் 40 பேர் பலியானது தொடர்பாக ஓய்வுபெற்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் விசாரணையை தொடங்கினார்.
அதன்படி, சம்பவம் நடைபெற்ற கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் அருணா ஜெகதீசன் விசாரணை நடத்தி வருகிறார்.
- முறையான பாதுகாப்பு வழங்காமல் தமிழக வெற்றிக்கழக கூட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது மனு.
- தவெக தாக்கல் செய்த வழக்கில் இடையீடு மனுவாக தாக்கல் செய்தால் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
கரூரில் த.வெ.க. கூட்ட நெரிசலில் சிக்கி காயம் அடைந்த கண்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.
முறையான பாதுகாப்பு வழங்காமல் தமிழக வெற்றிக்கழக கூட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என்று செந்தில் கண்ணன் தாக்கல் செய்த அவசர வழக்கை இன்று மாலை 4.30 மணிக்கு விசாரிக்க உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் அனுமதி வழங்கினார்.
இந்நிலையில், இந்த மனுவை அவசர வழக்காக விசாரித்த நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அதன்படி, இந்த மனு மீது இன்று விசாரணைக்கு ஏற்கப்படவில்லை.
மேலும், தவெக தாக்கல் செய்த வழக்கில் இடையீடு மனுவாக தாக்கல் செய்தால் தான் விசாரிக்க முடியும் எனவும் உயர்நீதிமன்ற பதிவுத்துறை தெரிவித்துள்ளது.
- விஜய் பேசியபோது மின்தடை ஏற்பட்டதால் தான் கூட்ட நெரிசல் ஏற்பட்டது என குற்றச்சாட்டு.
- மின்சாரத்தை துண்டிக்க வேண்டும் என்ற தவெகவினரின் கோரிக்கை ஏற்கப்படவில்லை.
கரூரில் நேற்று இரவு தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 9 குழந்தைகள் உட்பட 39 பேர் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் தமிழகம் மட்டுமல்லாது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
இந்நிலையில், கரூரில் விஜய் பேசியபோது மின்தடை ஏற்பட்டதால் தான் கூட்ட நெரிசல் ஏற்பட்டது என குற்றச்சாட்டுக்கு மின்சாரத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மின்வாரிய தலைமை பொரியாளர் ராஜலட்சுமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்," கரூரில் விஜய் பிரசாரத்தின் போது மின்தடை ஏற்பவில்லை.
கரூரில் விஜய் உரையாற்றும்போது தெரு விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன.
நிகழ்ச்சி ஏற்பட்டாளரின் ஜெனரேட்டர் பயபன்படுத்தி எரியவிட்ட விளக்குகள்தான் அணைந்தன. மின்தடை செய்யவில்லை.
மின்சாரத்தை துண்டிக்க வேண்டும் என்ற தவெகவினரின் கோரிக்கை ஏற்கப்படவில்லை, நிராகரிக்கப்பட்டது.
சிலர் மரத்தில் ஏறியபோது மின்தடை செய்து போலீஸ் உதவியுடன் அவர்கள் இறங்கிய பின்பு மீண்டும் மின் விநியேகாம் செய்யப்பட்டது.
விஜய் வந்து பிரசாரம் செய்தபோது மின்தடை செய்யப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- தவெகவினரிடம் கலந்தாலோசித்த பின்னர் தான் குறிப்பிட்ட இடம் ஒதுக்கப்பட்டது.
- கரூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தீவிரமாக செயல்பட்டு சிகிச்சை அளித்தனர்.
கரூர் தமிழக வெற்றிக் கழக கூட்ட நெரிசலில் 40 பேரை பலி கொண்ட கூட்ட நெரிசல் தொடர்பாக ஆட்சியர் தங்கவேலு விளக்கம் அளித்துள்ளார்.
கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேலு, ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் கூட்டாக செய்தியாள்களை சந்தித்தனர்.
அப்போது அவர் கூறியதாவது:-
கூட்ட நெரிசல் குறித்த தகவலறிந்ததும் முதலமைச்சர் உத்தரவுப்படி துரித நடவடிக்கை எடுக்கப்பட்டது.
39 பேர் உயிரற்ற சடலங்களாவே மருத்துவமனைகளுக்கு கொண்டுவரப்பட்டன.
கரூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தீவிரமாக செயல்பட்டு சிகிச்சை அளித்தனர்.
செய்தியை கேள்விபட்டதும் முதலமைச்சர் மீட்பு பணிகளை முடுக்கிவிட்டார். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்பட்டு மீட்பு பணி நடைபெற்று வருகிறது.
இறந்தவர்கள் அனைவரின் உடல்களும் கூராய்வு செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்டுவிட்டது.
கரூரை சுற்றியுள்ள ஊர்களிலிருந்து 114 மருத்துவர்கள், 23 செவிலியர்கள், தடயவியல் நிபுணர்கள் அடங்கிய குழுவினர் விரைந்தனர்.
கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் உயிர்காக்கும் சிகிச்சை அளித்தனர்.
தமிழ்நாடு அரசு எடுத்த சீரிய நடவடிக்கையால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.
தவெகவினர் மனு அளித்தனர். தவெகவினர் குறுகலான பகுதிகளில் அனுமதியை கோரினர்.
23-ம் தேதி அளித்த முதல் மனுவில் தவெகவினர் பெட்ரோல் பங்க் உள்ள ரவுண்டானா பகுதிக்கு அனுமதி கேட்டனர். அனுமதி மறுக்கப்பட்டது.
தவெகவினரிடம் கலந்தாலோசித்த பின்னர்தான் குறிப்பிட்ட இடம் ஒதுக்கப்பட்டது.
வேலுசாமிபுரத்தில் முன்னதாக வேறு கட்சியினர் கூட்டம் நடந்ததால் அதனை சுட்டிக்காட்டி அப்பகுதியில் விஜய் பிரசாரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
- பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு காங்கிரஸ் துணை நிற்கும்.
கரூர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்த துயரமான சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு காங்கிரஸ் துணை நிற்கும்.
முதற்கட்டமாக 39 பேரின் குடும்பங்களுக்கும் மொத்தமாக காங்கிரஸ் சார்பில் ரூ.1 கோடி நிவாரண உதவி வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இப்படி ஒரு குறுகலான நெரிசல் மிகுந்த இடத்தை தேர்தல் பிரசாரத்திற்கு ஒதுக்கியது ஏன்?
- போலீசார் தடியடி நடத்தியபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டதும் உயிர் பலிகளுக்கு காரணம் என மக்கள் கூறுகின்றனர்.
கரூர் கூட்ட நெரிசலில் 40 உயிர்கள் பலியானதற்கு அரசு உரிய பதில் கூற வேண்டும் என தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், குறுகலான பாதை, நெரிசல் மிகுந்த பாதை என நான் சந்தித்த பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் கூறுகின்றனர்.
இப்படி ஒரு குறுகலான நெரிசல் மிகுந்த இடத்தை தேர்தல் பிரசாரத்திற்கு ஒதுக்கியது ஏன்?
போலீசார் தடியடி நடத்தியபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டதும் உயிர் பலிகளுக்கு காரணம் என மக்கள் கூறுகின்றனர்.
பெரிய மைதானம் போன்ற இடத்தில் தான் விஜய் பிரசாரத்திற்கு இடம் ஒதுக்கியிருக்க வேண்டும். இது யாருடைய தவறு? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
- பெரிய இடத்தில் அனுமதி கொடுத்திருக்க வேண்டும்.
- பார்க்கும் காட்சிகள் அனைத்தும் வேதனையாக உள்ளது.
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரையும், படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களின் குடும்பத்தாரையும் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து ஆறுதல் கூறினார். இதன்பின், செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-
* திருச்சியில் என்னுடைய நடைபயணத்திலும் மின் தடை ஏற்பட்டது.
* கேட்ட இடத்தில் அனுமதி கொடுத்திருக்க வேண்டும்.
* பெரிய இடத்தில் அனுமதி கொடுத்திருக்க வேண்டும்.
* பார்க்கும் காட்சிகள் அனைத்தும் வேதனையாக உள்ளது. நடிகர்களை பார்க்க சென்று உயிரை விடுவதா?
* பொதுமக்களும், த.வெ.க.வும் பொறுப்புடன் நடந்திருக்க வேண்டும் என்றார்.
- இச்சம்பவம் தமிழகம் மட்டுமல்லாது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
- மேலும் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.
கரூரில் நேற்று இரவு தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 9 குழந்தைகள் உட்பட 39 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தமிழகம் மட்டுமல்லாது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
இதில் படுகாயம் அடைந்து பல பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இந்த நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 40-ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்த கவின் என்பவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதனிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மேலும் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுவதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
- ஹேமலதாவுக்கு சாய்லெட்சனா (8), சாய்ஜீவா (4) என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.
- ஹேமலதா தனது 2 குழந்தைகளையும் விஜய் பிரசார கூட்டத்திற்கு அழைத்து சென்றார்.
கரூர் த.வெ.க. தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதில் நெஞ்சை உருக்கும் உருக்கமான தகவல்கள் வெளியாகியுள்ளன. கரூர் விஸ்வநாதபுரி பகுதியை சேர்ந்தவர் ஆனந்தஜோதி இவரது மனைவி ஹேமலதா (வயது 30). அவர்களின் குழந்தைகள் சாய்லெட்சனா (8), சாய்ஜீவா (4). ஹேமலதா தனது 2 குழந்தைகளையும் விஜய் பிரசார கூட்டத்திற்கு அழைத்து சென்றார்.
பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஹேமலதா, குழந்தைகள் சாய்லெட்சனா,சாய்ஜீவா ஆகியோர் மூச்சு திணறி உயிரிழந்தனர்.
- துயரமான நேரத்தில் தேவையற்ற விவாதம் கூடாது.
- சதி இருந்தால் ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டும்.
கரூர்:
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-
* கரூரில் துடைக்க முடியாத பெருந்துயரம் நிகழ்ந்துவிட்டது. குழந்தைகள் உள்ளிட்ட 39 பேர் உயிரிழந்தது பெருந்துயரம்.
* உறவுகளை இழந்தவர்களுக்கு எப்படி ஆறுதல் சொல்வது? என்று தெரியவில்லை.
* கூட்ட நெரிசலில் எதிர்பாராதவிதமாக விபத்து நிகழ்ந்துள்ளது. இனிமேல் இதுமாதிரி பெருந்துயரம் நிகழக்கூடாது.
* நடக்கவே கூடாத துயரம் நடந்துவிட்டது. யாரையும் குறை சொல்லி பயனில்லை. இனி இதுபோல் நிகழாமல் தவிர்க்க வேண்டும்.
* எல்லோரும் சேர்ந்த இந்த தவறை செய்துவிட்டோம். எதிர்காலத்தில் மீண்டும் நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
* விஜயின் கடந்த கூட்டங்களில் பாதுகாப்பு கொடுக்க தான் செய்தனர். இதனால் பாதுகாப்பு குறைபாடு என பொதுவாக சொல்ல கூடாது.
* பொதுக்கூட்டங்களில் ஆம்புலன்ஸ் வந்தால் வழிவிட வேண்டும்.
* துயரமான நேரத்தில் தேவையற்ற விவாதம் கூடாது. சதி இருந்தால் ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டும்.
* அரசியல் கட்சி கூட்டங்களில் குடிநீரை அரசு வழங்க முடியாது.
* சந்தேகங்கள் இருப்பின் அவை விசாரணையில் தெளிவாகும் என்றார்.
- விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 39 பேர் உயிரிழந்தனர்
- இச்சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள், நடிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 39 பேர் உயிரிழந்தனர்.
தமிழ்நாட்டையே உலுக்கி உள்ள இச்சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள், நடிகர்கள் என பலரும் இரங்கலும் தங்களது கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.
கரூர் கூட்ட நெரிசலில் தனது 1½ வயது மகனைப் பறிகொடுத்த காது கேளாத, வாய் பேச முடியாத தாயார் இடிந்துபோய் நிற்கும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் வேலுச்சாமிபுரம் வடிவேல் தெரு பகுதியில் விமல் மற்றும் மாதேஸ்வரி தம்பதியின் 1½ வயது குழந்தை துருவ் விஷ்ணு கூட்ட நெரிசலில் மிதிப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தது. இந்த குழந்தையை அவரது அத்தை விஜய் பிரசாத்திற்கு அழைத்து சென்றார். அடுத்த மாதம் பிறந்தநாள் கொண்டாட இருந்த நிலையில், குழந்தை உயிரிழந்தது.
சிறுவனின் அத்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
- எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு அரசும், காவல்துறையும் உரிய பாதுகாப்பு வழங்கவில்லை.
- ரூ.10 லட்சம் கொடுத்து ஒரு உயிரை வாங்க முடியுமா?
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து அரசியல் தலைவர்கள் வந்த வண்ணம் உள்ளனர். அங்கு கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கும், படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களையும் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரனும் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். இதன்பின், செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்,
* எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு அரசும், காவல்துறையும் உரிய பாதுகாப்பு வழங்கவில்லை.
* ரூ.10 லட்சம் கொடுத்து ஒரு உயிரை வாங்க முடியுமா?
* 39 பேரின் உயிரிழப்புக்கு தமிழக அரசும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பொறுப்பேற்க வேண்டும்.
* 6 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்த தொண்டர்கள் தண்ணீர் கூட இல்லாமல் தவித்துள்ளனர்.
* கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 கோடி அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.






