என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கரூர் சம்பவம்: இளைஞர்கள், தொண்டர்களுக்கு அண்ணாமலை வேண்டுகோள்
- தவெக பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர்.
- கரூரில் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து அண்ணாமலை ஆறுதல் கூறினர்.
கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகக் கட்சியின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், கரூரில் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய பிறகு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, இளைஞர்களுக்கும், தொண்டர்களுக்கும் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அப்போது அவர் பேசியதாவது:-
எதற்காக விஜயை பைக்கில் துரத்துகிறீர்கள், கூட்டமாக இருக்கும் இடத்திற்கு செல்லாதீர்கள்.
பாதுகாப்பில்லாத இடத்திற்கு செல்லக்கூடாது. உங்கள் தலைவரை பாதுகாப்பாக ரசியுங்கள்.
ஆனல், உங்கள் குடும்பத்திற்கு நீங்கள் மட்டும் தான் என்பதை இளைஞர்கள், தொண்டர்கள், ரசிகர்கள், பொது மக்கள் உணர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story






