என் மலர்
கன்னியாகுமரி
- பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து தொடர்ந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால் கோதையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
- மழை வெள்ளத்தால் சேதம் அடைந்த நெற்பயிர்கள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கடந்த வாரம் கொட்டி தீர்த்த மழை மாவட்டத்தையே புரட்டி எடுத்தது. நாகர்கோவில் பகுதியில் பல்வேறு பகுதியில் உள்ள குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்தது.
தோவாளை, அகஸ்தீஸ்வரம், கிள்ளியூர் பகுதியில் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். கடந்த 2 நாட்களாக வெயில் அடித்து வந்த நிலையில் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் வடிந்து வருகிறது. நாகர்கோவில் மீனாட்சி கார்டன் பகுதியில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம் வடிந்த நிலையில் தெருக்களிலும் வீடுகளை சுற்றியும் மழை நீர் தேங்கி கிடக்கிறது.
அந்தப் பகுதியில் மாநகராட்சி சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்டம் முழுவதும் மழை குறைந்ததையடுத்து அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்தும் படிப்படியாக குறைந்தது. நேற்று இரு அணைகளுக்கும் ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று நீர்வரத்து குறைந்துள்ளது.
இதையடுத்து அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீரின் அளவும் குறைக்கப்பட்டு உள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து தொடர்ந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால் கோதையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
இதனால் திற்பரப்பு அருவியில் குளிப்பதற்கு இன்றும் 4-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. பேச்சிபாறை அணை நீர்மட்டம் இன்று காலை 45.24 அடியாக உள்ளது. அணைக்கு 866 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 514 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
பெருஞ்சாணி நீர்மட்டம் 75.12 அடியாக உள்ளது. அணைக்கு 1077 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 503 கன அடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றார்1- நீர்மட்டம் 16.73 அடியாக உள்ளது. அணைக்கு 138 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 129 கன அடி தண்ணீர் உபரிநீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. 3 அணைகளில் இருந்தும் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதையடுத்து ஆறுகளில் தொடர்ந்து வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
தொடர் மழைக்கு நேற்றுமுன்தினம் ஒரே நாளில் 36 வீடுகள் இடிந்து விழுந்தது. இந்த நிலையில் நேற்று மேலும் 12 வீடுகள் இடிந்துள்ளது. அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் 3 வீடுகளும், தோவாளை தாலுகாவில் 5 வீடுகளும், விளவங்கோடு தாலுகாவில் 2 வீடுகளும், கிள்ளியூர் தாலுகாவில் 2 வீடுகளும் இடிந்துள்ளன.
மழை வெள்ளத்தால் சேதம் அடைந்த நெற்பயிர்கள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. கணக்கெடுக்கும் பணியில் வேளாண் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். நேற்று வரை நடந்த கணக்கெடுப்பில் 605 ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
- கோதையாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
- கன்னியாகுமரி பகுதியில் இன்று 2-வது நாளாக சூறைக்காற்று வீசி வருகிறது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் மழை சற்று குறைந்துள்ளது. ஆனால் மாவட்டம் முழுவதும் சூறைக்காற்று வீசி வருகிறது. அணைப் பகுதிகளிலும், மலையோர பகுதிகளிலும் மழை குறைந்ததையடுத்து பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து குறைந்துள்ளது.
இதனையடுத்து அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீரின் அளவும் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. உபரிநீரின் அளவு குறைக்கப்பட்டாலும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கோதையாறு, வள்ளியாறு, பரளியாறு, குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
கோதையாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் அருவியில் குளிப்பதற்கு 3-வது நாளாக இன்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அதற்கான அறிவிப்பு பலகை அங்கு வைக்கப்பட்டுள்ளது.
பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 45.12 அடியாக உள்ளது. அணைக்கு 1639 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 1550 கன அடி தண்ணீர் உபரிநீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 74.80 அடியாக உள்ளது. அணைக்கு 1849 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 1432 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
சிற்றாறு-1 அணை நீர்மட்டம் 16.70 அடியாக உள்ளது. அணைக்கு 187 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 129 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணை நீர்மட்டம் தொடர்ந்து முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகின்றன. பொய்கை அணை நீர்மட்டமும் உயர தொடங்கி உள்ளது.
ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக சானல்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாசன குளங்கள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகின்றன. 15-க்கும் மேற்பட்ட குளங்கள் உடைந்துள்ளது. உடைப்பு ஏற்பட்ட பகுதிகளில் தற்காலிகமாக சீரமைப்பு பணியை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள். மழைக்கு மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 36 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் 18 வீடுகளும், தோவாளை தாலுகாவில் 8 வீடுகளும், கல்குளம் தாலுகாவில் 3 வீடுகளும், விளவங்கோடு தாலுகாவில் 6 வீடுகளும், திருவட்டார் தாலுகாவில் ஒரு வீடும் இடிந்து விழுந்துள்ளது.
கன்னியாகுமரி பகுதியில் இன்று 2-வது நாளாக சூறைக்காற்று வீசி வருகிறது. இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. நீரோடி முதல் ஆரோக்கியபுரம் வரை உள்ள மீனவர் கிராமங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் கடற்கரை கிராமங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. சூறை காற்றுக்கு அகஸ்தீஸ்வரம், வடுவன் பற்று பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்து மின்கம்பங்கள் சேதமடைந்தன. சேதமடைந்த மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர்.
மின்கம்பங்கள் சேதமானதையடுத்து நேற்று இரவு தென்தாமரைகுளம் சுற்றுவட்டார பகுதியில் 15-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கியது. நள்ளிரவு மின்கம்பங்கள் சரி செய்யப்பட்டு மின் இணைப்பு வழங்கப்பட்டது.
- சுசீந்திரம் பகுதியில் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் இன்றும் வடியவில்லை.
- குலசேகரம், கீரிப்பாறை, தடிக்காரன்கோணம் பகுதியில் உள்ள ரப்பர் தோட்டங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொட்டித்தீர்த்த மழை மாவட்டத்தையே புரட்டி போட்டது. தாழ்வான பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் பரிதவிப்பிற்கு ஆளானார்கள். தற்பொழுது மழை சற்று குறைந்துள்ளதையடுத்து வீடுகளை சூழ்ந்த வெள்ளம் வடிய தொடங்கி உள்ளது.
நாகர்கோவில் மீனாட்சி கார்டன் பகுதியில் 450-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இந்த பகுதி முற்றிலுமாக தண்ணீர் சூழ்ந்து தீவாக காட்சியளித்தது. அங்கு தண்ணீரை வெளியேற்ற மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும் நடவடிக்கை மேற்கொண்டது.
இந்த நிலையில் அங்கு தற்போது தண்ணீர் வடிந்து வருகிறது. ஆனால் தண்ணீர் முழுமையாக இன்னும் வடியாததால் கீழ் தளத்தில் உள்ள பொதுமக்கள் உறவினர் வீடுகளில் தங்கி உள்ளனர். அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை மாவட்ட நிர்வாகமும், தன்னார்வலர்களும் செய்து வருகிறார்கள்.
ரெயில்வே குடியிருப்பு பகுதியை சூழ்ந்த வெள்ளம் வடிந்ததையடுத்து அங்கு இயல்பு நிலை திரும்பி உள்ளது. சுசீந்திரம் பகுதியில் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் இன்றும் வடியவில்லை. 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.
அந்த பகுதியில் உள்ள சாலைகளில் 2 நாட்களாக தண்ணீர் தேங்கி கிடப்பதால் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
இதேபோல் தோவாளை அண்ணா காலனி பகுதியிலும் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த தண்ணீர் படிப்படியாக வடிந்து வருகிறது. ஈசாந்தி மங்கலம் பகுதியில் விளைநிலங்கள் மற்றும் குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீர் முழுமையாக வடிந்ததால் சகஜ நிலை திரும்பி உள்ளது. திருவாழ்மார்பன் கோவிலை சூழ்ந்து இருந்த வெள்ளமும் முற்றிலுமாக வடிந்துள்ளது.
குமரி மேற்கு மாவட்ட பகுதிகளிலும் மழை குறைந்ததையடுத்து தாழ்வான பகுதியில் தேங்கிருந்த தண்ணீர் வடிந்தது. இருப்பினும் நிவாரண முகாம்களில் 300-க்கும் மேற்பட்ட மக்கள் தங்கி உள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு மாவட்ட நிர்வாகம் சார்பிலும், தன்னார்வலர்கள் சார்பிலும் வழங்கப்பட்டு வருகிறது.
சுசீந்திரம் பகுதியில் விளைநிலங்களை தண்ணீர் சூழ்ந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். சேத மதிப்பீடு குறித்து வேளாண் துறை அதிகாரிகள் கணக்கெடுக்கும் பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.
குலசேகரம், கீரிப்பாறை, தடிக்காரன்கோணம் பகுதியில் உள்ள ரப்பர் தோட்டங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. மழை குறைந்தாலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
- நிர்வாகிகள் அனைவருக்கும் ஒருங்கிணைப்பு குழு சார்பில் எங்கள் நன்றி.
- கன்னியாகுமரி மாவட்டம் காங்கிரஸ் கட்சியின் கோட்டை என்பதை நாம் நிருபித்துள்ளோம்.
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறையில் பங்கேற்ற விஜய் வசந்த் எம்.பி. கூறியிருப்பதாவது:-
நாகர்கோவிலில் நடைபெற்ற கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை மாநாட்டிற்கு வருகை தந்து தலைமை தாங்கி சிறப்பித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே எஸ் அழகிரி அவர்களுக்கும், விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் அண்ணன் மாணிக்கம் தாகூர் அவர்களுக்கும், அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தலைவர் திரு ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ அவர்களுக்கும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் திரு. விஸ்வநாதன், திரு. தனுஷ்கோடி ஆதித்தன், ராமசுப்பு சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு எங்கள் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர்கள், துணை அமைப்பு தலைவர்கள், பிற மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் அனைவருக்கும் எங்கள் நன்றி.
மழை என்று பாராமல் பெருந்திரளாக வந்து சேர்ந்த பூத் கமிட்டி முகவர்கள், மாநில, மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், வட்டார, மண்டல தலைவர்கள், நகராட்சி தலைவர்கள், பஞ்சாயத்து கமிட்டி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், துணை அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவருக்கும் ஒருங்கிணைப்பு குழு சார்பில் எங்கள் நன்றி. கன்னியாகுமரி மாவட்டம் காங்கிரஸ் கட்சியின் கோட்டை என்பதை நாம் நிருபித்துள்ளோம்.
- கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை.
- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அருகில் உள்ள அரசு பள்ளியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அருகில் உள்ள அரசு பள்ளியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் நேரில் சென்று ஆறுதல் கூறி அவர்களின் தேவைகளை கேட்டறிந்தார். அவருடன் மாநகர மேயர் மகேஷ் உடன் இருந்தார்.
- கடல் சீற்றத்தினால் ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வீசுகின்றன.
- கனமழையின் காரணமாக பெரும்பாலான குளங்கள் நிரம்பி வழிகின்றன.
கன்னியாகுமரி:
குமரி மாவட்டம் நீண்ட நெடிய கடற்கரை பகுதி கொண்ட மாவட்டமாகும். கன்னியாகுமரி ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை 72 கிலோமீட்டர் தூரம் உள்ள கடலோரப் பகுதியில் மொத்தம் 48 கடற்கரை கிராமங்கள் உள்ளன.
இந்த கிராமங்களில் கடந்த 2 நாட்களாக இடைவிடாமல் தொடர்ந்து மழை பெய்தது. இன்று காலை மழை ஓய்ந்த போதிலும் காற்றின் வேகம் அதிகமாக உள்ளது. சூறாவளி காற்று காரணமாக, கடல் பயங்கர கொந்தளிப்பாகவும், சீற்றமாகவும் காணப்படுகிறது. கடல் சீற்றத்தினால் ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வீசுகின்றன.
இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி, சின்ன முட்டம், ஆரோக்கியபுரம், கோவளம், வாவத்துறை, புதுகிராமம், சிலுவைநகர், கீழமணக்குடி, மணக்குடி, பள்ளம், ராஜாக்கமங்கலம் துறை என குமரி மாவட்ட கடற்கரை கிராமங்களை சேர்ந்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
இதனால் ஆயிரக்கணக்கான வள்ளங்கள், கட்டுமரங்கள், நாட்டுப் படகுகள் கடற்கரையில் பாதுகாப்பான மேட்டுப் பகுதியில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இதே போல கன்னியாகுமரி அருகே உள்ள சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வரும் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும் இன்று காலை கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
அகஸ்தீஸ்வரம், லீபுரம், கொட்டாரம், சாமிதோப்பு, தென்தாமரைகுளம், அஞ்சுகிராமம் உள்பட பல பகுதிகளில் சூறாவளி காற்று வீசி வருகிறது. கனமழையின் காரணமாக பெரும்பாலான குளங்கள் நிரம்பி வழிகின்றன. கன்னியாகுமரி-நாகர்கோவில் இடையேயான தேசிய நெடுஞ்சாலையில் கொட்டாரம் அருகே ரோட்டின் இருபுறமும் குளங்கள் உள்ளன. இதில் ரோட்டின் வட புறம் உள்ள அச்சன்குளமும் அதையொட்டி ஓடும் நாஞ்சில் நாடு புத்தனாறும் நிரம்பி வழிகின்றன. இந்த தண்ணீர் அச்சன்குளம் ஊருக்குள் புகுந்தது. இதனால் அந்தப் பகுதி தீவு போல் காட்சி அளிக்கிறது. அங்குள்ள கிறிஸ்தவ ஆலயம், நூல் நிலையம் மற்றும் வீடுகளை வெள்ளம் சூழ்ந்து நின்றது. அதுமட்டுமின்றி அச்சன்குளம் நிரம்பி கன்னியாகுமரி நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளம் மறுகால் பாய்ந்து ஓடுகிறது.
அதன் அருகில் உள்ள பில்லாகுளத்தில் தண்ணீர் செல்வதால், சாலை வெளியே தெரியாத அளவுக்கு ஆறு போல் காட்சியளித்தது. இதனால் சாலையில் அரிப்பு ஏற்பட்டது. கொட்டாரம்-அச்சங்குளம் பகுதியில் பழமையான ராட்சத புளியமரம் வேரோடு சாய்ந்தது. அந்தப் பகுதியில் 3 மின்கம்பங்களும் சாய்ந்து விழுந்தன. இதனால் அந்த பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
மேலும் கன்னியாகுமரி-நாகர்கோவில் இடையே போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது. கன்னியாகுமரி போலீசார், மின்சார வாரிய ஊழியர்கள் மற்றும் கொட்டாரம் பேரூராட்சி நிர்வாகத்தினர் அங்கு விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன் சாலையில் கிடந்த மரம் மற்றும் மின்கம்பங்களை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து 2 மணி நேரத்துக்கு பிறகு அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது.
தொடர்மழையின் காரணமாக கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகளின் வருகையும் அடியோடு குறைந்து விட்டது. இதனால் கன்னியாகுமரி பகுதியில் உள்ள சுற்றுலாத் தலங்கள் வெறிச்சோடி கிடக்கின்றன. இதற்கிடையில் தொடர் மழையின் காரணமாக விவேகானந்தர் மண்டபத்துக்கு இன்று 2-வது நாளாக படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
- இரவின் புதூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 53 பேரும், கோட்டை விளை அரசு நடுநிலைப்பள்ளியில் 21 பேரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
- மாவட்டம் முழுவதும் 212 ஆண்களும், 273 பெண்களும், 67 குழந்தைகள் ஒரு திருநங்கை என 553 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் மாநகர பகுதியில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததையடுத்து மீட்பு பணியில் தீயணைப்பு துறையினர் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர். படகு மூலமாக பலரும் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்டவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தற்பொழுது மாவட்டம் முழுவதும் 11 இடங்களில் நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டு உள்ளது. இந்த நிவாரண முகாம்களில் பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வடிவீஸ்வரம் அரசு தொடக்கப்பள்ளியில் 20 பேரும், தோப்பூர் அரசு தொடக்கப்பள்ளியில் 4 பேரும், கன்னியாகுமரி பேரிடர் நிவாரண மையத்தில் 146 பேரும், இரவின் புதூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 53 பேரும், கோட்டை விளை அரசு நடுநிலைப்பள்ளியில் 21 பேரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தோவாளை கிருஷ்ணசாமி மண்டபத்தில் 213 பேரும், திருப்பதிசாரம் தனியார் பள்ளி ஒன்றில் 35 பேரும், ஏழுதேசம் பற்று அரசு உயர்நிலைப்பள்ளியில் 11 பேரும், விளவங்கோடு அரசு உயர்நிலைப்பள்ளியில் 15 பேரும், ஏழுதேசம் பேரிடர் பாதுகாப்பு மையத்தில் 5 பேரும், சுசீந்திரம் கிருஷ்ணா திருமண மண்டபத்தில் 30 பேரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மாவட்டம் முழுவதும் 212 ஆண்களும், 273 பெண்களும், 67 குழந்தைகள் ஒரு திருநங்கை என 553 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- நாகர்கோவிலில் இருந்து இன்று காலை நெல்லை செல்லும் பாசஞ்சர் ரெயில் ரத்து செய்யப்பட்டது.
- கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் விருதுநகரில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில்:
நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் ரெயில் நிலையத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது. தாமிரபரணி ஆற்றிலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.
இதையடுத்து நாகர்கோவிலில் இருந்து வெளியூர்களுக்கு இயக்கப்படும் ரெயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டது.
நாகர்கோவிலில் இருந்து இன்று காலை நெல்லை செல்லும் பாசஞ்சர் ரெயில் ரத்து செய்யப்பட்டது.
இதேபோல் குருவாயூரில் இருந்து நாகர்கோவில் வழியாக சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் திருவனந்தபுரம் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. நாகர்கோவிலில் இருந்து கோவை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் இன்று இயக்கப்படவில்லை.
இதனால் ரெயில் பயணிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள். இதேபோல் வெளியூர்களில் இருந்து நாகர்கோவிலுக்கு வரும் அனைத்து ரெயில்களும் நடுவழியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் விருதுநகரில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கோவை, ராமேஸ்வரம், பாண்டிச்சேரி எக்ஸ்பிரஸ், திருக்குறள் எக்ஸ்பிரஸ், தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரெயில் ரெயில்களும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் ரெயில் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
- பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளில் இருந்து 11 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- நாகர்கோவில் நகர பகுதியிலும் குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீர் இன்னும் வடியவில்லை.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மாவட்டம் முழுவதும் நேற்று இரவு பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. மயிலாடியில் நேற்று அதிகபட்சமாக 303.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் மலையோர பகுதிகளிலும் மழை நீடித்து வருவதால் அணைகளுக்கு கணிசமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
இதையடுத்து பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளில் இருந்து 11 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் காரணமாக கோதையாறு, குழித்துறை, தாமிரபரணி ஆறு, வள்ளியாறு, பரளியாறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பழையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக பல்வேறு இடங்களில் உள்ள விளைநிலங்களில் தண்ணீர் புகுந்தது. சுசீந்திரம் பகுதியில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது.
புத்தேரி பகுதியிலும் பழையாற்றில் உடைப்பு ஏற்பட்டு விளைநிலங்களில் தண்ணீர் புகுந்துள்ளது. மாவட்டத்தின் மேலும் சில இடங்களிலும் சானல்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது.
பூதப்பாண்டி அருகே சண்முக புரம் குளம் உடைந்து தண்ணீர் வெளியேறி வருகிறது. இரவிபுதூர் ஊராட்சிக்குட்பட்ட காடாங்குளத்திலும் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
நாகர்கோவில் நகர பகுதியிலும் குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீர் இன்னும் வடியவில்லை. ஊட்டுவாழ்மடம், சக்தி கார்டன், மீனாட்சி கார்டன், ரெயில்வே குடியிருப்பு பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்து உள்ளதால் பொதுமக்கள் பரிதவிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.
தோவாளை அண்ணா காலனி, திருப்பதிசாரம் நெசவாளர் காலனி, சகாய நகர் பகுதியில் உள்ள குடியிருப்புகளையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அகஸ்தீஸ்வரம், காமராஜ புரம் தென்தாமரை குளம் பகுதியிலும் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. ஈசாந்திமங்கலம் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் தண்ணீர் புகுந்துள்ளது. ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்றி தண்ணீர் தேங்கியுள்ளதால் செவிலியர்கள், டாக்டர்கள், பொதுமக்கள் அங்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. திருப்பதிசாரம் கோவிலுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.
பேச்சிப்பாறை அணைக்கு தொடர்ந்து தண்ணீர் அதிகரித்து வருவதால் மேலும் கூடுதல் தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது. எனவே கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 45.57 அடியாக உள்ளது. அணைக்கு 6208 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 5032 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 75.32 அடியாக உள்ளது. அணைக்கு 5642 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 587 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றார் 1 அணை நீர்மட்டம் 16.89 அடியாக உள்ளது. அணைக்கு 732 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 534 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது.
மாம்பழத்துறையாறு, முக்கடல் அணைகளும் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகின்றன. பொய்கை அணையின் நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 5 அடி உயர்ந்துள்ளது.
- குழித்துறை ஆறு, வள்ளியாறு, பரளியாறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
- விளை நிலங்களை தண்ணீர் சூழ்ந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டம் முழு வதும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. பேச்சிப் பாறை, பெருஞ்சாணி அணைப்பகுதியிலும், மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் கனமழை பெய்து வருவதால் பேச்சிப்பாறை அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளது.
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகள் ஏற்கனவே முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழியும் நிலையில் அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படு கிறது.
பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால் கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குழித்துறை ஆறு, வள்ளியாறு, பரளியாறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் காரணமாக திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அந்த பகுதியில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

பேச்சிப்பாறை அணை யின் நீர்மட்டம் இன்று காலை 44.59 அடியாக இருந்தது. அணைக்கு நேற்று இரவு 638 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரக்கூ டிய நீர்வரத்து 3000 கன அடியாக அதிகரித்தது. இதனால் பேச்சிப்பாறை அணையில் இருந்து இன்று காலை 2000 கன அடி தண்ணீர் உபரிநீராக வெளியேற்றப்பட்டது. மதகுகள் வழியாக 452 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மேலும் உபரிநீரை அதி கரிக்கவும் பொதுப் பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இதேபோல் பெருஞ்சாணி அணை நீர்மட்டம் இன்று காலை 73.60 அடியாக உள்ளது. அணைக்கு நேற்று 300 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று காலை அணைக்கு 3000 கன அடியாக அதிகரித்தது. பெருஞ்சாணி அணையில் இருந்து 1000 கன அடி தண்ணீர் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வரு கிறது. சிற்றாறு-1 அணைக்கும் வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்ததையடுத்து சிற்றாறு-1 அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட் டுள்ளது.
3 அணைகளில் இருந்தும் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்துள்ளது. அந்த பகுதியில் உள்ள விளை நிலங்களை தண்ணீர் சூழ்ந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தொடர்ந்து மலையோர பகுதிகளிலும், அணை பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்ப டும் முக்கடல் அணை நீர்மட்டம் இன்று மீண்டும் முழு கொள்ளளவை எட்டியது. இதேபோல் மாம்பழத்துறையாறு அணையும் இன்று முழு கொள்ளள வான 54.12 அடியை எட்டி நிரம்பி வழிகிறது.
- மழைநீர் தேங்கியுள்ளதால் ரப்பர் பால் உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.
- மீனவர்கள் கடலுக்கு செல்லக்கூடாது என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
நாகர்கோவில்:
தென்மேற்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுவதால் குமரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் நேற்று காலை முதலே பரவலாக மழை பெய்தது. இரவு பெய்ய தொடங்கிய மழை இடைவிடாது விடிய விடிய கொட்டி தீர்த்தது. காலையிலும் கனமழை கொட்டி வருவதால் மாவட்டத்தின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. நாகர்கோவில் பகுதியில் இன்று அதிகாலை முதலே மழை வெளுத்து வாங்கி வருகிறது. இடைவிடாது கொட்டி வரும் மழையின் காரணமாக ரோடுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
செட்டிகுளம் சவேரியார் ஆலயம், வடசேரி, மீனாட்சிபுரம் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. காலை 9 மணி வரை இருள் சூழ்ந்த நிலையில் காணப்பட்டது. இதனால் நான்கு சக்கர மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் முகப்பு லைட்டுகளை எரிய விட்டவாறு சென்றனர். தொடர் மழையின் காரணமாக பொது மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் வீட்டிலேயே முடங்கினார்கள்.
இதனால் நாகர்கோவில் நகர பகுதியில் உள்ள சாலைகள் வெறிச்சோடியது. நாகர்கோவில் நகர பகுதியில் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழைநீர் தேங்கியது. இடலாக்குடி பகுதியில் சாலையில் ராட்சத பள்ளம் கிடக்கிறது. இதனால் அந்த பள்ளத்தில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள். சாலையின் நடுவே கிடக்கும் பள்ளத்தில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது.

இதனால் அந்த பகுதியில் மரம் நடப்பட்டு வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அந்த பகுதியில் வாகன ஓட்டிகள் மெதுவாக சென்றனர். இதையடுத்து அங்கு கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. கன்னியாகுமரி பகுதியில் காலை முதலே கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் லாட்ஜூகளிலே முடங்கினார்கள். தொடர் மழையின் காரணமாக கன்னியாகுமரி கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது.
தொடர்ந்து மழை கொட்டியதால் சூரிய உதயத்தையும் பார்க்க முடியவில்லை. அஞ்சுகிராமம், கொட்டாரம், மயிலாடி, இரணியல், குளச்சல், கோழிப்போர்விளை, முள்ளங்கினாவிளை, ஆணைக்கிடங்கு, பூதப்பாண்டி மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது. முள்ளங்கினாவிளையில் அதிகபட்சமாக 48.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளதால் பொது மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். குலசேகரம், தடிக்காரன் கோணம், கீரிப்பாறை பகுதியில் உள்ள ரப்பர் தோட்டங்களிலும் மழைநீர் தேங்கியுள்ளது. ரப்பர் மரங்களில் உள்ள சிரட்டைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் ரப்பர் பால் உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.
தோவாளை, செண்பகராமன்புதூர் பகுதிகளில் செங்கல் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களிலும் இரவு முதலே கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் கடற்கரை கிராமங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. மீனவர்கள் கடலுக்கு செல்லக்கூடாது என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
- ராஜேஷ் குமார், கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு சார்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 225 மீனவ குடும்பங்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது.

குளச்சலில் நடைபெற்ற இந்த விழாவில் மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர்மனோ தங்கராஜ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பிரின்ஸ் மற்றும் ராஜேஷ் குமார், கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.






