என் மலர்
உள்ளூர் செய்திகள்

கூடுதல் வகுப்பறைகள் கட்ட விஜய் வசந்த் எம்.பி. அடிக்கல் நாட்டினார்
- பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 22 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
- காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கேசவன் புத்தன்துறை கடற்கரை கிராமத்தில் அமைந்துள்ள புனித மரிய அன்னை மேல்நிலை பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் தேவை என்ற கோரிக்கையை ஏற்று பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 22 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதற்கான பணிகளுக்கு பாரளுமான்ற உறுப்பினர் விஜய் வசந்த் அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கு தந்தை பென்சிகர், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.டி. உதயம், காங்கிரஸ் கமிட்டி வட்டார தலைவர் அசோக் ராஜ், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் இதில் கலந்து கொண்டனர்.
Next Story






