என் மலர்
கள்ளக்குறிச்சி
- போலீசார் மாவட்டம் முழுவதும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டு வருகின்றனர்.
- அரசு மதுபான பாட்டி களை பதுக்கி வைத்து விற்பனை செய்யும் போது கையும் களவுமாக கைது செய்யபட்டார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு மோகன்ராஜ் உத்தரவின்படி பொங்கல் பண்டி கையை யொட்டி போலீசார் மாவட்டம் முழுவதும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி பண்டி கை நாட்களில் சட்ட விரோதமாக கஞ்சா, கள்ளச்சாராயம் கடத்தல் மற்றும் விற்பனையை முற்றிலுமாக ஒழிக்க 7 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்தும், 6 மதுவிலக்கு சிறப்பு போலீசார் தனிப்படை அமைத்தும் மதுவிலக்கு சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் நேரடி கட்டுப்பாட்டில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜ் தலைமை யில் தனிப்படை அமைத்து மாவட்டம் முழுவதும் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி நைனார்பாளையம் டாஸ்மாக் கடை எதிரே செம்பாக் குறிச்சி கிரா மத்தைச் சேர்ந்த மணி கண்டன் (வயது 25). என்பவர் சட்டவிரோதமாக அரசு மதுபான பாட்டி களை பதுக்கி வைத்து விற்பனை செய்யும் போது கையும் களவுமாக கைது செய்யபட்டார்.
அவரிடமிருந்து சுமார் 1032 அரசு மதுபான பாட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல் சின்னசேலம் போலீஸ் நிலைய எல்லைக் குட்பட்ட வினை தீர்த்தா புரம் பகுதியை சேர்ந்த ரவிக்குமார் என்பவரிட மிருந்து 70 அரசு மதுபான பாட்டில்கள் கைப்பற்ற பட்டது. மாவட்டம் முழுவதும் போலீசார் அதிகாலை முதல் தீவிர மதுவிலக்கு சோத னையில் ஈடுபட்டு வரும் நிலையில், கரியா லூர் போலீஸ் நிலைய எல்லைக் குட்பட்ட அரண்மனை புதூர் தெற்கு ஓடையில் ஏழுமலை என்பவருக்கு சொந்தமான நிலத்தில் சுமார் 200 லிட்டர் பிடிக்ககூடிய 3 பிளாஸ்டிக் பேரல்களில் இருந்த 600 லிட்டர் கள்ளச்சாரய ஊரலை கண்டுபிடித்து சம்பவ இடத்திலேயே அழித்தனர். ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 27 பேர் மீது 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 14 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்து இருசக்கர வாகனம், 1679 மதுபான பாட்டில்க ளும், 600 லிட்டர் கள்ளச்சா ராய ஊரலும் கைப்பற்றப் பட்டுள்ளது.
- கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
- யாரும் இல்லாத நேரத்தில் சஞ்சீவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட தாக கூறப்படுகிறது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கரா புரம் வட்டம் மூங்கில்து றைப்பட்டு அடுத்த புத்திராம்பட்டு பகுதி யைச் சேர்ந்தவர் ராம கிருஷ்ணன். இவரது மனைவி சஞ்சீவி (வயது 21). இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சஞ்சீவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட தாக கூறப்படுகிறது.
இதுபற்றிய தகவல் அறிந்து வந்த வடபொ ன்பரப்பி போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சஞ்சீவியின் தந்தை தர்மலிங்கம், தனது மகளை சந்தேகப்பட்டு அடிக்கடி துன்புறுத்தி வந்ததாகவும், தற்கொலைக்கு தூண்டி யதாகவும் மருமகன் ராமகிருஷ்ணன், அவரது தந்தை ராமசாமி, தாய் ஜெயக்கொடி ஆகிய 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி போலீசில் புகார் ெசய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சஞ்சீவிக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் அவரது தற்கொலைக்கு வரதட்சணை கொடுமை காரணமா? என்பது குறித்து கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் பவித்ரா விசாரணை செய்து வருகிறார்.
- லோகநாதன் சொந்த வேலையாக தியாகதுருகத்தில் இருந்து எலவனாசூர்கோட்டைக்கு தனது மொபட்டில் நேற்று சென்று கொண்டிருந்தார்.
- கார் அவரது மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த லோகநாதனை அக்கம் பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் கோவிந்தபக்தர் தெருவைச் சேர்ந்தவர் லோகநாதன் (வயது 45). கூலி தொழிலாளி. இவர் சொந்த வேலையாக தியாகதுருகத்தில் இருந்து எலவனாசூர்கோட்டைக்கு தனது மொபட்டில் நேற்று சென்று கொண்டிருந்தார். அப்போது பெரியமாம்பட்டு அருகே சென்றபோது தனக்கு பின்னால் வந்த கார் அவரது மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த லோகநாதனை அக்கம் பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக சேலம் தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து அவரது தந்தை ராமமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் சேலம், காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்த கார் டிரைவர் கார்த்திக் (33) என்பவர் மீது தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- பால் குளிரூட்டும் நிலைய த்தினை மாவட்ட கலெக்டர் ஷ்வரன்குமார் ஆய்வு மேற்கொண்டார்.
- ஒன்றிய அலுவலகம் அமைத்து தரவும், ஆயத்த பணிகள் மேற்கொள்ளவும் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட பால் உற்பத்தி யாளர் கூட்டுறவு ஒன்றியத்தி ற்குட்பட்ட சின்னசேலம் பால் குளிரூட்டும் நிலைய த்தினை மாவட்ட கலெக்டர் ஷ்வரன்குமார் ஆய்வு மேற்கொண்டார். இதில் பால் குளிரூட்டப்படுவது மற்றும் குளிரூட்டு நிலையங்களில் உள்ள இயந்திரங்களின் செயல்பாடுகளை குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் ஒன்றியத்தில் பால் பதப்படுத்துதல், குளிரூட்டுதல் பணிகளை ஆய்வு செய்து, ஒன்றியத்தின் வளர்ச்சிக்கான ஆலோசனைகள் வழங்கினார். கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், புதிய அலுவலகம் அமைத்தல், புதிய ஆவின் பாலகங்கள் அமைத்தல், பணிகள் தொடர்பாக அறிவு ரைகளை வழங்கினார்.பால் பெருக்கு மற்றும் பால் உப பொருட்கள் தயாரிக்கவும் ஒன்றிய அலுவலகம் அமைத்து தரவும், ஆயத்த பணிகள் மேற்கொள்ளவும் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது சின்னசே லம் தாசில்தார் இந்திரா ,சின்னசேலம் யூனியன் துணை தலைவர் அன்புமணிமாறன்,, பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றிய தலைவர் ஆறுமுகம்,ஒன்றிய துணைத் தலைவர் பாலகிருஷ்ணன், ஒன்றிய பொது மேலாளர் ஈஸ்வர் மற்றும் இயக்குனர்கள் ஆவின் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- சாலை விரி வாக்கம் பணிகளின் போது குடிநீர் வழங்கும் பைப் லைன் உடைந்து போனதாக கூறப்படுகிறது.
- தியாகதுருகம்- திருக்கோ விலூர் சாலையில் கஸ்தூரி பாய் நகர் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.,
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தில் மணலூர் பேட்டை - ரிஷிவந்தியம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது இந்நிலையில் தியாக துருகம் கஸ்தூரிபாய் நகர் பகுதியில் சாலை விரி வாக்கம் பணிகளின் போது குடிநீர் வழங்கும் பைப் லைன் உடைந்து போனதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 3 நாட்களாக அப்பகு தியில் வசிக்கும் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு கடந்த 3 நாட்களாக குடிநீர் விநி யோகம் செய்யப்பட வில்லை இதனால் ஆத்திர மடைந்த அப்பகுதியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தியாகதுருகம்- திருக்கோ விலூர் சாலையில் கஸ்தூரி பாய் நகர் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்
போக்குவரத்துகவல் அறிந்த தியாகதுருகம் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் விரைந்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் தியாகதுருகம்- திருக்கோ விலூர் சாலையில் சுமார் மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- கரும்பு ஏற்றி வந்த டிராக்டர் மோதி வாலிபர் பலியானார்.
- தன்னுடன் வேலை செய்யும் தொழிலாளர்களை அக்ராய பாளையத்திற்கு விடுவதற்காக தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
சின்னசேலம், ஜன. 14-
கள்ளக்குறிச்சி வி.ஓ.சி.நகரை சேர்ந்த சாகுல் ஹமீத் என்பவர் கள்ளக்குறிச்சியில் உள்ள லேத்து பட்டறையில் வேலை செய்து வருகிறார். வழக்கம் போல் நேற்று வேலையை முடித்துவிட்டு தன்னுடன் வேலை செய்யும் தொழிலாளர்களை அக்ராய பாளையத்திற்கு விடுவதற்காக தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். பின்னர் அக்ராய பாளையத்தில் அவர்களை இறக்கிவிட்டு மீண்டும் கள்ளக்குறிச்சியில் உள்ள தனது வீட்டிற்கு செல்வதற்காக இரவு 10.30 அக்கரா பாளையத்திலிருந்து கள்ளக்குறிச்சிக்கு செல்லும் சாலையில் முத்தையா மில் அருகே சென்று கொண்டிருக்கும் பொழுது புதுப்பல்லக் கச்சேரி ஊரை சேர்ந்த பாண்டுரங்கன் என்பவர் டிராக்டரில் கரும்பு ஏற்றிக்கொண்டு கச்சிராயபாளையம் நோக்கி வந்து வந்தவர் எதிர்பாராத விதமாக சாகுல் ஹமீத் சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த அடிப ட்டார் பின்னர் அடிபட்டு கீழே கிடந்தவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் கள்ள க்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது பின்னர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இது குறித்து கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
- போலீசார் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர்.
- தனித்தனியாக சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட் டம் சங்கராபுரம் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்ம ஜோதி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது குளத்தூர் பகுதியை சேர்ந்த ஏழுமலை (வயது42), மூரார்பாளையத்தை சேர்ந்த கருப்பன் (50), விரியூரை சேர்ந்த ரமேஷ் (39) ஆகிய 3 பேரும் தனித்தனியாக சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 200 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.
- விண்ணப்பங்கள் வருகிற 25-ந் தேதி மாலை 5.45 மணிக்குள் வரவேற்கப்படுகிறது.
- மாவட்ட கலெக்டர் அலுவலக இணையதளம் https://kallakurichi.nic.in என்ற முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பி கூறியிரு ப்பதாவது:-
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற சுகாதார நல வாழ்வு மையத்தில் காலியாக உள்ள 54 செவிலியர் பணியிடங்களை தேசிய நல வாழ்வு குழுமத்தின் மூலமாக ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட நலச்சங்கம் மூலமாக மாதம் 18 ஆயிரம் தொகுப்பு ஊதியத்தில் நியமனம் செய்திடும் வகையில் விண்ணப்ப ங்கள் வருகிற 25-ந் தேதி மாலை 5.45 மணிக்குள் வரவேற்கப்படுகிறது.
மேலும் இப்பணியி டத்திற்கான அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படி வங்களை கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக இணையதளம் https://kallakurichi.nic.in என்ற முகவரியில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தகுந்த ஆவணங்களுடன் செயலாளர், துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள், மாவட்ட நல வாழ்வு சங்கம், துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அலுவலகம், பெருவங்கூர் ரோடு, கள்ளக்குறிச்சி-606 213 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் வழியாகவோ அனுப்பி வைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் குறிப்பிட்ட காலக்கெடுவிற்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.
- சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக ஆசைத்தம்பி பணியாற்றி வந்தார்.
- சிகிச்சை பலனின்றி பரிதாபமாக ஆசைத்தம்பி இறந்தார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள திருநாவலூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக ஆசைத்தம்பி பணியாற்றி வந்தார். இவர் உளுந்தூர்பேட்டையில் உள்ள போலீஸ் குடியி ருப்பில் வசித்து வந்தார். நேற்று இரவுஇவர் நெஞ்சுவலிக்கிறது என்று கூறி உள்ளார். அதன் பெயரில் அவர் குடும்பத்தி னர் அக்கம் பக்கத்தினர் அவரை உடனடி யாக உளுந்தூர்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக ஆசைத்தம்பி இறந்தார். இவரது சொந்த ஊர் வானூர் அருகே புதுப்பாளையம் கிராம மாகும். இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- போலீசார் ஆணைமடுவு கிராமத்தில் ரோந்துப்பணி மேற்கொண் டனர்.
- நந்தினி என்பவர் வீட்டில் சாராயத்தை பதுக்கி விற்பனை செய்து கொண்டிருந்தார்.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் அருகே வடபொன்பரப்பி சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் தலைமையிலான போலீ சார் ஆணைமடுவு கிராமத்தில் ரோந்துப்பணி மேற்கொண் டனர். அப்போது அதே ஊரை சேர்ந்த ஆனந்த் மனைவி நந்தினி என்பவர் வீட்டில் சாராயத்தை பதுக்கி விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை போலீசார் கைது செய்து அவர் மீது வழக்கு பதிந்து அவரிடம் இருந்து 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
- கணியாமூரில் சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள 4 முனை சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
- 2.5 டன் யூனிட் கருங்கல் ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
விழுப்புரம் புவியியல் மற்றும் சுரங்கத்துறை சார்பில் உதவி புவியிலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் தனி துணை வட்டாட்சியர் மற்றும் தனி வருவாய் ஆய்வாளர் (கணிமம்) ஆகியோருடன் கணியாமூரில் சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள 4 முனை சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அனுமதியின்றி 2.5 டன் யூனிட் கருங்கல் ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்தனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பிறகு உதவி புவியிலாளர் பாலசுப்பிரமணியன் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- தமிழ்நாடு கிராம மேல்நிலை தொட்டி இயக்குபவர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் சங்கம் மாவட்ட தலைவர் ஜெய்சங்கர் தலைமை தாங்கி னார்.
- தூய்மை காவலர்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டை வழங்க வேண்டும்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு கிராம மேல்நிலைத் தொட்டி இயக்குபவர்கள் தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் சங்கம் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் எதிரே நடைபெற்ற முற்றுகை போராட்டத்திற்கு தமிழ்நாடு கிராம மேல்நிலை தொட்டி இயக்குபவர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் சங்கம் மாவட்ட தலைவர் ஜெய்சங்கர் தலைமை தாங்கி னார். மாவட்ட இணை செய லாளர் அண்ணாமலை, மாவட்ட துணை செய லாளர் பழனிசாமி, மாவட்டத் துணைத் தலைவர் ராஜேந்திரன், மாவட்ட அமைப்பாளர் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் வர வேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக மாநிலத் தலைவர் கிருஷ்ண சாமி, மாநில செயலாளர் கனி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் கொளஞ்சிவேலு, மாவட்ட செயலாளர் சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இதில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்கு பவர்கள் மற்றும் தூய்மை காவலர்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டை வழங்க வேண்டும். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். நிலுவை ஊதியம் மற்றும் அகவிலைப்படி வழங்க வேண்டும். பொங்கல் கருணைத்தொகை வழங்க வேண்டும், ஒவ்வொரு மாதமும் 10- ந் தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரை ஆற்றினர். அப்போது கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம், தியாகதுருகம், ரிஷிவந்தியம் உள்ளிட்ட 9 ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த ஒன்றிய நிர்வாகி கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்கு பவர்கள், தூய்மை பணியா ளர்கள், தூய்மை காவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.






