என் மலர்
கள்ளக்குறிச்சி
- வயலுக்கு தண்ணீர் பாய்ச்சி கொண்டி ருந்த பொழுது திடீரென செல்வராஜிக்கு வலிப்பு ஏற்பட்டது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மே ற்கொண்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள நல்லாத்தூர் காட்டு க்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 43).விவசாயி. இவருக்கு அடிக்கடி வலிப்பு ஏற்படும். இதனால் மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று வயலுக்கு தண்ணீர் பாய்ச்சி கொண்டி ருந்த பொழுது திடீரென செல்வராஜிக்கு வலிப்பு ஏற்பட்டது.
பின்னர் அருகில் இருந்தவர்கள் செல்வராஜை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை மேற்கொண்ட வந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து கச்சிரா யபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மே ற்கொண்டு வருகின்றனர்.
- பள்ளி முடிந்ததும் தனது நண்பர் சாலம் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
- இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அபுபக்கரின் இடது கால் மீது டிராக்டர் சக்கரம் ஏறியது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே ரிஷிவந்தியம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஜாகீர்உசேன் . அவரது மகன் அபுபக்கர்(வயது15). சித்தால் அரசு மாதிரி பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் பள்ளி முடிந்ததும் தனது நண்பர் சாலம் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை அபுபக்கர் ஓட்டினார். அரியாந்தக்கா அருகே வந்தபோது கரும்பு ஏற்றி வந்த டிராக்டர் அபுபக்கர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அபுபக்கரின் இடது கால் மீது டிராக்டர் சக்கரம் ஏறியது. சாலமுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இதுபற்றிய தகவல் அறிந்து வந்த ரிஷிவந்தியம் போலீசார் காயம் அடைந்த மாணவன் உள்பட இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அபுபக்கர் பரிதாபாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- மருத்துவர்கள் இல்லாததால் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து கொடுக்க மல்லிகாவின் உறவினர்கள் கேட்டுள்ளனர்.
- 2 மருத்துவர்களை வேறு இடத்திற்கு மாறுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வரா யன்மலை கீரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த பாக்கியராஜ் மனைவி மல்லிகா (வயது 26). கர்ப்பிணியான இவருக்கு கடந்த 19-ந்தேதி நள்ளிரவில் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. மல்லிகாவின் உறவினர்கள் சோரப்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு மருத்துவர்கள் இல்லாததால் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து கொடுக்க மல்லிகாவின் உறவினர்கள் கேட்டுள்ளனர். 108 ஆம்புலன்ஸ் வருவதற்குள் மல்லிகாவிற்கு பிரசவ வலி அதிகமானது. உடனடியாக பணியில் இருந்து செவிலியர்கள் சஞ்சம்மாள், ராதிகா ஆகியோர் பிரசவம் பார்ததுள்ளனர். இதில் பெண் குழந்தை பிறந்து சிறிது நேரத்திலேயே இறந்துவிட்டது. இதையடுத்து மல்லிகாவும் இறந்துவிட்டார்.
இத்தகவல் கீரப்பள்ளி கிராம மக்களிடம் பரவியதை அடுத்து சோரப்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு 100-க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். அங்கிருந்த மல்லிகாவின் உறவினர்களுடன் சேர்ந்து அரசு ஆஸ்பத்திரிக்கு எதிரில் நேற்று அதிகாலை சாலைமறியல் ஈடுபட்டனர். இதனால் சங்கராபுரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த கோட்டாட்சியர் பவித்ரா, போலீஸ் உதவி சுப்பிரண்டு ரமேஷ் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கீரப்பள்ளி கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் அந்த மக்களின் கோரிக்கையை ஏற்ற அதிகாரிகள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வழங்கினர்.
மேலும், பணியில் இல்லாத 2 மருத்துவர்களை வேறு இடத்திற்கு மாறுதல் செய்தனர். பணியில் இருந்து பிரசவம் பார்த்த செவிலியர்கள் சஞ்சம்மாள், ராதிகா ஆகியோரை சஸ்பெண்ட் செய்தனர். உடனடியாக வேறு 2 செவிலியர்களை சுகாதாரத் துறை இணை இயக்குனர் ராஜா நியமனம் செய்தார். இதையடுத்து சாலை மறியலை கீரப்பள்ளி கிராம மக்கள் கைவிட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கச்சிராயப்பாளையம் போலீசார் இறந்து போன தாய் மற்றும் பச்சிளங் குழந்தையின் உடலை கைப்பற்றி கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
- கிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான 20-க்கும் மேற்பட்ட கோழிகளை மர்ம விலங்கு பிடித்து சென்று கடித்து கொன்றது. மர்மவிலங்கு கடித்த இவரது நாய் இறந்துகிடந்தது,
- மர்ம விலங்கின் நடமா ட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்,
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட காரனூர் கிராமத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மர்ம விலங்கு நடமாட்டம் இருப்பதாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்து வந்தனர் கடந்த சில நாட்களுக்கு முன்பு காரனூர் கிராமத்தில் கிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான 20-க்கும் மேற்பட்ட கோழிகளை மர்ம விலங்கு பிடித்து சென்று கடித்து கொன்றது இதனை தொடர்ந்து விளை நிலத்தில் மர்ம விலங்கு கடித்து நாய் இறந்து கிடந்தது. இது குறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அ தன்படி விழுப்புரம் மாவட்ட வன அலுவலர் சுமே ஷ்சோமன், கள்ளக்குறிச்சி வனச்சரக அலுவலர் கோவிந்தராஜி, வனவர் சின்னதுரை ஆகியோர் காரனுாரில் மர்ம விலங்கு நடமாட்டம் இருப்பதாக கூறப்பட்ட வயல் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்
. அங்கு விளைநிலத்தில் பதிந்திருந்த மர்மவிலங்கின் கால் தடத்தை ஆய்வு செய்தனர் மேலும் மர்ம விலங்கின் எச்சத்தை சேகரித்து ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பி வைத்தனர். மர்ம விலங்கின் நடமாட்டத்தை கண்காணிக்க 2 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்துவதாகவும், இரவு நேரங்களில் பொது மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என வனத்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் அறிவுறுத்தியுள்ளனர் இதேபோல் ஊராட்சி நிர்வாகம் சார்பில் மர்ம விலங்கு சுற்றி திரிவதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், கால்நடைகளை பாதுகா ப்பாக வைத்து கொள்ளவும் ஒலிப்பெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டது கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் குறிப்பாக நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வயல் பகுதிகளில் மர்ம விலங்குகளின் நடமாட்டம் இருப்பதாகவும், இந்த விலங்கு செந்நாய், சிறுத்தை, கரடி, காட்டுப் பூனை ஆகிய வற்றில் ஏதாவது ஒன்றாக இருக்கலாம் எனவும் அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர் மர்ம விலங்கின் நடமா ட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளதாகவும், வனத்துறையினர் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
- இவரது கணவருக்கு சக்கரை வியாதியும் ரத்த கொதிப்பும் இருந்தது, இந்நிலையில் இவர் கடந்த ஒரு வாரமாக குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததால், அவரது மனைவி திட்டியதாக கூறப்படுகிறது
- இதனால், வயலுக்கு அடிக்கவைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்ததால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்,
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டம் எலவடி கிராமத்தில் வசிக்கும் முருகன் (வயது47) விவசாயம் தொழில் செய்து வரும் இவருக்கு லட்சுமி (42) என்ற மனைவியும் அஜித்(24) அபிதா(22) என்ற மகனும் மகளும் உள்ளதாக கூறப்படுகிறது. அஜித் வெளிநாட்டில் வேலை செய்து வருவதாக தெரிகிறது. அபிதாவிற்கு திருமணம் ஆகி சென்றுவிட்டார் என கூறப்படுகிறது
. முருகனுக்கு சர்க்கரை வியாதியும் ரத்த கொதிப்பும் இருந்து வருவதாகவும் அதற்கு மருந்து சாப்பிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் முருகன் கடந்த ஒரு வாரமாக குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தவரை அவரது மனைவி திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் நேற்று மாலை வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்து விட்டதாக கூறப்படுகிறது. பின்னர் முருகனை சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வந்தார். இன்று அதிகாலை சிகிச்சை பலனளிக்காமல் முருகன் இறந்து போனார். இது குறித்து அவரது மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து சின்னசேலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- உளுந்தூர்பேட்டை அருகே வேன் மோதி விவசாயி பலியானார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா கிளியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனார் (வயது49) இவர் வீட்டில் இருந்து புறப்பட்டு உளுந்தூர்பேட்டைக்கு சொந்த வேலையாக சென்று திரும்பிக் கொண்டிருந்தபோது திருவெண்ணைநல்லூர் ரோடு பாண்டூர் காலனி மாரியம்மன் கோவில் அருகே சென்று கொண்டிருந்தபோது திருக்கோவிலூரில் இருந்து கடம்பூர் நோக்கி சென்ற வேன் அய்யனார் மீது மோதி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலே இறந்தார்.
தகவலறிந்த உளுந்தூர்பேட்டை இன்ஸ்பெ க்டர் தமிழ்வாணன் சப்-இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து போன அய்யனாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
- பொங்கல் பண்டிகையையொட்டி அப்பகுதியில் நடைபெற்ற இசை நாற்காலி போட்டியை ராஜியின் மகன் பிரவீன்ராஜ் பார்க்க சென்றார்.
- கஜேந்திரன் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து அசிங்கமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை அடுத்த அரசம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராஜி (வயது 43). பொங்கல் பண்டிகையையொட்டி அப்பகுதியில் நடைபெற்ற இசை நாற்காலி போட்டியை ராஜியின் மகன் பிரவீன்ராஜ் பார்க்க வந்தார் அப்போது அதே ஊரை சேர்ந்த ராஜா மகன் கஜேந்திரன் (19) கூச்சலிட்டபடி கொண்டு பிரவீன்ராஜ் மீது விழுந்ததாக தெரிகிறது. இதை தட்டிக்கேட்ட ராஜியை, கஜேந்திரன் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து அசிங்கமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்தார்
. இது குறித்து ராஜி கொடுத்த புகாரின் பேரில் அரசம் பட்டை சேர்ந்த கஜேந்திரன், ரமணா (18), ராஜா மனைவி அன்பு (38) ஆகியோர் மீது சங்கராபுரம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சந்தியா வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர் இதே போல் விளையாட்டு போட்டியை பார்க்க வந்த கஜேந்தி ரனை பிரவீன்ராஜ் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கஜேந்திரன் கொடுத்த புகாாின் பேரில் ராஜி, இவரது மனைவி காந்தி (38), மகன் பிரவீன்ராஜ் மற்றும் சரவணராஜ், விக்னேஷ் (22), முருக வேல் (34), முருவாயி (40) ஆகிய 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜி, விக்னேஷ், முருகவேல், முரு வாயி, காந்தி ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
- டெனிஷா நாயகியை அவரது பெற்றோர் வீட்டில் விட்டு விட்டு சங்கராபுரம் சென்றனர்.
- எதிர்பாராதவிதமாக அவரது உடையில் தீப்பிடித்து கொண்டது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் பகண்டை கூட்டுரோட்டு அடுத்த மையனூர் கிராமத்தை சேர்ந்தவர் மத்தேயு மகள் டெனிஷா நாயகி (வயது 18). இவர் மூளை வளர்ச்சி இல்லாமல் மனநலம் குன்றிய நிலையில் இருந்தார். இந்த நிலையில் டெனிஷா நாயகியை அவரது பெற்றோர் வீட்டில் விட்டு விட்டு சங்கராபுரம் சென்றனர்.
அப்போ து டெனிஷா நாயகி சாலை யோரம் கிடந்த தீப்பெட்டி யை எடுத்து பற்ற வைத்தபோது எதிர்பாராதவிதமாக அவரது உடையில் தீப்பிடித்து கொண்டது. இதில் வெப்பம் தாங்க முடியாமல் அவர் கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் பகண்டை கூட்டு ரோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விவசாய நிலம் அருகில் சோளம் பயிர் செய்து அறுவடை செய்துள்ள இடத்தில் நிரோஷாவின் பசு மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன
- இதைப்பார்த்து ஆத்தி ரமடைந்த சாமிகண்ணு தன்னிடம் இருந்த கொடுவாளால் மாடுகளின் வால் மற்றும் கால் பகுதியில் சரமாரியாக வெட்டினார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த மோட்டாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சாமிகண்ணு. இவரது மனைவி நிரோஷா (வயது 33). இவரும், இவரது கணவரும் 2 கறவை மாடுகள் வைத்து, கூலி வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் அதே ஊரை சோ்ந்த பிச்சன் மகன் சாமிகண்ணு என்பவரின் விவசாய நிலம் அருகில் சோளம் பயிர் செய்து அறுவடை செய்துள்ள இடத்தில் நிரோஷாவின் பசு மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன.
இதைப்பார்த்து ஆத்தி ரமடைந்த சாமிகண்ணு தன்னிடம் இருந்த கொடுவாளால் மாடுகளின் வால் மற்றும் கால் பகுதியில் சரமாரியாக வெட்டினார். இதனால் ரத்தம் சொட்ட... சொட்ட... வலி தாங்க முடியாமல் மாடுகள் அலறின. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த நிரோஷா, சாமிகண்ணுவிடம் தட்டிக் கேட்டபோது அவர் ஆபாசமாக திட்டி கொடுவாளை காட்டி மிரட்டியதாக தெரிகிறது. பின்னர் இது குறித்து நிரோஷா கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பேனர் மீது அதேபகுதியைச் சேர்ந்த சிகாமணி மகன் சந்தோஷ் (18) என்பவர் கல்லை எரிந்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
- சந்தோஷ் அரிவாளால் மாயவனின் கழுத்து மற்றும் இடது கையில் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி அருகே தண்டலை கிராமத்தைச் சேர்ந்தவர் வேம்பு மகன் மாயவன் (வயது 42) இவர் விஜய் ரசிகர் மன்ற துணைத் தலைவராக உள்ளார். இந்நிலையில் இதே கிராமத்தில் மாரியம்மன் கோவில் அருகே விஜய் ரசிகர் மன்ற பேனர் வைத்துள்ளனர் இந்த பேனர் மீது அதேபகுதியைச் சேர்ந்த சிகாமணி மகன் சந்தோஷ் (18) என்பவர் கல்லை எரிந்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனை மாயவன் தட்டி கேட்டபோது ஆத்திரம் அடைந்த சந்தோஷ் அரிவாளால் மாயவனின் கழுத்து மற்றும் இடது கையில் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இதில் படுகாயம் அடைந்த மாயவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து மாயவன் கொடுத்த புகாரின் பேரில் சந்தோஷ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- பொங்கல் பண்டிகையை ஒட்டி லோகிதாசின் குடும்பத்தினர் இரவு நேரம் வீட்டின் முன்பு கோலம் போட்டனர்.
- லோகிதாசை அவரது குடும்பத்தினர் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் பகண்டை கூட்டு ரோடு அருகே தொண்டனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் மகன் லோகிதாஸ்(28) தொழிலாளி. பொங்கல் பண்டிகையை ஒட்டி லோகிதாசின் குடும்பத்தினர் இரவு நேரம் வீட்டின் முன்பு கோலம் போட்டனர். அப்போது போதிய வெளிச்சம் இல்லாமல் அவர்கள் சிரமப்படுவதை பார்த்த அவர் மின் விளக்கு வசதி செய்து கொடுப்பதற்காக வீட்டிலிருந்து மின்ஒயரை தெருவுக்கு எடுத்து வந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரை மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்தார். உடனே லோகிதாசை அவரது குடும்பத்தினர் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி லோகிதாஸ் இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் பகண்டை கூட்டுரோடு போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வேன் சற்றும் எதிர்பாரா நேரத்தில் பூங்காவனத்தில் மீது மோதியது.
- பூங்காவனம் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தார்.
கள்ளக்குறிச்சி:
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் தாலுக்கா மாமந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம். விவசாயம் செய்து வரும் இவரின் மனைவி பூங்காவனம் (வயது 70). இவர் நேற்று மாலை மடப்பட்டு பகுதிக்கு சென்று வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கி கொண்டு நடந்தே வீடு திரும்புகிறார். அப்போது இரவு 7 மணியளவில் திருச்சியில் இருந்து சென்னை மார்க்கமாக வந்த வேன் சற்றும் எதிர்பாரா நேரத்தில் பூங்காவனத்தில் மீது மோதிவிடுகிறது. இதில் தூக்கிவீசப்பட்ட பூங்காவனம் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்து விடுகிறார்.
இது குறித்த புகாரின் பேரில் விபத்து நடந்த மடப்பட்டு ஐயனார் கோவில் அருகில் விரைந்து வந்த திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன், சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் விபத்தை ஏற்படுத்திய வேனை பறிமுதல் செய்தனர். இதில் விக்கிரவாண்டி பகுதியைச் சேர்ந்தவர் சதிஷ் (35) என்பவர் வேனை ஓட்டி வந்தது தெரியவந்தது. டிரைவரை கைது செய்த போலீசார் வேனை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். மேலும், சாலையில் சிதறிக்கிடந்த உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.






