என் மலர்
உள்ளூர் செய்திகள்

பகண்டை கூட்டு ரோடு அருகே இளம் பெண் பலி
- டெனிஷா நாயகியை அவரது பெற்றோர் வீட்டில் விட்டு விட்டு சங்கராபுரம் சென்றனர்.
- எதிர்பாராதவிதமாக அவரது உடையில் தீப்பிடித்து கொண்டது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் பகண்டை கூட்டுரோட்டு அடுத்த மையனூர் கிராமத்தை சேர்ந்தவர் மத்தேயு மகள் டெனிஷா நாயகி (வயது 18). இவர் மூளை வளர்ச்சி இல்லாமல் மனநலம் குன்றிய நிலையில் இருந்தார். இந்த நிலையில் டெனிஷா நாயகியை அவரது பெற்றோர் வீட்டில் விட்டு விட்டு சங்கராபுரம் சென்றனர்.
அப்போ து டெனிஷா நாயகி சாலை யோரம் கிடந்த தீப்பெட்டி யை எடுத்து பற்ற வைத்தபோது எதிர்பாராதவிதமாக அவரது உடையில் தீப்பிடித்து கொண்டது. இதில் வெப்பம் தாங்க முடியாமல் அவர் கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் பகண்டை கூட்டு ரோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






