என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    • மனோன்மணிக்கு கடந்த வருடத்தில் திருமணம் ஆகி 10 மாத கைக்குழந்தை உளளது.
    • மனோன்மணி எங்கேயும் கிடைக்காததால் சின்னசேலம் போலீசாரிடம் புகார் அளித்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள அமையாபுரம் கிராமத்தை சேர்ந்த மனோன்மணி. இவருடைய மனைவி ஐஸ்வர்யா (வயது 21). இவர்களுக்கு கடந்த வருடத்தில் திருமணம் ஆகி 10 மாத கைக்குழந்தை உளளது. இந்நிலையில் பெங்களூரில் வசிக்கும் தனது தாய் வீட்டிற்கு செல்வதாகக் கூறி கடந்த 17-ந்தேதி கைக்குழந்தையுடன் ஐஸ்வர்யா சென்றார்.

    அவரது செல்போனுக்கு மனோன்மணி தொடர்பு கொண்ட போது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. பெங்களூரில் வசிக்கும் ஐஸ்வர்யாவின் தாயை தொடர்பு கொண்டு கேட்டபோது பொழுது ஐஸ்வர்யா வரவில்லை என தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மனோன்மணி பல இடங்களில் தேடிப் பார்த்து எங்கேயும் கிடைக்காததால் சின்னசேலம் போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து மாயமான ஐஸ்வர்யா மற்றும் அவரது குழந்தையை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • 65 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் மோட்டாம்பட்டி, பாச்சேரி பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வீட்டின் அருகில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்ததாக மோட்டாம்பட்டி கிராமத்தை சேர்ந்த சாமிதுரை (வயது38), பாச்சேரியை சேர்ந்த சக்தி (29) ஆகிய 2 பேர் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 65 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    • ஜீவா வழக்கம்போல் நேற்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.
    • பழனியம்மாள் வீட்டின் கதவை உடைத்து 50 ஆயிரம் பணத்தை திருடி சென்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட எராவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது38)இவரது மனைவி ஜீவா (வயது 32). இவர்கள் விவசாயம் செய்து வருகின்றனர்.இந்நிலையில் ஜீவா வழக்கம்போல் நேற்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.நள்ளிரவில் முகமூடி அணிந்து வந்த 2 பேர் ஜீவா வீட்டின் கதவை உடைத்து ஜீவா வை கத்தியால் குத்தி கழுத்தில் இருந்த 7பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர்.

    பின்னர் அதே தெருவில் வசிக்கும் பழனியம்மாள் (வயது 65) வீட்டின் கதவை உடைத்து 50 ஆயிரம் பணத்தை திருடி சென்றனர். எராவூர் அருகில் உள்ள மேலூர் பஸ் நிறுத்தம் அருகே தனியாக வசிக்கும் பூபதி (வயது 60) வீட்டில் நேற்று நள்ளிரவில் 2 பேர் புகுந்து கொள்ளையடிக்க முயற்சி செய்தனர். வீடடில் நகை, பணம் இல்லாததால் ஆத்திரத்தில் பூபதியை கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். பின்னர் இது குறித்து தகவல் அறிந்த சின்ன சேலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • நண்பர்களுக்கு பார்ட்டி வைக்க புதுவையில் இருந்து மதுபானங்கள் வாங்கி வந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • மதுபாட்டில்கள் விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த மரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 34). இவர் புதியதாக வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்ய உள்ளார். இதையடுத்து நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பார்ட்டி வைக்க முடிவு செய்து, புதுவைக்கு சென்று மதுபாட்டில்கள் வாங்கினார். அதனை ஒரு கட்டைப்பையில் போட்டுக்கொண்டு மீண்டும் வீடு திரும்பினார். இவர் உளுந்தூர்பேட்டை பஸ் நிலையத்தில் இறங்கி, கிராமத்திற்கு செல்ல பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது பஸ் நிலையத்தில் ரோந்து பணியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜாபர் தலைமையில் போலீசார் ஈடுபட்டனர். போலீசாரை கண்டவுடன் கோவிந்தசாமி பதட்டமாக அங்கிருந்து வேகமாக நடந்தார். இதனைக் கண்ட போலீசார் அவரை மடக்கிப் பிடித்து பையை சோதனையிட்டனர். அதில் இருந்து புதுவை மதுபானங்களை கைப்பற்றி வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

    அதேபோல உளுந்தூ ர்பேட்டை கார்நேசன் வீதியைச் சேர்ந்த சாந்தா (60), மணலூர் சத்தியராஜ் (29) ஆகியோர் மதுபாட்டில்கள் விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அவர்களை கைது செய்து மது பாட்டில்களை பறிமுதல் செய்து, வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். உளுந்தூர்பேட்டை பகுதியில் கள்ளத்தனமாக சாராயம், மதுபானம், கஞ்சா விற்பனைகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுவார்கள் என துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • கார்முகிலன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து திடீரென ஸ்ரீராமை வெட்டியதுடன் அவரை தாக்கினர்.
    • இந்த வழக்கில் தலைமறை வாக உள்ள விநாயக மூர்த்தியை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் அருகே காடகனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீராம் (வயது 21). சம்பவத்தன்று இவர் தனது வீட்டிலிருந்து திருக்கோவிலூரில் உள்ள ஆஸ்பத்திரியில் பிரசவத்தி ற்கு அனுமதிக்கப்பட்டிருந்த தனது மனைவியை பார்க்க மோட்டார் சைக்கிளில் சென்றார்.திருக்கோவிலூர் -விழுப்புரம் சாலை காடகனூர் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது அங்கு மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்த வடகரை தாழனூர் மாதா கோவில் தெருவை சேர்ந்த கார்முகிலன், விநாயகமூர்த்தி ஆகிய 2 பேரும் ஸ்ரீராம் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை வழிமறித்து நிறுத்தினர். இதனையடுத்து கார்முகிலன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து திடீரென ஸ்ரீராமை வெட்டியதுடன் அவரை தாக்கினர். மேலும் ஸ்ரீராம் வைத்திருந்த செல்போன் மற்றும் ரூபாய் 1000 பணத்தை திருடிச் சென்றனர்.

    இது குறித்து ஸ்ரீராம் அரங்கண்டநல்லூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் அரகண்டநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா, சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட கார்முகிலன் மற்றும் விநாயகமூர்த்தி ஆகியோரை வலை வீசி தேடி வந்தனர். இந்நிலையில் பெங்களூருக்கு தப்ப முயன்ற கார்முகிலனை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கார்முகிலன் மீது அரகண்டநல்லூர் போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே கஞ்சா வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறை வாக உள்ள விநாயக மூர்த்தியை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

    • மாவட்ட கலெக்டர் பொதுமக்கள் மனுவாக கொடுத்ததை நாங்கள் ஆணையாக வழங்குவோம் என்று கூறினார்.
    • துணைத் தலைவர் நெடுஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே பல்லகச்சேரி மற்றும் பீளமேடு ஆகிய ஊராட்சிகளில் மக்களை தேடி மனுக்கள் பெறுதல் முகாம் நடைபெற்றது. பல்லகச்சேரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கி பேசியதாவது:-

    பொதுமக்கள் வழங்கும் அடிப்படை கோரிக்கைகள், நீண்டகால கோரிக்கைகளில் நிவர்த்தி செய்ய முடியும் கோரிக்கைகளை விரைவில் நிவர்த்தி செய்யப்படும். மேலும் நிவர்த்தி செய்ய முடியாத மனுக்கள் குறித்த காரணங்கள் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும். மேலும் பொதுமக்கள் மனுவாக கொடுத்ததை நாங்கள் ஆணையாக வழங்குவோம் என்று கூறினார். இதில் வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் புவனேஸ்வரி பெருமாள், ஒன்றிய குழு தலைவர் தாமோதரன், துணைத் தலைவர் நெடுஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் சின்னதுரை வரவேற்றார்.

    மேலும் இதனைத் தொடர்ந்து பீளமேடு ஊராட்சியில் நடைபெற்ற மக்களைத் தேடி மனுக்கள் பெரும் முகாமில் பொதுமக்களிடமிருந்து 353 மனுக்கள் பெறப்பட்டது. இதில் மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்பிரமணி, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் முரளி, தமிழ்நாடு மின்சார வாரிய உதவி இயக்குனர் கவிதா, வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்முருகன், ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை ஒன்றிய பொறியாளர் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • கள்ளக்குறிச்சியில் பா.ஜ.க. மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • சக்திவேல், சேகர், ரகுநாத பாண்டியன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே பா.ஜ.க. மகளிர் அணி சார்பில் தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட மகளிர் அணி தலைவி அலமேலு ஆறுமுகம் தலைமை தாங்கினார். ஓ.பி.சி.பிரிவு மாநில செயலாளர் செல்வநாயகம், சிறுபான்மை பிரிவு மாநிலத் துணைத் தலைவர் அசோக்குமார், மாவட்டச் செயலாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச் செயலாளர் ராஜேஷ் வரவேற்றார்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக மகளிர் அணி மாநில செயற்குழு உறுப்பினர் ரேகா, மாவட்ட தலைவர் அருள் ஆகியோர் கலந்து கொண்டு தமிழகத்தில் தெருக்கள் தோறும் டாஸ்மாக் கடையும், ஊர்கள் தோறும் கள்ளச்சாராயம் விற்பனை நடைபெறுவதாக கூறி கண்டன உரை நிகழ்த்தினார். இதைத் தொடர்ந்து தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதில் மாவட்டத் துணைத் தலைவர் சர்தார் சிங், மாவட்ட செயலாளர் மில் ஹரி, நிர்வாகிகள் பாக்கியராஜ், சக்திவேல், சேகர், ரகுநாத பாண்டியன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

    • சினேகா மற்றும் அதே கிராமத்தை சேர்ந்த லட்சுமணன் என்பவருக்கும் கடந்த 4வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது.
    • இதனால் சினேகா கடந்த ஒரு வருடமாக மாத்தூர் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சினேகா (வயது 22) இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த லட்சுமணன் என்பவருக்கும் கடந்த 4வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது.கல்யாணம் ஆனமுதலே கணவன் -மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சினேகா கடந்த ஒரு வருடமாக மாத்தூர் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி அன்று வீட்டில் இருந்த சினேகா திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அருகிலுள்ள இடங்களில் தேடிப் பார்த்து எங்கேயும் கிடைக்காததால் நேற்று கச்சிராயபாளையம் போலீஸ் நிலையத்தில் சினேகாவின் தாய் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து மாயமான சினேகாவை போலீசார் தேடி வருகின்றனர்.

    • திருக்கோவிலூர் அருகே தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • முருகன் சம்பாதிக்கும் பணத்தை வீட்டில் தராமல் வெட்டியாக செலவு செய்து வந்துள்ளார்

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூரை அடுத்த அரகண்டநல்லூர் போலீஸ் சரகம் மனம்பூண்டியைச் சேர்ந்தவர் முருகன்( வயது 55) தொழிலாளி. இவருக்கு 25 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி அனுராதா என்கிற மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். இரண்டு பெண் குழந்தை களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. இந்த நிலையில் முருகன் வேலைக்கு எதுவும் போகாமலும் அப்படியே வேலைக்கு போனாலும் சம்பாதிக்கும் பணத்தை வீட்டில் தராமல் வெட்டியாக செலவு செய்து வந்துள்ளார். இதனை அவரது மனைவி அனுராதா தட்டிக் கேட்டுள்ளார்.

    இதனால் விரத்தி அடைந்த முருகன் சம்பவத்தன்று தனது வீட்டின் படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் கேபிள் டி.வி. ஒயரில் தூக்கு போட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அப்போது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தூக்கில் தொங்கிய முருகனைக் காப்பாற்றி திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையிலும் பின்னர் மேல் சிகிச்சை க்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி முருகன் பரிதாபமாக உயிரிழந்தார் இது குறித்து தகவல் அறிந்த அரகண்ட நல்லூர் போலீசார் விரைந்து சென்று முருகன் உடலை கைப்பற்றி தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பிரகாசம் பணம் வாங்கி பல மாதங்கள் ஆகியும் பிரகாசம் வேலை வாங்கித் தராமல் ஏமாற்றி வந்தார்.
    • இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் அருகே உள்ள மணலூர்பேட்டை போலீஸ் சரகம் டி.அத்திப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாசம் (வயது 50) இவர் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த ஆர்.குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சகாய பன்னீர்செல்வம் (44) என்பவரிடம் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.1லட்சத்து 25ஆயிரம் பணம் வாங்கியிருக்கிறார். பணம் வாங்கி பல மாதங்கள் ஆகியும் பிரகாசம் வேலை வாங்கித் தராமல் ஏமாற்றி வந்தார்.

    இந்நிலையில் பணம் கொடுத்த சகாய பன்னீர்செல்வம் அத்திப்பாக்கம் கிராமத்திற்கு நேரில் சென்று பிரகாசத்திடம் பணத்தைக் கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த பிரகாசம் சகாயபன்னீர் செல்வத்தை திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனைதொடர்ந்து சகாய பன்னீர்செல்வம் கொடுத்த புகாரின் பேரில் மணலூர்பேட்டை போலீசார் பிரகாசத்தின் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    சங்கராபுரம், மே.20-

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் நரசிம்மஜோதி, ராஜா தலைமையிலான போலீசார்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சேஷசமுத்திரம் கிராமத்தில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த அதே பகுதியை சோ்ந்த ஜெயராமன்(வயது 63), அம்பிகா(42) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல் அரசம்பட்டு கிராமத்தில் சாராயம் விற்ற அதே ஊரை சேர்ந்த ரமேஷ்(44), ஆரூர் கிராமத்தில் சாராயம் விற்ற அர்ச்சுனன்(75), குளத்தூரில் சாராயம் விற்ற செல்வம்(40) ஆகியோரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் இவர்களிடமிருந்து மொத்தம் 150 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

    • ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட அமைப்பாளர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.
    • உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் செறியூட்டப் பட்ட அரிசியை உடனடி யாக நிறுத்த வேண்டும்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட அமைப்பாளர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட துணை அமைப்பாளர் கஜேந்திரன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் சையத்கரீம், ஒன்றிய செயலாளர் ஜெயப்பிரகாஷ், மாவட்ட அமைப்பு குழுவினர்கள் மணி, கே.சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ராமசாமி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

    இதில் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் செறியூட்டப் பட்ட அரிசியை உடனடி யாக நிறுத்த வேண்டும், நீர் நிலை களை தனியாருக்கு தாரை வார்க்கும் நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், இளைஞர் பெருமன்ற மாவட்ட தலைவர் அரசு, இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றியக்குழு நிர்வாகி சரண்ராஜ் மற்றும் விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×