search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்கராபுரத்தில்  விவசாய சங்கம் சார்பில்  கண்டன ஆர்ப்பாட்டம்
    X

    சங்கராபுரத்தில் விவசாய சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

    • ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட அமைப்பாளர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.
    • உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் செறியூட்டப் பட்ட அரிசியை உடனடி யாக நிறுத்த வேண்டும்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட அமைப்பாளர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட துணை அமைப்பாளர் கஜேந்திரன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் சையத்கரீம், ஒன்றிய செயலாளர் ஜெயப்பிரகாஷ், மாவட்ட அமைப்பு குழுவினர்கள் மணி, கே.சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ராமசாமி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

    இதில் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் செறியூட்டப் பட்ட அரிசியை உடனடி யாக நிறுத்த வேண்டும், நீர் நிலை களை தனியாருக்கு தாரை வார்க்கும் நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், இளைஞர் பெருமன்ற மாவட்ட தலைவர் அரசு, இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றியக்குழு நிர்வாகி சரண்ராஜ் மற்றும் விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×