search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கச்சிராயபாளையம் அருகே இளம் பெண் மாயம்
    X

    கச்சிராயபாளையம் அருகே இளம் பெண் மாயம்

    • சினேகா மற்றும் அதே கிராமத்தை சேர்ந்த லட்சுமணன் என்பவருக்கும் கடந்த 4வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது.
    • இதனால் சினேகா கடந்த ஒரு வருடமாக மாத்தூர் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சினேகா (வயது 22) இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த லட்சுமணன் என்பவருக்கும் கடந்த 4வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது.கல்யாணம் ஆனமுதலே கணவன் -மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சினேகா கடந்த ஒரு வருடமாக மாத்தூர் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி அன்று வீட்டில் இருந்த சினேகா திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அருகிலுள்ள இடங்களில் தேடிப் பார்த்து எங்கேயும் கிடைக்காததால் நேற்று கச்சிராயபாளையம் போலீஸ் நிலையத்தில் சினேகாவின் தாய் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து மாயமான சினேகாவை போலீசார் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×