என் மலர்
காஞ்சிபுரம்
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்ற தேர்தலில் 71.79 சதவீத வாக்குகள் பதிவாகின.
அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 78 சதவீதம் வாக்குகளும், குறைந்தபட்சமாக சென்னை மாவட்டத்தில் 59.40 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 69.47 சதவீதம் வாக்குகளும் பதிவாகின. தேர்தல் ஆணைய செயலியில் உள்ள தகவலின் அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தொகுதிகள் வாரியாக பதிவான வாக்குகள் விவரம்:-
ஆலந்தூர்- 59.77%
காஞ்சிபுரம்-60.45%
ஸ்ரீபெரும்புதூர்-74.03%
உத்திரமேரூர்-69.50%
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து வரும் சிறப்பு விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அவரது உத்தரவின்பேரில் சுங்க இலாகா அதிகாரிகள், துபாய் விமானத்தில் வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.
அப்போது ராமநாதபுரத்தைச் சேர்ந்த சகுபர் அலி (வயது 32), முகமது (40) ஆகியோரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் பதற்றமாகவும், பரபரப்பாகவும் காணப்பட்டனர். இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர்.
ஆனால் அதில் எதுவும் இல்லை. பின்னர் இருவரையும் தனியறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர். அதில் அவர்களின் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.
2 பேரிடம் இருந்தும் ரூ.12 லட்சம் மதிப்புள்ள 255 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேரிடமும் விசாரித்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடுபவர் அந்த கட்சியின் மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம். இவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மானாமதி ஊராட்சி உதவியாளரான குப்பன் அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்களுடன் சென்று அவருக்கு மாலை அணிவித்து ஆதரவு தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து உத்திரமேரூர் தாசில்தார் ஏகாம்பரம், குப்பனிடம் விசாரணை நடத்தி அவரை பணியிடை நீக்கம் செய்தார்.
இதற்கு முன்பு தி.மு.க. வேட்பாளர் சுந்தருக்கு ஆதரவு தெரிவித்ததாக சாலவாக்கம் ஊராட்சி செயலர் சதீஷ், திருப்புலிவனம் ஊராட்சி செயலர் சுபாஷ் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது மானாமதி ஊராட்சி உதவியாளர் குப்பன் அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்ததாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த மாத்தூர் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் சக்கரவர்த்தி (வயது 74). இவர் கடந்த 29-ந்தேதி ஸ்ரீபெரும்புதூர் சிங்கபெருமாள் கோவில் சாலையில் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். ஒரகடம் கூட்டு சாலை அருகே செல்லும்போது பின்னால் வந்த கன்டெய்னர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட சக்கரவர்த்தி படுகாயம் அடைந்தார்.
இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் ஒரகடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் தலைமையிலான போலீசார் சக்கரவர்த்தியை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி சக்கரவர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கன்டெய்னர் லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6-ந்தேதி நடைபெறுகிறது. தேர்தல் பணிகளை கண்காணிக்க காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் போலீஸ்துறை சார்பில் பார்வையாளராக ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரியான ஷியாம் சுந்தர் நியமிக்கப்பட்டிருந்தார். காஞ்சிபுரம் சுற்றுலா மாளிகையில் தங்கியிருந்த அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் அவரை பரிசோதித்தனர். இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு டாக்டர்களின் ஆலோசனையின் பேரில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவர் தங்கியிருந்த சுற்றுலா மாளிகை முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
ஸ்ரீபெரும்புதூர்:
சட்டமன்ற தேர்தலையொட்டி அரசில் கட்சியினர் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு செய்து வருகின்றனர்.
அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதை தடுக்க தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஸ்ரீபெரும்புதூர் (தனி)தொகுதியில் ஆங்காங்கே சோதனை சாவடி அமைத்து தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், சுங்குவார் சத்திரம் அடுத்த சோகண்டி சோதனை சாவடியில் பறக்கும் படை அதிகாரி அருண்குமார் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த பள்ளிபட்டு அடுத்த பாதிரிவேடு பகுதியை சேர்ந்த சீனிவாசன் மற்றும் அமாவாசை ஆகியோரை மடக்கி சோதனை செய்தனர். அவர்களிடம் உரிய ஆவணம் இல்லாமல் ரூ.66ஆயிரத்து 500 இருந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்து காஞ்சீபுரம் கருவுலத்தில் ஒப்படைத்தனர்.






