என் மலர்
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடுபவர் அந்த கட்சியின் மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம். இவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மானாமதி ஊராட்சி உதவியாளரான குப்பன் அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்களுடன் சென்று அவருக்கு மாலை அணிவித்து ஆதரவு தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து உத்திரமேரூர் தாசில்தார் ஏகாம்பரம், குப்பனிடம் விசாரணை நடத்தி அவரை பணியிடை நீக்கம் செய்தார்.
இதற்கு முன்பு தி.மு.க. வேட்பாளர் சுந்தருக்கு ஆதரவு தெரிவித்ததாக சாலவாக்கம் ஊராட்சி செயலர் சதீஷ், திருப்புலிவனம் ஊராட்சி செயலர் சுபாஷ் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது மானாமதி ஊராட்சி உதவியாளர் குப்பன் அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்ததாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த மாத்தூர் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் சக்கரவர்த்தி (வயது 74). இவர் கடந்த 29-ந்தேதி ஸ்ரீபெரும்புதூர் சிங்கபெருமாள் கோவில் சாலையில் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். ஒரகடம் கூட்டு சாலை அருகே செல்லும்போது பின்னால் வந்த கன்டெய்னர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட சக்கரவர்த்தி படுகாயம் அடைந்தார்.
இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் ஒரகடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் தலைமையிலான போலீசார் சக்கரவர்த்தியை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி சக்கரவர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கன்டெய்னர் லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6-ந்தேதி நடைபெறுகிறது. தேர்தல் பணிகளை கண்காணிக்க காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் போலீஸ்துறை சார்பில் பார்வையாளராக ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரியான ஷியாம் சுந்தர் நியமிக்கப்பட்டிருந்தார். காஞ்சிபுரம் சுற்றுலா மாளிகையில் தங்கியிருந்த அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் அவரை பரிசோதித்தனர். இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு டாக்டர்களின் ஆலோசனையின் பேரில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவர் தங்கியிருந்த சுற்றுலா மாளிகை முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
ஸ்ரீபெரும்புதூர்:
சட்டமன்ற தேர்தலையொட்டி அரசில் கட்சியினர் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு செய்து வருகின்றனர்.
அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதை தடுக்க தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஸ்ரீபெரும்புதூர் (தனி)தொகுதியில் ஆங்காங்கே சோதனை சாவடி அமைத்து தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், சுங்குவார் சத்திரம் அடுத்த சோகண்டி சோதனை சாவடியில் பறக்கும் படை அதிகாரி அருண்குமார் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த பள்ளிபட்டு அடுத்த பாதிரிவேடு பகுதியை சேர்ந்த சீனிவாசன் மற்றும் அமாவாசை ஆகியோரை மடக்கி சோதனை செய்தனர். அவர்களிடம் உரிய ஆவணம் இல்லாமல் ரூ.66ஆயிரத்து 500 இருந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்து காஞ்சீபுரம் கருவுலத்தில் ஒப்படைத்தனர்.
காஞ்சீபுரம்:
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் காஞ்சீபுரம் பிள்ளையார் பாளையம் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
தமிழகத்தில் மொத்தம் 11 சாராய ஆலைகள் உள்ளன. அதில் 7 ஆலைகள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தான் உள்ளது. அந்த சாராய ஆலைகளை கொண்டு வந்தது தி.மு.க..
தி.மு.க.வால் செயல்படும் மது ஆலையால் வருடத்திற்கு 2 லட்சம் பேர் இறக்கின்றனர்.
காஞ்சிபட்டு உடுத்தினால் பெண்கள் தேவதையாக மாறி விடுவார்கள். ஆனால் தற்போது காஞ்சீபுரம் மாவட்டத்தில் போலி பட்டு சேலைகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதன் காரணமாக நெசவு தொழில் நலிந்து வருகிறது.
வெளி மாநிலத்தில் இருந்து பட்டு புடவை வாங்க வரும் பொதுமக்களிடம் போலி பட்டு சேலைகள் விற்பனை செய்ய ஒரு கூட்டம் சங்கமே உருவாக்கியுள்ளது. அதனை தடுத்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
காஞ்சீபுரம் பெருநக ராட்சியை மாநகராட்சியாக மாற்ற தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு விவசாயி மீண்டும் தமிழ்நாட்டை ஆள போகிறார்.
ஒரு சொட்டு சாராயம் கூட இல்லாத தமிழகத்தை உருவாக்க பாடுபட்டு வருகிறேன். சாராயம் குடிப்பதனால் வருடத்திற்கு 2 லட்சம் பேர் இறக்கிறார்கள்.
44 சமுதாய தலைவர்கள், மதகுருமார்களுடன் சேர்ந்து கலைஞரை சந்தித்தேன். சாராயத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்து பேசினேன்.
இதன் எதிரொலியாக விற்பனை ஒரு மணி நேரம் குறைக்கப்பட்டது. சாராயக் கடையை முதன் முதலில் கொண்டுவந்தது தி.மு.க. தலைவர் கருணாநிதி தான்.
இவ்வாறு ராமதாஸ் பேசினார்.
பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூர் நேரு நகர் கண்ணகி தெருவில் மேற்கு வங்கத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி பாயேஸ் அலி (25) தனது மனைவி மற்றும் கை குழந்தையுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
மற்றொரு கட்டிட தொழிலாளி ஆதிமூலம் (44), அவரது மனைவி அமுதா மற்றும் மகன் நித்திஸ் என்கிற அப்பு ஆகியோருடன் அதே வீட்டின் மற்றொரு பகுதியில் வசித்து வருகின்றனர்.
பாயேஸ் அலியின் அக்கா கணவர் அஜிஜூஸ் அடிக்கடி அவரின் வீட்டிற்கு வந்து சென்றதில் அருகில் வசித்து வந்த அமுதாவுடன் கள்ளதொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த பாயேஸ் அலி இரண்டு நாட்களுக்கு முன்னர் அமுதா மற்றும் அவரது கணவரிடம் தட்டி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து இன்று மீண்டும் இருவரின் குடும்பத்தினருக்கிடையே வாய்தாகராறு ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த ஆதிமூலம், அமுதா மற்றும் மகன் நித்திஸ் ஆகியோர் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் பாயேஸ் அலியை சரமாரியாக குத்தியுள்ளனர்.
இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் சங்கர் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த பாயேஸ் அலியை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து ஆதிமூலம் மற்றும் அவரது மனைவி அமுதா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரனை நடைபெறுகிறது.
கொலைக்கு உடந்தையாக இருந்த அவர்களின் மகன் நித்திசை போலீசார் தேடி வருகின்றனர் இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தின் கழிவறையில் கேட்பாரற்று கிடந்த ரூ.19 லட்சம் மதிப்புள்ள 410 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து வரும் சிறப்பு விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் துபாய் விமானத்தில் வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர். அந்த விமானத்தில் வந்த பயணிகள் அனைவரும் கீழே இறங்கி சென்றபிறகு சுங்க இலாகா அதிகாரிகள் விமானத்தில் ஏறி ஆய்வு செய்தனர்.
அப்போது அந்த விமானத்தின் கழிவறையில் ஒரு பார்சல் கேட்பாரற்று கிடந்தது. அதை பிரித்து பார்த்தபோது அதில் ஒரு தங்க சங்கிலி மற்றும் கை வளையம் இருந்தது.
துபாயில் இருந்து அதனை விமானத்தில் சென்னைக்கு கடத்தி வந்த யாரோ, விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனைக்கு பயந்து விமானத்தின் கழிவறையில் அந்த பார்சலை வைத்துவிட்டு சென்று இருக்கலாம் என தெரிகிறது.
ரூ.19 லட்சம் மதிப்புள்ள 410 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதனை கடத்தி வந்தது யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.






