என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சென்னை விமானநிலையம்"
- சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சார்ஜா செல்லும் கல்ப் ஏா்வேஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது.
- சென்னையைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் மீது சந்தேகமடைந்த அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.
ஆலந்தூர்:
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சார்ஜா செல்லும் கல்ப் ஏா்வேஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதில் பயணம் செய்ய வந்த பயணிகளையும் அவர்கள் உடமைகளையும் சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது சென்னையைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் மீது சந்தேகமடைந்த அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் தனி அறையில் வைத்து விசாரணை நடத்தினர். அவருடைய சூட்கேசை சோதனை செய்த போது அதில் ஏராளமான காகித கவர்கள் இருந்தன.
அந்த கவா்களை பிரித்து பார்த்த போது. ஒவ்வொரு கவர்களுக்குள்ளும் ஒரு 500 சவுதி ரியால் கரண்சி மறைத்து வைக்கப்பட்டிருந்தது.மொத்தம் 339 கவா்களில் 339 சவுதி ரியால் கரண்சிகள் இருந்தன.
அந்த சவுதி ரியால் கரண்சிகளின் மொத்த மதிப்பு ரூ.34.23 லட்சம் ஆகும். இதையடுத்து சுங்க அதிகாரிகள், சவுதி ரியால் கரண்சிகளை பறிமுதல் செய்தனா். மேலும் பயணியின், சாா்ஜா விமான பயணத்தையும் ரத்து செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சுங்கத்துறை முதன்மை ஆணையா் 8 சுங்கத்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளாா்.
- 43 சுங்கத்துறை அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையம், துறைமுகம், சரக்குப்பிரிவான காா்கோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில், சுங்கத்துறை துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் என்று பலர் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பலர் தொடர்ந்து ஒரே இடத்தில் பணியாற்றி வந்ததால், இடம் மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
இதையடுத்து சென்னை சுங்கத்துறை தலைமை அலுவலக கூடுதல் ஆணையர் பிறப்பித்த உத்தரவில், துணை ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர்கள் 35 பேரை இடமாற்றம் செய்து உத்தரவிட்டார். இதைப்போல் சுங்கத்துறை முதன்மை ஆணையா் 8 சுங்கத்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளாா். மொத்தம் 43 சுங்கத்துறை அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதில் 30 பேர் உதவி ஆணையர்கள், 13 பேர் துணை ஆணையர்கள் ஆவர்.
இவர்கள் துறைமுகத்தில் இருந்து, சென்னை விமான நிலையத்திற்கும், சென்னை விமான நிலையத்தில் இருந்து துறைமுகம் மற்றும் கார்கோ பகுதிகளுக்கும், அதைப்போல் கார்கோவில் ஏற்றுமதி பிரிவில் பணியில் இப்பவா்கள், இறக்குமதி பகுதிக்கும், இறக்குமதி பகுதியில் இருப்பவர்கள் ஏற்றுமதி பகுதிக்கும், சிலர் விமான நிலைய கொரியர் அலுவலகம், போதை கடத்தல் தடுப்பு பிரிவு உள்ளிட்ட பகுதிகளுக்குப் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இது பற்றி சுங்க அதிகாரிகள் கூறும்போது, இது வழக்கமாக நடக்கும் பொது இடமாற்றம் தான். ஒரே இடத்தில் அதிக நாட்கள் பணியாற்றுவதை தவிா்ப்பதற்காக, நிர்வாக காரணங்களுக்காக இந்த இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்