என் மலர்
காஞ்சிபுரம்
காஞ்சீபுரம் அருகே வக்கீல் ஒருவர் மர்மநபர்களால் ஓட, ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் அடுத்த காரை கிராமத்தைச் சேர்ந்தவர் அழகரசன் (வயது 40). இவர் காஞ்சீபுரம் நீதிமன்றத்தில் வக்கீலாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று சென்னை-பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையையொட்டி காரை கிராமத்திற்குச் செல்லும் வழியில் தனது நண்பர் சங்கர் என்பவருடன் நின்று பேசிக் கொண்டிருந்த அழகரசனை, ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் சிலர் ஓட, ஓட விரட்டி பயங்கர ஆயுதங்களால் தலை, கை, கால்களில் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். இதனைத் கண்டு அதிர்ச்சியடைந்த அழகரசனின் நண்பர் சங்கர் அதை தடுக்க முயன்ற போது, அவரை அந்த கும்பல் வெட்டியதில் படுகாயமடைந்தார்.
இச்சம்பவம் குறித்து அறிந்த காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அழகரசனின் உடலை மீட்டு, காஞ்சீபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த சங்கரை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அப்போது அங்கு திரண்ட 50-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் மற்றும் உறவினர்கள் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய கோரி அரசு மருத்துவமனை எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். பிறகு போலீசார் குற்றவாளிகளை கைது செய்வது தொடர்பாக உறுதி அளித்ததன் பேரில், அவர்கள் களைந்து சென்றனர்.
இந்த நிலையில், கொலைக் குற்றவாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டி.சண்முகப்பிரியா உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தொழில் சம்பந்தமாக ஏதேனும் முன்விரோதத்தில் கொலை சம்பவம் நடந்துள்ளதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வக்கீல் ஒருவர் ஓட, ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் காஞ்சீபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சீபுரம் நகராட்சி முழுவதும் கொரோனா பரவலை தடுக்க சுகாதார அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். பரிசோதனைகளை அதிகரித்துள்ளனர்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. காஞ்சீபுரம் நகராட்சிக்குட்பட்ட சேக்குப்பேட்டை தெற்குதெரு, பாண்டவ பெருமாள் கோவில் தெரு, லிங்கப்பன் தெரு, உள்ளிட்ட தெருக்களில் இரும்பு தகடுகள் வைத்து அடைக்கப்பட்டு வருகி்றது. அங்கு உள்ள நோயாளிகளின் உடல் நிலையை சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
அடைக்கப்பட்ட தெருக்கள் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் உத்தரவின்பேரில் பேரில் காஞ்சீபுரம் நகராட்சி முழுவதும் கொரோனா பரவலை தடுக்க சுகாதார அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். பரிசோதனைகளை அதிகரித்துள்ளனர்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் மீனாட்சி மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி, ஸ்ரீபெரும்புதூர் சவீதா மருத்துவ கல்லூரி, குன்றத்தூர் மாதா மருத்துவமனை கல்லூரி, மாங்காட்டில் உள்ள முத்துக்குமரன் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி என 4 தனியார் மருத்துவ கல்லூரி மையங்களும், பல்லவன் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் ஒரகடம் பகுதியில் அரசு தொழிலாளர் நல வாரிய தங்கும் விடுதி என 6 மையங்களில் 1,780 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி பெருநகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் அனைத்து அலுவலரும் நோய் தடுப்பு நடவடிக்கை பணிகளில் ஈடுபட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தின் கழிவறையில் மறைத்து வைத்து இருந்த ரூ.65 லட்சத்து 38 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 360 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆலந்தூர்:
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து விமானம் வந்தது. அதில் பெரும் அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக வந்த தகவலின்பேரில் விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன்சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள் அதில் வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.
அதில் வந்த பயணிகள் அனைவரும் இறங்கி சென்றுவிட்டனா். அதன்பிறகு அந்த விமானம் உள்நாட்டு விமானமாக சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு செல்ல வேண்டும்.
இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள், அந்த விமானத்துக்குள் ஏறி சோதனை செய்தனர். அப்போது விமானத்தின் கழிவறையில் உள்ள தண்ணீா் தொட்டிக்குள் 2 மா்ம பாா்சல்கள் இருந்ததை கண்டுபிடித்தனா்.
அந்த பாா்சல்களை வெளியே எடுத்து பிரித்து பாா்த்தனா். அதில் தங்க கட்டிகள் இருந்தது. 2 பாா்சல்களிலும் இருந்த ரூ.65 லட்சத்து 38 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 360 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
துபாயில் இருந்து அந்த தங்கத்தை கடத்தி வந்த கடத்தல் ஆசாமிகள், சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனைக்கு பயந்து கழிவறையில் மறைத்து வைத்துவிட்டு சென்றிருக்கலாம் என தெரிகிறது. இது தொடர்பாக சுங்க இலாகா அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து தங்கத்தை கடத்தி வந்த கடத்தல் ஆசாமிகள் யாா்? என விமான நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து விமானம் வந்தது. அதில் பெரும் அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக வந்த தகவலின்பேரில் விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன்சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள் அதில் வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.
அதில் வந்த பயணிகள் அனைவரும் இறங்கி சென்றுவிட்டனா். அதன்பிறகு அந்த விமானம் உள்நாட்டு விமானமாக சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு செல்ல வேண்டும்.
இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள், அந்த விமானத்துக்குள் ஏறி சோதனை செய்தனர். அப்போது விமானத்தின் கழிவறையில் உள்ள தண்ணீா் தொட்டிக்குள் 2 மா்ம பாா்சல்கள் இருந்ததை கண்டுபிடித்தனா்.
அந்த பாா்சல்களை வெளியே எடுத்து பிரித்து பாா்த்தனா். அதில் தங்க கட்டிகள் இருந்தது. 2 பாா்சல்களிலும் இருந்த ரூ.65 லட்சத்து 38 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 360 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
துபாயில் இருந்து அந்த தங்கத்தை கடத்தி வந்த கடத்தல் ஆசாமிகள், சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனைக்கு பயந்து கழிவறையில் மறைத்து வைத்துவிட்டு சென்றிருக்கலாம் என தெரிகிறது. இது தொடர்பாக சுங்க இலாகா அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து தங்கத்தை கடத்தி வந்த கடத்தல் ஆசாமிகள் யாா்? என விமான நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.
தலைமை தேர்தல் அதிகாரியும், மாவட்ட போலீஸ் கமிஷனரும் தபால் வாக்குகளை உடனடியாக செலுத்த தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசார், தீயணைப்பு வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆலந்தூர்:
சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 6-ந் தேதி நடந்தது.
வெளியூரில் இருந்து வந்து தேர்தல் பணிபுரிந்த ஊழியர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், நகராட்சி ஊழியர்கள் ஆகியோர் தபால் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தபால் ஓட்டு போடுபவர்கள் அதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.
ஆலந்தூர் தொகுதியில் ஆயுதப்படை போலீசார், தனிப்படை போலீசார், தீயணைப்பு படையினர் வெளி மாவட்டங்களில் இருந்து வந்து தேர்தல் தினத்தில் பணியாற்றினார்கள்.
இவர்கள் தபால் வாக்கு போடுவதற்காக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து ஆலந்தூர் தொகுதி தேர்தல் அதிகாரியிடம் கொடுத்தனர்.
இதில், 200-க்கும் அதிகமான மனுக்கள் ஏற்கப்படவில்லை. இதுகுறித்து முறையான பதில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் இந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் தபால் வாக்கு போட முடியாமல் தவித்து வருகிறார்கள். தலைமை தேர்தல் அதிகாரியும், மாவட்ட போலீஸ் கமிஷனரும் போலீசார், தீயணைப்பு வீரர்கள் தபால் வாக்குகளை உடனடியாக செலுத்த தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தேர்தல் பொறுப்பு அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
முறையாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, வாக்காளர் அடையாள அட்டை எண்களையும் தெரிவித்தால் எந்த தொகுதியில் ஓட்டு இருக்கிறது என்பது தெரியும். இதன் மூலம் தபால் வாக்குகளை போடலாம்.
மே மாதம் 2-ந் தேதி தான் வாக்குகள் எண்ணப்படுகின்றன. எனவே, மே 1-ந் தேதி வரை தபால் வாக்குகளை போட முடியும். எனவே இவர்கள் தபால் வாக்கு அளிப்பதில் எந்த பிரச்சினையும் ஏற்படாது.
இவ்வாறு அவர் கூறினார்.
சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 6-ந் தேதி நடந்தது.
வெளியூரில் இருந்து வந்து தேர்தல் பணிபுரிந்த ஊழியர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், நகராட்சி ஊழியர்கள் ஆகியோர் தபால் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தபால் ஓட்டு போடுபவர்கள் அதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.
ஆலந்தூர் தொகுதியில் ஆயுதப்படை போலீசார், தனிப்படை போலீசார், தீயணைப்பு படையினர் வெளி மாவட்டங்களில் இருந்து வந்து தேர்தல் தினத்தில் பணியாற்றினார்கள்.
இவர்கள் தபால் வாக்கு போடுவதற்காக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து ஆலந்தூர் தொகுதி தேர்தல் அதிகாரியிடம் கொடுத்தனர்.
இதில், 200-க்கும் அதிகமான மனுக்கள் ஏற்கப்படவில்லை. இதுகுறித்து முறையான பதில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் இந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் தபால் வாக்கு போட முடியாமல் தவித்து வருகிறார்கள். தலைமை தேர்தல் அதிகாரியும், மாவட்ட போலீஸ் கமிஷனரும் போலீசார், தீயணைப்பு வீரர்கள் தபால் வாக்குகளை உடனடியாக செலுத்த தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தேர்தல் பொறுப்பு அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
முறையாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, வாக்காளர் அடையாள அட்டை எண்களையும் தெரிவித்தால் எந்த தொகுதியில் ஓட்டு இருக்கிறது என்பது தெரியும். இதன் மூலம் தபால் வாக்குகளை போடலாம்.
மே மாதம் 2-ந் தேதி தான் வாக்குகள் எண்ணப்படுகின்றன. எனவே, மே 1-ந் தேதி வரை தபால் வாக்குகளை போட முடியும். எனவே இவர்கள் தபால் வாக்கு அளிப்பதில் எந்த பிரச்சினையும் ஏற்படாது.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு செல்லும் சிறப்பு விமானத்தில் ஹவாலா பணம் கடத்தப்பட இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
ஆலந்தூர்:
சென்னையில் இருந்து துபாய்க்கு கடத்த முயன்ற ரூ.51 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு செல்லும் சிறப்பு விமானத்தில் பெரும் அளவில் ஹவாலா பணம் கடத்தப்பட இருப்பதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் துபாய் செல்லும் விமானத்தில் ஏற வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.
அப்போது திருச்சியை சேர்ந்த சதக்கத்துல்லா (வயது 37), முகமது அலி அக்பர் (61), தேனியை சேர்ந்த முகமது அப்துல்லா (37), சென்னையை சேர்ந்த அபு ஜாவித் (27), சிவகங்கையை சேர்ந்த ஷாஜகான் (57) ஆகிய 5 பேர் குடியுரிமை சோதனையை முடித்துவிட்டு பாதுகாப்பு சோதனை பகுதிக்கு சென்றனர்.
அவர்கள் மீது சந்தேகம் கொண்ட சுங்க இலாகா அதிகாரிகள், 5 பேரையும் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்கள். இதனால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தபோது சூட்கேசின் டிராலி கைப்பிடி சற்று கனமாக இருந்தது.
உடனே சுங்க இலாகா அதிகாரிகள் அவற்றை கழுற்றி பார்த்தபோது அதில் கட்டுக்கட்டாக சவுதி ரியால், குவைத் தினார், அமெரிக்க டாலர், ஓமன் ரியால் ஆகியவற்றை மறைத்து வைத்து கடத்திச்செல்ல முயன்றதை கண்டுபிடித்தனர்.
5 பேரிடம் இருந்து ரூ.51 லட்சத்து 28 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 5 பேரிடமும் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
சென்னையில் இருந்து துபாய்க்கு கடத்த முயன்ற ரூ.51 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு செல்லும் சிறப்பு விமானத்தில் பெரும் அளவில் ஹவாலா பணம் கடத்தப்பட இருப்பதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் துபாய் செல்லும் விமானத்தில் ஏற வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.
அப்போது திருச்சியை சேர்ந்த சதக்கத்துல்லா (வயது 37), முகமது அலி அக்பர் (61), தேனியை சேர்ந்த முகமது அப்துல்லா (37), சென்னையை சேர்ந்த அபு ஜாவித் (27), சிவகங்கையை சேர்ந்த ஷாஜகான் (57) ஆகிய 5 பேர் குடியுரிமை சோதனையை முடித்துவிட்டு பாதுகாப்பு சோதனை பகுதிக்கு சென்றனர்.
அவர்கள் மீது சந்தேகம் கொண்ட சுங்க இலாகா அதிகாரிகள், 5 பேரையும் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்கள். இதனால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தபோது சூட்கேசின் டிராலி கைப்பிடி சற்று கனமாக இருந்தது.
உடனே சுங்க இலாகா அதிகாரிகள் அவற்றை கழுற்றி பார்த்தபோது அதில் கட்டுக்கட்டாக சவுதி ரியால், குவைத் தினார், அமெரிக்க டாலர், ஓமன் ரியால் ஆகியவற்றை மறைத்து வைத்து கடத்திச்செல்ல முயன்றதை கண்டுபிடித்தனர்.
5 பேரிடம் இருந்து ரூ.51 லட்சத்து 28 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 5 பேரிடமும் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்தில், துபாய் மற்றும் சார்ஜாவில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், 2 பேரை கைது செய்தனர்.
ஆலந்தூர்:
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வந்த தகவலின்பேரில் விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன்சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள், விமான நிலையத்தில் தீவிரமாக கண்காணித்தனர்.
அப்போது சார்ஜாவில் இருந்து திருவனந்தபுரம் வழியாக சென்னைக்கு விமானம் வந்தது. அந்த விமானத்தில் உள்நாட்டு பயணியாக திருவனந்தபுரத்தில் இருந்து பயணம் செய்த சென்னையைச் சேர்ந்த முகமது அனஸ் (வயது 28) என்பவரை சுங்க இலாகா அதிகாரிகள் சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர்.
அவர் ஒருவித பதற்றத்துடனும், பரபரப்பாகவும் காணப்பட்டார். எனவே அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லாததால் அவரை தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர்.
அதில் அவர் அணிந்து இருந்த பேண்ட்டில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். விசாரணையில் சார்ஜாவில் இருந்து அந்த தங்கத்தை கடத்தி வந்தவர், விமான இருக்கையின் அடியில் அதை மறைத்து வைத்துவிட்டு திருவனந்தபுரத்தில் இறங்கி விட்டதாகவும், பின்னர் உள்நாட்டு பயணியாக திருவனந்தபுரத்தில் ஏறிய தான் இருக்கையின் அடியில் இருந்த தங்கத்தை எடுத்து வந்ததாகவும் ஒப்புக்கொண்டார்.
அவரிடம் இருந்து ரூ.59 லட்சத்து 18 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 280 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.
அதபோல் துபாயில் இருந்து லக்னோ வழியாக சென்னை வந்த விமானத்தில் உள்நாட்டு பயணியாக வந்த சென்னையை சேர்ந்த ராவுத்தர் நைனா முகமது (30) என்பவர் வந்தார். இவரும் அதேபோல் விமான இருக்கையின் அடியில் மறைத்து வைத்து இருந்த தங்கத்தை தனது கால் உறைக்குள்(சாக்ஸ்) மறைத்து எடுத்து வந்தார். அவரிடம் இருந்து ரூ.20 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள 450 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். சென்னை விமான நிலையத்தில் 2 பேரிடம் இருந்து ரூ.79 லட்சத்து 78 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 730 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வந்த தகவலின்பேரில் விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன்சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள், விமான நிலையத்தில் தீவிரமாக கண்காணித்தனர்.
அப்போது சார்ஜாவில் இருந்து திருவனந்தபுரம் வழியாக சென்னைக்கு விமானம் வந்தது. அந்த விமானத்தில் உள்நாட்டு பயணியாக திருவனந்தபுரத்தில் இருந்து பயணம் செய்த சென்னையைச் சேர்ந்த முகமது அனஸ் (வயது 28) என்பவரை சுங்க இலாகா அதிகாரிகள் சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர்.
அவர் ஒருவித பதற்றத்துடனும், பரபரப்பாகவும் காணப்பட்டார். எனவே அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லாததால் அவரை தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர்.
அதில் அவர் அணிந்து இருந்த பேண்ட்டில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். விசாரணையில் சார்ஜாவில் இருந்து அந்த தங்கத்தை கடத்தி வந்தவர், விமான இருக்கையின் அடியில் அதை மறைத்து வைத்துவிட்டு திருவனந்தபுரத்தில் இறங்கி விட்டதாகவும், பின்னர் உள்நாட்டு பயணியாக திருவனந்தபுரத்தில் ஏறிய தான் இருக்கையின் அடியில் இருந்த தங்கத்தை எடுத்து வந்ததாகவும் ஒப்புக்கொண்டார்.
அவரிடம் இருந்து ரூ.59 லட்சத்து 18 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 280 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.
அதபோல் துபாயில் இருந்து லக்னோ வழியாக சென்னை வந்த விமானத்தில் உள்நாட்டு பயணியாக வந்த சென்னையை சேர்ந்த ராவுத்தர் நைனா முகமது (30) என்பவர் வந்தார். இவரும் அதேபோல் விமான இருக்கையின் அடியில் மறைத்து வைத்து இருந்த தங்கத்தை தனது கால் உறைக்குள்(சாக்ஸ்) மறைத்து எடுத்து வந்தார். அவரிடம் இருந்து ரூ.20 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள 450 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். சென்னை விமான நிலையத்தில் 2 பேரிடம் இருந்து ரூ.79 லட்சத்து 78 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 730 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 69.47 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
காஞ்சிபுரம்:
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்ற தேர்தலில் 71.79 சதவீத வாக்குகள் பதிவாகின.
அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 78 சதவீதம் வாக்குகளும், குறைந்தபட்சமாக சென்னை மாவட்டத்தில் 59.40 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 69.47 சதவீதம் வாக்குகளும் பதிவாகின. தேர்தல் ஆணைய செயலியில் உள்ள தகவலின் அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தொகுதிகள் வாரியாக பதிவான வாக்குகள் விவரம்:-
ஆலந்தூர்- 59.77%
காஞ்சிபுரம்-60.45%
ஸ்ரீபெரும்புதூர்-74.03%
உத்திரமேரூர்-69.50%
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்ற தேர்தலில் 71.79 சதவீத வாக்குகள் பதிவாகின.
அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 78 சதவீதம் வாக்குகளும், குறைந்தபட்சமாக சென்னை மாவட்டத்தில் 59.40 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 69.47 சதவீதம் வாக்குகளும் பதிவாகின. தேர்தல் ஆணைய செயலியில் உள்ள தகவலின் அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தொகுதிகள் வாரியாக பதிவான வாக்குகள் விவரம்:-
ஆலந்தூர்- 59.77%
காஞ்சிபுரம்-60.45%
ஸ்ரீபெரும்புதூர்-74.03%
உத்திரமேரூர்-69.50%
சென்னை விமான நிலையத்தில், துபாயில் இருந்து கடத்தி வந்த ரூ.12 லட்சம் மதிப்புள்ள 255 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆலந்தூர்:
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து வரும் சிறப்பு விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அவரது உத்தரவின்பேரில் சுங்க இலாகா அதிகாரிகள், துபாய் விமானத்தில் வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.
அப்போது ராமநாதபுரத்தைச் சேர்ந்த சகுபர் அலி (வயது 32), முகமது (40) ஆகியோரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் பதற்றமாகவும், பரபரப்பாகவும் காணப்பட்டனர். இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர்.
ஆனால் அதில் எதுவும் இல்லை. பின்னர் இருவரையும் தனியறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர். அதில் அவர்களின் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.
2 பேரிடம் இருந்தும் ரூ.12 லட்சம் மதிப்புள்ள 255 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேரிடமும் விசாரித்து வருகின்றனர்.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து வரும் சிறப்பு விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அவரது உத்தரவின்பேரில் சுங்க இலாகா அதிகாரிகள், துபாய் விமானத்தில் வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.
அப்போது ராமநாதபுரத்தைச் சேர்ந்த சகுபர் அலி (வயது 32), முகமது (40) ஆகியோரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் பதற்றமாகவும், பரபரப்பாகவும் காணப்பட்டனர். இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர்.
ஆனால் அதில் எதுவும் இல்லை. பின்னர் இருவரையும் தனியறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர். அதில் அவர்களின் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.
2 பேரிடம் இருந்தும் ரூ.12 லட்சம் மதிப்புள்ள 255 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேரிடமும் விசாரித்து வருகின்றனர்.
திருமணமான 5 மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக அவர், தனது தாயாருக்கு எழுதிய உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது.
ஆவடி:
சென்னை கே.கே.நகர், எம்.ஜி.ஆர். நகர், தந்தை பெரியார் தெருவைச் சேர்ந்தவர் ஜோதிஸ்ரீ (வயது 19). பி.காம் படித்துள்ளார். இவருக்கும், திருமுல்லைவாயல், அன்னை சத்யா நகரைச்சேர்ந்த பாலமுருகன் (28) என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
பாலமுருகனும், அவருடைய தாயார் அம்சாவும் தங்களது வீடு கடன் வாங்கி கட்டப்பட்டுள்ளது. எனவே பணம் தேவைப்படுவதால் உனது பெற்றோரிடம் கூடுதல் வரதட்சணையாக பணம் வாங்கி வரும்படி கூறி ஜோதிஸ்ரீயை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஜோதிஸ்ரீ தனது பெற்றோரிடம் கூறினார். இதனால் இருவீட்டாருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் முதல் ஜோதிஸ்ரீ கணவரை விட்டு பிரிந்து சென்னையில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை தனது சான்றிதழ்கள் மற்றும் துணிகளை எடுப்பதற்காக ஜோதிஸ்ரீ, திருமுல்லைவாயலில் உள்ள தனது கணவர் வீட்டுக்கு வந்தார். அப்போது அவருடைய மாமியார் அம்சா, மருமகள் ஜோதிஸ்ரீயை வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை என தெரிகிறது.
அதையும் மீறி ஜோதிஸ்ரீ வீட்டின் மாடியில் உள்ள தனது அறைக்கு சென்றார். இதனால் ஆத்திரமடைந்த அம்சா, அந்த அறைக்கு செல்லும் மின் இணைப்பை துண்டித்து விட்டார்.
இதனால் விரக்தி அடைந்த ஜோதிஸ்ரீ, அந்த அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த திருமுல்லைவாயல் போலீசார், தூக்கில் தொங்கிய ஜோதிஸ்ரீயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவரது அறையில் போலீசார் சோதனை செய்தபோது ஜோதிஸ்ரீ தனது தாயாருக்கு எழுதியதாக கூறப்படும் உருக்கமான கடிதம் ஒன்று சிக்கியது.
அதில் அவர், “நகை, பணத்துக்கு ஆசைப்படுபவருக்கு என்னை ஏன் திருமணம் செய்து வைத்தீர்கள் அம்மா?. பணம், நகை இருந்தால்தான் உன்னுடன் வாழ்வேன் என்று என் கணவர் சொல்கிறார். எல்லாவற்றையும் நான் சொல்ல முடியவில்லை. நான் போகிறேன். எனது சாவுக்கு காரணம் என்னுடைய கணவரும், மாமியாரும்தான். அவர்களை சும்மா விடாதீர்கள்” என எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து ஜோதிஸ்ரீயின் தாயார் உமா அளித்த புகாரின்பேரில் திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜோதிஸ்ரீயின் கணவர் பாலமுருகன் மற்றும் மாமியார் அம்சா ஆகியோரிடம் விசாரித்து வருகின்றனர்.
மேலும் ஜோதிஸ்ரீக்கு திருமணமாகி 5 மாதமே ஆவதால் இதுபற்றி ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
நிலத்தை நண்பரின் பெயருக்கு எழுதி கொடுக்கும்படி மிரட்டல் விடுத்த ரவுடியை போலீசார் கைது செய்து துராந்தகம் கிளை சிறையில் அடைத்தனர்.
காஞ்சீபுரம்:
ஸ்ரீபெரும்புதூர் ஆதனஞ்சேரியை சேர்ந்தவர் பூங்கோதை. இவருக்கு சொந்தமான ரூ.30 லட்சம் மதிப்புள்ள நிலம் படப்பை வஞ்சுவாஞ்சேரியில் உள்ளது. அந்த நிலத்தை மதுரமங்கலத்தை சேர்ந்த ரவுடி குணா(38) தனது நண்பருக்கு எழுதி கொடுத்துவிடு என்று கூறி பூங்கோதையின் கணவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
இதுகுறித்து பூங்கோதை காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டி.சண்முகபிரியாவிடம் புகார் அளித்தார்.
போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபல ரவுடியான படப்பை குணாவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி மதுராந்தகம் கிளை சிறையில் அடைத்தனர்.
தீவிர அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்திருந்த சசிகலா நேற்று உலக புகழ் பெற்ற காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
சென்னை:
தீவிர அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்திருந்த சசிகலா தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார். அந்த வகையில் நேற்று உலக புகழ் பெற்ற காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அவருக்கு அ.ம.மு.க. வேட்பாளர்கள் முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார், மொளச்சூர் பெருமாள், மனோகரன், ஆகியோர் பட்டாடை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
அவருக்கு கோவில் ஸ்ரீகாரியம் செல்லா விஸ்வநாத சாஸ்திரி, கோவில் அர்ச்சகர் நடனம் சாஸ்திரிகள் ஆகியோர் குங்கும பிரசாதம் வழங்கினார்கள்.
அதன் பின்னர் அவர் புகழ் பெற்ற காஞ்சீபுரம் உலகளந்த பெருமாள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரரை சந்தித்து ஆசி பெற்றார். அங்கு மகா பெரியவர் மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானத்தில் தரிசனம் செய்தார்.
தமிழக சட்டசபை தேர்தலில், 5 முனை போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் காஞ்சிபுரம் மாவட்ட தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார், யார்? என்பதை பார்ப்போம்.
.






