search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lawyer killed"

    • விஜயகுமார் (வயது 40). புதுவை கோர்ட்டில் வக்கீலாக பணிபுரிந்து வந்தார்.
    • கடலூரில் இருந்து புதுவை நோக்கி வந்த தனியார் பஸ் எதிர்பாராத விதமாக விஜயகுமார் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    புதுச்சேரி:

    தவளக்குப்பத்தை அடுத்த அபிஷேகப்பாக்கம் பால்வாடி தெருவை சேர்ந்தவர் ராமதாஸ். முன்னாள் ராணுவ வீரர். இவரது மகன் விஜயகுமார் (வயது 40). புதுவை கோர்ட்டில் வக்கீலாக பணிபுரிந்து வந்தார்.

    வழக்கம் போல் கோர்ட்டுக்கு மோட்டார் சைக்கிளில் புதுவைக்கு வந்தார். பின்னர் கோர்ட்டு பணிகளை முடித்துக் கொண்டு இரவு 11 மணி அளவில் வீடு திரும்பி கொண்டு இருந்தார்.

    தவளக்குப்பம் போலீஸ் நிலையம் அருகில் வந்து கொண்டிருந்தபோது, கடலூரில் இருந்து புதுவை நோக்கி வந்த தனியார் பஸ் எதிர்பாராத விதமாக விஜயகுமார் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட விஜயகுமார் தலையிலும், முகத்திலும் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினார்.

    இதனை கண்ட தவளக்குப்பம் போலீசார் மற்றும் கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விஜயகுமாரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே விஜயகுமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம், ஏட்டு ராஜசேகரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×