என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தின் கழிவறையில் கிடந்த ரூ.65 லட்சம் தங்கம் பறிமுதல்
Byமாலை மலர்10 April 2021 6:51 PM GMT (Updated: 10 April 2021 6:51 PM GMT)
துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தின் கழிவறையில் மறைத்து வைத்து இருந்த ரூ.65 லட்சத்து 38 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 360 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆலந்தூர்:
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து விமானம் வந்தது. அதில் பெரும் அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக வந்த தகவலின்பேரில் விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன்சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள் அதில் வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.
அதில் வந்த பயணிகள் அனைவரும் இறங்கி சென்றுவிட்டனா். அதன்பிறகு அந்த விமானம் உள்நாட்டு விமானமாக சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு செல்ல வேண்டும்.
இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள், அந்த விமானத்துக்குள் ஏறி சோதனை செய்தனர். அப்போது விமானத்தின் கழிவறையில் உள்ள தண்ணீா் தொட்டிக்குள் 2 மா்ம பாா்சல்கள் இருந்ததை கண்டுபிடித்தனா்.
அந்த பாா்சல்களை வெளியே எடுத்து பிரித்து பாா்த்தனா். அதில் தங்க கட்டிகள் இருந்தது. 2 பாா்சல்களிலும் இருந்த ரூ.65 லட்சத்து 38 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 360 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
துபாயில் இருந்து அந்த தங்கத்தை கடத்தி வந்த கடத்தல் ஆசாமிகள், சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனைக்கு பயந்து கழிவறையில் மறைத்து வைத்துவிட்டு சென்றிருக்கலாம் என தெரிகிறது. இது தொடர்பாக சுங்க இலாகா அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து தங்கத்தை கடத்தி வந்த கடத்தல் ஆசாமிகள் யாா்? என விமான நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து விமானம் வந்தது. அதில் பெரும் அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக வந்த தகவலின்பேரில் விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன்சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள் அதில் வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.
அதில் வந்த பயணிகள் அனைவரும் இறங்கி சென்றுவிட்டனா். அதன்பிறகு அந்த விமானம் உள்நாட்டு விமானமாக சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு செல்ல வேண்டும்.
இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள், அந்த விமானத்துக்குள் ஏறி சோதனை செய்தனர். அப்போது விமானத்தின் கழிவறையில் உள்ள தண்ணீா் தொட்டிக்குள் 2 மா்ம பாா்சல்கள் இருந்ததை கண்டுபிடித்தனா்.
அந்த பாா்சல்களை வெளியே எடுத்து பிரித்து பாா்த்தனா். அதில் தங்க கட்டிகள் இருந்தது. 2 பாா்சல்களிலும் இருந்த ரூ.65 லட்சத்து 38 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 360 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
துபாயில் இருந்து அந்த தங்கத்தை கடத்தி வந்த கடத்தல் ஆசாமிகள், சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனைக்கு பயந்து கழிவறையில் மறைத்து வைத்துவிட்டு சென்றிருக்கலாம் என தெரிகிறது. இது தொடர்பாக சுங்க இலாகா அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து தங்கத்தை கடத்தி வந்த கடத்தல் ஆசாமிகள் யாா்? என விமான நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X