என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் சில கட்டுப்பாடுகளைவும் விதித்தது. அதன்படி, காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் அனைத்து டாஸ்மாக் கடை பார்களும் மூடப்பட்டன.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்ட கலெக்ர் மகேஸ்வரி ரவிக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் 2-வது அலை தீவிரமாக பரவுவதை தொடர்ந்து, அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் இம்மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து டாஸ்மாக் மதுபான பார்கள் மற்றும் ஓட்டல்களில் உள்ள தனியார் மதுபான கூடங்கள் மறு உத்தரவு வரும் வரை கட்டாயமாக மூடப்பட்டிருக்க வேண்டும்.

    மேற்படி உத்தரவினை மீறி செயல்படும் மதுபான கூடங்களின் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

    அதே போல் செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக மாவட்டத்தில இயங்கிவரும் மதுபான கூடங்கள் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் கட்டுப்பாட்டில இயங்கிவரும் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடை அருகில் அமைந்துள்ள அரசு மதுபான கூடங்கள் மற்றும் ஒட்டல்களில் உள்ள தனியார் மதுபானக் கூடங்கள் நேற்று முதல் மறு உத்தரவு வரும் வரை கட்டாயமாக மூடப்பட்டிருக்கவேண்டும் என்றும் என செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பல் கூறப்பட்டிருந்தன.
    காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என்று மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்கப்படும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது அவர் கூறுகையில்:-

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு நிலைகளில் சுகாதாரத்துறை, வருவாய்த்துறை மற்றும் பெருநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    காஞசீபுரம் மாவட்டத்தில் இதுவரை 81 கட்டுப்பாட்டு பகுதிகள் அமைக்கப்பட்டு நோய் பரவல் தடுக்கப்பட்டுள்ளது. மேலும் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் 239 ஆக்சிஜன் வசதி கூடிய படுக்கைகளும், தனியார் ஆஸ்பத்திரிகளில் 180 படுக்கைகளும் தயார் நிலையில் உள்ளது. மாவட்டத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை.

    மாவட்டத்தில் இதுவரை 59 ஆயிரத்து 177 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தற்போது வரை மாவட்டத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லை, போதிய அளவு கையிருப்பில் உள்ளது. ஆக்சிஜன் செல்லும் வாகனங்களுக்கு காவல் பாதுகாப்போடு அந்தந்த பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், மாவட்ட சுகாதார நலப்பணிகள் இணை இயக்குனர் மருத்துவர் பழனி மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
    முழு ஊரடங்கையொட்டி காஞ்சீபுரம் காந்தி ரோடு, பஸ் நிலையம், இரட்டை மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்கள், பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.
    காஞ்சீபுரம்:

    தமிழகத்தில் கொரோனா தொற்றை தடுக்கும் நோக்கில் இரவு நேர ஊரடங்கு மட்டுமே செயல்பட்டு வந்த நிலையில் ஞாயிற்றுகிழமையான நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனவும் அத்தியாவசிய தேவைகள் வழக்கம் போல் செயல்படலாம் என அறிவிக்கப்பட்டது.

    அந்த வகையில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

    முழு ஊரடங்கையொட்டி காஞ்சீபுரம் காந்தி ரோடு, பஸ் நிலையம், இரட்டை மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்கள், பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.

    நகரின் அனைத்து பகுதிகளில் போலீசார் பணி அமர்த்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். பல இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைத்து அந்த வழியாக வரும் வாகனங்களை சோதனை செய்து விதி மீறிய 147 வாகனங்களை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    அத்தியவாசிய தேவைகளான பால், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் சேவைகள் வழக்கம் போல் இயங்கின. ஓட்டல்களில் பார்சல் உணவுகள் மட்டுமே வழங்கப்பட்டது. போலீசார் பல்வேறு இடங்களில் சட்டம் ஓழுங்கு பணியில் ஈடுபட்டு வருவதாகவும், எனவே விதிகள் மீறி செயல்பட வேண்டாம் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா கேட்டுகொண்டார்.

    ஊரடங்கு நேரத்தில் நகர் முழுவதும் நகராட்சி ஊழியர்கள் தூய்மை பணி மற்றும் காய்ச்சல் சிறப்பு முகாம்கள், கபசுர குடிநீர் வழங்கினர். பொதுமக்கள் அதிகம் பயன்படுத்திய முக்கிய வீதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
    ஐக்கிய அரபு நாடுகளான துபாய், சார்ஜா, அபுதாபி நாடுகள் இன்று அதிகாலையில் இருந்து அடுத்த 10 நாட்களுக்கு இந்தியாவில் இருந்து தங்கள் நாட்டிற்கான நேரடி விமான போக்குவரத்தை நிறுத்தி உள்ளது.

    ஆலந்தூர்:

    இந்தியாவில் கொரோனா வைரஸ் அலை வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து இந்திய பயணிகளை தங்கள் நாட்டிற்குள் வருவதற்கு பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா, கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஏற்கனவே தடைவிதித்துள்ளன.

    இந்த நிலையில் ஐக்கிய அரபு நாடுகளான துபாய், சார்ஜா, அபுதாபி நாடுகள் இன்று அதிகாலையில் இருந்து அடுத்த 10 நாட்களுக்கு இந்தியாவில் இருந்து தங்கள் நாட்டிற்கான நேரடி விமான போக்குவரத்தை நிறுத்தி உள்ளது.

    இதையடுத்து சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய் செல்லும் ஏர் இந்தியா, இண்டிகோ, எமரேட்ஸ், பிளை துபாய் விமானங்களும், அதைப்போல் சார்ஜா செல்லும் ஏர்இந்தியா, இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்களும், அபுதாபி செல்லும் ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ், இண்டிகோ, எத்தியாடு ஏர்லைன்ஸ் விமானங்கள் என மொத்தம் 10-க்கும் மேற்பட்ட விமானங்கள் அடுத்த 10 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக அந்தந்த விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

    கோப்புபடம்

    அதே நேரத்தில் ஐக்கிய அரபு நாடுகளை சேர்ந்தவர்கள் தங்கள் நாடுகளுக்கு திரும்பி செல்ல சிறப்பு விமானங்கள் இயக்கப்படும்.

    அதோடு ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள தூதரகங்களில் பணியாற்றும் இந்தியர்கள், அரசு முறையிலான பயணம் செய்யும் இந்தியர்கள், டிப்லோமெடிக் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள், ஐக்கிய அரபு நாடுகள் வழியாக மற்ற நாடுகளுக்கு செல்லும் டிரான்சிஸ்ட் பயணிகள் இந்த சிறப்பு விமானங்களில் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

    கொரோனா சிகிச்சைக்காக குஜராத்தில் இருந்து சென்னைக்கு தனி விமானத்தில் வந்த தொழில் அதிபர், தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
    ஆலந்தூர்:

    குஜராத் மாநிலத்தில் கொரோனா 2-வது அலை மிகப்பெரிய அளவில் பரவி வருகிறது. அங்குள்ள தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகள் அனைத்தும் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகிறது. ஆஸ்பத்திரிகளில் படுக்கை வசதி கிடைப்பது இல்லை.

    ஆஸ்பத்திரியில் படுக்கை வசதி கிடைத்தாலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு பெரும் பிரச்சனையாக உள்ளது. இதனால் அந்த மாநிலத்தில் உள்ள வசதி படைத்தவா்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்டால் தனி விமானங்களில் வேறு மாநிலங்களுக்கு சென்று ஆஸ்பத்திரியில் சோ்ந்து சிகிச்சை பெறுகின்றனா்.

    அதன்படி குஜராத் மாநிலம் சூரத் நகரைச் சோ்ந்த ஒரு தொழில் அதிபருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. அங்குள்ள ஆஸ்பத்திரியில் போதிய இடவசதி இல்லாததால் அவரை சென்னைக்கு தனி விமானத்தில் அழைத்து வந்து சிகிச்சை அளிக்க அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனா்.

    இதையடுத்து சூரத்தில் இருந்து கொரோனா நோயாளியான தொழில் அதிபா் மற்றும் அவருடைய குடும்பத்தினா் 4 பேர் தனி விமானம் மூலம் புறப்பட்டு நேற்று பகல் 12 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையம் வந்து சோ்ந்தனர். தயாராக இருந்த ஆம்புலன்ஸ் மூலம் தொழில் அதிபரும் அவரது குடும்பத்தினரும் ஆஸ்பத்திரிக்கு சென்றனர்.

    அந்த தனி விமானத்தில் வந்த தொழில் அதிபரின் பெயா் போன்ற விவரங்களை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.
    கொரோனா தொற்று விதிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    பூந்தமல்லி:

    காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் தினந்தோறும் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று மேலும் பரவாமல் தடுக்கும் விதமாக பல்வேறு இடங்களில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    மேலும் விதிமுறைகளை மீறி செயல்படும் கடைகளுக்கு அபராதம் விதிக்கும் முறை தொடர்ந்து நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக சப்-கலெக்டர் செல்வமதி, பேரூராட்சி அதிகாரி முகமது ரிஸ்வான் ஆகியோர் தலைமையில் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தினந்தோறும் ஆய்வு மேற்கொண்டு முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கிறார்கள்.

    உரிய விதிமுறைகளை மீறி செயல்படுபவர்களுக்கு அபராதம் விதிப்பது மட்டுமல்லாமல், விதிமுறைகளுடன் முககவசம் அணிந்து செயல்படுபவர்களுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்துகள் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமின்றி முககவசம் அனியாதவர்களுக்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டு வருகிறது.

    குழந்தைகளுடன் தேவையில்லாமல் வெளியே வரும் பெற்றோர்களுக்கு அறிவுரை கூறுகின்றனர். ஒரு பக்கம் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிப்பது முகம் சுழிக்க வைத்தாலும், விதிமுறைகளுடன் செயல்படுபவர்களை பாராட்டி இனிப்பு வழங்குவது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு அளித்துள்ளது. மேலும் அரசு பஸ்களில் சமூக விலகலுடன் பயணம் செய்யாதவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படுகிறது. கொரோனோ பாதிப்பை குறைக்க பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
    சென்னையிலிருந்து அமெரிக்கா மற்றும் லண்டன் செல்ல இந்த மாத கடைசி வாரத்திலிருந்து மே மாதம் முதல் வாரம் வரை விமான டிக்கெட் விலை ஒருவருக்கு ரூ.1 லட்சத்தில் இருந்து, ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ஆலந்தூர்:

    நாடு முழுதும் கொரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாக இருப்பதால் பயணிகள் விமான பயணம் செய்வதில் ஆர்வம் காட்டவில்லை. விமான பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக நாளுக்குநாள் குறைந்து வருகிறது. அது மட்டுமன்றி இந்தியாவில் அதிகளவில் நோய் தொற்று பரவுவதால் வெளி நாடுகளும் இந்தியாவில் இருந்து செல்வதற்கு பல கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது.

    இந்தியாவுக்கான விமான போக்குவரத்தை பல நாடுகள் நிறுத்தும் சூழல் நிலவுவதால் மும்பை மற்றும் டெல்லி போன்ற நகரங்களில் இருந்து வெளியேறும் அவசரத்தில் மக்கள் உள்ளனர். இதன் காரணமாக மும்பை, டெல்லி நகரங்களில் இருந்து நியூயார்க், லண்டன், சான்பிரான்சிஸ்கோ ஆகிய இடங்களுக்கு விமான கட்டணம் ரூ.1 லட்சத்து 44 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது.

    இதேபோல் சென்னையில் இருந்து அமெரிக்கா மற்றும் லண்டனுக்கு செல்ல நேரடி விமான சேவை இல்லை. துபாய், அபுதாபி போன்ற நாடுகளுக்கு சென்று அங்கிருந்து செல்ல வேண்டும்.

    கோப்புபடம்

    சிறப்பு விமானங்கள் மட்டும் இயக்கப்படுகின்ற நிலையில், பயணிகள் எண்ணிக்கை இல்லாததினாலும், நேரடி விமான சேவை இல்லாததாலும், வெளிநாடுகளில் விமான பயணிகளுக்கு பல கட்டுப்பாடுகள் இருப்பதினாலும் சென்னையிலிருந்து அமெரிக்கா மற்றும் லண்டன் செல்ல இந்த மாத கடைசி வாரத்திலிருந்து மே மாதம் முதல் வாரம் வரை விமான டிக்கெட் விலை ஒருவருக்கு ரூ.1 லட்சத்தில் இருந்து, ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    சுமார் 39 ஆயிரம் ரூபாயில் இருந்து 45 ஆயிரம் ரூபாய் வரை சராசரியாக இருக்கின்ற டிக்கெட் கட்டணம் ஒரேடியாக மூன்று மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இது விமான பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னை வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.44 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 930 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக பெங்களூருவைச் சேர்ந்த பெண்ணை கைது செய்தனர்.
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து விமானம் வந்தது. அதில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வந்த தகவலின்பேரில் விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள், அந்த விமானத்தில் வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.

    அப்போது பெங்களூருவைச் சேர்ந்த வெலண்டினா மேரி (வயது 27) என்ற இளம்பெண்ணை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர்.

    ஆனால் அதில் எதுவும் இல்லாததால் அவரை தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அதில் அவர், உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

    அவரிடம் இருந்து ரூ.44 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 930 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வெலண்டினா மேரியை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள், அவரிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.
    சுங்குவார் சத்திரம் அருகே குளத்தில் மூழ்கி 9-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக இறந்தான்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரம் அடுத்த கீரநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் விநாயகம். இவரது மகன் கஜேந்திரன் (வயது 14). 9-ம் வகுப்பு படித்து வந்தான். கஜேந்திரன் நேற்று பாட்டி பொட்டம்மாளுடன் துணி துவைக்க வீட்டின் அருகே உள்ள குளத்துக்கு சென்றான். அப்போது கஜேந்திரன் தவறி குளத்தில் விழுந்தான்.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது பாட்டி கூச்சல் போட்டார்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து குளத்தில் மூழ்கிய கஜேந்திரனை தேடினர். 4 மணி நேரத்துக்கு பின்னர் கஜேந்திரனை பிணமாக மிட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சுங்குவார் சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி மற்றும் போலீசார் கஜேந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு இதைப்போல் தடை செய்யப்பட்ட ஏமன் நாட்டிற்கு சென்று திரும்பிய பெரம்பலூர் பயணி ஒருவர் சென்னை விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆலந்தூர:

    கத்தார் நாட்டு தலைநகர் தோகாவில் இருந்து சென்னைக்கு சிறப்பு விமானம் நேற்று இரவு வந்தது.

    அதில் வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை சென்னை விமானநிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

    அப்போது சென்னையை சேர்ந்த முகமது சமீம் என்பவர் லிபியா நாட்டிலிருந்து இஸ்தான்புல் வந்து அங்கிருந்து கத்தார் வழியாக சென்னைக்கு வந்திருப்பது தெரிந்தது.

    லிபியா நாடு இந்தியர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடு என்ற பட்டியலில் உள்ளது.எனவே இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் கடந்த 2016-ம் ஆண்டிலிருந்து பாதுகாப்பு நலன் கருதி இந்தியர்கள் யாரும் லிபியா நாட்டிற்கு செல்ல வேண்டாம் என்று தடைவிதித்துள்ளது.

    இந்த தடையை மீறி, முகமது சமீம் லிபியா நாட்டிற்கு சென்றுவந்ததால் அவரை வெளியே அனுப்பாமல் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    அப்போது முகமது சமீம், தான் பிரபலமான ஒரு மருந்து கம்பெனியில் பார்மசிஸ்டாக பணியாற்றி வருவதாகவும், அந்த கம்பெனி பணி நிமித்தமாக கடந்த 2019-ம் ஆண்டில் லிபியாவிவுக்கு அனுப்பி வைத்தது. முறையான ஆவணங்களுடன் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இணைப்பு விமானங்கள் மூலம் லிபியா சென்று அங்கு 2 ஆண்டுகள் பணியில் இருந்தேன். அப்போது லிபியா தடை செய்யப்பட்ட நாடு என்று என்னிடம் கூற வில்லை என்றும் கூறினார்.

    ஆனால் சென்னை விமானநிலைய குடியுரிமை அதிகாரிகள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

    அரசால் பாதுகாப்பு இல்லாத நாடு என்று தடை செய்யப்பட்ட நாட்டிற்கு சென்றதாக முகமது சமீம் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு இதைப்போல் தடை செய்யப்பட்ட ஏமன் நாட்டிற்கு சென்று திரும்பிய பெரம்பலூர் பயணி ஒருவர் சென்னை விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.33 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள 700 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து விமானம் வந்தது. அதில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வந்த தகவலின்பேரில் விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன்சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள், அந்த விமானத்தில் வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.

    அப்போது ராமநாதபுரத்தை சேர்ந்த சகுபர் சாதிக் (வயது 30), முகமது அப்பாஸ் (20) ஆகியோரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். இருவரும் அதிகாரிகளிடம் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவர்களின் உடைமைகளை சோதனை செய்தனர்.

    ஆனால் அதில் எதுவும் இல்லாததால் 2 பேரையும் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அதில் 2 பேரும் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

    அவர்களிடம் இருந்து ரூ.33 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள 700 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேரிடமும் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.
    சென்னை விமான நிலையத்தில் ரூ.65 லட்சத்து 77 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 400 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து விமானம் வந்தது. அந்த விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அந்த விமானத்தில் வந்த பயணிகள் அனைவரும் கீழே இறங்கி சென்று விட்டனா். அதன்பிறகு அந்த விமானம் சென்னையில் இருந்து உள்நாட்டு விமானமாக புறப்பட்டு செல்ல வேண்டும்.

    இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் அந்த விமானத்துக்குள் ஏறி சோதனை செய்தனர். விமானத்தில் உள்ள கழிவறையில் சி.டி.கேசட் ஒன்று கிடந்தது. வழக்கத்துக்கு மாறாக அது கனமாக இருந்ததால் கேசட்டில் இருந்த கவரை பிரித்து பார்த்தனர்.

    அதில் தங்கத்தை சி.டி. கேசட்டாக மாற்றி, அதன் மீது வெள்ளை பெயிண்ட் அடித்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். ரூ.48 லட்சத்து 77 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    மேலும் விமான நிலைய பாதுகாக்கப்பட்ட பகுதியில் உள்ள கழிவறையில் கேட்பாரற்று இருந்த 2 பார்சல்களை பிரித்து பார்த்தனர். அதில் ரூ.17 லட்சம் மதிப்புள்ள 400 கிராம் தங்கம் இருந்தது.

    சென்னை விமான நிலையத்தில் மொத்தம் ரூ.65 லட்சத்து 77 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 400 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சுங்க இலாகா அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து அந்த தங்கத்தை கடத்தி வந்த ஆசாமிகள் யாா்? என விசாரித்து வருகின்றனர்.
    ×