என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    சென்னையிலிருந்து அமெரிக்கா மற்றும் லண்டன் செல்ல இந்த மாத கடைசி வாரத்திலிருந்து மே மாதம் முதல் வாரம் வரை விமான டிக்கெட் விலை ஒருவருக்கு ரூ.1 லட்சத்தில் இருந்து, ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ஆலந்தூர்:

    நாடு முழுதும் கொரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாக இருப்பதால் பயணிகள் விமான பயணம் செய்வதில் ஆர்வம் காட்டவில்லை. விமான பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக நாளுக்குநாள் குறைந்து வருகிறது. அது மட்டுமன்றி இந்தியாவில் அதிகளவில் நோய் தொற்று பரவுவதால் வெளி நாடுகளும் இந்தியாவில் இருந்து செல்வதற்கு பல கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது.

    இந்தியாவுக்கான விமான போக்குவரத்தை பல நாடுகள் நிறுத்தும் சூழல் நிலவுவதால் மும்பை மற்றும் டெல்லி போன்ற நகரங்களில் இருந்து வெளியேறும் அவசரத்தில் மக்கள் உள்ளனர். இதன் காரணமாக மும்பை, டெல்லி நகரங்களில் இருந்து நியூயார்க், லண்டன், சான்பிரான்சிஸ்கோ ஆகிய இடங்களுக்கு விமான கட்டணம் ரூ.1 லட்சத்து 44 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது.

    இதேபோல் சென்னையில் இருந்து அமெரிக்கா மற்றும் லண்டனுக்கு செல்ல நேரடி விமான சேவை இல்லை. துபாய், அபுதாபி போன்ற நாடுகளுக்கு சென்று அங்கிருந்து செல்ல வேண்டும்.

    கோப்புபடம்

    சிறப்பு விமானங்கள் மட்டும் இயக்கப்படுகின்ற நிலையில், பயணிகள் எண்ணிக்கை இல்லாததினாலும், நேரடி விமான சேவை இல்லாததாலும், வெளிநாடுகளில் விமான பயணிகளுக்கு பல கட்டுப்பாடுகள் இருப்பதினாலும் சென்னையிலிருந்து அமெரிக்கா மற்றும் லண்டன் செல்ல இந்த மாத கடைசி வாரத்திலிருந்து மே மாதம் முதல் வாரம் வரை விமான டிக்கெட் விலை ஒருவருக்கு ரூ.1 லட்சத்தில் இருந்து, ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    சுமார் 39 ஆயிரம் ரூபாயில் இருந்து 45 ஆயிரம் ரூபாய் வரை சராசரியாக இருக்கின்ற டிக்கெட் கட்டணம் ஒரேடியாக மூன்று மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இது விமான பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னை வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.44 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 930 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக பெங்களூருவைச் சேர்ந்த பெண்ணை கைது செய்தனர்.
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து விமானம் வந்தது. அதில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வந்த தகவலின்பேரில் விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள், அந்த விமானத்தில் வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.

    அப்போது பெங்களூருவைச் சேர்ந்த வெலண்டினா மேரி (வயது 27) என்ற இளம்பெண்ணை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர்.

    ஆனால் அதில் எதுவும் இல்லாததால் அவரை தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அதில் அவர், உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

    அவரிடம் இருந்து ரூ.44 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 930 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வெலண்டினா மேரியை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள், அவரிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.
    சுங்குவார் சத்திரம் அருகே குளத்தில் மூழ்கி 9-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக இறந்தான்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரம் அடுத்த கீரநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் விநாயகம். இவரது மகன் கஜேந்திரன் (வயது 14). 9-ம் வகுப்பு படித்து வந்தான். கஜேந்திரன் நேற்று பாட்டி பொட்டம்மாளுடன் துணி துவைக்க வீட்டின் அருகே உள்ள குளத்துக்கு சென்றான். அப்போது கஜேந்திரன் தவறி குளத்தில் விழுந்தான்.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது பாட்டி கூச்சல் போட்டார்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து குளத்தில் மூழ்கிய கஜேந்திரனை தேடினர். 4 மணி நேரத்துக்கு பின்னர் கஜேந்திரனை பிணமாக மிட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சுங்குவார் சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி மற்றும் போலீசார் கஜேந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு இதைப்போல் தடை செய்யப்பட்ட ஏமன் நாட்டிற்கு சென்று திரும்பிய பெரம்பலூர் பயணி ஒருவர் சென்னை விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆலந்தூர:

    கத்தார் நாட்டு தலைநகர் தோகாவில் இருந்து சென்னைக்கு சிறப்பு விமானம் நேற்று இரவு வந்தது.

    அதில் வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை சென்னை விமானநிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

    அப்போது சென்னையை சேர்ந்த முகமது சமீம் என்பவர் லிபியா நாட்டிலிருந்து இஸ்தான்புல் வந்து அங்கிருந்து கத்தார் வழியாக சென்னைக்கு வந்திருப்பது தெரிந்தது.

    லிபியா நாடு இந்தியர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடு என்ற பட்டியலில் உள்ளது.எனவே இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் கடந்த 2016-ம் ஆண்டிலிருந்து பாதுகாப்பு நலன் கருதி இந்தியர்கள் யாரும் லிபியா நாட்டிற்கு செல்ல வேண்டாம் என்று தடைவிதித்துள்ளது.

    இந்த தடையை மீறி, முகமது சமீம் லிபியா நாட்டிற்கு சென்றுவந்ததால் அவரை வெளியே அனுப்பாமல் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    அப்போது முகமது சமீம், தான் பிரபலமான ஒரு மருந்து கம்பெனியில் பார்மசிஸ்டாக பணியாற்றி வருவதாகவும், அந்த கம்பெனி பணி நிமித்தமாக கடந்த 2019-ம் ஆண்டில் லிபியாவிவுக்கு அனுப்பி வைத்தது. முறையான ஆவணங்களுடன் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இணைப்பு விமானங்கள் மூலம் லிபியா சென்று அங்கு 2 ஆண்டுகள் பணியில் இருந்தேன். அப்போது லிபியா தடை செய்யப்பட்ட நாடு என்று என்னிடம் கூற வில்லை என்றும் கூறினார்.

    ஆனால் சென்னை விமானநிலைய குடியுரிமை அதிகாரிகள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

    அரசால் பாதுகாப்பு இல்லாத நாடு என்று தடை செய்யப்பட்ட நாட்டிற்கு சென்றதாக முகமது சமீம் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு இதைப்போல் தடை செய்யப்பட்ட ஏமன் நாட்டிற்கு சென்று திரும்பிய பெரம்பலூர் பயணி ஒருவர் சென்னை விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.33 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள 700 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து விமானம் வந்தது. அதில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வந்த தகவலின்பேரில் விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன்சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள், அந்த விமானத்தில் வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.

    அப்போது ராமநாதபுரத்தை சேர்ந்த சகுபர் சாதிக் (வயது 30), முகமது அப்பாஸ் (20) ஆகியோரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். இருவரும் அதிகாரிகளிடம் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவர்களின் உடைமைகளை சோதனை செய்தனர்.

    ஆனால் அதில் எதுவும் இல்லாததால் 2 பேரையும் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அதில் 2 பேரும் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

    அவர்களிடம் இருந்து ரூ.33 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள 700 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேரிடமும் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.
    சென்னை விமான நிலையத்தில் ரூ.65 லட்சத்து 77 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 400 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து விமானம் வந்தது. அந்த விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அந்த விமானத்தில் வந்த பயணிகள் அனைவரும் கீழே இறங்கி சென்று விட்டனா். அதன்பிறகு அந்த விமானம் சென்னையில் இருந்து உள்நாட்டு விமானமாக புறப்பட்டு செல்ல வேண்டும்.

    இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் அந்த விமானத்துக்குள் ஏறி சோதனை செய்தனர். விமானத்தில் உள்ள கழிவறையில் சி.டி.கேசட் ஒன்று கிடந்தது. வழக்கத்துக்கு மாறாக அது கனமாக இருந்ததால் கேசட்டில் இருந்த கவரை பிரித்து பார்த்தனர்.

    அதில் தங்கத்தை சி.டி. கேசட்டாக மாற்றி, அதன் மீது வெள்ளை பெயிண்ட் அடித்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். ரூ.48 லட்சத்து 77 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    மேலும் விமான நிலைய பாதுகாக்கப்பட்ட பகுதியில் உள்ள கழிவறையில் கேட்பாரற்று இருந்த 2 பார்சல்களை பிரித்து பார்த்தனர். அதில் ரூ.17 லட்சம் மதிப்புள்ள 400 கிராம் தங்கம் இருந்தது.

    சென்னை விமான நிலையத்தில் மொத்தம் ரூ.65 லட்சத்து 77 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 400 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சுங்க இலாகா அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து அந்த தங்கத்தை கடத்தி வந்த ஆசாமிகள் யாா்? என விசாரித்து வருகின்றனர்.
    துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தின் இருக்கைக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த ரூ.2 கோடியே 90 லட்சம் மதிப்புள்ள 6 கிலோ தங்க கட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து விமானம் வந்தது. அதில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வந்த தகவலின்பேரில் விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன்சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள், அந்த விமானத்தில் வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.

    அந்த விமானத்தில் வந்த பயணிகள் அனைவரும் கீழே இறங்கி சென்று விட்டனா். அதன்பின்னர் அந்த விமானம் உள்நாட்டு விமானமாக சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு செல்லவேண்டும்.

    இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள், அந்த விமானத்தில் ஏறி சோதனை செய்தனர். விமானத்தில் உள்ள ஒரு இருக்கை சற்று தூக்கியபடி இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், அந்த இருக்கையை சரி செய்ய முயன்றபோது அதில் 2 பார்சல்கள் மறைத்து வைக்கப்பட்டு இருப்பதை கண்டுபிடித்தனர்.

    அந்த பார்சல்களை எடுத்து பிரித்து பார்த்தனா். அதில் 2 பார்சல்களிலும் 6 தங்க கட்டிகள் இருந்தன. ரூ.2 கோடியே 90 லட்சம் மதிப்புள்ள 6 கிலோ தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    துபாயில் இருந்து அந்த தங்க கட்டிகளை கடத்தி வந்த ஆசாமிகள், சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனைக்கு பயந்து விமான இருக்கைக்கு அடியில் மறைத்து வைத்து இருக்கலாம்? அல்லது அந்த விமானம் உள்நாட்டு விமானமாக செல்வதை அறிந்து, இருக்கைக்கு அடியில் மறைத்து வைத்துவிட்டு உள்நாட்டு பயணிபோல் வந்து அதை எடுக்க முயற்சி செய்திருக்கலாம் என தெரிகிறது.

    இது தொடர்பாக சுங்க இலாகா அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து, துபாயில் இருந்து சென்னைக்கு அந்த தங்க கட்டிகளை கடத்தி வந்த கடத்தல் ஆசாமிகள் யார்? என்று விமான நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 248 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33,238-ஆக உள்ளது.
    காஞ்சிபுரம்:

    தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 9,80,728 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 9,02,022 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 13,071-ஆக அதிகரித்துள்ளது. 
     
    அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2,80,184 ஆக அதிகரித்துள்ளது.

    இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 248 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 33,238-ஆக உயர்ந்துள்ளது.

    இதுவரை 31,004 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 476 பேர் உயிரிழந்துள்ளனர். 
    காஞ்சீபுரம் மாவட்டத்தில் இதுவரை 50 ஆயிரத்து 9 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பழனி தெரிவித்துள்ளார்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பழனி நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாடு முழுவதும் பரவிவரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக முதல்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதையடுத்து 2-வது கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் இதுவரை 50 ஆயிரத்து 9 பேருக்கு சுகாதாரத்துறையினர் மூலமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

    காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரி உள்பட 4 அரசு ஆஸ்பத்திரிகள், 28 ஆரம்ப சுகாதார நிலைங்களில் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியானது தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    காஞ்சீபுரத்தில் பட்டு சேலை வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் நேற்று காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டனர்.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் இதுவரை 1,659 தொழிற்சாலை பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    உத்திரமேரூர் அருகே புதைந்த நிலையில் கல்வெட்டுகளுடன் செக்கு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அதை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
    உத்திரமேரூர்:

    காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே விண்ணமங்கலம் கிராமத்தில் மண்ணில் புதைந்து கிடக்கும் 15-ம் நூற்றாண்டை சேர்ந்த அரியவகை கல்செக்கை தமிழக தொல்லியல்துறை உரிய கவனம் செலுத்தி பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    இது குறித்து உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவர் கொற்றவை ஆதன் கூறியதாவது:-

    உத்திரமேரூர் அருகேயுள்ள விண்ணமங்கலம் கிராமத்தில் களப்பணியில் ஈடுபட்டிருந்தோம். அப்போது மண் மேடு ஒன்றில் முள்புதரில் புதைந்த நிலையில் கல்செக்கு ஒன்று இருப்பதை கண்டறிந்தோம். 3 வரியில் அதில் கல்வெட்டு எழுத்துகள் இருந்தன.

    பழங்காலத்தில் எண்ணெய் வித்துக்கள் மக்கள் வாழ்வில் பெரும் இடம் பிடித்திருந்தது. சமையல் பயன்பாட்டுக்கும் மருத்துவத்துக்கும் கல்செக்குகளே பெரிதும் பயன்பட்டிருக்கின்றன. மின்சாரம் இல்லாத வீட்டுக்கும் கிராமங்களில் விளக்கு இல்லையென்றால் தெருவிளக்காகவும் கல்செக்குகளே பயன்பட்டிருக்கின்றன. இவை அரசுக்கு வருவாயையும் ஈட்டி தந்திருக்கின்றன.

    ஒரு மன்னரோ அல்லது பெரும் செல்வந்தரோ தனது குடும்பத்தினர் உடல் நலம் பெற வேண்டி கோவிலுக்காகவோ அல்லது ஊருக்காகவோ கல்செக்கை தானமாக வழங்கியிருக்கிறார்கள்.

    இதன் மூலம் பொதுமக்களும் தானமாக பெற்றனர். அவ்வாறு தானம் வழங்கும் செக்கில் எந்த ஆண்டு, யார் தானமாக வழங்கினர் என்பதையும் குறிப்பிட்டனர்.

    அதன்படி இந்த செக்கில் 3 வரியில் குரோதன ஆண்டில் புக்கண்ணராயர் ஆட்சி காலத்தில் கலைவாணிகன் என்பவர் இந்த கல்செக்கை ஊருக்கு தானமாக வழங்கிய செய்தி இடம் பெற்றுள்ளது. சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட விஜயநகர மன்னர்கள் காலத்தை சேர்ந்த அரிய வகை கல்செக்காகும். இந்த கல்செக்கு கிடைத்த பகுதி செக்குமேடு என்று அழைக்கப்படுகிறது. உத்திரமேரூர் வட்டாரத்தில் உள்ள ஒரே கல்வெட்டுகளுடன் கூடிய செக்கு என்பதும் கூடுதல் சிறப்பாகும்.

    1923-ம் ஆண்டில் இது அரசால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. மண் மேட்டில் முள்புதரில் புதைந்த நிலையில் உள்ள இதன் ஒரு சிறு பகுதி மட்டுமே தற்போது வெளியில் தென்படுகிறது.

    இயற்கை சீற்றங்களால் விரைவில் முழுமையாக புதைந்து போய் காணாமல் போகவும் வாய்ப்புள்ளது.

    எனவே வருங்கால தலைமுறையினருக்கு கடந்த கால வரலாற்றை பறைசாற்றும் இந்த அரிய பொக்கிஷத்தை பாதுகாக்க வேண்டும் எனவும் கொற்றவை ஆதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
    ரெயில்வே ஊழியர் வீட்டில் பீரோவில் இருந்த 60 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரத்தை அடுத்த பாலுசெட்டிசத்திரம், சித்தேரி மேடு பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் துரையரசன் (வயது 38). ரெயில்வேயில் சிக்னல் டெக்னீசியனாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தன்னுடைய குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.

    நேற்று காலை துரையரசன் எழுந்து பார்த்தபோது அவரது வீட்டின் பின்புறத்தில் உள்ள கிரில் கேட் உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் இருந்த 60 பவுன் தங்க நகைகள் மர்மநபர்களால் திருடப்பட்டிருந்தது.

    இது குறித்து அவர் போலீசில் புகார் செய்தார். காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகபிரியா, பாலுசெட்டி சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    காஞ்சீபுரத்தில் இருந்து தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகபிரியா உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படையினர் குற்றவாளிகளை வலைவீசி தேடிவருகின்றனர்.
    சென்னையில் இருந்து வெளிமாநிலங்கள், மாவட்டத்திற்கு ஒரு நாளுக்கு 13 ஆயிரத்திலிருந்து 14 ஆயிரம் பேர் பயணித்தனர்.

    ஆலந்தூர்:

    சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து சென்னை வந்த உள்நாட்டு விமானங்களில் நாள் ஒன்றுக்கு சுமார் 15 ஆயிரம் பேர் வந்தனர்.

    கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக இது தற்போது குறைந்து நேற்று சுமார் 5,500 பேர் மட்டுமே வந்தனர்.

    இதைப்போல் சென்னையில் இருந்து வெளிமாநிலங்கள், மாவட்டத்திற்கு ஒரு நாளுக்கு 13 ஆயிரத்திலிருந்து 14 ஆயிரம் பேர் பயணித்தனர். தற்போது அது குறைந்து நேற்று சுமார் 6,500 பேர் மட்டுமே பயணித்தனர்.

    கோப்புபடம்

    இந்த நிலையில் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் நேற்று பல விமானங்கள் போதிய பயணிகள் இல்லாமல் இயக்கப்பட்டன.

    பெங்களூரில் இருந்து வந்த 2 விமானங்களில் 18 பயணிகளும், ராய்ப்பூரில் இருந்து வந்த விமானத்தில் 3 பயணிகளும், மங்களூர் மற்றும் கோவை விமானங்களில் தலா 5 பயணிகளும், கோழிக்கோட்டிலிருந்து வந்த விமானத்தில் 7 பயணிகளும், ஐதராபாத்தில் இருந்து வந்த விமானத்தில் 8 பயணிகளும், மைசூரில் இருந்து வந்த விமானத்தில் 9 பயணிகள் மட்டுமே பயணித்தனர்.

    சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து மும்பை செல்ல வேண்டிய 3 விமானங்கள், ஐதராபாத் செல்ல வேண்டிய 3 விமானங்கள், பெங்களூர்-1, மதுரை-1, பாட்னா-1 ஆகிய 9 விமானங்கள், அதைப்போல் சென்னைக்கு திரும்பி வரவேண்டிய இந்த 9 விமானங்கள் என மொத்தம் 18 விமானங்கள் போதிய பயணிகள் இல்லாமல் நேற்று ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ×