search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விமானம் (கோப்புப்படம்)
    X
    விமானம் (கோப்புப்படம்)

    கொரோனா சிகிச்சைக்காக தனி விமானத்தில் வந்த தொழில் அதிபர்

    கொரோனா சிகிச்சைக்காக குஜராத்தில் இருந்து சென்னைக்கு தனி விமானத்தில் வந்த தொழில் அதிபர், தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
    ஆலந்தூர்:

    குஜராத் மாநிலத்தில் கொரோனா 2-வது அலை மிகப்பெரிய அளவில் பரவி வருகிறது. அங்குள்ள தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகள் அனைத்தும் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகிறது. ஆஸ்பத்திரிகளில் படுக்கை வசதி கிடைப்பது இல்லை.

    ஆஸ்பத்திரியில் படுக்கை வசதி கிடைத்தாலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு பெரும் பிரச்சனையாக உள்ளது. இதனால் அந்த மாநிலத்தில் உள்ள வசதி படைத்தவா்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்டால் தனி விமானங்களில் வேறு மாநிலங்களுக்கு சென்று ஆஸ்பத்திரியில் சோ்ந்து சிகிச்சை பெறுகின்றனா்.

    அதன்படி குஜராத் மாநிலம் சூரத் நகரைச் சோ்ந்த ஒரு தொழில் அதிபருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. அங்குள்ள ஆஸ்பத்திரியில் போதிய இடவசதி இல்லாததால் அவரை சென்னைக்கு தனி விமானத்தில் அழைத்து வந்து சிகிச்சை அளிக்க அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனா்.

    இதையடுத்து சூரத்தில் இருந்து கொரோனா நோயாளியான தொழில் அதிபா் மற்றும் அவருடைய குடும்பத்தினா் 4 பேர் தனி விமானம் மூலம் புறப்பட்டு நேற்று பகல் 12 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையம் வந்து சோ்ந்தனர். தயாராக இருந்த ஆம்புலன்ஸ் மூலம் தொழில் அதிபரும் அவரது குடும்பத்தினரும் ஆஸ்பத்திரிக்கு சென்றனர்.

    அந்த தனி விமானத்தில் வந்த தொழில் அதிபரின் பெயா் போன்ற விவரங்களை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.
    Next Story
    ×