search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விமான கட்டணம்"

    • தேர்தல் வாக்குப்பதிவுக்கு பின்னர் பெரும்பாலானோர் சொந்த ஊர்களுக்கும், சுற்றுலா தலங்களுக்கும் செல்ல திட்டமிட்டு உள்ளனர்.
    • கடைசி கட்டத்தில் விமானங்களில் போதிய இருக்கை இல்லாததால் டிக்கெட் கட்டணம் அதிரடியாக உயர்ந்து வருகிறது.

    ஆலந்தூர்:

    தமிழகத்தில் வருகிற 19-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பள்ளி, கல்லூரி தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் தேர்தல் வாக்குப்பதிவுக்கு பின்னர் பெரும்பாலானோர் சொந்த ஊர்களுக்கும், சுற்றுலா தலங்களுக்கும் செல்ல திட்டமிட்டு உள்ளனர்.

    இதனால் சென்னையில் இருந்து மும்பை, அந்தமான், டெல்லி உள்ளிட்ட உள்நாட்டு நகரங்களுக்கு செல்லும் பயணிகள் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது அதிகரித்து உள்ளது.

    இதன்காரணமாக சென்னையில் இருந்து கோவா, மும்பை, கொல்கத்தா, மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு செல்லும் விமானத்தின் டிக்கெட் கட்டணங்கள் உயர்ந்துள்ளன. விமானத்தில் சென்றால் பயண நேரம் குறைவு என்பதால் அதிகமானோர் விமான பயணம் மேற்கொள்ள அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    மே மாதத்திற்கான விமானடிக்கெட் முன்பதிவு பெரும்பாலும் முடிந்து உள்ள நிலையில் கடைசிகட்டத்தில் விமானங்களில் போதிய இருக்கை இல்லாததால் டிக்கெட் கட்டணம் அதிரடியாக உயர்ந்து வருகிறது.

    சென்னையில் இருந்து அந்தமானுக்கு ரூ.6 ஆயிரத்து 500 முதல் ரூ.10ஆயிரத்து200, கோவா-ரூ.4500-ரூ.5200, மும்பை ரூ.4700-ரூ.7ஆயிரம் , ஜெய்ப்பூர்-ரூ.10ஆயிரத்து 200, ஸ்ரீநகர்-ரூ.12ஆயிரம் முதல் ரூ.17ஆயிரம், கொல்கத்தா-ரூ.6,700-ரூ.9ஆயிரம், கொச்சி-ரூ.3,200-ரூ.8ஆயிரம் வரை கட்டணமாக உள்ளது.இதேபோல் சென்னையில் இருந்து மதுரை செல்ல ரூ.5ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரையும், தூத்துக்குடிக்கு ரூ.6200 முதல் ரூ.8 ஆயிரம் வரையும் கட்டணம் அதிகரித்து உள்ளது.

    • குறைந்த நாட்கள் பயண திட்டத்தில் இலங்கை, தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், மாலத்தீவு செல்ல சுற்றுலாபயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
    • அமெரிக்கா, லண்டன், துபாய், பாரீஸ், பாங்காங், உட்பட பல நாடுகளுக்கு விமான கட்டணத்தில் சலுகை வழங்கப்படுகிறது.

    ஆலந்தூர்:

    கோடை வெயில் காலம் ஆரம்பித்துவிட்டது. பள்ளி, கல்லூரி மாணவர் களுக்கு தேர்வுகள் முடிந்து விடுமுறை விடப்பட உள்ளன. மேலும் தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் முதல் கட்டமாக வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து கோடை விடுமுறை சுற்றுலாவுக்கு வெளிநாடுகள் மற்றும் முக்கிய சுற்றுலா இடங்களுக்கு செல்ல சென்னை மக்கள் தயாராகி வருகிறார்கள். இதற்கான விமான பயண திட்டங்களை தேர்வு செய்து வருகின்றனர்.

    அவர்கள், பாராளுமன்ற தேர்தல் முடிந்ததும் சுற்றுலா பயணம் செல்ல மே மாதத்தில் இருந்து ஜூன் மாதம் வரை தங்களுடைய பயணங்களை திட்டமிட்டு வருகின்றனர்.

    இதனால் சென்னையில் இருந்து விமானம் மூலம் சுற்றுலா இடங்களுக்கு செல்ல விமான டிக்கெட்களை முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் விமான கட்டணமும் வழக்கத்தைவிட உயர்ந்துள்ளன.

    நீண்டநாட்கள் சுற்றுலா பயணத்தில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பிரான்ஸ் மற்றும் செர்ரி பூக்கள் பூக்கும் மாதம் என்பதால் ஜப்பான், தென்கொரியாவுக்கு செல்ல அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். இதே போல் சவுதி அரேபியா செல்லவும் அதிகமானோர் விரும்புகிறார்கள்.

    குறைந்த நாட்கள் பயண திட்டத்தில் இலங்கை, தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், மாலத்தீவு செல்ல சுற்றுலாபயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இந்தியாவிற்குள் அந்த மான், ஸ்ரீநகர், மணாலி, டார்ஜிலிங், கோவா, பூரி, ரிஷிகேஷ், கொடைக்கானல், முசோரி, லட்சத்தீவு மற்றும் ஆகிய இடங்களுக்கும் செல்ல அதிகமான பயணிகள் திட்டமிட்டுள்ளனர்.

    இதனால் விமான கட்டணம் மே மாத மத்தியில் கடுமையாக உயர்ந்துள்ளது. இலங்கைக்கு ரூ.14ஆயிரத்து 500 முதல் ரூ.20 ஆயிரம் வைரையும், பாங்காங்-ரூ.25ஆயிரம் முதல் ரூ.29 ஆயிரம் வரை, சிங்கப்பூர்-ரூ.20ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை, துபாய்-ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரத்து 800 வரை, டெல்லி-ரூ.13ஆயிரம் முதல் ரூ.20ஆயிரம் வரை, கோவா-ரூ.7900 முதல் ரூ.26 ஆயிரம் வரை, லட்சத்தீவு-ரூ.23, 500, அந்தமான்-ரூ.13ஆயிரம் முதல் ரூ.15,800 வரையும் கட்டணம் உயர்ந்து இருக்கிறது.

    இதுகுறித்து சுற்றுலா விமானடிக்கெட் முன்பதிவு செய்யும் நிறுவனங்கள் கூறும்போது, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் தங்களது கோடைகால விடுமுறை பயணத்திட்டங்களை சற்று தள்ளி வைத்து உள்ளனர். மே மாத முதல் வாரத்தில் இருந்து ஜூன் மாதம் 2-வது வாரம் வரை வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலத்தில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு செல்வோர் தினமும் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகிறார்கள். அமெரிக்கா, லண்டன், துபாய், பாரீஸ், பாங்காங், உட்பட பல நாடுகளுக்கு விமான கட்டணத்தில் சலுகை வழங்கப்படுகிறது.

    மேலும் ஆன்மீக சுற்றுலா தலங்களுக்கு செல்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது. குறிப்பாக அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்ல, பலர் விமான டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர் என்று தெரிவித்துள்ளன.

    • சிறப்பு பஸ்கள் இயக்குவது குறித்த அறிவிப்பு தாமதம் ஆகிறது.
    • ஆம்னி பஸ்களில் 3 மடங்கு கட்டணத்தை உயர்த்தி விட்டனர்.

    சென்னை:

    பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு பஸ்கள் 11-ந் தேதி முதல் இயக்க திட்டமிடபட்டு இருந்தது. 12, 13, 14 ஆகிய நாட்களில் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வோர் அதிகளவில் இருப்பதால் 3 நாட்களும் சென்னையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். வழக்கமாக 8 ஆயிரத்தும் மேலான சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

    சொந்த ஊர் செல்ல அரசு, ஆம்னி பஸ்களில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் முன்பதிவு செய்து உள்ளனர். பொங்கல் பயணத்திற்கு இன்னும் 4 நாட்களே இருக்கின்ற நிலையில் அரசு பஸ் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்து உள்ளனர்.

    இதனால் சிறப்பு பஸ்கள் இயக்குவது குறித்த அறிவிப்பு தாமதம் ஆகிறது. இதனால் ஆம்னி பஸ்களில் 3 மடங்கு கட்டணத்தை உயர்த்தி விட்டனர்.

    சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு ஏ.சி. படுக்கை வசதிக்கு ரூ.5 ஆயிரம் கட்டணம் கேட்டதாக பயணி ஒருவர் தெரிவித்துள்ளார். மதுரை, திருநெல்வேலி மற்றும் தென் மாவட்ட பகுதிகளுக்கு வருகிற 12-ந்தேதி பயணம் செய்ய ரூ.4 ஆயிரம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. விமான கட்டணத்தை விட ஆம்னி பஸ் கட்டணம் அதிகமாக உள்ளதால் பயணிகள் தெரிவிக்கின்றனர்.

    பொங்கல் பண்டிகைக் காலம் மற்றும் அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஆம்னி பஸ்களில் இந்த ஆண்டு மிக கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் மன வேதனை அடைந்தனர்.

    மேலும் அரசு விரைவு பஸ்கள் அனத்தும் கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து தற்போது இயக்கப்படுகிறது. கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பஸ்கள் மட்டும் செல்வதால் பெரும்பாலானவர்கள் கட்டணத்தை பொருட்படுத்தாமல் ஆம்னி பஸ்களில் முன்பதிவு செய்து வருகின்றனர்.

    குறிப்பாக வடபழனி, அசோக்நகர், கிண்டி கத்திப்பாரா, பல்லாவரம், தாம்பரம் ஆகிய இடங்களில் இருந்து பயணம் செய்வோர் அரசு பஸ்களை விட தனியார் பேருந்துகளில் பயணம் செய்யவே விரும்புகின்றனர். அதேபோல் அவர்களுக்கு வசதியாக உள்ளது.

    அனைத்து ரெயில்களிலும் எல்லா வகுப்புகளும் நிரம்பிவிட்டன. வந்தே பாரத் ரெயிலிலும் இடங்கள் நிரம்பின. அரசு பஸ்கள் மட்டும் தான் ஒரே வழி. இந்த நிலையில் சிறப்பு பஸ்கள் குறித்த அறிவிப்பு தாமதத்தால் மக்கள் ஆம்னி பஸ்களை நாடி செல்கின்றனர்.

    இதனை பயன்படுத்தி தனியார் ஆம்னி பஸ் ஆபரேட்டர்கள் பல மடங்கு கட்டணத்தை உயர்த்தி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அபுதாபிக்கான விமான கட்டணம் ரூ10,284ல் இருந்து ரூ28,647 ஆக உயர்ந்துள்ளது.
    • வரும் நாட்களில் டிக்கெட் கட்டணம் தொடர்ந்து அதிகரித்து ரூ1 லட்சத்தை தாண்டும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் வளைகுடா நாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர். அங்கு பணிபுரியக்கூடிய அவர்கள், விடுமுறை கிடைக்கும் போதும், பண்டிகை காலங்களிலும் தங்களது சொந்த ஊருக்கு வந்து செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

    கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்ட முக்கிய பண்டிகை காலங்களின் போது பெரும்பாலானவர்கள் தங்களது சொந்த ஊருக்கு வந்து செல்வார்கள். இந்த ஆண்டும் கிறிஸ்துமல் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளின் போது பலர் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.

    கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை சீசன் தொடங்க உள்ளதை முன்னிட்டு தற்போதே கேரள விமானங்களில் கட்டணம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இது விமான பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய 4 சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன. இங்கிருந்து வளைகுடா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த விமான நிலையங்களை கேரள மாநி லத்தினர் மட்டுமின்றி, தமிழ்நாட்டை சேர்ந்தவர்களும் பயன்படுத்துகின்றனர்.

    இதனால் இந்த விமான நிலையங்கள் எப்போதுமே பரபரப்பாக காணப்படும். இந்நிலையில் தான், தற்போது விமான கட்டணங்கள் கடுமையாக உயர்ந்திருக்கிறது. பயண ஏஜென்சிகள் பண்டிகை கால விமான டிக்கெட்டுகளை முன்கூட்டியே முன்பதிவு செய்துள்ளன. இதனால் முன்பதிவு தளத்தில் கிடைக்கும் டிக்கெட்டுகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருக்கிறது.

    இதன் காரணமாக ஒட்டுமொத்த விமான கட்டணமும் உயர்ந் துள்ள தாக கூறப்படுகிறது. கோழிக்கோட்டில் இருந்து துபாய் செல்லும் விமான கட்டணம் தற்போது ரூ11 ஆயிரமாக உள்ளது. டிசம்பர் மாத இறுதிக்குள் இது ரூ.27ஆயிரத்திற்கும் மேல் அதிகரிக்கும் என தெரிகிறது.

    துபாயில் இருந்து கேரளா திரும்புவதற்கான டிக்கெட்டுகள் விடுமுறை நாட்களில் ரூ7 ஆயிரம் முதல் ரூ17 ஆயிரம் வரை இருக்கும். இது 90 ஆயிரம் ரூபாய் வரை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அபுதாபிக்கான விமான கட்டணம் ரூ10,284ல் இருந்து ரூ28,647 ஆக உயர்ந்துள்ளது.

    இதேபோன்று ஷர்ஜாவில் இருந்து கேரளாவிற்கு திரும்புவதற்கான டிக்கெட் கட்டணமும் மிகவும் உயர்ந்திருக்கிறது. வரும் நாட்களில் டிக்கெட் கட்டணம் தொடர்ந்து அதிகரித்து ரூ1 லட்சத்தை தாண்டும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்த கட்டண உயர்வால் விமான பயணிகள் கடும் அதிர்ச்சியடைந்து உள்ளனர். இதுபோன்ற கட்டண உயர்வை தவிர்க்க பண்டிகை காலங்களில் விமான சேவைகள் மற்றும் இருக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • விமான கட்டணத்தை விமான நிறுவனங்கள் பலமடங்கு உயர்த்தியிருப்பது வளைகுடா நாடுகளில் வசிக்கும் கேரள மாநில மக்களை கடும் அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.
    • எரிபொருள் விலை உயர்வே விமான கட்டணத்தை உயர்த்த காரணம் என்று விமான நிறுவனங்கள் கூறியிருக்கின்றன.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தை சேர்ந்த ஏராளமானோர் வளைகுடா நாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர். வளைகுடா நாடுகளில் 35 லட்சத்துக்கும் மேற்பட்ட கேரள மாநிலத்தினர் இருப்பதாகவும், அவற்றில் சவுதியில் மட்டும் 4.5 லட்சம் பேர் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    வளைகுடா நாடுகளில் வசித்துவரும் அவர்கள், குடும்பத்தினரை பார்ப்பதற்காக அவ்வப்போது விடுமுறை எடுத்து ஊருக்கு வருவார்கள். மேலும் ஓணம், கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகளுக்கு சொந்த ஊருக்கு வந்து செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

    பண்டிகை காலங்களின் போது அதிகமானோர் தங்களது நாடுகளுக்கு செல்லும் நேரத்தில் விமான கட்டணத்தை உயர்த்துவது வாடிக்கையாக நடந்துவருகிறது. விமான நிறுவனங்களின் இந்த செயல்பாட்டை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வளைகுடா நாடுகளில் வசிக்கும் கேரள மாநிலத்தினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தில் பயணிப்பதற்கான விமான கட்டணத்தை விமான நிறுவனங்கள் 4 மடங்கு உயர்த்தியுள்ளது. வழக்கமான நாட்களில் துபாயில் இருந்து கேரளாவுக்கு வர விமான கட்டணம் 10ஆயிரம் ரூபாய். ஆனால் கிறிஸ்துமஸ் காலத்தில் இந்த கட்டணத்தை 40ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது.

    இவ்வாறு விமான கட்டணத்தை விமான நிறுவனங்கள் பலமடங்கு உயர்த்தியிருப்பது வளைகுடா நாடுகளில் வசிக்கும் கேரள மாநில மக்களை கடும் அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. எரிபொருள் விலை உயர்வே விமான கட்டணத்தை உயர்த்த காரணம் என்று விமான நிறுவனங்கள் கூறியிருக்கின்றன.

    அதாவது கடந்த ஜூன் மாதம் முதல் எரிபொருள் விலை உயர்வு 32 சதவீதத்தை எட்டியிருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பதாக விமான நிறுவனங்கள் விளக்கம் அளித்துள்ளன. சட்டப்படி விமான கட்டணத்தை உயர்த்தும் அதிகாரம் விமான நிறுவனங்களுக்கு இருக்கிறது.

    இருந்தபோதிலும் அதில் தலையிட மத்திய அரசுக்கு உரிமை உள்ளது என்பதால், தற்போது விமானகட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டு இருக்கும் விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • துபாய்க்கு வழக்கமான கட்டணம் ரூ.10,558, நாளைய கட்டணம் ரூ. 21,509, 29 -ந்தேதி கட்டணம் ரூ. 20,808.
    • சென்னை-கோவா வழக்கமான கட்டணத்தை விட 2 மடங்கு அதிகரித்து இருக்கிறது.

    ஆலந்தூர்:

    மிலாது நபியையொட்டி நாளை அரசு விடுமுறை ஆகும். இதைத்தொடர்ந்து சனி, ஞாயிறு மற்றும் வருகிற 2-ந்தேதி காந்தி ஜெயந்தி என்று தொடர்ச்சியாக விடுமுறை தினங்கள் வருகின்றன. மேலும் பள்ளி மாணவர்களுக்கும் காலாண்டு விடுமுறை தொடங்கி விட்டதால் சென்னையில் வசிக்கும் பலர் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு சுற்றுலா பயணத்தை திட்டமிட்டு விமான பயணங்களாக ஏற்பாடுகள் செய்து உள்ளனர்.

    தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், ரம்ஜான் பண்டிகை காலங்களில் தான் பெரும்பாலும் தமிழகத்தில் இருந்து செல்லும் விமானங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். ஆனால் தற்போது இந்த தொடர் விடுமுறையில், சுற்றுலா தளங்கள், வெளி மாநிலங்கள், வெளி நாடுகளுக்கு செல்லும் பயணிகள் விமானங்களில், பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. இதனால் விமானங்களில், பயணிகளின் டிக்கெட் கட்டணங்களும் பல மடங்கு உயர்ந்துள்ளன.

    சென்னையில் இருந்து சுற்றுலா தளமான தாய்லாந்து நாட்டின் பாங்காக் செல்ல, வழக்கமான விமான கட்டணம் ரூ. 9,720 ஆகும். ஆனால் நாளை(28-ந் தேதி) கட்டணம், ரூ. 32,581 ஆகவும், 29-ந்தேதி ரூ. 28,816 ஆகவும் உள்ளது.

    துபாய்க்கு வழக்கமான கட்டணம் ரூ.10,558, நாளைய கட்டணம் ரூ. 21,509, 29 -ந்தேதி கட்டணம் ரூ. 20,808.

    இதேபோல் சிங்கப்பூர் செல்ல வழக்கமான கட்டணம் ரூ. 9,371. ஆனால் தற்போதைய கட்டணம் ரூ. 20,103, 29-ந் தேதி ரூ. 18,404 ஆக இருக்கிறது. மலேசியாவின் கோலாலம்பூர் செல்ல வழக்கமான கட்டணமான ரூ. 7,620யை தாண்டி நாளை ரூ.15,676, 29-ந்தேதி ரூ.14,230 கட்டணமாக உயர்ந்துள்ளது. இலங்கையின் கொழும்புக்கு ரூ.11234 (வழக்கமான கட்டணம் ரூ.6,698) ஆகும்.

    இந்தியாவுக்குள் சுற்றுலா தளங்களுக்கு செல்லும் விமான கட்டணமும் உயர்ந்துள்ளது. சென்னை- மைசூர் இடையே வழக்கமான விமான கட்டணம் ரூ.2,558. ஆனால் தற்போது இது ரூ.7,437 ஆக உயர்ந்து உள்ளது.

    சென்னை-கோவா வழக்கமான கட்டணத்தை விட 2 மடங்கு அதிகரித்து இருக்கிறது. நாளை ரூ.8,148, 29-ந்தேதி ரூ.9,771 ஆகும்.

    மதுரை, திருச்சி, கோவை போன்ற இடங்களுக்கு செல்லும் விமானங்களில் கட்டணங்கள் பெரிய அளவில் அதிகரிக்க வில்லை. ஆனால் சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்லும் விமான கட்டணம் மட்டும் அதிகரித்துள்ளது. சென்னை தூத்துக்குடி வழக்கமான கட்டணம் ரூ.3,853, ஆகும். நாளை ரூ.11,173, 29-ந் தேதி ரூ.9,975 ஆக உள்ளது.

    • விமான கட்டணங்களும் 3 மடங்கு, ராக்கெட் வேகத்தில் உயர்ந்து உள்ளன.
    • சொந்த ஊரில், குடும்பத்தினருடன் கொண்டாட வேண்டும் என்ற ஆர்வத்தில், விமானங்களில் பயணம் செய்து வருகின்றனர்.

    ஆலந்தூர்:

    ஓணம் பண்டிகை வரும் 29-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட உள்ளது.

    இதை அடுத்து சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் வசிக்கும் கேரள மாநிலத்தவர்கள், பெருமளவு விமானங்களில், கேரளாவுக்கு செல்லத் தொடங்கி உள்ளனர்.

    இதனால் சென்னை விமான நிலையத்தில் இருந்து கேரள மாநிலம், திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய நகரங்களுக்கு செல்லும் அனைத்து விமானங்களிலும், பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

    இதையடுத்து விமான கட்டணங்களும் 3 மடங்கு, ராக்கெட் வேகத்தில் உயர்ந்து உள்ளன.

    சென்னை-திருவனந்தபுரம் வழக்கமான விமான கட்டணம் ரூ.3,225. ஆனால் தற்போதைய கட்டணம் ரூ.11 ஆயிரம் முதல் ரூ.19,089 வரை.

    சென்னை-கொச்சி வழக்கமான கட்டணம் ரூ.2,962. தற்போதைய கட்டணம் ரூ. 6,500 முதல் ரூ.10,243 வரை.

    சென்னை-கோழிக் கோடு, வழக்கமான கட்டணம்-ரூ.3,148.

    ஆனாலும் பயணிகள் கட்டண உயர்வை பற்றி கவலைப்படாமல், ஓணம் பண்டிகையை சொந்த ஊரில், குடும்பத்தினருடன் கொண்டாட வேண்டும் என்ற ஆர்வத்தில், விமானங்களில் பயணம் செய்து வருகின்றனர்.

    • அலைமோதும் பயணிகள் கூட்டத்தை பார்த்ததும் விமான நிறுவனங்களும் கட்டணத்தை தாறுமாறாக உயர்த்தி உள்ளன.
    • பயணிகளின் வருகைக்கு ஏற்ப கட்டணங்கள் உயர்த்தப்படும்.

    சென்னை:

    விமானம் மட்டும் உயரே உயரே பறப்பதில்லை. அதன் கட்டணமும் உயரே உயரே பறந்து கொண்டிருக்கிறது.

    வருகிற திங்கட்கிழமை ஒரு நாள் மட்டும் லீவு போட்டால் போதும் 4 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும். இந்த விடுமுறையையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள், விடுமுறையை கொண்டாட செல்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    சென்னையில் இருந்து தென்மாவட்டங்கள் மற்றும் திருவனந்தபுரம், கொச்சி, பெங்களூர், ஐதராபாத் ஆகிய நகரங்களுக்கு ஏராளமானோர் செல்கிறார்கள்.

    இந்த இடங்களுக்கு செல்லும் ரெயில்கள் எதிலும் டிக்கெட் இல்லை. இதனால் உள்ளூர் விமானங்களுக்கு படையெடுக்கிறார்கள். அலைமோதும் பயணிகள் கூட்டத்தை பார்த்ததும் விமான நிறுவனங்களும் கட்டணத்தை தாறுமாறாக உயர்த்தி உள்ளன.

    வழக்கமாக சென்னையில் இருந்து மதுரைக்கு ரூ.5 ஆயிரம் வரை தான் கட்ட ணம் இருக்கும். ஆனால் இப்போது ரூ.16 ஆயிரம். இதேபோல் திருவனந்தபுரத்துக்கு அதிகபட்சமாக ரூ.7 ஆயிரம் கட்டணம் இருந்தது. இப்போது ரூ.15 ஆயிரமாக உயர்த்தப்பட்டு உள்ளது.

    இதேபோல் பெங்களூர், ஐதராபாத் ஆகிய நகரங்களுக்கும் சாதாரணமாக ரூ.5 ஆயிரம் தான் கட்டணம். தற்போது ரூ.15 ஆயிரம். இதேபோல் தூத்துக்குடிக்கும் ரூ.12 ஆயிரம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    இந்த கட்டண உயர்வு பற்றி விமான நிறுவனங்கள் ஏஜென்சிகளிடம் விசாரித்தபோது, பயணிகளின் வருகைக்கு ஏற்ப கட்டணங்கள் உயர்த்தப்படும். மதுரையை பொறுத்தவரை கோர்ட்டுக்கு செல்பவர்கள், முக்கிய பிரமுகர்கள் செல்வது என்று வரவேற்பு அதிகமாகவே இருப்பதால் இந்த கட்டணங்கள் சமீப காலமாக உயர்ந்தே இருக்கிறது.

    கட்டணம் உயர்வாக இருந்தாலும் எந்த விமானத்திலும் டிக்கெட் இல்லை என்பதுதான் நிலைமை என்றனர்.

    • இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் லீக் ஆட்டம் அகமதாபாத்தில் அக்டோபர் 15-ம் தேதி நடைபெறவுள்ளது.
    • போட்டியையொட்டிய தினங்களில் அகமதாபாத்துக்குச் செல்லும் விமானக் கட்டணம் 3 மடங்காக உயர்ந்துள்ளது.

    அகமதாபாத்:

    ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் வரும் அக்டோபர் 5-ம் தேதி தொடங்குகிறது. இதில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் லீக் ஆட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் அக்டோபர் 15-ம் தேதி நடைபெறவுள்ளது. இதனால் அந்த நகரிலுள்ள ஓட்டல்களின் பெரும்பாலான அறைகள் அந்த தேதிகளில் ஏற்கெனவே நிரம்பிவிட்டன.

    இந்நிலையில் போட்டியையொட்டிய தினங்களில் அகமதாபாத்துக்குச் செல்லும் விமானக் கட்டணம் 3 மடங்காக உயர்ந்துள்ளது. சென்னையிலிருந்து அகமதாபாத்துக்கு விமானக் கட்டணம் (சென்று வருவதற்கு) வழக்கமாக ரூ.10 ஆயிரம் அளவுக்கு இருக்கும். ஆனால், அக்டோபரில் அகமதாபாத்துக்குச் செல்ல விமான கட்டணமாக ரூ.45,425 செலுத்த வேண்டியுள்ளது. இது 3 மடங்குக்கும் அதிகமாகும்.

    அக்டோபர் 14 முதல் 16 வரை இந்த டிக்கெட் கட்டண உயர்வு உள்ளது. வழக்கமாக சில மாதங்களுக்கு முன்னரே விமான டிக்கெட் பதிவு செய்தால் கட்டணம் சற்று குறைவாக இருக்கும். ஆனால் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ள தேதியையொட்டி அகமதாபாத் செல்ல இப்போது டிக்கெட் பதிவு செய்தாலும் கட்டணம் ரூ.45 ஆயிரம் என்றே உள்ளது. இதேபோல் சென்னையிலிருந்து மும்பை, டெல்லி நகரங்களுக்கும் டிக்கெட் கட்டணங்கள் அன்றைய தினங்களில் சுமார் 3 மடங்கு அளவுக்கு உயர்ந்துள்ளன.

    • விமான டிக்கெட்டுகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக பயணிகள் தெரிவித்தனர்.
    • பயண கட்டணங்கள் உயர்வுக்கு விமான நிறுவனங்களை ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

    சென்னை:

    சமீப காலமாக விமான டிக்கெட்டுகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக பயணிகள் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், டெல்லி - சென்னை விமானங்களுக்கு 63,000 ரூபாய் வரை டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுவதாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

    இதுதொடர்பாக ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், டெல்லி - சென்னை பிசினஸ் கிளாஸ் விமான டிக்கெட்டுகள் விஸ்தாராவில் 6,300 ரூபாய்க்கும், ஏர் இந்தியாவில் 5,700 ரூபாய்க்கும் நியாயமான விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன.

    மன்னிக்கவும், விஸ்தாராவில் 63,000 ரூபாய்க்கும், ஏர் இந்தியாவில் 57,000 ரூபாய்க்கும் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

    பொதுவாக சுதந்திர சந்தைகளில் தேவை அதிகரிக்கும்போதெல்லாம் விநியோகமும் அதிகரிக்கும். ஆனால் இந்தியாவின் சுதந்திர சந்தையில் தேவை அதிகரிக்கும்போதெல்லாம் விலை அதிகரிக்கிறது.

    விமான நிறுவனங்கள் தங்களது வழித்தடங்களை விரிவாக்கம் செய்துவிட்டு, பழைய வழித்தடங்களில் விமானங்களை குறைத்து, டிக்கெட் கட்டணத்தை உயர்த்துகின்றனர். ஏகபோக முதலாளித்துவத்தில் மட்டும் உலகிற்கே இந்தியா விஷ்வகுருவாக மாறும் என பதிவிட்டுள்ளார்.

    • ரெயில், பஸ்களில் டிக்கெட் கிடைக்காத பயணிகள் விமான பயணத்தை தேர்வு செய்து வருகிறார்கள்.
    • ஜூன் முதல் வாரத்தில் சென்னையில் இருந்து பெரும்பாலான நகரங்களுக்கு செல்லும் விமானங்களில் கட்டணம் ரூ.4 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை உள்ளது.

    ஆலந்தூர்:

    கோடை விடுமுறையையொட்டி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிப்பவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வருகின்றனர்.

    ஏற்கனவே வரும் நாட்களுக்கான ரெயில் மற்றும் ஆம்னி பஸ்களில் டிக்கெட்டுகள் முன்பதிவு முடிந்து விட்டன. ரெயில்களில் காத்திருப்போர் பயணிகளின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது.

    இதைத்தொடர்ந்து இப்போது பெரும்பாலானோர் தற்போது அரசு விரைவு பஸ்களை பயன்படுத்த தொடங்கி உள்ளனர். அதிலும் தற்போது பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால் இருக்கையை முன்பதிவு செய்யாமல் அவசரமாக கடைசி நேரத்தில் செல்லும் பயணிகள் கடும் சிரமம் அடைந்து வருகிறார்கள்.

    இதேபோல் ரெயில், பஸ்களில் டிக்கெட் கிடைக்காத பயணிகள் விமான பயணத்தை தேர்வு செய்து வருகிறார்கள். ஏற்கனவே உள்நாட்டு பயணத்துக்கு விமான பயணத்தை தேர்வு செய்வது அதிகரித்து உள்ளது. தற்போது கோடை விடுமுறை என்பதால் சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, கோவை, மும்பை, திருவனந்தபுரம், டெல்லி, கொச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது.

    இதன் காரணமாக விமான டிக்கெட்டுகளின் கட்டணமும் அதிரடியாக உயர்ந்து உள்ளது. ஜூன் முதல் வாரத்தில் சென்னையில் இருந்து பெரும்பாலான நகரங்களுக்கு செல்லும் விமானங்களில் கட்டணம் ரூ.4 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை உள்ளது.

    சென்னையில் இருந்து மதுரைக்கு ரூ.6500 முதல் ரூ.10 ஆயிரம், திருச்சி-ரூ.4400 முதல் ரூ.8 ஆயிரம், கோவை-ரூ.3400 முதல் ரூ.5 ஆயிரம், கொச்சி-ரூ.5600 முதல் ரூ.8500, மும்பை-ரூ.4300 முதல் ரூ.7 ஆயிரம், டெல்லி-ரூ.6400 முதல் ரூ.13 ஆயிரம், திருவனந்தபுரம்-ரூ.3700 முதல் ரூ.6 ஆயிரம், தூத்துக்குடி ரூ.5 ஆயிரம் முதல் ரூ.9500 வரை உள்ளது.

    இதேபோல் ஆம்னி பஸ்களில் கட்டணமும் அதிகரித்து உள்ளது. மதுரைக்கு ரூ.1090 முதல் ரூ.2 ஆயிரம் வரையும், திருச்சிக்கு ரூ.1600 முதல் ரூ.2700 வரையும், கோவை-ரூ.1400 முதல் ரூ.2 ஆயிரம் வரையும், தூத்துக்குடி-ரூ.950 முதல் ரூ.3 ஆயிரம் வரையும், கொச்சி-ரூ.1300 முதல் ரூ.3 ஆயிரம் வரையும், திருவனந்தபுரம்-ரூ.2500 முதல் ரூ.2700 வரையும் அதிகமாக உள்ளது.

    ஆம்னி பஸ்கள் மற்றும் விமான டிக்கெட்டுகள் கட்டணம் உயர்வு காரணமாக சொந்த கார்கள் வைத்திருப்பவர் அதிலேயே தொலைதூர பயணம் மேற்கொள்வதும் அதிகரித்து உள்ளது. மேலும் வாடகை கார் டிரைவர்களை அமர்த்தியும் பயணம் செய்து வருகின்றனர்.

    சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்கள் அனைத்திலும் முன்பதிவு செய்து காத்திருக்கும் பயணிகளின் எண்ணிக்கை அடுத்த மாதம் 15-ந்தேதி வரை 50 முதல் 70 வரை உள்ளது. மதுரை செல்லும் தேஜஸ் விரைவு ரெயிலில் ஜூன் 5-ந்தேதிக்கு பிறகே இருக்கைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • புது சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல மக்கள் விருப்பம் காட்டி வருகின்றனர்.
    • மொராக்கோ, துருக்கி, எகிப்து, அஸர்பே ஜியான் போன்ற நாடுகளுக்கு செல்ல விமான டிக்கெட் முன்பதிவு செய்கிறார்கள்.

    சென்னை:

    பள்ளி, கல்லூரிகளில் தேர்வுகள் முடிவடைந்து கோடை விடுமுறை விரைவில் தொடங்க உள்ளன. இதையடுத்து கோடை விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளிநாடுகள் மற்றும் வெளி ஊர்களுக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    மே மாதத்தில் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு விமான டிக்கெட் முன்பதிவு அதிகரித்து இருக்கிறது. சென்னையில் இருந்து தென்கிழக்கு ஆசிய நாடுகளான மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து ஸ்ரீலங்கா, ஹாங்காங் போன்ற நாடுகளுக்கு செல்ல முன்பதிவு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    மேலும் இந்த நாடுகளில் இருந்து சென்னை வருவதற்கு சுமார் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரையும், மத்திய கிழக்கு நாடுகளான ஈரான், ஈராக், பக்ரைன், சவுதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ. 30 ஆயிரம் வரை டிக்கெட் கட்டணம் உயர்ந்துள்ளது.

    இதேபோல் சென்னையில் இருந்து வியட்நாம், பாலத்தீவு, கம்போடியா போன்ற நாடுகளுக்கு செல்ல மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இங்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

    ஆனால் சென்னையில் இருந்து இந்த நாடுகளுக்கு நேரடி விமான சேவை இல்லாததால், மற்ற மாநிலங்கள் வழியாக செல்ல வேண்டியுள்ளது. இதனால் கூடுதலாக விமான கட்டணம் செலவிட வேண்டி உள்ளது.

    இந்த சுற்றுலா தலங்களுக்கு எப்போதுமே மக்கள் அதிகமாக சென்று வருவதாலும், இந்த இடங்களுக்கு விமான டிக்கெட் கட்டணங்கள் உயர்ந்துள்ளதாலும் மக்கள் புது இடங்களை தேர்வு செய்து வருகின்றனர். தற்போது புது சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல மக்கள் விருப்பம் காட்டி வருகின்றனர்.

    அதன்படி மொராக்கோ, துருக்கி, எகிப்து, அஸர்பே ஜியான் போன்ற நாடுகளுக்கு செல்ல விமான டிக்கெட் முன்பதிவு செய்கிறார்கள்.

    இதேபோல் உள்நாட்டிலும் சுற்றுலா செல்வதற்கு விமான பயணிகள் டிக்கெட் முன்பதிவு சூடு பிடித்து உள்ளது. மே மாதத்தில் சென்னையில் இருந்து ஸ்ரீ நகர் வழியாக டெல்லி செல்ல ஒரு வழி கட்டணம் ரூ.13 ஆயிரம் முதல் ரூ. 18 ஆயிரம் வரை உயர்ந்து உள்ளது. மேலும், சென்னையில் இருந்து அந்தமான் செல்ல ரூ. 8,000 முதல் ரூ. 10 ஆயிரம் வரை விமான டிக்கெட் கட்டணம் அதிகரித்து இருக்கிறது.

    இது குறித்து டிராவல் ஏஜென்சிகள் கூறும்போது, தற்பொழுது கோடை காலமான மே மாதத்தில் சுற்றுலா பயணிகள் வெளிநாடுகளுக்கு செல்ல டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து வருகின்றனர். ஏனென்றால் சுற்றுலா விசா அவர்களுக்கு சரியான இடத்தில் கிடைத்திட வேண்டும்.

    உள்நாட்டு சுற்றுலா செல்பவர்களுடைய எண்ணிக்கை ஏப்ரல் மாதம் இறுதியில் அல்லது மே மாதத் தொடக்கத்தில் அதிகமாக இருக்கும். கடந்த ஆண்டும் இதே போல் இருந்தது. குறிப்பாக ஜம்மு-காஷ்மீருக்கு பயணிகள் அதிகமாக சென்றது குறிப்பிடத்தக்கது என்றனர்.

    ×